Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: RAJEEBAN

06 JUN, 2025 | 01:41 PM

image

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட  ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன ,

நாங்கள் இணங்கியமைக்கான பிரதான காரணம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கான ஒரு பெரும் ஆணையை வழங்கியிருந்தார்கள்.

தனித்தனியாக எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை எந்தவொரு சபையிலும் வழங்கியிருக்காவிட்டாலும், தமிழ்தேசிய தரப்பிற்கு தங்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள்

தமிழ்தேசியம் பேசி வாக்குகளைகோரிய  ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்தேசிய பேரவை தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள்.

ஆகவே உண்மையிலே நடக்கவேண்டியது என்னவென்றால் ,எவ்வாறு தமிழரசுக்கட்சியும்ஜனநாயக  தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தனவோ அதேபோன்று,தமிழரசுக்கட்சியும் அந்த இணக்கப்பாட்டிற்கு வந்து அதன் ஊடாக ஒவ்வொரு சபையிலும் ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குவதுதான் பொருத்தமாகயிருக்குமே தவிர,அதனை விட்டுவிட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாக, செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்வதும், அதுவும் தமிழ் தேசியத்துடன் இருக்ககூடியஈ ஏற்கனவே இருக்ககூடிய ஒரு பலமான கூட்டை தோற்கடிப்பது அதற்காக செயற்படுவது உண்மையிலே பொருத்தமற்றது.

இது தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும், மக்களிற்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும்.

எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த கூட்டில் கைச்சாத்திட்டவேளை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்திருந்தோம்,எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல, மாறாக, இந்த கூட்டின் ஒப்பந்தத்தை படித்து, எவரும் பிழைகண்டுபிடிக்க முடியாத வகையிலேயே அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது, ஆகவே தமிழரசுகட்சி அதனை ஏற்றுக்கொள்வதற்கு எந்த விதமான தயக்கம் இருக்க முடியாது.

உண்மையிலே தமிழ்தேசியத்தை நேசித்து அதற்கு நேர்மையாக நடப்பதாகயிருந்தால் அந்த ஒப்பந்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் எதிர்க்க முடியாத நிராகரிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது.

இண்டைக்கும் நாங்கள் கேட்கின்றோம், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்.

கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார்.

https://www.virakesari.lk/article/216765

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல,

நீங்கள் எப்படி ஒப்பந்தம் எழுதியிருந்தாலும், சிவஞானம் சொல்லியிருக்கிறார், அதாவது தமிழரசுக்கட்சியை இல்லாமல் அழிப்பதற்காக, மட்டந்தட்டுவதற்காக, திட்டமிட்டு தாங்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். கள்ளன் நினைக்கிறது, மற்றவர்களும் தங்களைப்போல் தானென்று. தமிழரசுக்கட்சியை யாரும் வெளியிலிருந்து வந்து அழிக்கத்தேவையில்லை. அவர்களே போதும் அதை அழிப்பதற்கு, பெரும்பாலும் அழித்தே விட்டார்கள். தாங்கள் தான் மக்களின் ஏகோபித்த ஆதரவாய்ப்பெற்ற  பெரும்பான்மை கட்சி என்று பீற்றிக்கொண்டு தெரிந்தவர்கள், மக்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கட்சியின் அலுவலகம் சென்று ஆதரவு தாருங்கள் என்று கெஞ்சியதும், பழம் முற்றி பாலில் விழுந்ததுபோல் டக்கிளஸ் ஒரு கேலிப்புன்னகையோடு, பெருமையாய், அகம்பாவமாய் நின்றதை பார்த்து தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் வெட்கி தலைகுனிந்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தான் ஏற்கெனவே சொன்னதுதானாம், தமிழ்கட்சிகளோடு இணைந்து செயற்படுவோம் என்று ஆதாரம் வேறு சொல்கிறார். இருக்கட்டும்... அப்போ ஏன் இவ்வளவுகாலமும் இணைந்து செயற்பட முடியவில்லை? ஒருவரை ஒருவர் விமர்சித்து மக்களை ஏமாற்றினார்கள்? அரிய நேந்திரனின் கூட்டத்தில் பேசியவர்கள், ஆதரித்தவர்கள் எல்லோருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியவர்கள், இதற்கு என்ன சொல்லபோகிறார்கள்? பாராளுமன்றத்தேர்தலில் ஒரு விமர்சனம் வைத்தார்கள், அதாவது சில உறுப்பினர் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைந்தவர்கள் அது கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று. இன்று சிவஞானம் சொல்கிறார், ஆட்சி என்பது பவர், அதிகாரம், பதவி, அரசியல். அது இல்லையென்றால் என்னத்துக்கு வாய் பாத்துக்கொண்டிருப்பதற்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்போ சொல்லுங்கள்! யார் பதவியாசை பிடித்தவர்களென்பதை. தனக்குப்பின்னால் தனது பதவிக்கு ஆபத்து இருக்கிறது என்பதையே மறந்து பேசுகிறார். இவர்கள் மக்களுக்காகவா, பதவிக்காகவா அரசியல் செய்கிறார்கள் என்பதை போட்டுடைத்து விட்டார். இனி வருங்காலத்தில் தமிழரசுக்கட்சி மக்களுக்காகவோ அவர்களது இலட்சியத்துக்காகவோ அல்லது அவர்களின் விடிவுக்காகவோ செயற்படாது. மக்களின் தேவைக்காக உழைக்கும் தலைவர்கள், கட்சியை உருவாக்கி செயற்படவேண்டும். ஆயனை அழித்தார்கள், துணைபோனார்கள், மக்களை அடிமைகளாக்குவதற்கு. அதனால் பல ஓநாய்கள் உருவாகி அவர்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழரசு என்று கனவு காண்பவர்களுக்கு அனுதாபங்கள். கஜேந்திரனோடோ அல்லது சுமந்திரனுக்கு சவாலானவர்களோடோ தமிழரசுக்கட்சி ஒருபோதும்  இணையாது. சுமந்திரன் சொல்வதை, செய்வதை வாய்பொத்தி, காது பொத்தி அவரின் வாய் பாத்து  கேட்டுக்கொண்டிருப்பவர்களோடேயே அவர்கள் கூட்டிணைவார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. இப்போ, கஜேந்திரனுக்கு ஒரு வாய்ப்பு, மக்களின் உணர்வறிந்து செயற்பட. தவறினால் எழுபத்தாறு ஆறுகால ஆண்டு அவகாசமெல்லாம் கிடைக்காது. தன்னலம் மறந்து மக்களுக்கு சேவை செய்தால்; மக்கள் உங்களை தாங்கிக்கொள்வார்கள் என்பது கடந்தகால அனுபவம்.   

  • கருத்துக்கள உறவுகள்

பதவி அதிகாரம் தமக்கு வேண்டுமாம், அதற்கு மற்றவர்கள் ஆதரவு தரவேண்டுமாம், ஆதரவை கொடுத்து அவர்கள் பதவி பெற்றபின், ஆதரித்தவர்கள் வாய் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமாம். அதனாலேயே வீடு குட்டிச்சுவரானது. இது தெரியாதவர்களா ஏனையோர்? ஏன் அவர்களுக்கு பதவியாசை இருக்கக்கூடாதா? சரி, இவர் சொல்லும் பதவி பவர் அதிகாரம் இருந்து இவர்கள் என்னத்தை சாதித்தார்கள்? இனிமேல் இவர்களுக்கு என்ன இருக்கிறது  பதவி பெற்று மக்களுக்கு சாதிக்க? இவர்கள் பதவியை வைத்துக்கொண்டு வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது போதும். ஏதாவது நன்மை நடந்தாலும் அது தங்களாலேயே நிகழ்ந்தது என்று ஆர்பரிப்பார்கள். மக்கள் முதுகில் ஏறி சவாரி விட்டது போதும், வீட்டிலிருந்து கொட்டாவி விடுங்கள்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.