Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக சமூக ஊடக தினம் இன்று 

Published By: DIGITAL DESK 4

30 JUN, 2025 | 10:40 AM

image

மக்களின் வாழ்க்கையில் பின்னிபிணைந்துள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று ஜூன் 30 ஆம் திகதி அனுஷ்க்கப்பட்டு வருகிறது.

தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடத்தை சமூக ஊடகம் வகிக்கின்றது.

அந்தவகையில், மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைவதற்கு, செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு மற்றும் தகவல்களை அறிந்தவர்களாக இருப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக சமூக ஊடகம் மாறியுள்ளது.

சமூக ஊடகங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒருவருடன் ஒருவர் ஒன்றிணைத்து, உண்மையிலேயே உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளன. 

புதிய ஊடகப் போக்குகள் மூலம் சமூகக் குழுக்களின் இன்றியமையாத பகுதியாக, சமூக ஊடகங்கள்  மாறியுள்ளன. தகவல் மற்றும் பொழுதுபோக்கை வழங்குவதோடு, பொதுக் கருத்தை வெளிப்படுத்துவதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களின் பயணம் 2002 இல் ஃப்ரெண்ட்ஸ்டர் மற்றும் 2003 இல் மைஸ்பேஸ் போன்ற தளங்களுடன் ஆரம்பமானது.

அதன்பின்னர், 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக், விரைவில் தொழில்துறையில் ஒரு ஆதிக்க சக்தியாக மாறியது. டுவிட்டர் (தற்போது X என்று அழைக்கப்படுகிறது) பயனர்கள் தங்கள் சிந்தனைகளை 140 எழுத்துகள் அல்லது அதற்கும் குறைவாகப் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தது. 

இன்ஸ்டாகிராம் மற்றும் பிளிக்கர் நம்மை காட்சி ரீதியாக வெளிப்படுத்துவதை எளிதாக்கின, அதே நேரத்தில் யூடியூப் மற்றும் டிக்டொக் வீடியோ பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தி கலாசார முக்கிய தளங்களாக மாறிவிட்டன.

சமூக ஊடகங்கள் தற்போது உலகளாவிய அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் அது அன்றாட தொடர்புக்கு அவசியமாகிவிட்டது.

மக்களை ஒன்றிணைக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தாலும், பிளவுகளையும் உருவாக்கக்கூடும், இதனால் மக்கள் அதைப் பொறுப்புடன் கையாள்வது மிகவும் முக்கியம்.

சமூக ஊடக தினம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தில் வெகுஜன ஊ டகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க கருத்து தெரிவிக்கையில்,

"எந்தவொரு நாட்டிலும், சமூக ஊடகங்களைப் பற்றி பலருக்கு எதிர்மறையான கருத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த எதிர்மறையான கருத்துக்களுக்குக் ஊடகங்களை கையாள்வது தொடர்பான தவறான புரிதல்களே காரணம் என நான் நினைக்கிறேன். முதலாவதாக, இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இதை ஒரு புதிய ஊடகமாகப் பயன்படுத்துவது, சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வளர்ந்த ஒரு ஊடகம். ஆனால் இது ஊடகங்களில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஒரு துறை. சமூக ஊடகங்கள் இல்லாமல், இன்றைய சமூகம் இருக்க முடியாது."

நாட்டின் சனத்தொகையில் 53 சதவீதம் பேர் தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இது சுமார் 1 கோடியே 20 இலட்சம்  பேரை குறிக்கின்றது. அண்மையில், 2025 ஆம் ஆண்டுக்குள் டிக்டொக் பயன்பாடு சுமார் 30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய தளங்களுடன் ஒப்பிடுகையில், பயனர் தளத்தின் அடிப்படையில் இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், டிக்டோக் வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக தளமாகும்.  விஜயானந்த ரூபசிங்க கூறினார், மேலும் இலங்கை இப்போது டிஜிட்டல் ஊடக எழுத்தறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/218805

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.