Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

513982948_729562973364089_41111880944031

வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு
50 களில் எழுதப்பட்ட வல்வெட்டித்துறையின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற கட்டுரை பல தகவல்களைக் கொண்டுள்ளன.
அவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன:

அமைவிடம் மற்றும் பொதுத் தகவல்கள்

வல்வெட்டித்துறை ஒரு துறைமுகப் பட்டினம்.

இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், காங்கேசந்துறையிலிருந்து கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகத் தெற்கே 30 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது.

இதன் பரப்பு 1 சதுரமைல்.

1952 ஆம் ஆண்டு குடிசனமதிப்பின்படி, இங்கு 5,162 இந்து சமயத்தவர்களும் 122 கிறிஸ்தவ சமயத்தவர்களும் வாழ்கின்றனர்.

1947 ஆம் ஆண்டு முதல் பட்டின சபையாலும், அதற்கு முன் சுகாதார சபையாலும் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.

பெயர் வந்த காரணம்

'வல்லி' என்னும் கால்நடை வியாபாரி பட்டி வைத்திருந்த இடமாதலால் 'வல்லிபட்டி' என அழைக்கப்பட்டு, துறைமுகம் ஏற்பட்ட பின் 'வல்லிபட்டித்துறை' என வழங்கி, பின்னர் 'வல்லிவெட்டித்துறை' எனத் திரிந்து, தற்காலம் 'வல்லுவெட்டித்துறை' என்றும் 'வல்வெட்டித்துறை' என்றும் வழங்கிவருகின்றது.

இது சென்னபட்டினம் சென்னையெனச் சுருக்கி அழைக்கப்படுவது போல "வல்வை" என்றும் "வல்வை நகர்" என்றும் அழைக்கப்படுவதுமுண்டு.

ஆரம்பகால குடியேற்றம் - யுத்த வீரர்கள்

ஆதியில் இவ்வூரில் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து ஊர்க்காவலுக்காக வரவழைக்கப்பட்ட போர் வீரர்களே.

இவ்வீரர்கள் கடற்படை, தரைப்படை இரண்டிலும் சேர்ந்திருந்தவர்கள்.

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாடிய "வல்வைக் கலித்துறை" எனும் செய்யுளில் இவ்வூரவர்கள் "ஊர்க்காவலர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் நாய்க்கன் படைகளுடன் வல்வெட்டித்துறைக் கரையில் இறங்கியதாகவும், பறங்கியர் தலைவன் தெமோற்றோ திடீரென்று தாக்கி தமிழரை வெருட்டியடித்த செய்தி "யாழ்ப்பாணவைபவ கௌமுதி"யில் காணப்படுகிறது.

இவ்வூருக்குப் பக்கத்திலுள்ள சமரபாகுதேவன் குறிச்சி, வென்றிபாகுதேவன் குறிச்சி, கல்லிடைத் தேவன் குறிச்சி போன்ற பெயர்களும் அப்பகுதிகளில் யுத்த வீரர்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன.

தொழில்களில் மாற்றம்

நாட்டில் அமைதி நிலவியபின், யுத்த வீரர்களின் சேவை வேண்டப்படாமல் போனதால், அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடலாயினர்.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பலோட்டும் தொழில்:

பணக்காரராயிருந்தவர்கள் "திரைகடலோடியுந் திரவியம் தேடு" என்னும் ஔவையார் வாக்கின்படி கப்பல்கள் கட்டுவித்து வியாபாரம் செய்து பொருள் ஈட்டத் தொடங்கினர்.

கடற்படையிலிருந்தவர்கள் கப்பலோட்டும் தொழிலிலும் கப்பல்கட்டும் தொழிலிலும் ஈடுபட்டனர்.

"நாவாய் சாத்திரம்" என்னும் கப்பல் கட்டும் சாத்திரத்தைக் கற்ற மேத்திரிமார் பலர் வல்வெட்டித்துறையிலே இருந்தனர்.

பெரிய பாய்க்கப்பல்களைக் கட்டுவதில் வல்ல மேத்திரிமார் இலங்கையில் இவ்வூரிலன்றி வேறெங்கும் காண்பது அரிது.

திசைகாட்டும் கருவி, மணிகாட்டும் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே விண்மீன்களின் உதவியால் திசையையும் நேரத்தையும் அறிந்து கப்பல்களைப் பல தூர தேசங்கட்குமோட்டிப் பெயர்பெற்ற மாலுமிகள் பலர் இங்கு இருந்தனர்.

இந்தியாவிலுள்ள கப்பல் வர்த்தகர்கள் இவ்வூரிலுள்ள மேத்திரிமாரை அழைத்துக் கப்பல்கள் கட்டுவித்து பெரும் சீர்வரிசைகள் வழங்கியுள்ளனர்.

கீரிமலையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலும் மடாலயமும் கட்டுவித்த வடிவேலு மேத்திரியார் மற்றும் எல்லாக் கிரகங்களினதும் கதிவக்கிரம் முதலியவற்றைக் காட்டவல்ல அதி நூதனக் கடிகாரத்தைச் செய்தவரும், தோட்டங்களுக்கு யந்திரம் மூலம் நீர் பாய்ச்சுவதற்குரிய யந்திரத்தை முதல் முதல் கண்டுபிடித்துச் செய்துதவியவருமாகிய வா. ஆறுமுகம் (பொன்னுச்சாமி மேத்திரியார்) ஆகியோர் இத்தகைய கௌரவம் பெற்றவர்களில் சிலர். வா. ஆறுமுகம் 1930 இல் காலமானார்.

நீண்ட காலமாக இவ்வூரவர்கட்கு நாட்டுக்கோட்டைத் தனவணிகர்கள் கப்பல் கட்டுவதற்குப் பணம் கடன் கொடுத்துதவி வந்திருக்கின்றனர்.

வேளாண்மை மற்றும் வியாபாரம்: தரைப்படையிலிருந்தோர் வேளாண்மை, வியாபாரம் முதலிய தொழில்களை மேற்கொண்டனர்.

ஆலயங்கள்

"கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கேற்ப இங்கு கோவில்களுக்குக் குறைவில்லை.

முக்கியமான பெரிய ஆலயங்கள்:

கிழக்குப் பகுதியில் நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில்.

மேற்குப் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில்.

முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவில்.

இம்மூன்று ஆலயங்களிலும் ஆண்டுதோறும் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் கோபுரம் கட்டப்பட்ட முதற் கோயில் இம்முத்துமாரியம்மன் கோயிலே.

வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவிலில் நடைபெறும் ஆறுகாலப் பூசைக் கிரமங்களும், ஆகமசாத்திரங்களிற் கூறப்பட்டபடி அமைந்திருக்கும் ஆலய அழகும் பெரிதும் போற்றற்குரியன.

சிறு ஆலயங்கள்: தில்லையன் மடத்து வயிரவர் கோவில், உலகுடைய பிள்ளையார் கோவில், சடையாண்டி வயிரவர் கோவில், வைகுந்தப் பிள்ளையார் கோவில், நறுவிலடிப் பிள்ளையார் கோவில், மீனாட்சியம்மன் கோவில், கப்பலுடைய பிள்ளையார் கோவில், புட்டணியுப் பிள்ளையார் கோவில் என வழங்கும் 8 சிறு ஆலயங்களும், ஓர் கத்தோலிக்க மதத்தினர்க்குரிய ஆலயமும் உள.

திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையின் பங்களிப்பு:

மேலே குறிப்பிட்ட சிவாலயம் திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையால் 1867 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1883 ஆம் ஆண்டு வைகாசியில் பிரதிட்டாபிடேகஞ் செய்விக்கப்பட்டது.

இவ்வாலயத்து லிங்கம் "பாணலிங்கம்". காசிக்குச் சென்று கங்கையாற்றிலிருந்து இவ்லிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்துதவியவர் விசுவநாதர்.

ஆலயத் தூபித் தங்கக் கலசம், நடராஜர் முதலியவற்றை வார்ப்பித்துக் கொடுத்தவர் விசுவநாதரின் குமாரர் சரவணமுத்து.

திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையை யாவரும் "பெரியவர்" என்றே அழைப்பது வழக்கம். இவரைப் பற்றிச் சிவசம்புப் புலவரவர்களால் பாடப்பெற்ற "வல்வைக் கலித்துறை"ப் பாடல்கள் உள்ளன.

வைகாசி மாதத்தில் நிகழும் வற்றாப் பழைப் பொங்கலுக்காக கடல் மார்க்கமாகச் செல்பவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக முல்லைத்தீவுக் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மடாலயமும், ஒவ்வொருவரினதும் வருணாச்சிரமங்களுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கூடங்களும் இவரால் அமைக்கப்பட்டனவே. இவர் 1892 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார்.

இவரது தம்பியார் திரு. குழந்தைவேல் பிள்ளைதான் கொழும்பு செக்கடித் தெருவில் யாழ்ப்பாணித்தார் கோவில் என வழங்கும் சுப்பிரமணியர் ஆலயத்தைத் தாபித்தவர். இவர் அக்காலத்து இந்துஸ்தான் வங்கியில் சிறாப்பராகவும் பிரபலமான வியாபாரியாகவும் இருந்து கொழும்பிலுள்ள தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர். இவர் 1905 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார்.

புலவர்களும் அட்டாவதானியும்

ஆதியில் வட மராட்சிப் பகுதி மணியகாரராயிருந்து கடமை பார்த்த புண்ணிய மூர்த்தி மணியகாரனின் மகளை மணந்தவர் ஏகாம்பரப் புலவர். (இப்புண்ணிய மூர்த்தியார் வேங்கடாசலம் பிள்ளை, குழந்தைவேல்பிள்ளை ஆகியவர்களின் தந்தையாகிய திருமேனியாரின் மூத்த சகோதரர்).

ஏகாம்பரப் புலவரின் சகோதரியுடைய மகன் ஏகாம்பரம் என்பவர்தான் இலங்கையில் முதல் முதல் "அட்டாவதானஞ்" செய்து காட்டி அரும்பெரும் புகழ் பெற்றவர். இவர் "அட்டாவதானியார்" என்றே அழைக்கப்பட்டு வந்தவர்.

இவர்களுக்குப்பின் ச. வைத்தியலிங்கம் பிள்ளை, த. அருணாசலம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, பொன்னையாபிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகிய புலவர்கள் இருந்திருக்கின்றனர்.

இவர்களுள் ச. வைத்தியலிங்கப் புலவர் குறிப்பிடத்தக்கவர். இவர் நாற்பொருட் கவிராச நம்பியகப் பொருள், வள்ளியம்மை தெய்வயானையம்மை திருமணப் படலம், கந்தரலங்காரம், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி முதலிய நூல்கட்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டதுமன்றி, "சிந்தாமணி நிகண்டு" என்னும் நிகண்டு ஒன்றும் யாத்து வெளியிட்டுள்ளார். ஈழ நாட்டில் நிகண்டு நூல் செய்த புலவர் இவரன்றி வேறு யாரும் இலர்.

இவர் தர்க்கத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கியவர்.

இவர் காலத்து நிகழ்ந்த பல சண்டைகள் தொடர்பான கண்டனங்களையும் துண்டுப்பிரசுரமாக வெளியிட்டுள்ளார்.

"சைவாபிமானி" என்னும் பத்திரிகையொன்றைச் சொந்த அச்சியந்திர சாலை நிறுவி அச்சிட்டுப் பத்து ஆண்டுகள் வெளியிட்ட பின்னர் 1901 ஆம் ஆண்டு காலமானார்.

ஏனைய புலவர்கள் இயற்றியவை அச்சுவாகனம் ஏறாததால் ஒன்றும் தெரியவரவில்லை.

கவிக்குக் கனசுந்தருதல் (கவிஞர்களுக்கு சன்மானம்)

வல்வெட்டித்துறை கோ. கந்தசாமி என்பவர் மட்டக்களப்பில் பிரபல மர வியாபாரியாக விளங்கியவர்.

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்கள் இவர் மீது "பிரபாவப் பாமாலை" ஒன்றை பாடிச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை புலவரை மட்டக்களப்புக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி சிறு பொருளுதவி செய்தார்.

புலவர் சில மாதங்கள் கழித்து மட்டக்களப்புக்குச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை இல்லாத நிலையிலும், அவரது மனைவி சொன்ன சொற்படி ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

கல்விச்சாலைகள்

"சிதம்பர வித்தியாலயம்" என வழங்கும் ஓர் ஆங்கிலக் கல்லூரியும். இது 1896 இல் திரு. கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் நிறுவப் பெற்றது. பின்னர் அவரது மைத்துனர் திரு. ஞா. தையல்பாகர் அவர்களின் பரிபாலனத்தின் கீழ் வளர்ந்து வருகின்றது.

"சிவகுரு வித்தியாசாலை" என வழங்கும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். இத்தையல்பாகர்தான் சிவகுரு வித்தியாசாலையைத் தாபித்தவர்.

அமெரிக்கன் மிஷனரிமாரால் நடத்தப்படும் ஓர் தமிழ்ப் பாடசாலையும்.

கத்தோலிக்க மதத்தினரால் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ்ப் பாடசாலையும் உள.

திரு. ஞா. தையல்பாகர் தனது உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் வித்தியாசாலைகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணம் செய்து அரும் பாடுபட்டு வருகின்றார்.

முக்கியமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள்

இவ்வூரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலப்பு மணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை.

உள்ளூரவர்களே எல்லாவிதமான வியாபாரங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர்.

அரசாங்க சேவையில் ஈடுபாடு:

பண்டைக் காலம் தொடங்கி இவ்வூரவர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

திருமேனியாரின் தாயாருடன் கூடிப் பிறந்த பொன்னம்பலம் என்பவர் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரபல வியாபாரியாக விளங்கியதுடன், ஒல்லாந்த அரசாங்கத்தாரால் "முதலியார்" பட்டம் வழங்கப்பெற்றார்.

இவருக்குப்பின் வேலுப்பிள்ளை என்பவரும் அவருக்குப் பின் புண்ணியமூர்த்தி என்பவரும் மணியகாரராயிருந்தவர்கள்.

இன்னும் இவ் வல்வெட்டித்துறை வாசிகள் பலர் இலங்கை அரசாங்க சேவையில் எல்லாத் துறைகளிலும் அமர்ந்து சேவை செய்து வருகின்றனர்.

மலாயா, பர்மா முதலிய இடங்களிலும் பலர் இருக்கின்றனர்.

இந்தியாவுக்கும் இவ்வூரவர்கட்குமுள்ள தொடர்பு இன்றும் இருந்து வருகின்றது.

சமூக பங்களிப்புகள்:

இவ்வூரவரொருவர் (முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை) ஒரு லட்சம் ரூபாய் செலவில் **"இந்திராணி வைத்தியசாலை"**யைக் கட்டி அரசினரிடம் ஒப்புவித்துள்ளார்.

"ஜனசமூக நிலையம்" (Community Centre) ஒன்று ஊரவர்களால் ரூ. 13,500 செலவில் கட்டிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண புலனாய்வு ·

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆரம்பகால குடியேற்றம் - யுத்த வீரர்கள்

ஆதியில் இவ்வூரில் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து ஊர்க்காவலுக்காக வரவழைக்கப்பட்ட போர் வீரர்களே.

இவ்வீரர்கள் கடற்படை, தரைப்படை இரண்டிலும் சேர்ந்திருந்தவர்கள்.

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாடிய "வல்வைக் கலித்துறை" எனும் செய்யுளில் இவ்வூரவர்கள் "ஊர்க்காவலர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் நாய்க்கன் படைகளுடன் வல்வெட்டித்துறைக் கரையில் இறங்கியதாகவும், பறங்கியர் தலைவன் தெமோற்றோ திடீரென்று தாக்கி தமிழரை வெருட்டியடித்த செய்தி "யாழ்ப்பாணவைபவ கௌமுதி"யில் காணப்படுகிறது.

இவ்வூருக்குப் பக்கத்திலுள்ள சமரபாகுதேவன் குறிச்சி, வென்றிபாகுதேவன் குறிச்சி, கல்லிடைத் தேவன் குறிச்சி போன்ற பெயர்களும் அப்பகுதிகளில் யுத்த வீரர்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன.

இது நம்ம அண்ணன் அடிக்கடி சொல்லும் தெலுங்கு வந்தேறி எல்லொ😂..

பிகு

தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டை கொழுத்தும் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.