Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? அதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது? - அசேப எதிரிசிங்க

18 JUL, 2025 | 07:30 PM

image

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் மனித படுகொலையாளிகளாகவும், பயங்கரவாதிகள் வீரர்களாகவும் சித்தரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது. ஐ.நா சபை நடுநிலையாக வகையில் செயற்பட வேண்டும் என்று நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக வியாழக்கிழமை (17) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தால் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டன. இவ்வாறான நிலையில் ஒருபகுதியை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவதானம் செலுத்தப்படுகிறது.

இலங்கை இராணுவத்தினர் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. விடுதலை புலிகள் அமைப்பினர் நாடு முழுவதும் மேற்கொண்ட 100 தாக்குதல்களின் படங்களை ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தியுள்ளோம். விடுதலை புலிகளின் அமைப்பினால் இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

விடுதலை புலிகளின் அமைப்பினால் சிவில் பிரஜைகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இவற்றை ஆராய்வதை விடுத்து இலங்கை இராணுவத்தினர் மீது தான் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. 

யுத்தத்துக்கு தலைமை தாங்கியவர்களை மனித படுகொலைகாரர்களாக்கி, பயங்கரவாதிகளை வீரர்களாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் இடமளிக்க கூடாது.

இந்த நாட்டில் இன்றும்  நாட்டு பற்றுள்ளவர்கள் உள்ளார்கள் போலியான மனித உரிமைகளுக்கு ஐ.நா. சபை அடிபணிய கூடாது. உண்மையை ஆராய வேண்டும். விடுதலை புலிகள் சிங்களர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது.

பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. சிங்களவர்களின் படுகொலை புதைகுழிகளை யார் அகழ்வது. மக்களாணையை அரசாங்கம் மலினப்படுத்தக் கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடுநிலையான வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/220339

  • கருத்துக்கள உறவுகள்

ம், செம்மணியை கண்டவுடன் ஆளாளுக்கு பதறியடித்துக்கொண்டு கிளம்புகிறான்கள். அவ்வளவு பயம். புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன் நடந்த இனப்படுகொலைகளையும் ஆராய வேண்டும். தமிழருடைய சம உரிமைகளை பறித்து, இனவன்முறை, ஆயுத காலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்களை முதலில் தண்டிப்போம். பின்னர் புலிகளை தண்டிப்போம். மக்களை, நிராயுத பாணிகளாக நின்றவர்களை, அஹிம்சை வழியில் போராடியவர்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்தவர்கள், நீதியை சரியாக நடைமுறைப்படுத்த தெரியாதவர்கள் செய்த ஊழியாட்டம் இன்னும் அரசகதிரையில் பதவிகளோடு இருக்கிறது, அதற்கு உதவிகள், அவகாசம் வழங்குகிறது சர்வதேசம், மனித உரிமை நிறுவனங்கள். ஆனால் தங்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகளாக்கி, தடைகளை ஏற்படுத்தி, சேர்ந்து அழித்துவிட்டு அந்த மக்களை ஆபத்தில் தள்ளிய ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாடுகளையும் தண்டியுங்கள் முடிந்தால். இவ்வளவு நாட்களும் இவற்றை கதைக்காமல் எங்கே போயிருந்தார்கள் இவர்களெல்லாம்? உண்மை மறைந்து விட்டதென நிம்மதியாக உறங்கபோயியிருப்பார்களோ? இவர்களிடம் ஏற்றுக்கொள்ளல், பொறுப்புக்கூறல் இல்லை. தம்மை மறைக்க பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுவதிலேயே கண்ணாக இருக்கிறார்கள். நாடு எப்படி முன்னேறும்? அனுராவுக்கு வாக்குபோடடவர்களும் விரும்புவது, நாட்டில் சமாதானம், ஒற்றுமை, முன்னேற்றம். இல்லையென்றால்; இன்று மஹிந்தவோ, மைத்திரியோ, ரனிலோ தான் அரச கதிரையில் இருந்திருப்பார்கள், கோத்தாவும் விரட்டியடிக்கப் பட்டிருக்க மாட்டார். அதை புரிந்து பேசினால் நல்லது. மஹிந்தவே தான் இழைத்த குற்றத்திற்கு மின்சாரகதிரையே தனக்கு தண்டனை, அதிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார். இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டியிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் அழிவுக்கும் காரணமான, அவர்களை பாதுகாக்க தவறிய அரசை கண்டியுங்கள், அவர்கள் மேலும் விசாரணையை கோருங்கள். தங்கள் அரசியல் லாபத்திற்காக, செல்வாக்கிற்காக நாட்டு மக்களை பலி கொடுத்ததும் வளங்களை அழித்தும் சூறையாடிய, காலத்திற்கும் எங்களை எதிரிகளாக்கிய இனவாதிகளே காரணம். எங்களது, உங்களது இழப்பில், பகைமையில் குளிர் காய்ந்தது அவர்கள் மட்டுமே. அவர்கள் தண்டிக்கப்பட்டாலேயே இப்படியானதொரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். சிங்களவரை ஏமாற்றி போர் செய்வதும் பின்னர் அவர்களை வைத்து தப்புவதும் நிறுத்தப்பட வேண்டும். நீங்கள் ஒன்றும் நாட்டில் தேசியம் வளர வேண்டுமென்று இங்கு குரல் எழுப்பவில்லை, அப்படியிருந்திருந்தால்; எப்பவோ எழுப்பியிருப்பீர்கள். இப்போ உங்களுக்கு சன்மானம் தரப்பட்டிருக்கிறது, உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது, சிங்கள மக்கள் உண்மையை அறிந்து குரல் கொடுக்காமல் தடுப்பதற்கும் அவர்களை அதிலிருந்து திசை திருப்புவதற்கும். இப்போ மக்கள் உங்களை கேட்க வேண்டிய கேள்வி; இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தாய், இதுவரை உனக்கு இதுபற்றி தெரிந்திருக்க வில்லையா என்கிற கேள்வியே. இனவாதிகளின் செல்வாக்கு அழிந்து விட்டதால், காலம் கடந்து விட்டதால் நீங்கள் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள், இன்னும் எந்தெந்த பாம்பு எந்த புற்றிலிருந்து கிளம்பி வரப்போகிறதோ தெரியவில்லையே. உண்மை தானாகவே கிளம்பியிருக்கிறது, உண்மையை விழுங்கிய மண் வெளியே தள்ளுகிறது. போராடுங்கள், தலை குனிவது அவற்றை மறைக்க அவற்றுக்கு தடைபோட முயலும் நீங்களுந்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.