Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ள பிரச்சினை

அண்மையில் இந்தக் காணொளியைப் பார்க்க முடிந்தது. மனதிற்கு வலியைத் தந்த காணொளிகளில் ஒன்று. புலம்பெயர் தேசங்களில் தப்பி வாழும் முன்னாள் புலிகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை தாயகத்தில் உள்ள ஒருவர் முன்வைத்திருக்கிறார்.

இவர் கூறும் பல விடயங்களில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. இவ்விடயங்களில் மிகவும் நெருடலானதும், சர்ச்சைக்குள்ளாகியதுமான ஒரு விடயம் தான் இறுதிநேரத்தில் உயிர் காக்க ஓடிக்கொண்டிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகக்ப் பாவித்தார்கள் என்பதுடன், அவர்களைச் சுட்டுக் கொன்று தம்மைக் காத்துக்கொண்டார்கள் என்பதும்.

இறுதிப்போரின் இறுதி நாட்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது பின்னாலிருந்து புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் என்பதை நான் யாழில் எழுதும் ஜஸ்ட்டின் மற்றும் எனக்குத் தெரிந்த, இன்னமும் தாயகத்துடன் தொடர்பில் இருக்கின்ற இன்னும் சிலரூடாகவும் அறிந்துகொண்டேன். ஏற்றுக்கொள்ள மிகவும் கடிணமானதாக இருந்தபோதிலும், அப்படியிருக்காது என்று விவாதித்தபோதிலும் மனதில் ஒரு மூலையில் இப்படி நடந்திருக்கலாம் என்றே தெரிந்தது. கூடவே மிகுந்த வேதனையினையும் அது ஏற்படுத்தியிருந்தது, தற்போதும் அப்படித்தான்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முற்பட்ட மக்களை தடுப்பதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்பதை தவறென்று ஏற்றுக்கொண்டு, ஓரளவிற்கு அதனை புரிந்துகொள்ள முடிந்தபோதிலும், இக்காணொளியில் இவர் கூறும் தாம் தப்புவதற்காக சுட்டுக் கொன்றார்கள் என்பதையோ, ஆயிரக்கணக்கில் கொன்றார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. மக்களை சகட்டுமேனிக்குச் சுட்டுக் கொல்லவேண்டிய தேவை ஏன் புலிகளுக்கு வந்தது என்பதையோ அல்லது மக்களைக் கொல்வதனூடாக தம்மை அவர்கள் எப்படிக் காப்பாற்றிக்கொண்டார்கள் என்பதையோ இவர் விளக்கவில்லை. அல்லது அவர் அதனை தனது கருத்திற்கு ஆதாரமாக போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்வதாகக் கூட இருக்கலாம்.

தாயகத்தில் இருந்துகொண்டு தலைவரை மரியாதையாகக் குறிப்பிடும் இவர், இலங்கை இராணுவத்தின் பொன்சேக்கா, கமால் குணரட்ன மற்றும் சவேந்திர சில்வா ஆகியோரின் கூற்றுக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அவர்களுக்கான மரியாதையினை வழங்க முனைவதையும் அவரது பாதுகாப்புக் கருதியே செய்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இவர் கூறும் பல விடயங்கள் உண்மையிலேயே சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகளில் பணச் சேகரிப்பிற்காக நடத்தப்படும் உணவு விற்பனை நிலையங்கள், இறுவட்டு விற்பனைகள், வெளியீட்டு விற்பனைகள். இறந்தவர்களை வைத்துப் பணம் சம்பாதிக்கும் கூட்டம் என்று அவர் கூறுவதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை.

அவ்வாறே, தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியின் தளபதிகள், புலனாய்வு தளபதிகள், ஏனைய படைத் தளபதிகள் ஆகியோர் தலைவரைச் சாகக் கொடுத்துவிட்டு தாம் மட்டும் எப்படித் தப்பிக்கொண்டார்கள் என்று அவர் கேட்கும்போது அதேகேள்விகள் என்மனதிலும் எழுகிறது. மெய்ப்பாதுகாவலனைக் கொன்றுவிட்டே தலைவரை நெருங்கமுடியும் என்கிற நிலையில் தலைவர் மட்டும் கொல்லப்பட மெய்ப்பாதுகாவலர்கள் தப்பியது எங்கணம் என்கிற கேள்வியும் எழுகிறது.

அத்துடன், தலைவரின் மரணம் இடம்பெற்று 16 வருடங்கள் வரை இதனை வெளிப்படையாக அவர்கள் ஏன் கூறவில்லை என்கிற கேள்விகளுக்கும் இற்றைவரை பதில் இல்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் தலைவரையும் மாவீரர்களையும் உண்மையாகவே நேசிக்கும் ஒருவரின் மனக்குமுறல் என்று தெரிந்தாலும், இவரது பின்னணி பற்றியோ அல்லது இவரது உண்மையான நோக்கம் பற்றியோ எதுவும் தெரியாத நிலையில் இக்காணொளியினை உங்களின் பார்வைக்கு இணைத்துவிடுகிறேன்.

இக்காணொளி இன்னொரு சர்ச்சையினை இங்கு ஏற்படுத்தாது என்கிற எண்ணத்தில் முடிக்கிறேன்.

Eelam Tamils are outraged by the heroism of their leader, confirming his heroic death!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.