Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடைபவனி

23 AUG, 2025 | 11:18 AM

image

முல்லைத்தீவு முத்தையன்கட்டு -  ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக  வெள்ளிக்கிழமை (22) சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. 

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "நாம் சிறுவர் எம்மை காப்பீர்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா ஆரம்பித்து வைத்திருந்தார்.

முத்தையன்கட்டு ஜீவநகர்  பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக  ஆரம்பித்த குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஜீவநகர் சமாதான சுவிஷேச தேவாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது. 

ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றிருந்தது. 

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை பாதுகாப்போம் , சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம், அமர்த்தாதே அமர்த்தாதே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது.  

குறித்த பேரணியில் முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா, வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் காலேப் மற்றும் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1000495455.jpg

1000495451.jpg

1000495452.jpg

1000495440.jpg

1000495456.jpg

1000495444.jpg

1000495443.jpg

https://www.virakesari.lk/article/223160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியாவில் குழந்தை துஷ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

23 AUG, 2025 | 01:25 PM

image

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலை குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து சனிக்கிழமை (23) நுவரெலியா நகரில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர்.

நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நுவரெலியா நகர வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. குழந்தை துஷ்பிரயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், குழந்தை துஷ்பிரயோகத்தை எதிர்க்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விளம்பரப் பலகைகள், பதாகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தி பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த பேரணியை சுற்றுச்சூழல் மற்றும் எல்லா இடங்களிலும் வாழும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளின் பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

b1d9c2b6-668a-41f6-b55e-d38716752a62.jpg

6b5aad25-5550-4145-bcb3-83d1aeea6106.jpg

e69f7149-be1d-48de-aa0c-0d5a72b18a23.jpg

55851858-a35f-4cc9-99ec-f19d54bf1926.jpg

c864b712-6693-4d5d-aabf-8ff772e04535.jpg

https://www.virakesari.lk/article/223179

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.