Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

large.uthikkumthisainookkiunnathapayanam

இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது.

இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது.

தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை.

கிடைக்கப்பெற்ற யாவற்றையும் எனது வேண்டுகோளின் பேரில் திரு. தா. இளங்குமரன் அவர்கள் எழுத்துணரியாக்கம் செய்து தந்தார். அதனை நான் இங்கு வெளியிட்டு வைக்கிறேன். அத்துடன் இதனை மீளவும் நூலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 1

large.pathuman.jpg.69bbbb810f3530bee8988

திரு. மாத்தயாவின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருமலை மாவட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். ஏற்கனவே அங்கே குறிப்பிட்ட இடத்திற்கு வந்திருந்த திருமலை மாவட்டக் குழுவினருடன் இணைந்து கொள்கின்றோம். கால்நடையாகப் பயணத்தைத் தொடர்கிறோம். எறும்புக்கூட்டம் மாதிரி நீண்ட வரிசையாய்ப்பயணம் தொடர்கிறது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என்றிருந்த வயற்காணிகள் கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. செல்லும் பாதையெங்கும் மனித நடமாட்டமே இல்லை. பற்றைகள், முட்கள், சேறு எல்லாவற்றையும் தாண்டி வெகு வேகமாக ஆனால் விழிப்புடன் திருமலை மாவட்டக் குழுவினர் முன்னே செல்கிறார்கள். நாம் போய்ச்சேர வேண்டிய இடம் விரைவில் வந்துசேர்ந்து விடக்கூடாதா? என்ற எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கிறேன். வழயில் நாங்கள் கண்ட ஒரேயொரு உயிரினம் மாடுகள் தான். கேட்பார் மேய்ப்பார் யாருமின்றி கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. தமிழர்களுக்கில்லாத சுதந்திரம் இந்த மாடுகளுக்கு!

தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவருமே இப்பகுதிகளைவிட்டு வெளியேறி விட்டனர். எங்கோ ஓரிரு ஆண்கள் மட்டும் தங்கள் மண்ணைப் பிரியமனமில்லாமல் குடும்பத்தினரை அனுப்பி விட்டு தாங்கள் மட்டும் அங்கேயே வசித் வருகின்றனர் எனக் கேள்விப்படுகிறோம். இராணுவ முகாம்களின் வெளிச்சம் மட்டும் மிகப் பிரகாசமாக உள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் தற்காலிகமாகப் பயணம் நிறுத்தப்படுகிறது. அந்த இடத்தில் நாங்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணம் தொடங்கும்போது எனக்காகத் தரப்பட்ட இரவு உணவைச் சாப்பிடக் கூடிய நிலையில் நான் இல்லை. உடனே தேவைப்படுவது தூக்கம். சுமார் மூன்று மணித்தியாலங்கள் அயர்ந்த தூக்கம்.

காலை 8.30 மணியளவில் எழுந்து வெளியே வருகிறேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அயலைப் பார்க்கின்றேன். கிராமமே வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கொருவர் இங்கொருவராக இருந்தவர்கள் போராளிகளுக்கான உணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பயணத்தைத்தொடர்வதற்குரிய ஆயத்தநிலையில் திருமலை மாவட்டக் குழுவினர் இருக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் யாரும் தூங்கிய மாதிரி இல்லை. எனக்கோ ஆச்சரியம். ஏனெனில் நாங்கள் கடந்து வந்த தூரத்தின் இருமடங்கு தூரத்தை இவர்கள் அந்த இரவில் நடந்துள்ளார்கள். எம்மை அழைத்துச் செல்வதற்காக இப்பகுதியில் நடந்து வந்து திரும்ப எங்களுடன் இங்கே நடந்து வந்துள்ளார்கள். அத்துடன் இந்த இடைப்பட்ட நேரத்தில் தூங்கவுமில்லை. அடுத்த காணிக்குள் சில நாய்கள் உலாவுகின்றன. நாயின் சொந்தக்காரர்கள் அகதிகளாகச் சென்றுவிட இந்த மண்ணின் பாதிப்பு நாய்களிலும் தெரிகிறது. சாப்பாடு இல்லாத இந்த நாய்கள் பாவம் என நினைத்துக் கொள்கிறேன். இரவுச் சாப்பாட்டுக்கென எனக்காகத் தரப்பட்ட பார்சல் நினைவுக்கு வரவே அதை நாய்களுக்குப் போடுவோம் என்றெண்ணி அந்த வீட்டின் உள்ளே வருகின்றேன்.

திருமலை மாவட்டப் பொறுப்பாளர் பதுமன் வருகிறார். வழக்கமான உரையாடல். “இரவு நாங்கள் நடந்த தூரம் எவ்வளவு?” எனது கேள்வி. ஐந்து அடுத்து மூன்று அப்படியே... என்று கணக்குப்போட்டு மொத்தம் 20 மைல்கள் என்கிறார். வியப்பில் ஆழ்கின்றேன். நான் 20 மைல் நடந்து விட்டேன் என்றல்ல. திருமலை மாவட்டப் போராளிகள் 40 மைல்கள் நடந்திருக்கிறார்களே என்பதும், அத்துடன் இந்த இடைநேரத்திலும் தூங்காமல் அடுத்த பயணத்துக்குரிய தயார் நிலையில் இருக்கிறார்களே என்பதும்தான் எனது வியப்புக்குக் காரணம்.

பதுமனை விட்டு விலகிச் செல்கிறேன். தன்னைச் சூழ இருந்தவர்களிடம் மெதுவான குரலில் பதுமன் கேட்கிறார். “எல்லோரும் சாப்பிட்டாச்சா?” வழக்கமான இந்தக் கேள்வியைத் தொடர்ந்து மௌனம் நிலவுகிறது. மீண்டும் பதுமனே தொடர்கிறார். “எல்லோரும் சாப்பிடாதீங்க சோறு இல்லை” – வழமைக்கு மாறான வேண்டுகோள். சூழ இருந்தவர்கள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் வியக்கிறேன். ஏனெனில் இதுவரை நாளும் ஒரு சராசரிக் குடும்பஸ்தனாக இருந்தவன் நான். மூன்று நேரச் சாப்பாட்டில் எந்த நேரமும் பிந்தக் கூடாது எனக்கு. கொஞ்சம் பிந்தினாலும் மிகவும் சிரமப்படுவேன். அந்தக் காட்சிகள் நினைவுக்கு வந்தன; அத்துடன் இந்த மாதிரியான ஒரு இடத்தில் இரவுச் சாப்பாட்டைக் காலைச் சாப்பாடாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாமல் நாய்களுக்குப் போட நினைத்த என்னை எண்ணி நான் குறுகிக் கொண்டேன். சாப்பாடு ஓரளவு குறைந்தால் பங்கிட்டுச் சாப்பிடச் சொல்லியிருப்பார் பதுமன். ஆட்களின் தொகையையும் சாப்பாட்டின் அளவையும் நினைத்துத்தான் இவ்வாறான வேண்டுகோளை தனது போராளிகளுக்கு விடுத்துள்ளார் என்பதை நினைக்கும் போது திருமலை மாவட்டத்தின் யதார்த்த நிலையில்ன் கோரத்தைப் புரிந்து கொண்டேன்.

வெளியே திருமலை மாவட்டப் போராளிகள் மாமரத்தின்கீழ் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கான உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. குழுத் தலைவர்களின் அறிவுறுத்தல்களின் பின் அவர்கள் கலைகிறார்கள். ஒருவரோடொருவர் சிரித்துப்பேசியபடி மாங்காய்களைத் தடியால் எறிந்து விழுத்துகிறார்கள். ஏதோ சொட்டைத் தீனுக்காகத்தான் இதை வீழ்த்துகிறோம் என்ற பாவணையில் மாங்காய்களைப் பொறுக்கி கடிக்கிறார்கள். இந்தப் பிரயாண முடிவில் அவர்கள் சென்றடையும் முகாமில்தான் இனி வயிறாரச் சாப்பிட வேண்டும்.

பதுமன் வருகிறார். திருமலை மாவட்ட போராளிகளின் உணவு நிலைமைபற்றி அளவளாவுகிறேன். “இப்ப ஒருமாதிரி பிரச்சினை யில்லை. I. P. K. F. காலத்தில் தான் ஆகக்கஷ்டப்பட்டிட்டம். இவனெல்லாம் ஒரு தொடர்புமில்லாமல் காட்டுக்குள் பாலைப்பழத்தையும், விளாங்காயையும் சாப்பிட்டுக் கொண்டே சில காலம் இருந்திருக்கிறான். இவனோடை இருந்தவங்களெல்லாம் கடலில் வண்டி கவிழ்ந்து போனதில செத்துப் போனாங்கள்” என்று சொல்லி ஒரு பையனை அறிமுகப்படுத்துகிறார்.

மனித நடமாட்டமில்லாத பகுதியில் மீண்டும் பிரயாணம் தொடங்குகிறது. கையில் தூப்பாக்கியை ஏந்தியபடி தமது சொந்தமண்ணில் காலடிபதிக்கிறார்கள். 90க்கு மேற்பட்ட படை முகாம்கள் உள்ள இந்த மாவட்டத்தில் உள்ள தமிழனாகப் பிறந்த எவனதும் ஆயுட்காலத்தை அதிகரிப்பது, உயிர்வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுப்பது இந்த ஆயுதங்களே. இலட்சியத்தில் நம்பிக்கை கொண்ட இவர்களின் பின்னால் கூனிக்குறுகியபடி நானும்...

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 2

15.9.90 அன்று தற்காலிகமாக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அடுத்த இடத்தை நோக்கிச் சென்றோம். இந்தப்பிரயாணம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்தது. இதில் ஒரு மணித்தியாலம் நடைப்பயணம். 

காட்டின் நடுவே அமைந்திருந்த ஒரு பெரிய முகாமுக்குச் சென்றோம். அடர்ந்த கானகத்தினூடே ஒரு குட்டி நகரம் போல் அந்த முகாம் காட்சியளித்தது. புலிகளின் வைத்தியசாலை அரசியற் பிரிவின் தலைமைச் செயலகம் போன்றவை அங்கே அமைந் திருந்தன. அரசியற் பொறுப்பாளர் ரூபன் பெரும்பாலும் இங்குள்ள அலுவலகத்தில் தான் தங்கியிருப்பார். இவரது அலுவலகம் காட்டிலேயே அமைந்திருந்தாலும் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் எவ்வாறு அரசியற் பிரிவின் செயலகம் அமைந்திருக்குமோ அதே போன்ற அமைப்புடன் விளங்கியது.

முகாமைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட மாத்தயா அவர்கள் வழியில் சந்திக்கும் ஒவ்வொரு போராளிகளுடனும் உரையாடினார். க. பொ. த (சாதாரணம்) வகுப்பு வரை படித்துள்ள 21 வயதான போராளியொருவரை முதலில் சந்தித்தார். தம்பி உங்கள் ஊர் எது? ஆலங்கேணி. ஆலங்கேணியில் இப்ப எவரும் இல்லையே. அப்பா அம்மா எல்லோரும் எங்கே?  அகதியாகப் போய்விட்டனர். எங்கே போனார்கள்? எங்கையென்று தெரியாது. பெரும்பாலும் முல்லைத்தீவுப் பக்கமாகத்தான் போயிருப்பினம். போகும்போது அவர்களைச் சந்திக்க முடிந்ததா? ஓம். இந்த வழியால்தான் போனவை. அப்ப நான் சென்றில் நிண்டனான். என்ன சொன்னவை? “நீ தப்பி விட்டாய் என்று சொல்லி விட்டுப் போனவை”

எனக்கு யாழ்ப்பாண நிலைமைதான் உடனே நினைவுக்கு வந்தது. எத்தகைய போர் நிலைமை இருந்தாலும் தங்களுடைய பிள்ளைகள் இயக்கத்துக்குச் சென்றால் எப்படியாவது அவர்களை மீட்டெடுக்கப் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள்? அனைத்துப் பெற்றோரும் தமக்குப் பெண் பிள்ளைகள் உண்டு. இவர் ஒருவர்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று சொல்வார்கள். போராட்டத்தினால் விளைந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி எந்த நாட்டுக்காவது ‘அகதி’யாக அனுப்பப் பார்ப்பார்கள். ஆனால் கிழக்கிலோ தாம் அடைந்த அகதிநிலை பிள்ளைகளுக்கு வரக்கூடாது. இயக்கத்துக்குள் செல்வதனால் ஒருவன் தப்பிவிடுகிறான் என்ற மனோபாவம். வடக்கும் கிழக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அங்கே சூழ்நிலையின் கொடூரம் மக்களை உறுதியாக்குகிறது. தொண்ணூறுக்கு மேற்பட்ட முகாம்கள் உள்ள திருமலையில் இயக்கத்துக்குள் சென்றவன் தப்பிவிட்டான் என்று எண்ணுகிறார்கள். யாழ்ப்பாணத்திலோ மண்போனாலும் பரவாயில்லை. மகன் வந்தால் போதும் என்றநிலை.

மேலும் சிலரை மாத்தயா விசாரித்தார். பொதுவாக எல்லோரிட மிருந்தும் ஒரே பதில். வீட்டுக்காரர் எங்கே? தெரியாது. இப்ப எங்கே போயிருப்பினம் என்றுநினைக்கிறீங்கள்? தெரியாது. உயிரோட இருக்கினம் எண்டாவது தெரியுமோ? தெரியாது.

          குழுத் தலைவராக/இருக்கும் ஒருவரை அவர் விசாரித்தார். குடும்பத்தில் மூன்று ஆண் பிள்ளைகள். ஒரேயொரு சகோதரி. மூன்று ஆண்பிள்ளைகளுமே இயக்கத்தில்தான் உள்ளனர். தற்போதைய போரில் காயமடைந்து யாழ்ப் பாணம் வந்த அந்தப்போராளி திருமலைக்குச் செல்லும் வழியில் முல்லைத்தீவில் அகதிகளாக இருக்கும் தாய், தந்தை யரைச் சந்தித்தார். உணவு பரிமாறும் போது அந்தத் தாய் சகோதரியின் நிலைமையை மட்டும் அறிந்துவிடு என்று கேட்டுக் கொண்டார். தொழில் வாய்ப்பின் நிமித்தம் மட்டக்களப்புக்குச் சென்ற அவர் அங்கே என்னபாடோ தெரியாது என்று கவலைப்பட்டார். சகோதரியின் நிலை என்ன என்பதை இனித்தான் அறிய என்று முயற்சிக்க வேண்டும் என்று அப்போராளி அவரிடம் தெரி வித்தார்.

"குடும்பமே சிதறிய நிலையிலும் இவர்கள் போராட்டத்திலிருந்து விலகும்படி பிள்ளைகளைக் கேட்கவில்லை. தங்களுக்கு உழைத்துத் தர யாருமே இல்லாத நிலையிலும் இந்தச் சுமைகளை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்திலோ சகோத ரிகளை கரைசேர்க்க வேண்டும். அண்ணன் திருமணம் செய்துவிட்டார். இனி குடும்பப் பொறுப்பு எனது தலையில் தான் என்று கூறி போராட்டத்திலிருந்து தளர்ந்து போகிறார்கள். பொதுவாக எந்தக்குடும்பத் தைப் பார்த்தாலும் மனைவி ஓரிடம், கணவன் ஓரிடம் தாய் தந்தையர் ஓரிடம் பிள்ளைகள் வேறிடம் என்ற நிலைமைதான். இப்படி இருந்தும் இவர் களைப் பொறுத்தவரை போராட்டம் பற்றிய தெளிவும் உறுதியும் உள்ளது" என்று கூறினார் மாத்தயா.

எமது இருப்பிடத்திற்குத் திரும்பிவந்து எமக்காக வைக்கப்பட்டிருந்த உணவைப் பார்த்தோம். பாண், பணிஸ் போன்றவை இருந்தன. இவற்றை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்று விசாரித்தோம். நாம் சொந்தமாக பேக்கரி அமைத்து எமது தேவைக்கென பாண், பணிஸ் என்பவற்றைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றார் பதுமன். அப்போது ரூபன் “ஒவ்வொரு முகாமுக்கும் தேவை மரக்கறி வகைகளை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம்” என்றார். யாழ்ப்பாணத்தில் அரிதாகக் கிடைக்கும் மரக்கறிகளை அங்கே சாதாரணமாக காணமுடிந்தது.

              அடுத்து திருமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளரின் அலுவலகத்துக்குச் சென்றோம். மாவட்டத்தின் நிலைமைபற்றி விசாரித் தோம். மூதூர்ப் பகுதியில் மட்டும் ஆயிரத்து ஐம்பத்தேழு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றார். எவ்வளவு மக்கள் வெளியேறி யுள்ளார்கள் என்று கேட்டோம். கங்குவேலி 180 குடும்பம் 834 பேர், புளியடிச் சோலை 125 குடும்பம் 502 பேர், பாரதிபுரம் 25 குடும்பம் 90 பேர்... என்று ஒரு நீண்ட பட்டியலைக் காட்டி னார். அகதிகளாக வெளிமாவட்டங்களுக்குச் சென்ற வர்களின் பெயர் விபரம் போன்ற பட்டியலைக் கூடக் கண்டோம். காட்டின் மத்தியில் இருந்து கொண்டு இவ்வளவு தெளிவாக புள்ளி விபரங்களைப் பெற்றுக்கொள்கிறீர்களே! என்று வியந்தோம். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்டெண்டாலும் எனக்குப் பிறகு இந்தப் பொறுப்பை எடுப்பவர் எல்லா விபரத்தையும் உடனே தெரியவேணும் தானே. அதுதான் எப்படி எண் டாலும் எஞ்சியிருப்பவர்கள் மூலம் இவ்விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறன்” என்றார். திருக் கோணமலை மாவட்டத்தில் யுத்தம் இவர் மீதான தாக்குதலுடன் தான் ஆரம்பமானது என்பது நினைவுக்கு வந்தது. அந்தத் தாக்குதலில் இவருடன் கூடச் சென்ற இருவர் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் இவரையும் துளைத்தன தற்போதும் முதுகில் குண்டு இருப் பதனால் இயல்பாக கடமைகளை ஆற்றமுடியாத நிலை. எனவே நாளைக்கு எனக்கு ஒண்டெண்டாலும் என்று தொடங்கி இவர்கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் என் கண்கள் பனித்தன. இதுதான் புலிகளின் பலம், இம்மாதிரி இயக்கத்தை கட்டி வளர்த்ததே புலிகளின் தனித் துவத்துக்குக் காரணம் என நினைத்துக் கொண்டேன்.

அகதிகள் முகாம்களின் நிலை எப்படியுள்ளது? என்று கேட்டேன். “திருமலையில் இருப்பவை அகதிமுகாம்கள் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் அவை தடுப்பு முகாம்கள்”என்று ஆரம்பித்து அவை பற்றி கூறத் தொடங்கினார் ரூபன்.     

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 3

திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து வெளியேறியோரில் கணிசமானோர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்று விட்டனர். இவர்களில் அநேகர் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்கும் போய்ச் சேர்ந்து விட்டனர். ஏற்கெனவே நடைபெற்ற இனஅழிப்பு நடவடிக்கைகளின் போது இந்தியாவுக்குச் சென்றவர்கள் அங்கே ஏதாவதொருதொழில் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இம்முறை இந்த வசதிகள் எதுவும் இல்லை. அப்படி இருந்தும் இங்கிருந்து போனவர்கள் படகு கவிழ்ந்தும், கடற்படைசுட்டும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

திருமலை மாவட்டத்தில் தம்பலகாமம் மகாவித்தியாலயம், கிண்ணியா ஜி.பி.எஸ் கிளப் பன்பேர்க், கந்தளாய் பரமேஸ்வரா வித்தியாலயம், இறால் குழி பாடசாலை, நிலாவெளி தேவாலயம், கோபாலபுரம் பாடசாலை, சாம்பல் தீவு தேவாலயம், பச்சைநூர் பாடசாலை, பச்சைநூர் தேவாலயம். 59 ஆம் கட்டை பாட சாலை, மூதூர் தியேட்டர், பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம், சம்பூர் பாட சாலை, கூனித்தீவு பாடசாலை, வெருகல் பாடசாலை, ஆகிய இடங்களில் அகதிகள் தங்கியுளளனர். இதைவிட வெருகல் பகுதி (மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி) கதிரவெளி பாடசாலை வாகரை ஆகிய இடங்களிலும் தங்கியுள்ளனர். இதில் தம்பலகாமம்  போன்ற பகுதிகளில் இருப்பவர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. இவர்கள் அங்கிருந்து எங்கும் தப்பமுடியாது. தேவையான போது இவர்கள் இழுத்தெடுத்துக் கொண்டு செல்லப்படுவர். எவரும் உயிருடன் திரும்புவது இல்லை என்றார் ரூபன்.

இவர்கள் பெயர் விபரங்கள் உண்டா? என்று கேட்டேன். இதோ பாருங்கள் என்று பதிவுப் புத்தகத்தை நீட்டினார்.

ஆனிமாதம் 2ஆம் திகதி (கோவிலடி-65 வயது), ஈஸ்வரன் (வர்ண மேடு - 31 வயது), கோணேச பிள்ளை (வர்ணமேடு-37வயது) ஐயாத்துரை (கள்ளிமேடு - 26 வயது). சுப்பிரமணியம் (கோவிலடி -29 வயது), குட்டி (மேற்குகொலனி-31 வயது)... இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே போனது. தம்பலகாமத்தை இராணுவமும் முஸ்லிம் காடையரும் எரியூட்டிய போது இவர்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்றார். இப்படியாக ஆடி மாதம். ஆவணி மாதம் என்று முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவரின் பெயரும் இருந்தன. (இத் தொடரை எழுதுகையில் கூட 23-10-90 அன்று கிளப்பின் பேர்க் அகதி முகாமிலிருந்து 23 தமிழ் பொதுமக்கள் கூவர் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஊர்காவல் முஸ்லிம் படையினராலும், சிறிலங்கா ராணுவத்தாலும் படுகொலை செய்யப்பட்டனர் என்று செய்தி வந்துள்ளது) என்று கேட்டேன். உயிர் வாழ்வதற்குப் போதுமான உணவு இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்றார் ரூபன் சமூகநல ஸ்தாபனங்கள் எதுவும் இவர்களுக்கு உதவி செய்யவில்லையா என்று  கேட்டேன்.  திருக்கோணமலை மாவட்டத்தில் சமூகநலஸ்தாபனங்களின் கண்ணில் தெரிவது சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும்தான். தமிழர்களை அவர்கள் அகதிகளாகவோ, ஏன் மனிதர்களாகவோ கருதுவது இல்லை என்றார். அவர். எதைக் கொண்டு இ படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அகதிமுகாம்களில் இருந்து அடிக்கடி தமிழர்களைக் கைது செய்கிறார்கள். பச்சைநூர் அகதிமுகாம்களில் இருந்து அடிக்கடி தமிழர்களைக் கைது செய்கிறார்கள். பச்சைநூர் அகதிமுகாமில் இருந்து 42 பேரைக் கைது செய்த சம்பவம் மூதூர் உதவி அரசாங்க அதிபர், செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் முன்னிலையில்தான் நடைபெற்றது. தங்கள் பொறுப்பில் உள்ள முகாமில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அதேவேளை சிங்கள மக்களின் வயல்களுக்குத் தண்ணீர் தேவையென்பதற்காக இராணுவம் வரப்பயப்படும் இடங்களுக்கு இவர்கள் தண்ணீர் திறந்துவிட வருகிறார்கள். இதிலிருந்து யாருடைய நலனை இவர்கள் முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். சிலவேளை தமது உயிரைப் பாதுகாக்க இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்றார் ரூபன்.

அகதிமுகாம்களில் நடக்கும் சம்பவங்களை விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். இதை நான் சொல்வதைவிட சம்பந்தப்பட்ட மக்களிடம் நீங்கள் நேரடியாகக் கேட்பதுதான் நல்லது. எனினும் ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறேன். 13-9-90 அன்று தமது மிதி வெடியின் சக்தியைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக பச்சைநூர் அகதிமுகாமில் இருந்த இருசிறுமிகளை தாம் புதைத்த மிதிவெடிகளுக்கு மேலால் நடந்து செல்லச் சொன்னார்கள் இராணுவத்தினர். இதனால் ஒன்பது வயதுச் சிறுமி காலையும், எட்டுவயதுச் சிறுமி கண்ணையும் இழந்துள்ளனர். வைத்திய பரிசோதனை செய்வதற்கு தடுப்பு முகாமில் இருந்த யூதர்களைப் பயன்படுத்தினான் ஹிட்லர். எமது நாட்டில் இராணுவ பரிசோதனைகளுக்கு தமிழர் களைப் பயன்படுத்துகிறார் என்றார் வேதனையுடன்.

அகதி முகாமிற்கு வெளியி லும் தமிழர்கள் உண்டா? என்று கேட்டேன். அகதி முகாமில் கைதுசெய்யப்படுவதும், பெண்கள் பாலியல் வன் முறைக்குட்படுத்தப்படுவதும், தொடர்வதால் முகாம்களுக்குச் செல்லப் பயப்பட்டு அனேகர் காடுகளில் வாழ்கிறார்கள். இதைவிட மலைமுந்த லில் 78 குடும்பம், பாட்டாளிபுரத்தில் 100 குடும்பம், வீரமாநகரில் 110 குடும்பம். அரிப்பில் 184 குடும்பம், நல்லூரில் 88 குடும்பம் எந்தவித உதவியும் இல்லாமல் இருக்கிறார்கள் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சமூகநல ஸ்தாபனங் களின் பார்வை மறந்தும் கூட இவர்கள்மீது படுவது இல்லை. இதற்கு அவர்கள் கூறும் காரணம் அகதிமுகாம் இருந்தால் தான் உதவி செய்வோம் என்பது தான். தங்கள் பொறுப்பில் உள்ள அகதிமுகாம்களில் கைது செய்தலையும் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதையும் கண்முன்னால் பார்த்தும் இப்படியான பதிலைச் சொல்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் இவை இயங்குகின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்றார். தலையைப் பிய்த்துக் கொண்டேன்.      

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 4

நீங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏதோ சாப்பிட வேன்டும்தானே? என்ன செய்கிறார்கள்? என்று கேட்டேன்.

வேதனையுடன் பெருமூச்சு விட்டவாறே தொடர்ந்தார். ஈச்சமரத்தின் குருத்தை வெட்டிச் சாப்பிடுகிறார்கள். காட்டில் கிடைக்கும் சில வகைக் கொடிகளின் கீழ் உள்ள கிழங்குகளைப் பிடுங்கிக் கொண்டு வருகிறார்கள், தொலைதூரத்துக்குச் சென்று குளங்களில் மீன்பிடித்து அதை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இவர்கள் என்ன நடந்தாலும் தமது மண்ணை விட்டுச்செல்லமாட்டார்கள். தமது மண்ணைப் பிரிவது என்பது இவர்களால் முடியாத காரியம். தற்போதைய போரில் கூட இலக்கந்தையில் 10 பேரும், மட்டப்புக்களியில் 35 பேரும் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அகதிகளாகச் செல்வதற்கு இவர்கள் முயலவில்லை என்றார்.

ஈச்சைமரமும், கிழங்குகளும் மீனும் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டேன். ஒரு நாள் அந்தப்பகுதியால் எமது போராளி ஒருவன் சென்றான். ஏதோ தேவைக்கு தீப்பெட்டி தேவைப்பட்டது. ஒரு வீட்டில் சென்று தம்பி தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டான். "அண்ணை நாங்கள் அடுப்பு மூட்டியே ஐந்து நாட்கள். எங்களிடம் தீப்பெட்டி கேட்கிறீர்களே! என்றான் அந்தச் சிறுவன்" என்றார் ரூபன். நான் அதிர்ந்துபோய் நின்றேன். இதற்கே இப்படி என்றால் இனிச் சொல்லப் போவதை நீங்கள் கேட்டால்... என்றவாறே தொடர்ந்தார்.

பசியின் கொடுமையால் உப்பூரலில் இருந்து தோப்பூர் என்ற முஸ்லம் கிராமத்துக்கு பிச்சை எடுக்கச் சென்ற முதியவர்களை 13.9.90 அன்று அங்குள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் அடித்துக் கொன்றுள்ளனர். சிலரைக் காயப்படுத்தியுள்ளனர் என்றார் ரூபன். கதிர்காமம் மாரியான் (75 வயது), மாரியான் வைரவன் (75 வயது) இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கந்தன் வைரவன் (70வயது), சீனித்தம்பி கந்தையா (75 வயது), வைரவன் சித்திரவேல் (60 வயது) ஆகியோர் நடமாட முடியாதளவுக்கு காயப்படுத்தப்பட்டுள்ளனர்? அத்துடன் தமிழருக்கு எவரும் பிச்சைகொடுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர் என்றார்.

இது மட்டுமல்ல அடுத்த நாள் 14.9.90 அன்று காலை காணாமற்போன இவர்களை தேடிப் போன ஆறுபேரையும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பிடித்துக் கொண்டனர். இவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. எனக்கென்றால் இவர்கள் உயிரோடிருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என்றார். உப்பூரல், முதியவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்த அதே தினம் 13.9.90 அன்று நல்லூரில் இருந்து தோப்பூர் சென்ற க. வைரமுத்து (65 வயது), கந்தையா (76 வயது) வைரன் முத்துக்குமார் (46 வயது) ஆகியோரையும் கடுமையான சித்திரவதைக் குள்ளாக்கியுள்ளனர் முஸ்லிம் ஊர்காவல்படையினர். வயது போன இவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான உணவு சோளம். அண்மைய இராணுவ நடவடிக்கையின்போது இவர்களின் வீடுகளில் இருந்த சோளத்தை இராணுவத்தினர் எரித்துள்ளார்கள். பிச்சைக்குப் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொல்கின்றார்கள். அகதி முகாமுக்குப் போனால் அங்கும் மரணம். இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் அகதிமுகாமுக்குப் போனால்தான் நிவாரணம் தரமுடியும் என்று சொல்கிறது என்றார் ரூபன். தொடர்ந்து இதையெல்லாம் நீங்கள் கண்ணால் தானே காணத்தானே போகிறீர்கள் என்றார். அவர் கூறியது போலவே அதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கத்தான் செய்தது.

திரு. மாத்தயாவின் வருகை திருமலை மாவட்டத்திலுள்ளதமிழ் மக்களுக்குத் தெரிந்து விட்டது. ஆங்காங்கே அகதி முகாம்களிலும், காடுகளிலும் இருப்போர் எப்படியோ நாம் போகும் பாதையில் கூடிவிடு வார்கள். இவர்களுக்கே சாப்பாடு இல்லை. அப்படியிருந்தும் ஒரு வாழைக்குலையுடன் நின்றார்கள். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் அவர்களின் இந்தப்பண்பு நெகிழ வைத்தது. அவர்கள் கொடுத்த வாழைக்குலையைப் பெற்றுக்கொண்டோம். ட்றக்டரில் இருந்தபடியே அனைவருமாகச் சாப்பிட்டோம். வாழைக்குலையின் அடியில் சிறிய காய்கள் இருந்தன. குறிப்பிட்ட இப்பகுதிக் குள்வந்தபோது தான் தண்டை வெளியே வீசினோம். எங்கிருந்தோ இதைக் கவனித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்து இதையெடுத்து ஆளுக்கொரு காய்களாகப் பிடுங்கினார்கள் அவசர அவசரமாக முண்டி அவர் விழுங்கினார்கள். அவர்கள் ஓடி வந்த வேகமும், காய்களைப் பிடுங்கியவிதமும், அவர்களின் கோலமும் எம்மனதில் சம்மட்டியால் அறைந்தது போலிருந்தன.

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 5

பொதுவாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போவதானால் எத்தனை மைல் நடக்க வேண டும் என்று சொல்லமாட்டார்கள். எத்தனை மணித்தியாலம் நடக்க வேண்டும் என்றே கூறுவார்கள். எட்டு மணித்தியால நடை, பத்து மணித்தியால நடை என்பார்கள். இந்தப் பிரயாண ஆரம்பத்தில் "இந்தப் பிரயாணம் தான் கொஞ்சம் கஷ்டம். பிற்பகல் 2.30க்குப் புறப்பட்டால் அதிகாலை 4.00 மணிக்கு எங்களுடைய நடையில் (திருமலை மாவட்டப் போராளிகளின்) போய்ச்சேரலாம். உங்களுடைய நடைக்கு அதிகாலை 5.30 மணிசெல்லும் என நினைக்கின்றேன் என்றார் பதுமன். இடையில் எங்குமே தங்கமுடியாது. இந்தப் பயணத்தின்பின் நீங்கள் பொது மக்களைச் சந்திக்கக் கூடியதாக இருக்கும் என்றார். 14-9-90 அன்று திருமலையில் கால் வைத்த நாம் 23-9-90 அன்றுதான் பொதுமக்களைக் கண்ணால் காணப்போகின்றோம். (ஏற்கனவே நான் குறிப்பிட்ட வாழைத்தண்டில் இருந்த காய்களை மக்கள் விழுந்தடித்துப் பொறுக்கி முண்டி விழுங்கிய சம்பவம் 25-9-90 பிரயாணத்தின் போது நடந்தது)

இதுவரை நாம் சந்தித்த முகாம்களில் இருந்தவர்கள் பொது மக்களைக் காணமுடியாது? அவர்களுடைய உலகம் இந்தக் காடுகளும், போராளிகளும் தான். நான் ஒருநாள் ஒரு போராளியைச் சந்தித்து இதுபற்றி உரையாடியபோது, தற்போதைய போரைவிட ஒரு நெருக்கடி யானநிலை இந்திய இராணுவத்துடனான போரில் இருந்தது என்று குறிப்பிட்டார். தனக்கு இரு மருமக்கள் இருக்கின்றார்கள் என்றும், அவர் களின் நினைவு தன்னை அடிக்கடி வாட்டும் என்றும் குறிப்பிட்டார். தான் அப்போது குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இருந்த பகுதியை அண்டிய காடுகளில் இருந்ததால் காலையில் எட்டு மணியளவில் உயரமான மரங்களில் ஏறி நின்று பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறு குழந்தை களைக் கண்டு ஆனந்திப்பதாகக் குறிப்பிட்டார். அந்தக் குழந்தைகளைக் காணு ம் போது தனது மருமக்களைப் பார்க்கும் உணர்வு ஏற்படுவதாகவும் கூறினார். “மென்மையான மனது கொண்டவர்களே போராளிகளாகின் றார்கள். அவர்களால்தான் தமது இனத்திற்கெதிரான அடக்குமுறை களைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதைச் சகித்துக்கொள்ளும் மனம் உடையவர்களே போராட்டத்துக்கு வெளியில் இருப்பவர்கள்” என்று ஒருமுறை போராளி சீலன் (சார்ள்ஸ் அன்ரனி) கூறியது நினைவுக்கு வந்தது.

எமது பயணத்தில் இன்னோர் அம்சம் ஓர் இடத்திலிருந்து எம்மை அழைத்துச் செல்லும் போராளிகள் நாம் சென்று அடையப்போகும் முகாமைச் சேர்ந்தவர்களை இடையில் சந்தித்து எம்மை அவர்களிடம் ஒப்படைப்பார்கள். திரு. பதுமனும் அவரது மெய்ப்பாதுகாவலர் சிலரும் மட்டுமே எம்முடன் திருமலை மாவட்ட எல்லைவரை வருவார்கள். ஏனெனில் ஒவ்வொரு முகாமைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பகுதிக் காடுகளைப் பற்றித் தெரியும். இடையில் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டாலும் அவர்களால் மட்டுமே சரியான பாதையில் எம்மைக் கொண்டு போய்ச்சேர்க்க முடி யும்.

இன்றைய பிரயாணம் எட்டு இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டிய பிரயாணம் என்பதைத் தெரிந்துகொண்டோம். ஒரு முகாமைப் பகலில் கடந்துவிட்டோம். இந்தப் பிரயாணத்தில் யாராவது கதைக்கவோ, இருமவோ முடியாது. முகாம்களுக்கு மிக அருகிலேயே எமது பிரயாணம் தொடர்வதால் சப்பாத்து ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி எம்மைப் பொறுப்பெடுக்கப் போகும் குழுவும் தனது பிரயாணத்தைத் தொடங்கியிருந்தது. பயணத்தின் இடையில் இராணுவ முகாம்களில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுப் பபிற்சிச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரவானதும் முகாம்களின் வெளிச்சம் பிரகாசமாய்த் தெரிந்தது. மிக அருகருகே இருந்த இந்த இராணுவ முகாம் ஏழும் ஒரே இரவில் கடக்க வேண்டியவை இந்த ஏழு முகாமில் எந்த முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எமது பாதையில் படுத்திருந்து தாக்கினாலும் சண்டை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. முழுவதும் வயல்கள். இரவு வந்ததும் ஒருவாறு நான்கு முகாம்களைக் கடந்து விட்டோம். ஐந்தாவது முகாமை நோக்கி நேராக நடக்கவேண்டும். முகாமுக்கு நூறு யார் தூரத்திலேயே எமது பாதை மாற்றப்பட்டது. அந்த இடத்தில் எம்மைப் பொறுப்பேற்க அடுத்த குழு தயாராக இருந்தது.

புதிய குழுவுடன் இணைந்து பிரயாணத்தைத் தொடர்ந்தோம். ஆறாவது முகாமை அண்மித்ததும் அங்கிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. பயத்தினால் இரவில் அவ்வாறு இடையிடையே சுடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதன்பின் தான் சிரமம்தெரிந்தது. முழுக்க சேறுகள் நிறைந்த பாதை. அப்போதுதான் நாம் ஒரு பொது மகனைக் கண்டு கொண்டோம். அப்பாடா!

இப் பொதுமகன் எமக்கு வழிகாட்ட வந்தவர், இப் பகுதியை அங்குலம் அங்குலமாகத் தெரிந்துகொண்டவர். பெரும்பகுதி முழங்கால் அளவு சேறு, துப்பாக்கிகளையும், முதுகில் தொங்கும் சுமையான பைகளையும் சுமந்துகொண்டு போராளிகள் படும்பாடு பெரும்பாடுதான். பொத்துப்பொத்தென்று விழுவார்கள் உடல் முழுவதும் சேறு பிரளும். சேற்றை எண்ணிச்சப்பாத்தைக் கழற்றினால் பின்பு வரும் வயல்களில் உள்ள தொட்டால் சுருங்கி கால்களை விறாண்டும். திருப்பி சப்பாத்தைப் போட முடியாது. அடுத்த சில நிமிடங்களில் சேறைச் சந்திக்க வேண்டியிருக்கும். வழிகாட்டியாக இருப்பவர் ஒவ்வொரு இடத்திலும் நின்று இங்கே முள்ளுக்கம்பி உண்டு, இங்கே பள்ளம் உண்டு என்று இரகசியமாகக் கூறுவார். முதுகில் சுமை. நடைக் கஷ்டம். நடக்கும்போதே இப்போராளிகள் தூங்குவதும் உண்டு. தூக்க நடை நடப்பவர்கள் வயல் வரம்புகளில் இடறி விழுவார்கள். வரிசையாகச் செல்லும் போது சிலர் நின்ற நிலையிலேயே தூங்குவார்கள். பின்னால் வருபவர் முதுகில் தட்டி முன்னே போ என்று சமிக்ஞை செய்யவேண்டும். இந்தப் பகுதியில் நடக்கும்போது (எமக்கு அடுத்த பயணத்தில்) ஒருவர் தூக்கத்தில் ஒரு கிணற்றில் விழுந்து விட்டார். ஒருவாறு எட்டு முகாம்களையும் கடந்து விட்டோம். ஆனால் போக வேண்டிய இடம் இன்னும் உண்டு. அதிகாலை 3.15 மணியளவில் சோர்ந்து படுத்து விட்டோம். அப்பாடா என்ன சுகம்! இப்போதும் சிலர் காவலில் நின்றார்கள்.

மீண்டும் காலை 6.45க்கு பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் காலை 10.30 வரை நீடித்தது. இரவு மாத்தயா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவந்த முட்டைமாவில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து உள்ளங் கையில் கொட்டிச் சாப்பிட்டதைத்தவிர வேறுசாப்பாடே இல்லை. இனிக்கதைக்கலாம் என்றார் பதுமன். "என்ன பதுமன் இவ்வளவு கஷ்டமா?” என்று கேட்டோம். ‘உங்களுக்காகத்தான் இந்தப்பாதை. இல்லாவிட்டால் கழுத்தளவு தண்ணீர், சேறு, காடுகளுக்குள்ளால் தான் போகவேண்டும்!' என் றார்.

வழிவழியே ஆற்றங்கரைகள், காடுகளில் மக்கள் கூட்டம்கூட்டமாக இருப்பதைக் கண்டோம். இவர்கள் அகதி முகாமுக்கு போகவில்லையா? என்று வழிகாட்டியாக வந்த அந்தப் பொதுமகனைக் கேட் டோம். 'நான்கூட ஒருநாள் அகதிமுகாமில் இருந்துள்ளேன். ஆனால் முஸ்லிம் ஊர் காவல் படையினரின் தொல்லை டொறுக்கமுடிய வில்லை. அது தான் ஓடிவந்து விட்டேன் என்னைப்போல் வெளியேறியவர்கள்தான் இவர்கள்!' என்றார். ‘அகதி முகாம்களில் என்னதான் நடக்கிறது?" என்று கேட்டேன். எதையென்று சொல்ல...' என்றவாறே தொடர்ந்தார்.             

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 6

08-11-90

இராணுவ முகாமுடன் இணைந்ததாக அல்லது அருகில் இந்த அகதி முகாம்கள் இருப்பதால் எப்போதும் மரண பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது. இராணுவத் தினரின் அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினரின் 'மூட்' எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே வாழ்வு நிர்ணயிக்கப்படுகின்றது என்றார். 'எங்கேயாவது ஏதாவது பிரச்சினை நடந்தால் அகதிமுகாமுக்குள் வந்து அப்போது தாங்கள் தீர்மானிக்கும், அல்லது ஏற்கனவே அவர்களின் தீர்மானத்தில் உள்ளவர்களைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்கள். முன்னரெல்லாம் இவர்களை பூஸாவுக்கோ, வெலிக்கடைக்கோ கொண்டு செல்வார்கள். இப்போது கொண்டு செல்லப்படுபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்றார். கதை இங்கேயே முடிந்து விடுகிறது என்றார். சிலவேளை பலர் ஊர்க்காவல் படையால் அல்லது இராணுவத்தால் தாக்கப்படுவார்கள். இதைத்தான் செய்கிறார்கள் என்றால் பெண்கள்மீது இவர்கள் இழைக்கும் கொடுமைதான் கடவுளுக்கே பொறுக்காது’ என்றார்.

முதன்முதல் சுங்கான் குழியைச் சேர்ந்த ஞானசேகரம் பகவதிப் பிள்ளை என்ற பெண்ணை முஸ்லிம் காவல் படையினர் கற்பழித்தார்கள். 2-8-90 இல் சீனன் குடாவில் சசி என்ற பெண்ணை சிங்கள ஊர்காவல் படை யினர் கற்பழித்தார்கள் என்றார். தொடர்ந்து ‘அகதி முகாமுக்குள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் வருவார்கள். இந்த அகதிமுகாம்கள் மேலே கிடுகினால் வேயப்பட்டு படங்கினால் சுற்றிவர கட்டப்பட்டுமிருக்கும். படங்கை விலத்தி வருவார்கள் இவர்களைக் கண்டதும் பயத்தினால் பெண்கள் முகத்தைத் திருப்பி குப்புறப்படுப்பார்கள். டோர்ச் லைட்டை அடித்து முகத்தைக் காட்டு, முகத்தைக் காட்டு என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாங்கள் தீர்மானிக்கும் பெண்ணைக் கொண்டு போவார்கள். கொண்டு போகும் பெண்களை உயிருடன் விடுவதில்லை. சிலவேளை முகாமுக்குள்ளேயே வைத்தும் கற்பழிப்பார்கள். சுற்றிவர குழந்தைகள் இருக்கும். கதறக் கதற ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் போது அதைப் பார்க்கும் குழந்தைகளின் மனோநிலை எப்படிப் பாதிக்கப்படும்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எப்படி அங்கு இருப்பது?’ என்று கேட்டார்.

          குடும்பங்களே சிதறிப்போய்விட்டன. பெரும்பாலான ஆண்கள் மனைவி பிள்ளைகளை விட்டு முல்லைத்தீவுக்கு போய் விட்டனர். புதுக்குடியிருப்பில் சிலர் எண்ணெய் வியாபாரம் செய்கிறார்கள். வவுனியாவில் வாங்கி வந்து புதுக்குடியிருப்பிலோ யாழ்ப் பாணத்திலோ விற்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து திருமலைக்கு வரும் திருமலை மாவட்டப்போராளிகள் மூலமாகவும், திருமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் மூலமாகவும் தான் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்; முகாமில் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றார். 'எந்த ஊர் மக்கள் புதுக்குடியிருப்பில் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். 'பெரும்பாலும் தம்பலகாமம் ஆட்கள்தான் அங்கே இருக் கிறார்கள்' என்றார். பெண்களைக் கொண்டு பேகும் போது தமிழீழம் தானே கேட்டீர்கள். எல்லாம் கிடைக்கும் வாருங்கள் என்று முஸ்லிம் ஊர்காவல் படையினர் கூறுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். (கோவில் குடியிருப்பைச் சேர்ந்த கந்தசாமி என் பவருடைய 18 வயது மகள் 15-10-90 அன்று இவ்வாறு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், இலங்கை சபையில் போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் பாக்கியராசா என்பவரின் மகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தோளில் போட்டுக் கொண்டு போனதாகவும், அவர் உயிருடன் திரும்பவில்லை எனவும் பின்னர் அறிந்தோம்.)

தங்களை அலங்காரம் செய்து கொள்ளும் இளம் வயதுப் பெண்பிள்ளைகளெல்லாம் தங்களை அசிங்கமாகக் காட்ட என்னென்ன மாதிரிக் கோலத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் விளக்கினார். தலை இழுக்காமல், முகத்தில் கரி பூசி... என்றெல்லாம் கூறினார். இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் சகோதரங்கள் உண்டு ஆனபடியால் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெண்பிள்ளைகளின் பெயரைக் கேட்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். (ஆரம்பத்தில் நிலைமையை இயல்பாகக் கதைத்தவர் பெயர்களை நான் குறிப்புப்புத்தகத்தில் குறித்ததும் நிறுத்திக் கொண்டார்) 'எனக்கும் பெண் பிள்ளைகள் உண்டு. எங்களுடைய சமூக அமைப்பு இன்னும் மாறவோ, காலத்துக் கேற்ற மாதிரி வளர்ச்சியடையவோ இல்லை - நீங்கள் இந் தத்தர்மசங்கடமான நிலையை புரிந்து கொள்ள வேண்டும்' என்று அவர் வேண்டிக்கொண்டார்.

சரி ஆண்களுக்கு நடந்ததைக் கூறுங்கள் என்றேன். 5.9.90 அன்று கந்தளாய் அகதி முகாமில் சித்திரவேல் கனகலிங்கம் என்பவர் இராணுவத் தால் தாக்கப்பட்டார். 9.9.90 அன்று தம்பலகாமம் அகதி முகாமைச் சேர்ந்த கந்தசாமி, ஐயாத்துரை ஆகியேர் முஸ்லிம் ஊர்காவல் படையால் கொலை செய்யப் பட்டு 98 கொலனி வயல் வெளியில் பிணமாகக் கிடந்தனர். 96 ஆம் கொலனியைச் சேர்ந்த ஐயாத்துரை என்பவரும் அகதி முகாமிலிருந்து வெளியே செல்லும் போது கைது செய்யப்பட்டார். இவருக்கு வயது 57. மற்றும் முத்துக்குமா ரு (மேற்கு - கொலனி 42 வயது) ராசதுரை (முள்ளியடி - 45 வயது), பேபி ராசா (மேற்கு - கொலனி - 28 வயது). சந்திரசேகரம் (நடுப்பன் திடல் - 36 வயது), ராசதுரையின் மகள் (முள்ளி யடி 13 வயது), கோணநாய கம் (கள்ளிமேடு - 32 வய து). ஜயா (மேற்குக்கொலனி - 28 வயது), சகோதரர்களான மேற்குக் கொலனி வாசிகளான 30 வயதான பாலகிருஷ்ணன், 26 வயதான கோபால கிருஷ்ணன் இவர்களெல்லாம் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 9 ஆம் மாதத்தில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். ஆட்கள் அவ்வளவு தான்! என்றார்.

கிண்ணியாப் பக்கம் நிலைமை என்னமாதிரி? என்று கேட்டேன். கிண்ணியா, சின்னக்கிண்ணியாவைச் சேர்ந்த 86 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கருதி பணயக் கைதிகள் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். எங்கே தடுத்துவைத்துள்ளனர்? என்றேன், கிண்ணியா நெற்களஞ்சியத்தில் தான் அந்தத் தடுப்புமுகாம் உண்டு. இவர்களைப்பற்றியும் கந்தளாயில் உள்ள அகதிகள் பற்றியும் அறிவது கொஞ்சம் கஷ்டம் என்றார்.

“சிங்களவரால் ஏதும் தொந்தரவில்லையா?” என்று கேட்டேன். தொந்தரவு இல்லையா? ஜோண் சில்வா என்று ஒருவன் இருக்கிறான்… என்றவாறே தொடர்ந்தார்.            

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 7


09-11-90

தம்பலகாமத்தில் ஜோண் சில்வா என்றொருவன் இருக்கிறான். தமிழர் மத்தியிலேயே இவனும் இருந்து வந்திருக்கிறான். பட்டிமேட்டில் உள்ள பிள்ளையார் கோயில் காணியில்தான் இவனது வீடு இருந்தது இவனுக்கு இரண்டு பெண்களும் ஆண்பிள்ளையும் உண்டு. இவனது மகனை றாலாமி' என அனைவரும் அழைப்பர். இவனது பெயர் விஜேதாஸ. என்ன காரணத்தினாலோ ஜே. வி. பி. யினர் றாலாமியைச் சுட்டு விட்டனர்.

          தம்பலகாமத்தில் நிறைய மாடுகள், எருமைகள் உண்டு. இங்கு பாலை வாங்கி அதைக் கொழும்புக்கு அனுப்பி வியாபாரம் செய்வதுதான் ஜோண் சில்வாவின் தொழில். அதனால் இவன் பெரிய பணக்காரனாகி விட்டான். அத்துடன் தம்பலகாமம் கோணேசர் கோயிலுக்குச் சொந்தமான காணியில் விவசாயம் செய்துவந்தான். ஆரம்பத்தில் இவனுக்கு குத்தகைக்கு வயலைக் கொடுத்து வந்த கோணேசர் கோயில் நிர்வாகம் பின்னர் குத்தகையை ஏலத்தில் விட ஆரம்பித்தது. ஏலத்தில் இவனுக்கு நிலம் நிலம் கிடைக்காமல் போயிற்று. பின்னர் தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் போய் அத்துமீறியிருந்தான் அத்துமீறி இருக்கும் இவனை வெளியேற்ற தமிழரான உதவி அரசாங்க அதிபர் முயற்சித்தார். இவனுக்கும் உதவி அரசாங்க அதிபருக்கும் பலப்பரீட்சை நிகழ்ந்தது. அன்றிலிருந்து தம்பலகாமத்துக்கு சிங்களவரே உதவி அரசாங்க அதிபராக இருக்கிறார். சட்ட விரோதமாகக் குடியேறிய சிங்களவனைக் காப்பாற்ற உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு தொடர்ந்து சிங்களவரை அரசு நியமிக்கிறது என்றார்.

தம்பலகாமம் கோயிலுக்கு எத்தனை ஏக்கர் வயல் உள்ளது?' என்று கேட்டேன். 'ஆயிரம் ஏக்கர் வரையில் இருக்கும்' என்றார். தொடர்ந்து தம்பலகாமம் கோயில் வீதியில் அரசமரம் ஒன்று நின்றது. தற்போது அது வெட்டப்பட்டுவிட்டது. அரசமரம் அங்கே இருந்தபடியால் தம்பலகாமம் கோயிலுக்குச் சொந்தமான காணியின் அரைப்பங்கு சிங்களவர் வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறி சிங்களவரை குடியேற்றும் முயற்சிகளில் ஜோண்சில்வா ஈடுபடுகிறான் என்றார். அது சாத்தியப்படக் கூடிய விஷயமா? என்று கேட் டேன். "ஏன் இன்று 13ஆம் கட்டை, ஜெயந்திபுர எல்லாம் சிங்களவர் குடியேறவில்லையா? குடியேறிய பின் சிங்களப் பெயரை வைத்தால் அதன் பின் அது சிங்களக் கிராமம்தானே! அதுதானே இங்குள்ள நடை முறை என்றார். அரசமரம் நின்ற இட மெல்லாம் சிங்கள இடமாம்; புதிய விளக்கம் (பின்னர்நான் சந்தித்த துரைநாயகம் என் பவரும் அரசமரத்தை வெட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர். பாராளுமன்றத்தில் கூட சிறில் மத்யூ இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தார். திரு. துரைநாயகம் ஒரு கட்டத்தில் "முளைக்கும் ஒவ்வொரு அரச மரத்தையும் வெட்டுவதன்மூலம் எதிர் காலத்தில் வெட்டுப்படவிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை வெட்டுகிறோம்' என்று விளக்கம் கொடுத்தார்.)

“அதெப்படி”? என்று நான் கேட்டபோது 'அரசமரம் இருக்கும் இடமெல்லாம் புத்த விகாரை இருக்கவேண்டும். புத்தவிகாரை ன் மணி ஓசை கேட்கும் இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான நிலம் என்று சிறில் மத்யூ ஒரு கட்டத்தில் கூறியிருந்தார். சிறில் மத்யூ ஊட்டிய இன வாத விதைதான் இன்று தானே முளைக்கும் அரசமரத்தைச் சுற்றியுள்ள இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான இடமென்று வாதிட வைக்கிறது' என்று விளக்கம் கொடுத்தார்.

சிங்கள ஊர்காவல்படையி னரைத் தூண்டி விடுவது ஜோண்சில்வாதான் என்றார். சிங்கள ஊர்காவல் படையால் இந்தமுறையும் தொந்தரவு உண்டா? என்று கேட்டோம் - தற்சமயம் மிகப்பிரச்சினையானவர்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினர் - முன் னர் சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை என்றிருந்து பின்னர் இந்திய இராணுவம் என்றிருந்து தற்பொழுது முஸ்லிம் ஊர்காவல்படை தமிழர் அழிப்பை பொறுப்பேற்றிருக்கிறது. எப்போதும் தமிழர்களுக்கு அழிவைத்தான் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழின அழிப்பில் நடிகர்கள்தான் மாறியிருக்கிறார்களேயொழிய பாத்திரங்கள் மாற வில்லை என்றார் விரக்தியுடன்.

இந்திய இராணுவம் அப்படியென்ன வித்தியாசமாகச் எல்லா இடமும் செய்தது? தமிழரைச் சுட்டது போல இங்கேயும் சுட்டிருக்கும்!' என்றேன். தம்பலகாமம் கள்ளிமேட்டைச் சேர்ந்த நவரட் ணம் என்பவரை உடம்பில் துணியால் சுற்றி ரின்னர் ஊற்றித் தீமூட்டியது. இப்படி வேறெங்காவது செய்துள்ளதா? என்று சினத்துடன் கேட்டார். கோவிக்க வேண் டாம். இதையொத்த சம்பவங்கள் பலதைச் செய்துள்ளது தான். ரின்னர் ஊற்றிக் கொளுத்தியது நான்இப்போது தான் அறிகிறேன். சரி நீங்கள் ஜோண்சில்வாவைப் பற்றிக் கூறுங்கள் என்றேன்.

'ஜோண்சில்வாவினால் ஊக்குவிக்கப்படும் சிங்கள ஊர்காவல்படை போன கலவரத்தில் புதுக்குடியிருப்பில் மட்டும் முப்பத்து மூன்று பேரைக் கொன்றது' என்றார். கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். போன கலவரத்தில் கோயிலடியில் அகதிகளாக இருந்தவர்களிடம் இராணுவம் வந்து நீங்கள் பழைய தொழில்களைச் செய் யலாம். இனிப் பிரச்சினையில்லை என்றனர். அதை நம்பி, புதுக்குடியிருப்பில் உள்ள அரிசிமில் ஒன்றுக்கு வேலைக்குப் போன தமிழர்கள் 33 பேரை ஊர்காவல் படை கடத்திக்கொண்டு போய்ச் சுட்டது. அதுமட்டுமல்ல பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த மில் உரிமையாளர் சபாரட்ணத்தின் கைவிரலில் மோதிரம் இருப்பதைக் கண்டு விரலையும் வெட்டிக் கொண்டு போனது என்றார்.

இம்முறையும் இப்படி ஏதும் திட்டமிருக்குமா? என்று கேட்டேன். பட்டிமேட்டில் உள்ள ஸ்ரீ சாரதா வித்தியாலயத்துக்கு வந்து அகதிப்பிள்ளை களைப் படிக்கச் சொல்கிறார்கள். அது இராணுவமுகாமுக்குக் கொஞ்சம் தொலைவிலுள்ளது. படிக்கப்போகும் பிள்ளைகளை அப்படியே அள் ளிக்கொண்டு போகும் திட்ட மிருக்கும் என்பதால் பிள்ளைகள் படிக்கப் போகவில்லை என்றார். ஏன் இராணுவ முகாமிலேயே பிடிக்கிறார்கள் தானே என்று கேட்டேன். இராணுவ முகாம் பக்கத்தில் உள்ள இடத்தில் என்றால் தாங்கள் மறுமொழி சொல்ல வேண்டியிருக்கும்; கொஞ்சம் தள்ளியென்றால் தங்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. ஊர்காவல்படை தான் கொண்டு போயிருக்கலாம் என்று இராணுவத்தினர் தப்பிக்கப் பார்ப்பார்கள். இப்படித்தானே போன கலவரதில் மில்லில் இருந்து கொண்டு போய் முப்பத்து மூன்று பேரைக் கொன்றவர்கள் என்றார். தமிழின அழிப்பில் தான் எத்தனை வகை என்று எண்ணிக் கொண்டேன்.

அகதிமுகாம்களில் நடக்கும் விடயங்கள் பற்றி இதற்கு முடிவு காண சுயமாக ஏதாவது செய்தார்களா? என்று கேட்டேன். இதற்கு என்ன செய்ய முடியும். பொறுப்பான செஞ்சிலுவைச் சங்கம் போன்றவையே கையைவிரிக்கும் போது என்றார்.                                         

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 8


'முகாமுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் வருவார்கள், மிகக்கடுமையான நோயாளிகளை திருக்கோணமலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டியிருக்கும், “நாங்கள் எங்களுடைய வாகனத்தில் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறோம். ஆனால் இடையில் இராணு வமோ, முஸ்லிம் ஊர்காவல் படையோ உங்களை எமது வாகனத்திலிருந்து இறக்கிக் கொண்டு போனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்குச் சம்மதமானால் வாகனத்தில் ஏறுங்கள்என்று கூறுவார்கள். யாராவது போகச் சம்மதிப்பார்களா? நடப்பது நடக்கட்டும் என்று இங்கே கிடந்து சாக வேண்டியதுதான்! என்றார்? வாகனங்களில் இருந்து இவ்வாறு யாராவது இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆலங்கேணியில் மூன்றுபேரும் ஜெயபுரவில் ஒன்பது பேரும் இவ்வாறு இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது சண்டை தொடங்கியவுடன் இ.போ.ச. பஸ்களில் இருந்து என்றார்.

          சரி செஞ்சிலுவைச் சங்கத்தை விடுங்கள். வேறு யார்யாரிடம் இந்த விடயங்கள் தொடர்பாகமுறையிட்டிருக்கிறீர்கள்: என்றேன். பச்சநூர் முகாமுக்கு பாராளுமன்றத் தூதுக்குழுவொன்று அகதிகளைப் பார்வையிட வந்தது. அதில் மாவை சேனாதிராசாவும் வந்திருந்தார். அகதி முகாம் கொடுமைகளை அவரிடம் சொல்லி எமது பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரிடம் அகதிகள் கேட்டார்கள். "எங்களுக்கே பாதுகாப்பு இல்லை உங்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் என்ன செய்வது என்றார் மாவை சேனாதிராசா. இதற்குப் பின் அவர்களோடு பேச என்ன இருக்கிறது? என்று வினாவினார்.

உயர் இராணுவ அதிகாரிகள் யாரிடமாவது இது சம்பந்தமாகக் கதைக்க வில்லையா? என்று கேட்டேன். இந்தப் பகுதியில் சுரேஸ் காசிம் என்ற முஸ்லிம் இராணுவ அதிகாரிதான் எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருக்கிறான். அவனிடமும் மக்கள் கேட்டார்கள். பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களின் நிலைமை என்ன மாதிரி? என்று அதற்கு அவன் சொன்ன பதில்அகதி முகாம்களில் இருந்து பிடிபடுபவர்களைப் பற்றி மட்டும் எதுவும் கேட்க வேண்டாம். சாப்பாடு இல்லை தண்ணீர் இல்லை இதைப் போன்ற குறைபாடுகளைச் சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்று சொல்கின்றான் என்றார் அவர். நானும் சுரேஸ் காசிமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்தான் என்றேன் நான்.

'போன கலவரத்தில் ஆலங்கேணியில் இருந்த ஒரு பெண் பிள்ளையைத் தேடிப் போயிருக்கிறான் சுரேஸ் காசிம். அந்தப் பிள்ளை இயக்கத்துக்கு நல்ல உதவி. வீட்டுக்குப் போய் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவுடன் அந்தப் பிள்ளையின் தங்கச்சிதான் முன்னுக்குப்போனது. அக்காவுக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு நான்தான் அவள் என்று சொன்னது. தலையிலிருந்து கால்வரை மூன்று மகஸீன் பொழிந்து தள்ளினான். ஆள் இரண்டாகப் போய்விட்டது என்றார்.  என்ன இயக்கப் பாஷையெல்லாம் பேசுகிறீர்கள்? என்று கேட்டேன். நாளாந்தம் இயக்கத்தோடுதான் பழகுகிறோம். திருக்கோணமலையைப் பொறுத்தவரை இயக்கமும் பொதுமக்களும் வேறு வேறல்ல. எல்லாப் பிரச்சினையும் எல்லோருக்கும் தான் என்றார் அவர். சரி மீண்டும் சந்திப்போம் என்று அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டோம்.

போகும் வழியில் பதுமனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 22-09-90 அன்று புதுக்காவே என்ற இடத்தில் சிங்கள ஊர் காவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் மூன்று ஊர் காவல் படையினர் கொல்லப்பட்டதாயும் இரண்டு சொட் கண்கள், எட்டுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாயும் அச்செய்தியில் விபரமாக எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது.

நாம் போய்ச் சேர்ந்த முகாமில் இருதினங்கள் தங்கினோம். பின்னர் 24-09-90 அன்று பிற்பகல் எமது பணயம் ஆரம்பமானது. இப்பயணத்தில் 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயக்கத்துடன் ஈடுபாடு கொண்ட ஒருவரைச் சந்தித்தோம்.

          அன்றிலிருந்து இவரும் எமது பயணத்தில் இணைந்து கொண்டார். இவரது பெயர் துரைநாயகம். நான்கு பிள்ளைகளின் தந்தை. சிறிலங்கா, இந்திய இராணுவங்களிடம் பிடிபட்டு சிறையில் இருந்தவர். திருமலை பற்றிய புள்ளி விபரங்கள் நிறையவே வைத்திருந்தார். எந்தச் சம்பவத்தைக் கேட்டாலும் திகதி வாரியாகக் கூறுவார். அவ்வளவு ஞாபகசக்தி படைத்தவர். பொதுமக்களை நாங்கள் சந்தித்த பின்னர்தான் திருமலையில் எவ்வளவு குடும்பஸ்தர்கள் முழுநேர உறுப்பினர்களாக பணியாற்றுகின்றார்கள் என்பதை உணர முடிந்த். இவர்களை வெறும் ஆதரவாளர்களாக கருதமுடியாது. ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு தமது கடமைகளில் முழுமூச்சாக ஈடுபடுவார்கள். கலியாணம் மட்டும் முடிக்காமலிந்தால் உங்களைவிட நான் தீவிரமாயிருப்பேன் என்று வீரம் பேசும் யாழ்ப்பாணத்துக் கடும்பஸ்தர்கள் பலரை நினைத்துக் கொண்டேன்.

              இந்தப்பாதை அட்டைகள் முதலைகள் உள்ள பாதையென்றார் பதுமன். கறுப்பு நிறமான அட்டைகள் உடலில் பிடித்துக்கொள்ளும் அப்படியே எமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சியெடுக்கும் இலேசில் பிடுங்கியெறிய முடியாது.

          பிடுங்கியதும் உடம்பிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கும். நிறுத்துவரு கஷ்டம் என்றார். முதலைகள் பற்றிக்கேட்டபோது கும்புறு பிட்டியைச் சேர்ந்த ராஜன் என்ற போராளி முதலைக்குப் பலியாகியுள்ளான். 85 ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று கூறினார் அவர். பெரும்பாலும் விலங்குகளைத் தான் முதலை பிடிக்கும் என்றாலும் பெரிய முதலைகள் மனிதர்களை இழுத்துக் கொண்டு போகும் என்றார். "முதலைபிடித்து யாராவது தப்பியுள்ளார்களா?” என்று கேட்டேன், அப்போது துரை நாயகம் குறுக்கிட்டு "வள்ளி என்ற பெண்ணை முதலை பிடித்தது. பெரிய போராட்டமே நடத்தித்தான் அப் பெண்ணைக் காப்பாற்றமுடிந்தது இப்போதும் அந்தப்பெண் உயிருடன் இருக்கிறார். இப்போது அவரை முதலை வள்ளிஎன அழைப்பார்கள்" என்றார்- பொருத்தமான பெயர்- வேறு என்ன மிருகங்களால் தொல்லை எனக் கேட்டேன். பாம்பு, யானை, கரடி இவைதான் மிகக் கூடிய தொல்லை கொடுக்கக் கூடியன. மட்டக்களப்புத் தளபதி கருணாவைக்கூட கரடி ஒரு தடவை பிடித்ததுஎன்றார் பதுமன். மட்டக்களப்பில் உள்ள கரடியனாற்றைச் சேர்ந்த துமிலன் (விஜய குமார்) என்ற போராளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வரவே திருமலையில் யாருக்காவது பாம்பு கடித்ததா என்று கேட்டேன், ‘‘சமீபத்தில் கூட காயமடைந்த ஒரு போராளியைக் கொண்டு வரும் போது இராணுவத்தினர் தாக்கினார்கள். இராணுவத்தினருடன் மோதிக் கொண்டு ஒரு பற்றைக்குள் போகும் போது ஒருவனுக்கு பாம்பு கடித்தது. இருக்கும் இடத்தில் பாம்பு. எதிரில் இராணுவம். போராளிகளின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்' என்றார். தொடர்ந்து இப்படி காயமடைந்தவர்களைக் கொண்டு வரும்போது மட்டும் பன்னிரண்டு போரா ளிகளை இழந்துள்ளோம்' என்றார்.

சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை, முஸ்லிம் ஊர்காவல்படை, அட்டை, பாம்பு, கரடி, யானை, காட்டிக் கொடுப்போர் இப்படி எத்தனை விலங்குகளுடன் தான் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என் நினைத்துக் கொண்டேன்.                                       

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 9

எமது இந்தப் பயணத்தின் இடையில் பொதுமக்கள் கூட்டங் கூட்டமாகக் காணப்பட்டார்கள். அனைவருக்கும் இவர் மாத்தயா என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. சில காலத்துக்கு முன்னர்தான். அப்பகுதிகள் எல்லாம் சுற்றிப் பார்த்து மக்களைச் சந்தித்திருந்தார் மாத்தயா. மக்கள் மாத்தயாவைப் பார்த்துச் சிரித்தும், கையசைத்தும் தமது நட்புணர்வை வெளிப்படுத்தினர். அப்போது பதுமன் இந்தச் சனங்கள் சரியான மெமறிச் சனம் அண்ணே. தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி நடந்தபோது நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்பாட்டுத் தொடங்கியவுடனேயே நிகழ்ச்சி முடிஞ்சிட்டுது எண்டு வீட்டுக்குப் போகத் தொடங்கி விட்டுகள் என்றார். மாத்தயா சிரித்துக்கொண்டார்.

போகும் வழியில் ஒரு இராணுவ முகாமிலிருந்து எம்மை நோக்கி டோர்ச் லைட் அடித்துப் பார்த்தார்கள். ஒன்றும் புரியாததாலோ, கொழுவினால் வீண்வம்பு என்று நினைத்தார்களோ ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. எம்மைப் பொறுப்பேற்க வந்திருந்த குழுவினர் இடையில் ஒரு ஜீப் போயுள்ளது இப்போது வரவேண்டாம் என்றனர். சிலவேளை திரும்பிப் போகலாமா என்றுகூட ஆராயப்பட்டது.

அப்போது மாத்தயா திரும்பிப் போவது என்பது சரி வராது. வழியில் ஆமி கிடந்தால் நல்ல அடி கொடுத்துவிட்டுப் போவோம் என்றார். அப்போது அவரது உறுதியின் வெளிப்பாட்டை உணர முடிந்தது. ஆனால் சென்றது செஞ்சிலுவைச் சங்க ஜீப் என்பது பின்பு தெரியவந்தது.

 திரு மாத்தயா அவர்களுக்கு சென்ற முறை எங்கெங்கு மாலை போட்டார்கள், தமது பகுதிகளுக்கு வராததற்காக எங்கெங்கு கோபித்துக் கொண்டார்கள். என்னென்ன மாதிரி வரவேற்பளிக்கப்பட்டது என்பதையெல்லாம் வழியெங்கும் போராளிகள் எனக்குக் காட்டினார்கள். 25.9.90 அன்று பி. ப 3.00 மணிக்கு திருமலை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக அண்மையிலுள்ள முகாமைச் சென்றடைந்தோம். போகும் வழியில் நின்ற மக்களிடம் மாதயா உரையாடினார். முந்தநாளே இங்கு உங்களை எதிர்பார்த்தோம் என்றார்கள் அந்த மக்கள். வானொலி தொலைக்காட்சிகளை விட என்னமாதிரிச் செய்தி பரவுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் ஒவ்வொரு முகாமிலும் போராளிகளுடனும் குழுத்தலைவர் களுடனும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் உரையாடுவதும் ஆலோசனை நடத்துவதுமாக இருந்தார். ஒரு முகாமில் போராளி களிடையே உரையாற்றும் போது இந்திய இராணுவத்துடனான மோதல் எமக்குப் பல படிப்பினைகளைத் தந்துள்ளது. எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இன்றிப் போராடும் நாம் எமது சொந்த மூலவளங்களை உபயோகித்து புதுப்புது ஆயுதங்கள், பொறிவெடிகள் (ஜொனி போன்றவை) போன்றவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டோம். சூழ்நிலைதான் இக்கண்டுபிடிப்புகளுக்கான வழிகளை ஏற்படுத்தியது. ஜொனியை நாம் கண்டுபிடித்ததால் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தும் காலிழந்தும் போயினர் அவர்களை இந்தியாவுக்கு ஓடவைத்ததில் ஜொனியின் பங்கு கணிசமானது. தற்போது இலங்கை இராணுவத்தினரும் ஜொனியினால் பாரிய அளவில் இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள். ஆகவே புதுப்புது ஆயுதங்கள் பொறி வெடிகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொருவரும்  முயல வேண்டும்.

அத்துடன் போராட்டத்தில் காலையோ, கையையோ அல்லது வேறு எந்த அங்கத்தையோ இழந்தாலும் மனந் தளராதீர்கள். அதற்காக சயனைட் அருந்த நினைக்காதீர்கள். வாழ்வில் எந்தச் சவாலையும் சமாளிக்க வேண்டும். ஒரு காலை இழந்த கிட்டு இன்று போராட்டத்தில் தன் பங்களிப்பை வழங்கவில்லையா? அதுபோல் கையையோ காலையோ இழந்தாலும் வேறொரு துறையில் உங்களால் சாதனை புரிய முடியும் என்று உரையாற்றினார்.

இன்னொரு முகாமில் சிறுவர்களே கூடுதலாக இருந்தார்கள். அந்த முகாமில் இந்திய இராணுவத்துடனான மோதலில் சிறுவர்களே பெரும் பங்கெடுத்தார்கள். எமது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும், ஏன் உலகமே இந்திய இராணுவத்துடன் மோதுவது புத்திசாலித்தனமல்ல என்று கூறியபோது புதிதாக இயக்கத்தில் சேர்ந்த சிறியவர்கள்தான் இந்திய இராணுவத்தை விரட்டியடித்து சாதனை புரிந்தவர்கள். ஆகவே உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

25-9-90 அன்று தங்கிய முகாமில் குழுத் தலைவர்களுடன் உரையாடும்போது மக்களின் பட்டினி நிலையைத்தான் மிகவும் கவனமாக ஆராய்ந்தார்கள். அப்போது திரு. மாத்தயா அவர்கள் போராளிகளான நீங்கள் உங்களுடைய சாப்பாட்டில் ஒரு நேரச் சாப்பாட்டை பொது மக்களுக்கு கொடுப்பது என்ற முடிவை எடுக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பாருங்கள். 1978 ஆம் ஆண்டு மட் டக்களப்பில் சூறாவளியினால் சேதம் ஏற்பட்டபோது அங்குள்ள மக்கள் அகதிகளானார்கள். அப்போது எமது இயக்கத்தவர்கள் கூடி ஐயாயிரம் ரூபா கொடுப்போமா, பத்தாயிரம் கொடுப்போமா எப்படி உதவி செய்வோம் என்றெல்லாம் ஆராய்ந்தார்கள். அப்போது எமது தலைவர் நாம் எமது உணவில் ஒரு நேரச் சாப்பாட்டை அகதிகளுக்கென ஒதுக்குவோம் நாம் அகதிகளுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக் கியமல்ல. எப்படிக் கொடுக்கிறோம் என்பதே முக்கியமானது. எமது சாப்பாட்டின்- ஒரு பகுதியை நாம் உணர்வு பூர்வமாகக் கொடுக்கும் உதவி தான் எமக்கு ஆத்மதிருப்தியைக் கொடுக்கக் கூடியது என்று சொன்னார். அப்போது நாம் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள். எமது உணவுக் காக ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து நாம் கொடுத்தது சில நூற்றுக் கணக்கான ரூபாய்கள்தான். ஆனால் எமக்கு அது பெரிய திருப்தியைக் கொடுத்தது என்றார் மாத்தயா. 87 ஆம் ஆண்டுக்கு முதல் 36 இயக்கங்கள் இருந்தன. விடுகலைப் புலிகளால் மட்டும் இப்படி நிலைத்து நிற்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பது அப்போது எனக்குப் புரிந்தது.

நாங்கள் இப்போது இருந்த இடத்திலிருத்து நாங்கள் புறப் பட்டமுகாமுக்கு ஒவ்வொருவரும் கால் நடையாக கால்மூடை அரிசி, சீனி என்பன சுமந்து சென்றார்கள். எமது பயணத்தில் இது போன்ற காட்சிகளை அடிக்கடி கண்டேன். பத்துமணித்தியாலம் பன்னிரண்டு மணித்தியாலம் என்று சுமக்கப்போகிறார்கள். இல்லாவிட்டால் அங்கிருப்பவர்களுக்குச் சாப்பாடு இல்லை. ஒரு முறை சிரித்திரன் ஆசிரியர் சிவா அவர்கள் தமது தலையங்கம் ஒன்றில் தன்மானம் மிக்க தமிழினம் சிலுவை சுமக்க நேரினும் சலுகை ஏந்தாப்பண் புடையது என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. யேசுபிரான் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் சிலுவை சுமந்தார். இப்போராளிகள் நாள்தோறும் சுமக்கிறார்கள். இந்தத் தியாகங்களை சிறிலங்கா அரசு நினைப்பது போல் அழித்து விட முடியுமா? இது வெட்ட வெட்டத் தழைக்கும் என நினைத்துக் கொண்டேன்.                                                       

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 10


25.9.90 அன்று திரு. மாத்தயா அவர்களைப் பார்க்க கூடியிருந்த மக்களிடம் சென்று நிலைமையை உரையாடிப் பார்ப்போம் என நினைத் தேன். ஒரு சைக்கிளுடன் மரத்தடியில் நின்ற ஒருவரிடம் சென்றேன். உங்கள் ஊர் எது?” என்று கேட்டேன். தம்பலகாமம்என்றார். தம்பலகாமத்திற்கும் இந்த இடத்திற்கும் எக்கச்சக்கமான தூரமாயிற்றே ஏன் யாழ்ப்பாணப் பக்கம் போகாமல் இந்தப் பக்கமாக ஓடிவந்தீர்கள்? என்றுகேட்டேன். யாழ்ப்பாணம் நோக்கிப் போகும் ஆட்களை இரவில் மறைந்திருந்து தாக்குவதால் இந்தப் பக்கமாக வந்ததாக சொன்னார். தம்பலகாமத்தில் தான் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளனவே அங்கு நடந் தவற்றைக் கூறுங்கள். என்றேன்.

நீங்கள் என்னென்ன விடயங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டார். அகதிமுகாம் விடயங்கள், கிண்ணியாவில் தமிழர்களை தடுத்து வைத்திருத்தல், பஸ்ஸில் இருந்து ஆட்களை இறக்கியெடுத்தல், இந்திய இராணுவம் ரின்னர் ஊற்றிக் கொழுத்தியது என்று பட்டியல் போட்டுக் காட்டினேன்.

தம்பலகாமம் கோவிலடி முகாம் தான் மிகப் பயங்கரமானது என்ற முன்னுரையுடன் கூறத்தொடங்கினார். தம்பலகாமம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஒரு நாள் பொதுமக்களைக் கூப்பிட்டுக் கூறினான்: இங்கு 18 குடும்பங்கள் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்ற தகவல் எனக்குக்கிடைத்துள்ளது. இவர்களை அழிப்பது. எனக்குப் பெரிய விடயமல்ல, ஜே. வி. பி. பிரச்சினையில் ஐம்பது சிங்கள இளைஞர்களை எனது கையால் கொன்றுள்ளேன். எனது சொந்த இனத்திலேயே  ஐம்பதுபேரைக் கொன்ற எனக்கு இது ஒரு சின்ன விடயம்என்று கூறினான் என்றார்.

முஸ்லிம் மக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சொல்லுங்கள் என்றேன். முன்னரெல்லாம் கலவரம் வரும்போது முஸ்லிம் மக்கள் தான் உதவுவார்கள். இந்த முறை எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். பள்ளிவாசல் மட்டத்தில் தமிழருக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதுதான் காரணம் என்றார்.

தொடர்ந்து இந்தமுறையும் கலவரம் வந்தவுடன் கிண்ணியாவையும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களையும் நோக்கித்தான் தமிழர்கள் ஓடினார்கள். ஆனால் அங்கே நடந்த விடயங்களைப் பார்த்தால்... என்று சொல்லி சற்று நிறுத்திவிட்டுத் தம்பலகாமம் கூட்டாம்புளியைச் சேர்ந்த நடராசாவும் அவரது மனைவி பங்கயலட்சுமியும் காக்கா முனை என்ன இடத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் குடியிருந்தனர். அங்கே பங்கய லட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றாம் நாள் பங்கயலட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது. ஒரு முஸ்லிம் இளைஞன் வந்து சாப்பாட்டுக் கோப்பைக்கு காலால் அடித்தான். கோப்பை பறந்தது. தொடர்ந்து தமிழர்களை எவரும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்ற பள்ளிவாசலின் முடிவு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது வீடுகளில் இருந்த தமிழர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெளியேற்றினார்கள். அத்துடன் ஒரு பகல் கொள்ளையும் நடந்தது என்றார். என்ன நடந்தது, என்று கேட் டேன்.

தமிழர்களின் ரீ.வி., டெக், றேடியோ போன்ற விலையுயர்ந்த சாமான்களை வைத்திருந்த முஸ்லிம் வீட்டுக்காரர்கள் அனைவரும் தங்களது சாமான்களை நாம் வைத்திருந்தால் எமக்கு ஊர்காவல் படையாலோ, இராணுவத்தாலோ பிரச்சினை வரும். ஆனபடியால் இவற்றை எமக்கு விற்றுவிட்டதாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அப்படியே அனைவரும் எழுதிக்கொடுத்தனர். நடராசாகூட அப்படி எழுதிக் கொடுத்து வீட்டுத்தான் வெளியேறினார். ஆனால் எவருக்கும் ஒரு சதமும் கிடைக்கவில்லை என்றார். ஏன் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி எழுதி வாங்கியிருக்கக் கூடாது? இவர்கள் திரும்பியதும் திருப்பிக் கொடுப்பதற்காக எழுதி வாங்கியிருக்க மாட்டார்களா? என்று கேட்டேன். நிச்சயமாக அப்படி இல்லை. பள்ளிவாசல் அறிவிப்பின் பின்னரே ஒரே நேரத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் வாங்கிய சாமானுக்காக இல்லாவிட்டாலும் வழிச்செலவுக்கு ஒரு பத்து ரூபா வைத்திருங்கள் என்று கொடுத்திருக்க மாட்டார்களா என்று வினவினார்.

தமிழர் அழிப்பில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் பெயர் தெரியுமா என்று கேட்டேன். பாரூக் என்பவன் தலைமையில் ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்த ஐம்பது பேர் ஈரோஸ் இயக்கத்தின் பெயரால் இந்திய இராணுவத்திடம் பயிற்சி எடுத்தனர். இன்று இவர்கள் தான் ஊர்காவல் படையில் சேர்ந்து தமிழரை அழிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் என்றார். மழை விட்டும் தூவானம் போகவில்லை என்பதா? அல்லது இந்திய இராணுவம் விதைத்த நச்சு விதைகள். இன்று விருட்சமாகின்றதா? பதில் தெரியாது விழித்தேன்.

அப்போது பதுமன் ஈ. பி. ஆர். எல். எவ். இல் இருந்த கச்சி முகம்மது ஷேக் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனை தேசிய இராணுவத்தின் மீதான நடவடிக்கையின் போது கைது செய்தோம். முஸ்லிம் இளைஞன் என்பதால் மன்னித்தோம். சில காலம் எமது இயக்கத்தில் இருக்க அனுமதித்தோம். இவனுக்கு இந்தப் பகுதிப் பாதைகள் நாம் எங்கெங்கு இராணுவத்தினரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியும். இவன் தான் நாம் எதிர்பார்க்காத பாதையினுள்ளால் இராணுவத்தைக் கூட்டிவந்தவன் என்றார். தொடர்ந்து இன்னுமொரு முஸ்லிம் இளைஞன் ஒருநாள் இரவு மூன்று றைபிளையும் ஒரு வாக்கிடோக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறான். எமது முகாமிலிருந்து இராணுவமுகாமுக்கு செல்லும் வழியில் ஆறு ஒன்று உண்டு. இருட்டில் இடம் தெரியாமல் ஆழமான பகுதியில் இறங்கிவிட்டான். ஆற்று நீரோட்டத்தில் ஆள் இழுத்துச் செல்லப்பட்டான். அத்துடன் அவனது சாரம் றைபிளுக்குள் சிக்கியதால் அவனால் நீந்தமுடியாமல் போய் விட்டது. மூன்று நாள் செல்ல ஒரு றைபிளுடன் இவனது சடலம் ஒதுங்கியது. மற்ற இரண்டும் ஆற்றில் எங்கேயோ கிடக்கிறது. ஊம்... சிலரை நம்பிக் கெட்டோம்! என்றார் பதுமன்.                                         

(தொடரும்)

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 11

13.11.1990

பதுமன் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில் அந்தப் பொதுமகன் தெருவால் சென்ற மாட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதுகில் “க” என்ற குறியுடன் போகும் அந்த மாட்டில் அப்படி என்னதான் விசேடம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. எனவே “என்னமாட்டையே வெறித்துப் பார்க்கிறீர்கள்” என்றேன். 'மாட்டுக்குக் குறி சுட்டிருக்கிறது. இதேபோலத்தான் மனிதருக்கும் குறிசுட்டார்கள். பழைய ஞாபகம் வந்தது' என்றார். மனிதருக்கா? என்றேன். ஆம், இந்திய ராணுவம் இருக்கும்போது கள்ளிமேட்டில் எமது இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவர் ஈ. பி. ஆர். எல். எப். இடம் பிடிபட்டபோது கையில் எல். ரி. ரி. ஈ என்று கம்பியால் காய்ச்சிக் குறி இழுத்தார்கள் என்றார். அப்படி சூடுவாங்கியவரின் பெயர் என்ன? என்றேன். பெயர் நவரட்ணம். குருகுல பூபாலசிங்கம் என்பவரின் மகன் என்றார். கள்ளிமேட்டில் ரின்னர் ஊற்றிக்கொழுத்தப்பட்டவரின் பெயரும் நவரட்ணம்தானே என்றேன். அவர்வேறு, இவர்வேறு. அவர் அவரது மைத்துனன் (மனைவியின் சகோதரன்) நவீனன் இயக்கத்தில் இருந்ததற்காகக் கொழுத்தப்பட்டவர் என்றார்.

தொடர்ந்து, யாருக்காக இப்படி வெறியாட்டம் ஆடினார்களோ, அவர்களே இன்று... என்று இழுத்தார். என்ன விடயம் என்றேன். ஈ பி. ஆர். எல். எப். இன் இராணுவப் பொறுப்பாளராக இருந்த ஜோர்ஜ் தம்பிராசா தவராஜா மனைவி சகுந்தலையையே இராணுவம் கடத்திக் கொண்டு போய்விட்டது. இனி தேடவேண்டிய அவசியம் இருக்காது. முன்பு நேவி கொண்டுபோய் தடுப்புக் காவலில் வைத்திருந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லாதபடியால் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான் என்றார்.

“திருமலை நகருக்குள் வேறு என்ன நடந்தது?” என்றேன். சண்டை தொடங்கிய ஒரு வாரமளவில் தனியார் பஸ் வைத்திருக்கும் கணேஷ் என்பவர் தனது மனைவியின் ஊரான நிலாவெளியை விட்டுப் புறப்பட்டார். திருமலையில் அவருக்கு அறிமுகமாயிருந்த வெளிநாட்டவரான ஆறு வெள்ளையர்களுடன் தனது குடும்பத்தைச் சேர்ந்த பதின்னான்கு பேருடன் புறப்பட்டார். வெள்ளைக்காரருடன் புறப்படுவதால் தனக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கை தான் அவருக்கு இருந்தது. கணேஷ் அவரது மனைவி, அவருக்கு அறிமுகமான பன்னிரண்டு வயதுப் பெண்பிள்ளை ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் பாலு, மகேஸ்வரி ஹாட்பெயர் ஸ்ரோர்ஸ் முதலாளியின் மகன் ஆகியவர்கள் இந்தப் பஸ்ஸில் போனவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள்.

பஸ் ஹொறவப்பொத்தானை போனபோது அங்கு பொஸிசாரால் இடைமறிக்கப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஓ .ஐ . சி யாக இருந்தவர் ஒரு சிங்களவர். அவருக்கும் கணேசுக்கும் பழக்கம் இருந்தது. ஆகையால் விசாணையில் பெரிய சிக்கல் இருக்கவில்லை. டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் கொண்டு வந்த 35 இலட்சம் ரூபா காசும் நகையும் தான் பிரச்சினையாக இருந்தது என்றார். “ஏன் இவ்வளவு பணத்தைக் கொண்டு புறப்பட்டார்கள்"? என்றேன். பணம் வங்கியிலிடப்பட வேண்டியது. ஏழு நாட்களாக வங்கியில் பணம் வைப்பிளிடப்படாததால் தான் இவ்வளவு காசு சேரவேண்டி வந்தது. இந்தவிடயங்கள் எல்லாம் ஆவணங்களுடன் சரியாக நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பிறகு ஓ .ஐ . சி ஒரு கடிதம் கொடுத்திருந்தார் இவர்கள் பயணத்தைத் தொடர தடையில்லை என்று. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ்ஸை இராணுவம் மறித்தது என்றார்.

அப்படியானால் வெளிநாட்டவர்கள் நிலைமை என்ன மாதிரி?'' என்றேன். "அவர்களை சிறிலங்காப் படையினர் வேறு பஸ்ஸில் கொழும்புக்கு அனுப்பி விட்டார்கள்” என்றார். பணத்தையும் நகையையும் கண்ட இராணுவத்தினர் பஸ்ஸை இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் ஓலம் பெரிதாகக் கேட்டது. அப்போது வாகனங்களின் எஞ்சின் இயக்கப்பட்டு அவற்றின ஓசையால் அந்த ஓலம் மறைக்கப்பட்டது. அன்றிரவு அந்த முகாமில் தீ மூட்டப்பட்டு வெளிச்சம் எரிந்தது. இப்போது பஸ் சாலியபுர முகாமில் உள்ளது என்றார். பஸ்ஸின் இலக்கம் தெரியுமா? என்றேன். 29 ஸ்ரீ... இலக்கம் சரியாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள சேவ்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய பஸ்தான் அது என்றார்.

பின்பு என்ன நடந்தது என்றேன். டொலர் முதலாளி ஒரு வழக்கறிஞருடன் இராணுவ முகாமுக்குச் சென்றார். ஆனால் ஜே. வி. பி. தான் பஸ்ஸை மறித்தது என்று கேள்விப்பட்டோம். எமக்கு இதைப்பற்றி முழு விபரமும் கிடைக்கவில்லை என்று அனுப்பி விட்டனர் என்றார். இந்த விபரம் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? பஸ்ஸில் போன அனைவரும் தான் முடிந்து விட்டார்களே என்றேன். ஹொறவப்பொத்தாளையில் ரொட்ட வேவாவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இருந்தார். அவரை மௌலவி என்று அழைப்போம். அவர் மூலம் தான் இந்தத் தகவல் வெளிவந்தது. அதற்குப் பிறகுதான் டொலர் முதலாளி இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தார் என்றார். தொடர்ந்து வாகனத்தில் பிரயாணம் செய்வது என்பது இனி நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் என்றார்.

(இதன் பின்னர் இ. போ. ச. பஸ்ஸில் வீரகேசரி நிருபர் வேலாயுதத்தின் மகள் லலிதா பணம், நகை போன்றவற்றுடன் திரு மலையிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டனர் என்றும், 92 ஆம் கட் டையில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், சிங்கள ஊர்காவல் படையினரும் அவர்களின் பணம், நகை போன்றவற்றைப் பறித்துவிட்டு அவர்களை வெட்டுவதற்காக இழுத்தபோது சிங்களவரான இ. போ. ச. சாரதி ஆட்களை விடாவிட்டால் பஸ்ஸை எடுக்கமாட்டேன் என்று மிரட்டியதாகவும் அதனால் லலிதாவும் குடும்பத்தினரும் தப்பினார்கள் என்றும் அறிந்தோம்.)

எப்படியாவது நடந்து போகமுடியாதா? என்று கேட்டேன். அப்போது பதுமன் குறுக்கிட்டு அது மிகவும் சிரமம். நாங்கள் நடத்துவந்த பாதையின் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்தானே. தனி ஆட்களென்றால் பரவாயில்லை. ஒருநாள் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பம் வந்தது. அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது. குடும்பத் தலைவனுக்கு என்னை விட வயது குறைவுதான். எங்களை கண்டதும் ''அண்ணே எனது பிள்ளைக்கு ஏதாவது கொடுங்கள். நாங்கள் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. பசியால் குழந்தை கத்துகிறது. என்னால் இந்த நிலையைத் தாங்கமுடியாது என்று எனது காலில் விழுந்து அழுதான். அவர்களைப் பார்க்கவேதனையாக இருந்தது. முகாமில் நோயாளிகளுக்கென வைத்தி ருந்த பால்மாவை எடுத்துக் கரைத்து குழந்தைக்கு கொடுத்து விட்டு, அவர்களுக்கும் உணவும் மற்றும் யானவையும் கொடுத்து அனுப்பி வைத்தோம். அன்றைய காட்சியை நினைத்தால்... என்று கண்கலங்கினார் பதுமன். அப்போது “மட்டக்களப்புக்குச் செல்ல ஆயத்தம்”' என்றார்கள்.    

(தொடரும்)


Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 12


14-11-1990

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நாம் இருந்த இடத்திலிருந்து மிக அண்மையில் தான். மட்டக்களப்பையும் திருக்கோணமலையையும் பிரிக்கும் எல்லை ஓர் ஆறு. இது மகாவலி கங்கையின் கிளை நதி. இந்த ஆற்றில் முதலைகள் நிறைய உண்டு. ஓர் இ. போ. ச. சாரதியை இங்குள்ள முதலையொன்று இழுத்துச் சென்றதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். வருடா வருடம் யாராவது ஒருவர் முதலைக்குப்பலியாவது வழக்கம் என்று சொன்னார்கள். ஆற்றின் ஓர் எல்லையான திருகோணமலை மாவட்டப் பகுதிக்குள் புகழ் பெற்ற முருகன் ஆலயம் ஒன்று உண்டு. வெருகல கந்தசாமி கோயில் என்பது இதன்பெயர். இரு மாவட்டங்களின் எல்லையில் இருப்பதாலோ என்னவோ கிழக்கு மாகாணம் முழுவதும் இது புகழ்பெற்று விளங்குகின்றது.

ஆற்றைக் கடக்க உதவும் ‘பாதை’ ஒன்றின் உதவியுடன் நாம் திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்திற்குள் வந்தோம். இந்த ஆறு 30 யார் தூரம் தான் இருக்கும் என்றாலும் நடந்து போக முடியாது. ஆழமான ஆறு முதலைகளின் அபாயம் கூடுதல் என்பதால் பெரும்பாலும் எவரும் நீந்திக் கடக்க முயற்சிப்பதில்லை. அப்போது திரு. துரைநாயகம் இந்த இடத்தில் தான் 'முதலை வள்ளியை' முதலை பிடித்தது என்றார். எப்போது அந்தச் சம்பவம் நடந்தது என்றேன், பலவருடங்களாகி விட்டன. இந்த ஆலயத்தின் திருவிழாவின் போது தீக்குளிப்பதாக வள்ளி வேண்டிக்கொண்டாள். நேர்த் திக்கடனை என்ன காரணத்தாலோ அவளால் அதை நிறைவேற்ற முடியவில்லை. திருவிழாவுக்கு வந்த அவள் முகம் கழுவ ஆற்றில் இறங்கிய போதுதான் முதலைபிடித்தது. எல்லோரும் சேர்ந்து அவளைக் காப்பாற்றினோம். முதலை பிடித்ததால் சில காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அந்தக் காயத்துடனேயே வள்ளி தீக்குளித்தார் என்றார்.

அது சரி முதலை பிடித்தால் தப்ப என்ன செய்ய வேண்டும்? என்றேன். அதன் வயிற்றுப் பக்கம் தடவினால் விட்டுவிடும் என்றார். ஏன் வயிற்றுப் பக்கம் தடவ வேண்டும்? என்றேன். அது மென்மையான பகுதி. வயிற்றில் தடவினால் அது கூச்சத்தினால் விட்டுவிடும் என்றார். முதலையைக் கண்டவுடனேயே பயம் வந்துவிடும். இதெல்லாம் சாத்தியமா? என்றேன். முதலை ஆபத்தானதுதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல் பயங்கரமானதல்ல. ஆற்றுக்குள் முதலை இருப்பது ஒரு பொந்து போன்ற இடத்தில். ஆழமான அந்தப் பகுதியை பாளி என்பர். அந்தப் பாளிக்குள் போய் தடியால் தட்டி மீன் பிடிப்பவர்களும் உண்டு என்றார். ஏன் பாளிக்குள் முதலை கடிக்காதா? என்றேன். பாளிக்குள் கடிக்காது என்றார். பாளி ஓர் சமாதானப் பிராந்தியமோ? என்றேன். சிரித்தார். தொடர்ந்து பாளிக்குள் என்ன மீன் கூடுதலாக இருக்கும்? என்று கேட்டேன். விரால் தான் கூடுதலாக இருக்கும். மீன்பிடிப்பதற்கு இன்னொரு சுலபமான வழி உண்டு என்றார்.

          என்ன வழி? என்றேன். மீன் உள்ள பள்ளங்களில் ஒரு கொடியைப் போடவேண்டும் என்றார். என்ன கொடி? என்றேன். கருந்தெவுளங்கொடி என்பது அதன் பெயர். அந்தக் கொடியில் ஒரு துண்டைப் போட்டால் மீன்மயங்கி வரும், மீனைப் பிடித்து எடுக்கலாம் என்றார். இதற்கு ஏதாவது விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கும் என்றேன். அதைப் பற்றித் தெரியாது. ஆனால் எமது அனுபவ உண்மை என்றார்.

இப்படிக் கூடுதலாக மீன் பிடிபட்டால் என்ன செய்வது? என்றேன். சூட்டுக் கருவாடு போடுவார்கள். வெயிலில் காய வைக்காமல் நெருப்பில் காய வைப்பது தான் இந்தக் கருவாடு செய்யும் முறை என்றார். தொடர்ந்து இந்த பல மாதிரி மீன் பிடிக்கும் போது சில முறைகள் உண்டு என்றார். அது என்ன? என்று கேட்டேன். கத்தியோ வேறு எந்த உலோகமோ கொண்டு போகக் கூடாது; துப்பக் கூடாது என்றார். துப்பினால் என்ன நடக்கும்? என்றேன். துப்பினாலோ உலோகங்களைக்கொண்டு சென்றாலோ சித்திக்காது - மீன்கள் ஓடி விடும் என்றார். இந்தப் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக் குக் கிடைக்கவில்லை.

ஆற்றங்கரைகளில் நின்ற மக்களுடன் மாத்தயா அளவளாவினார்? அனைவருமே திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து இந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைவரை வந்து குடிசை அமைத்து இருப்பவர்கள். சிலர் வெருகல் ஆலயமடத்தில் இருப்பவர்கள். தமக்கு உணவோ மருந்தோ கிடைப்பதில்லை எனவும் அடிக்கடி செஞ்சிலுவைச் சங்கத்தினர் வந்து பதிந்து போகின்றார்கள். எந்த விதமான பிரயோசனமும் ஏற்படவில்லை என் னர். அன்று 26-9-90 சண்டை தொடங்கி 3 மாதங்களாகி விட்டன. தமிழ் அகதிகள் என்றால் ஆமை வேகத்தில், ஆமை வேகம் என்பது கூடத் தவறு. நத்தை வேகத்தில் தான் காரியங்கள் நடைபெறுகின்றன. மக்களின் குறைகளை மாத்தயா கேட்டறிந்தார். அந்தப் பகுதி பிரதேசப் பொறுப்பாள ரிடம் இங்கு எவ்வளவு மக்கள் உள்ளனர்? என்றார். வாகரை, கதிர வெளி, வெருகல் எல்லா இடமும் சேர்த்து முப்பதினாயிரம் அகதிகள் என்றார் பிரதேசப் பொறுப்பாளர் எஸ்.பி. அங்கு ஒரு பத்து வயதுச்சிறுவன் சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் உனது பெயர் என்ன? என்று கேட் டேன். அவன் "பிரபாகரன்" என்றான்.

மாத்தயா அவர்கள் பொது மக்களோடு பேசிக் கொண்டு இருக்கும் போது எனது பார்வையைச் சுழலவிட்டேன். ஓலையால் வேய்ந்த கடை ஒன்று; அன்று திறக்கப்படவில்லை. தட்டியால் மூடியிருந்தது. அந்தக் கடைக்கு முன்னே ஒரு சிறுமியும் இரண்டு குழந்தைகளும் நின்றார்கள். ஆகச் சிறிய குழந்தை ஆண் குழந்தை. அந்தச் சிறுமியிடம் போய் மருமகள் உங்களது பெயர் என்ன என்றேன். ராஜசுலோசனா என்றாள் சிறுமி. உங்களுக்கு எத்தனை வயது? என்றேன். பத்து வயது என்றார். ஏன் இன்று கடை திறக்கவில்லை? என்றேன். 'இனிக் கடை திறக்க முடியாது. அப்பாவை முஸ்லிம் ஆட்களும் ராணுவமும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்’ என்றாள். எங்கே பிடித்தார்கள்? என்றேன். வாழைச் சேனையில் என்றாள். மட்டக்களப்பு மண்ணில் கால் வைத்தவுடனேயே முதன்முதல் கிடைக்கும் செய்தி இதுதானா?                                        

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 13

15-11-1990

என்ன நடந்தது? என்று விசாரித்தேன். அப்போது அருகில் நின்ற ஒருவர் குறுக்கிட்டு நாலாயிரத்து ஐநூறு ரூபாவுடன் வெருகலில் இருந்து இந்தப் பிள்ளைகளின் தந்தை வாழைச்சேனைக்குப் பொருள்கள் கொள்வனவு செய்யப் போனதாகச் சொன்னார். இங்கிருந்து வாகனம் எதுவும் போவதாகத் தெரியவில்லையே? என்றேன். 'சைக்கிளில் தான் சென்றார். எல்லா வியாபாரிகளுமே சைக்கிளில் சென்றுதான் பொருள்களை வாங்குகின்றார்கள்' என்றார். ஏதாவது சின்னப் பிரச்சினைகளென்றாலும் ஓட்டமாவடிப் பாலத்தில் தான் முஸ்லிம் காடையர்கள் சண்டித்தனம் செய்வதும், ஆட்களைக் கடத்துவதும் வழக்கம். வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். 85 ஆம் ஆண்டுக் கலவரத்தின் போதும் (தமிழ் - முஸ்லிம்) இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தன. "எனவே ஓட்டமாவடிப்பாலத்தால் போவது பிரச்சினை தானே!. ஏன் அந்த வழியால் போகிறார்கள்?" என்று விசாரித்தேன். ஓட்டமாவடி வழியாக இல்லை. வாழைச்சேனைக்கு நேர்எதிரே உள்ள நாசிவன் தீவு என்னும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து தோணி மூலம் வாழைச்சேனைக்குச் செல்வார்கள் என்றார். வாழைச்சேனையில் பொருள்கள் வாங்கத் தடையில்லையா? என்று கேட்டேன். வாழைச்சேனையில் தற்போது முஸ்லிம்களின் கடைகள் மட்டுமே உள்ளன. இக்கடைகளுக்கு பள்ளிவாசல்கள் சில நிபத்தனைகளை விதித்துள்ளன. வழக்கமாக ஒரு பொருளுக்கு ஒரு விலையென்றால் தமிழர்களுக்கு விற்கும்போது ஒரு விசேட வரியையும் சேர்த்து கடைக்காரர் வசூலிக்கவேண்டும். குறிப்பிட்ட அந்த வரிப் பணத்தை பள்ளிவாசலுக்கான உண்டியலில் உடனே போட்டுவிட வேண்டும். இதற்காக ஒவ்வொரு கடைகளுக்கும் பள்ளி வாசல்கள் 'வரி உண்டியல்' என்று ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் என்றார். தேங்காய்க்கு வரி எவ்வளவு? என்றேன்.

ஒரு தேங்காய் தமிழருக்கு விற்றால் ஒரு ரூபாய் வரி. அந்தக் காசையும் தமிழரிடம் அறவிட்டுப் போட வேண்டியதுதான். இப்படியே ஒவ்வொரு பொருள்களுக்கும் வேறுபட்ட வரி என்றார். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் போராளிகள் சாராயம். சிகரெட் போன்ற பொருள்களுக்கு வரிவசூலிப்பது போல் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாட்டில் பள்ளி வாசல்கள் இப்படியான முடிவுகளை எடுத்துள்ளன என்பதை உணரமுடிந்தது. எனவே வரிதான் அறவிடுகின்றார்களே, பின்பு ஏன் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றேன். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைக் கொல்வதென்பது இப்போது சமூக மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றார். எல்லா' முஸ்லிம்களும் இதற்குச் சம்மதிப்பார்களா? அவர்களுக்கு தமிழ் மக்களின் நிலங்களுக்கு மத்தியில் காணி உள்ளது அதில் தான் விவசாயம் செய்ய வேண்டும். தமிழர் மத்தியில் தான் கடை நடத்தவேண்டும். விறகுக்குப் போவதானால் கூட தமிழர் நிலங்களுக்குள்ளால் தானே செல்ல வேண்டும். அப்படியானால் எல்லா முஸ்லிம்களும் இதற்குச் சம்மதிப்பார்களா? நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்தவர்களை அழிப்பது சாத்தியமா? என்றேன். அதற்கு அவர் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சமூகக்கட்டுப்பாடு உண்டு அதாவது பள்ளிவாசல்கள் என்ன முடிவை எடுக்கின்றனவோ அந்த முடிவுக்கு அந்தப் பள்ளி வாசல்களைச் சேர்ந்தவர்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டும். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு என்ன கருத்தும் இருக்கலாம். ஆனால் பள்ளிவாசல்களின் முடிவை எந்தக் காரணத்தாலும் மீற முடியாது. கிழக்கு மாகாணத் தில் இருந்து தமிழர்கள் ஒழிகப்பட வேண்டியவர்கள். எனவே அந்த நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே இருக்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாகத்தான் இந்த வரி வசூலிப்பு முறையை அமுல் படுத்தியுள்ளார்கள்என்றார்.

இதுசாத்தியமாகக் கூடிய விடயமா முஸ்லிமகள் மத்தியில் எத்தனை கல்விமான்கள் உள்ளனர். அவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டேன். அவர்களின் கூற்றை யார் மதிக்கிறார்கள். மதவெறியை ஊட்டி ஓரணியில் திரள வைக்கிறார்கள். 85 ஆம் ஆண்டும் இது போல கலவரங்கள் ஏற்பட்டபோது இதே பள்ளிவாசல்கள்தான் முஸ்லிம் காடையர்களிடம் பிடிபடும் தமிழர்களை விடுவிப்பதிலும் சமூக உறவுகளை சீராக்குவதிலும் ஈடுபட்டிருந்தன. ஆனால் இன்று நிலைமை எவ்வளவு தலைகீழாகப் போய்விட்டது என் றார்.

இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் ஒன்று இருக்க வேண்டுமே என்னவென்று தெரியவில்லையா?என்று கேட்டேன் நிச்சயமாக இதற்கு ஒரு பெரிய பின்னணி உண்டு. இது என்னவென்று எமக்குப் புரியவில்லை. ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். தமிழர்களைக் கொல்வதற்கு முன் அனைவரும் பள்ளிவாசல்களில் கூடுகின்றார்கள். அங்கு சில கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. சிறிது நேரத்தில் இராணுவம் அந்த இடத்துக்கு வரும். இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் அனைவரும் செல்கின்றார்கள். அப்படிப் புறப்படும் நாளில் பாரிய இன அழிவு நிச்சயம் என்றார். பள்ளிவாசல்களில் என்ன கருத்து முன்வைக்கப்படுகிறது என்று தெரியுமா? என்றேன். அது தெரியவில்லை. அந்தளவுக்கு பள்ளிவாசல்களை நெருங்கிப் பார்க்கவோ, அவதானிக்கவோ முடியாது. முன்பு போல எம்மோடு நெருங்கிப் பழகிய முஸ்லிம்களும் இந்த விடயங்கள் பற்றி எதுவும் கதைப்பதில்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் தெரிந்து கொண்டோம் என்றார். என்ன அது?” என்று கேட்டேன். இப்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு புனிதப்போர்என்று பெயரிட்டிருக்கிறார் கள் என்றார்.

மனிதத்துவத்துக்கு சமாதிகட்டும் ஈனச் செயலுக்கு புனிதப்போர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதற்கு ஏதோ பின்னணி இருக்க வேண்டும்என்று நினைத்துக்கொண்டேன். சில நாட்களின்பின் அதற்கு விடை கிடைக்கத்தான் செய்தது.                                           

  (தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 14

திரு. மாத்தயா அவர்கள் அகதிகளிடம் விடைபெற்று வாகனத்தில் ஏறினார். செல்லும் வழியெங்கும் சிறு குடில்களை அமைத்து ஏரானமான அகதிகள் தங்கியிருப்பது தெரிந்தது. வாகரையை அடைந்ததும் மதிய உணவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் தங்கினோம். அப்போது ஒரு செய்தி வந்தது. யாழ் கோட்டையைப் போராளிகள் கைப்பற்றி விட்டார்கள் என்று. அன்று திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு சில இடங்களில் நினைவுக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நகர் முழுவதும் விழாக்கோலம் பூணுகிறது. மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றார்கள் என்றும் செய்தி வந்தது. மாத்தயாவை ஊர் மக்கள் பலரும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளில் மகளிர்படைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் ஜெயாவும் வந்து சந்தித்துச் சென்றனர். அங்கிருந்து நாம் நீண்ட தூர பிரயாண த்தின் பின் ஒரு முகாமைச் சென்றடைந்தோம். 28.09.90 வரை இந்த முகாமிலேயே தங்கினோம், 28 09.90 மாலை அந்த முகாமிலிருந்து புறப் பட்டோம். எம்மை அழைத்துச் செல்ல மட்டக்களப்புத் தளபதி கருணா புறப்பட்டு வந்தார். வழியில் எம்மைச் சந்தித்து அழைத்துச் சென்றார். ஒருமணித்தியாலம் நடக்க வேண்டியிருந்தது. வயல் வெளிகளுக்குள்ளாக நடத்து சென்றோம். நன்றாக விளைந்திருந்த வயலை யானை அழித்திருந்தது. அறுவடை செய்யாமல் இப்படி அழித்திருக்கும் வயல் வெளிகளைப் பார்க்கும் போது வயிறுபற்றி எரித்தது. எனக்கே இப்படி யென்றால் சொந்தக்காரனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஏன் இந்த வயல்கள் அறுவடை செய்யப்படவில்லை? என்று கேட்டேன். சுதந்திரமாக மனிதர்கள் நடமாட முடியாத நிலையில், வயல்கள் அறுவடை செய்யப் படவில்லை. இராணுவத்துக்குப் பயந்து வயல் பக்கம் மக்கள் செல்ல வில்லை என்றார். இராணுவத்துடனான மோதல்கள் தொடருகின்றனவா? என்று கேட்டேன். என்ன நடத்தாலும் அது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கடந்த 22 ஆந் திகதி கூட சிங்கபுர முகாமிலிருந்து கண்டக்காடு முகாமுக்கு சென்ற இராணுவத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தொலைத் தொடர்பு சாதனம் ஒன்றும் பத்து றைபிள்களும் உருப்படியாகக் கிடைத்தன என்றார்.

கண்டக்காடு பொலனறுவை மாவட்டத்திலல்லா இருக்கிறது. நானும் தான் அடிக்கடி கேள்விப்படுகிறேன். அனுராதபுரம் மாவட்டத்தில் தாக்குதல் நடக்கிறது, பொலனறுவைறுவை மாவட்டத்தில் தாக்குதல் நடக்கிறது என்று, பதுமனும் நீங்களும் ஏதோ தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள் போல இருக்கிறது. வாகனத்தில் ஏறினார். நான் அறிந்தவரை வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தான் தமிழீழம் என்று எண்ணியிருக்கிறேன், நீங்களோ பொலனறுவை மாவட்டத்திலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் தாக்குதல் நடத்துகிறீர்கள். ஈரோஸுக்கு பதுளை தேவைப்பட்டது போல உங்களுக்கு இந்த இரண்டு மாவட்டங்களும் தேவைப்படுகின்றதோ? என்றேன். சிரித்தார்.

அப்படியில்லை. இராணுவமோ, குடியேற்றமோ நாம் அதைத்தேடிப்  போகாவிட்டால் அவை நம்மைத் தேடி வரும்.தமிழீழம் எமது சொந்தநாடு, எமது நாட்டிற்குள் சிங்களவன் அத்துமீறும் போது நாமும் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாததாகின்றது. அதைவிட கண்டக்காடு பகுதி தமிழரின் பூர்வீக நிலம்தான். பொலனறுவையில் கூட இந்து ஆவயங்கள் இருந்திருக்கின்றன. கண்டக்காடுபகுதியை அண்டிச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று நீங்கள் அதைச் சிங்களவருடைய பிரதேசமென்று எண்ணுகின்றீர்கள் காலப்போக்கில் மொறவேவா, சாலியபுர என்பதெல்லாம் சிங்களக் கிராமங்கள் என்ற் வேறு இடத்தில் உள்ள தமிழர்கள் சொல்லக்கூடும். ஏனெனில் அந்தப் பெயர்கள் பழக்கத்தில் வந்துவிடும். இராணுவத்தின் கொடுமைகளால் அந்த இடத்துக்குச் சொந்த மான மக்கள் வேறு இடங்களில் குடியமரும்போது இப்படியான நிலை தான் தோன்றும் என்றார்.

பொதுமக்களின் நிலை என்னமாதிரி என்று கேட்டார் மாத்தயா. நாளாந்தம் சராசரியாக இருபது, முப்பது என்று செத்துக்கொண்டே இருந்தபடியால் அகதிமுகாம் வாழ்க்கை வாழ்ந்து நாளாந்தம் அழிவதை விட முகாம்களைவிட்டு வெளியேறி அவரவர்களுக்கு வசதியான இடங்களில் குடியமருங்கள் என்று மக்களிடம் சொல்லி விட்டோம் என்றார். இவ்வளவு மக்களும் முகாம்களை விட்டு வந்தால் அவர்களால் சமாளிக்க முடியுமா? கேட்டேன். “வேறென்னவழி ஊர்காவற்படையின் கொடுமை அதிகரித்து வருகிறது. மக்களை வெட்டிக் கொல்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கிறார்கள். கற்பழிக்கப்படும் பெண்கள் உயிரோடு விடப்படுவதில்லை. இவ்வளவு காலமும் கலவரம் நடந்ததுதான். தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்பதும் கொலை செய்வதும் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இனி நாம் என்ன செய்ய வேண்டும். என்பதுதான் பிரச்சினை. அதற்கு முடி வெடுத்தாக வேண்டும்" என்றார். இயக்கத்தில் நிறைய முஸ்லிம் இளைஞர்கள் இருந்தார்களே! அவர்கள் இது தொடர்பாக, என்ன நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்றேன். இயக்கத்தில் இருந்தவர்கள் இருவகை. ஒருசாரார் வேண்டுமென்றே ஊடுருவியவர்கள். அவர்கள். சண்டை தொடங்கியதுமே ஆயுதங்களுடன் ஓடிவிட்டார்கள். அவர்கள் தான் தமிழரைக் கொல்வதில் தீவிரமாயிருக்கிறார்கள். அடுத்தவர்கள் விசுவாசமாகவே இயக்கத்துடன் இருந்தவர்கள். இந்தச் சண்டையில்கூட இராணுவத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்கள். ஓட்டமாவடியில் நிகழ்ந்த தாக்குதல், களுவாஞ்சிக்குடியில் நிகழ்ந்த தாக்குதல் எல்லாவற்றிலும் முஸ்லிம் போராளிகள் களத்தில் இறந்துள்ளார்கள். இராணுவம் பிரதான பாதையினுள் நுழையவிருந்த சமயத்தில் ஜெட்வேகத்தில் நிலைமை மாறியது என்றார். 'நிலைமைக்கேற்ற மாதிரி மாறி விட்டார்கள் என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். இல்லை, ஏற்கனவே வகுத்ததிட்டம் செயற்படத் தொடங்கியதுஎன்றார். என்ன அது? என்றேன். எல்லாக் கிராமங்களிலும் இருந்த பள்ளிவாசல்கள் ஒரேநாளில் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் இளைஞர்களைக் கூப்பிட்டுக் கதைத்தன. அதைத் தொடர்ந்து அனைவரும் உடனே விலகிவிட்டார்கள். இதன் பின்னணி மிகப் பயங்கரமானது என்றார். என்ன அது? என்றேன்.       

           

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 15


18.11.1990

திரு. கருணா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியற் பொறுப்பாளர் திரு கரிகாலன் அவர்கள் வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் திரு. மாத்தயாவுடன் மட்டக்களப்பு நிலைமைகள் பற்றிக் கலந்துரையாடினர். பல்வேறு முக்கியஸ்தர்களும் வந்து மாத்தயாவைச் சந்தித்தனர் அகதிகள் பற்றிய விடயங்களைக் கேள்வியுற்ற திரு. மாத்தயா இந்த விடயங்களை திரு. கிட்டு அவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர் மூலமாக இந்த விடயங்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். அத்துடன் அகதிகளின் நிலைமையை வீடியோவினாலும், புகைப்படக் கமராவினாலும் படமெடுத்து அவர்களின் அவலத்தை ஏனைய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறினார்.

மாத்தயாவின் வேண்டுகோளின்படி 2-10-90 அன்று பிற்பகல் 4 மணியளவில் அகதிகளின் நிலையைப் படமாக்கவும், அவர்களைப் பேட்டி கண்டு நிலைமைகளை அறியவும் ஒரு குழு புறப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பொறுப்பாளர் திரு. கரிகாலன் அவர்கள் இக்குழு வுக்குத் தலைமை தாங்கினார். லான்ட் குறோசரில் புறப்பட்ட இக்குழுவுடன் நானும் தொற்றிக் கொண்டேன். முதலில் வந்தாறு மூலையிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள பொத்தானை வடிச்சல் என்னும் பகுதியை அடைந்தோம். பொத்தானை என்னும் பகுதியில் உயரமான பகுதி பொத்தானைத்திடல் என்றும் அங்கிருந்து மழைநீர் வடிந்து ஆற்றுடன் சேரும் இந்தப் பகுதி பொத்தானை வடிச்சல் என்றும் அழைக்கப்படும் என அறிந்துகொண்டோம்,

அங்கே புதிதாகக் குடிசைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பலர் காட்டை வெட்டி துப்பரவு செய்து கொண்டிருந்தனர். அகதிகளாக வருவோர் தண்ணீர் வசதியைக் கருத்திற்கொண்டு ஆற்றங்கரைகளை அண்டிய பகுதிகளாக தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொள் கிறார்கள் என்பதை உணர முடிந்தது. ஒரு வெட்டவெளியில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. முடி நரைத்து மூகம் காய்ந்த, ஒரு வயோதிபர் அங்கே காணப்பட்டார். மரநிழலில் ஒரு குழந்தை நிர்வாண நிலையில் படுத்திருந்தது. குழந்தை படுத்திருந்த சூழலை அவதானித்தேன். சாப்பாட்டில் ஈக்கள் மொய்த்துக் காணப்பட்டன. வயோதிபரிடம் "நீங்கள் எந்த ஊர் என்று கேட்டேன்." குடிசை அமைக்கும் வேலையைத் தொடர்ந்தவாறே 'வந்தாறு மூலை” என்றார். அவர்களின் நிலையைப் பார்த்த நான் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அங்கிருந்த ஒரு இளைஞரிடம் இங்கு எத்தனை குடும்பங்கள் உண்டு? என்றேன். "பதினைத்து என்றார். காடும் பற்றைகளும், ஆறும் சேர்ந்த இந்த இடம் நுளம்புகளின் உற்பத்தி ஸ்தாபனம் ஆக விளங்கும். இங்கு எப்படித் தான் இருக்கிறார்களோ? என்று நினைத்தபடியே புறப்பட்டேன். அப்போது எனக்குத் தெரிய வில்லை இது சாதாரண காட்சி. இனிக் காணப் போகும் காட்சிகள் இதைவிட அவலமான காட்சிகள் என்று'

சாரதியின் ஆசனத்தில் இருந்த கரிகாலனிடம் சென்றேன். இந்த இடத்தில் இப்படி இருக்கின்றார்களே இங்கு மலேரியா போன்ற நோய்கள் தொற்ற வாய்ப்பு உண்டல்லவா? என்று கேட்டேன். “இந்த நிலையைப் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இனிவரும் காலம் மழைக்காலமாகும் அந்தக் காலத்தில் இந்த மக்கள் இன்னும் துயரத்தைச் சந்திக்கப் போகிறார்கள்” என்று வேதனையுடன் கூறியவாறே லாண்ட்குறோசரை செலுத் தொடங்கினார்.

மைலவட்டவான் என்ற பகுதியை அடைந்தோம். தூரத்தில் இருந்து பார்த்த போது திருவிழாக் கூட்டம் போல் தெரிந்தது. எனக்கு புதினமாக இருந்தது. ஏனென்றால் நான் ஏற்கனவே இந்த வீதிகளால் பயணம் செய்தவன். வயல்வேலைகள் நடைபெறும் காலம் தவிர ஏனைய காலங்களில் இந்த வீதியில் சனநடமாட்டத்தைக் காணமுடியாது. எப்போதாவது ஓரிரு சைக்கிள்கள் வரும். அப்படியான இந்தப் பகுதி சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதுதான் மைலவட்டவான் வேல்ட் மாக்கற் (உலகச்சந்தை) என்றார் கரிகாலன். பிரபலமான ஆலயத் திருவிழாவின்போது கடைகள் எவ்வாறு காணப்படுமோ அப்படியிருந்தது. வீதியின் இருமருங்கும் எண்ணற்ற கடைகள் முளைத்திருந்தன. சைக்கிள் கடைகள், ரொட்டிக் கடைகள், சலூன், மீன்- கருவாட்டுக் கடைகள், மரக்கறிக்கடைகள், பலசரக்குக்கடைகள் என பல கடைகளும் காணப்பட்டன. இந்தப் புதிய சந்தையை அண்டிய ஒரு குடிசையை நோக்கிப் போனோம்.

ஒருமாமரத்தின் கீழ் சிலர் இருந்தார்கள். அவர்களை நெருங்கினோம். கையில் கைக் குழந்தையுடன் இளம் ஒரு பெண் இருந்தார். வெறித்த பார்வை. 'அக்கா உங்கள் கணவர் எங்கே?'' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். கண்ணீர் பொலபொலவெனக் கொட் டியது. 'கொள்ளையிலபோவானுகள் கொண்டு போயிட்டானுகளே" என்று அருகில் இருந்த ஒரு கிழவி ஓலமிட் டாள். இவர்கள் ஏதோ விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உடன் புரிந்து கொண்டேன். அந்தக் கைக்குழந்தையை கவனித்தேன். அதிர்ச் சியாக இருந்தது எனக்கு. பல சர்வதேச சஞ்சிகைகளில் பார்த்த அவலத்துக்கு எடுத்துக்காட்டான குழந்தைகளை ஒத்த அந்தக் குழந்தையின் தோற்றம். மெலிந்து, கறுத்து பார்க்கப்பயங்கரமான, தலைக்கேற்ற உடல் அமையாத... அதை வார்த்தையில் வர்ணிப்பது கஷ்டம். எதியோப்பியா அல்லது பயாவ் றாவில் தான் நிற்கிறோமோ என்று கூட எண்ணினேன். கிழக்கின் முழு அவலத்துக்கும் இந்தக் குழந்தையின் உருவம் ஒன்றே போதும் நானும் ஒரு குழந்தையின் தந்தை என்பதால்தானோ என்னவோ இந்தக்காட்சி என்னை மிகவும் பாதித்தது. அன்றிரவு முழுக்க அந்தக் குழந்தையின் தோற்றம் நெஞ்சைப் பிசைந்தது.  

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 16

21.11.1990

கேள்வி பதில் வடிவில் எமது உரையாடல் தொடர்ந்தது. ஐயா இந்த இடத்துக்கு நீங்கள் வந்து எவ்வளவு காலம் ? மூன்று மாதகாலமாகிறது. கும்புறுமூலை அடியோட வெட்டைக்கிறங்கினது தான், மறுகா ஊர் போகயில்லை இந்த இடத்தில் இருக்கிறீர்களே சாப்பாடு வசதிகள் எப்பிடி? கஷ்டம்தான், என்ன செய்யிற? இந்த இடத்துக்கு யாராவது வந்து உதவி செய்தார்களா? ஒருத்தரும் வரயில்ல மகன். இவ்வளவு மக்கள் இருக்கிறார் களே நோய் வந்தால் மருந்துக்கு என்ன செய்வீர்கள்? ஒரு மருந்தும் இல்லை. என்ட மகள் புள்ளைப் பெத்து அஞ்சு நாள் இண்டை வரை ஒரு குளிசையோ ஊசியோ இல்லை. இந்தப் பாலத்தடியில தான் கிடக்கிறாள். (இதைக் கூறும் போது கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது) நீங்கள் உங்கள் இடத்துக்குத் திரும்பிப் போக முடியாதா? எப்படி மகன் போறது. கிணத்தில் ஆக்களை வெட்டிப் போட்டிருக்கிறாங்கள். அதைப் பாத்தவங்க வந்து சொல்லுகிற போது என்னெண்டு மகன் போக மனம் வரும். இந்தப் பகுதியில் எவ்வளவு குடும்பங்கள் உள்ளன? இந்த இடமெல்லாம் ஆக்கள் தான். ஐநூறு குடும்பம் வரும். உங்கள் சொத்த இடம் எது? சித்தாண்டி, ஒவ்வொரு கேள்விக்கும் கடகடவெனப் பதில் வந்தது.

அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தேன் . இது ஆற்றுப் பகுதியாதலால் சனக்கூட்டம் இலையான் மாதிரி மொய்த்துக் காணப்பட்டது. முழங்காலளவு தண்ணீர் உள்ள இந்த ஆற்றையே குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பாவிக்கின்றனர். இந்தத் தண்ணீருக்கு சொந்தம்கொண்டாடியபடி இருநூறு மாடுகள் ஆற்றில் இறங்கின. மாடுகளும் மனிதர்களும் சமத்துவமாக இருந்த இந்த ஆற் றைக் கடந்து செல்கையில் துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. அருகில் உள்ள சிறு காட்டில் உள்ளப் பற்றைகளையே அனைவரும் மல சலம் கழிக்கப் பயன்படுத்தும்வதால் அப்பகுதியில் செல்லும் போது மூக்கு மிகவும் சிரமப்பட்டது.

அங்குள்ள மக்கள் பலர் புல்லினால் வேய்ந்த சிறு குடிசைகளில் இருந்தனர். அது ஒரு கோழிக் கூட்டைத்தான் ஞபாகப்படுத்தும். எனவே கரி காலனிடம் “இந்தப் புல்லின் பெயர் என்ன?" என்று கேட்டேன். “இலுக்கு என்பார் இலக்கணப்படி இணுக்கு என்பதே சரியான பெயர்” என்கிறார்கள். இப்புல்லை  வெட்டி ஏழுநாள் வெயிலில் காயவைத்தபின் வேய்ந்தால் ஏழு வருடங்கள் பாவிக்கலாம் என்று கூறுவார்கள்” என்றார். சின்னச் சின்ன முள்ளுச்செடி களால் வேயப்பட்டுக்கொண் டிருந்த குடிசைகளையும் கண் டோம்.

வழியில் இன்னொருவரைக் கண்டோம். நகரிலிருந்து வெளியேறி வந்தவர். அவரும் வயதுவந்த பெண்பிள்ளைகள் இருவரும் இருந்தனர். அவரை விசாரித்தேன். ஐயா ஏன் இந்தப் பகுதிக்கு வந்தீர்கள்? கொக்கட்டிச்சோலைப் பகுதி உங்களுக்குக் கிட்டத்தானே? இங்கே எனது சகோதரி வீட்டிற்கு வந்தேன். கலவரம் தொடங்கியபடியால் இங்கேயே தங்கிவிட்டேன். மட்டக்களப்பு நகரில் சிலர் வீடுகளில் தங்கியிருக்கி றார்கள்தானே? நீங்கள் ஏன் போக முயற்சிக்கவில்லை? பெண் பிள்ளைகள் உள்ள நாங்கள் அங்கே போகமுடியாது. இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் வாழ்க்கையில் தாங்கள் பெண்களையே காணாதவர்கள் மாதிரி வெறித்தனத்துடன் நடந்து கொள்கின்றார்கள். கற்பழிக்கப்படும் பெண்களை கொன்று விடுகிறார்கள். இப்படி பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏதாவது அறிந்தீர்களா? என்று கேட்டதும் பெருமூச்செறிந்தார்.

இராணுவம் நகருக்குள்வந்து சில நாள் செல்ல வீட்டில் இருக்கும் சாப்பாட்டுச் சாமான்களை எடுப்பதற்கு நான் மட்டும் தனியே நகருகுள் போனேன். அன்று ஒரு சம்பவம் நடந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து கல்லடிப் பாலம் வழியாக சைக்கிளில் ஒரு தந்தையும் மகளும் செல்ல முயன்றனர். பெரும்பாலும் மஞ்சத் தொடுவாய்ப் பக்கமாகத்தான் போகப்புறப்பட்டிருப்பார்கள். ஏனென்றால் காத்தான்குடியைத் தாண்டிப் போக முடியாது. தந்தைக்கு 50 வயதிருக்கும். மகளுக்கு 20 வயதிருக்கும். கல்லடிப்பாலத்தை நெருங்கியதும் இராணுவத்தினர் இவர்களைத் தடுத்து நிறுத்தினர். கொண்டுபோன பொருள்களை சோதித்ததும் மகளைக் கொண்டுபோய்ச் சோதிக்க வேண்டும் என்றனர்: தகப்பனோ மகளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார். கதறினார். அவரது கெஞ்சலையோ. கதறலையோ அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. கல்லடிப்பாலத்தடியில் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டுபோனார்கள். தகப்பனோ கதறிக்கொண்டேயிருந்தார். இவர் கதறும்போது இடையிடையே இவருக்கு அடியும் விழுந்தது. இவரோ தொடர்ந்து கதறிக்கொண்டிருந்தார். கடைசியில், ஒரு மணித்தியாலம் செல்ல மகளைக் காட்டுகிறோம் என்று கூட்டிக் கொண்டு போனார்கள். மகளின் நிலையைக் கண்டார் தந்தை.  “என்ட மகளே” என்று கதறியபடியே கையை உயர்த்திக் கொண்டு திரும்பி வேகமாக ஓடி வந்தார். கல்லடிப்பாலத்தில் இராணுவத்தினர் மறித்தனர். அவர்களை விலக்கிவிட்டு ஆற்றில் குதித்தார். இதைத்தான் நாங்கள் கண்டோம். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்ட இவரது உடலும், கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட, அலங்கோலமான நிலையிலிருந்த அவரது மகளின் சடலமும் ஆற்றங்கரையில் கரை ஒதுங்கினது என்றார். கல்லடிப் பாலத்தடியில் நின்று வாவியில் உள்ள மீன்களின் இனிமையான இசையைப் பலரும் செவிமடுப்பதுண்டு நிச்சயக்கமாக அன்றைய தினம் அந்த மீன்கள் ஆனந்த கீதம் இசைத்திருக்க மாட்டா.        

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 17

23.11.1990

அந்தப் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றோம். வழியில் ஒரு மரத்தடியில் சிலர் படுத்திருந்தார்கள். சில மூட்டை முடிச்சுக்களும் காணப்பட்டன. அவர்களை அணுகினோம். அங்கிருந்த பெண்மணியிடம் ஏனம்மா ஏதாவது பள்ளிக்கூடத்திலோ, அல்லது யாரிடமாவது உதவிபெற்று கொட்டிலோ குடிசையோ அமைத்து இருக்கலாம் தானே? இந்த மாதிரி ஏன் மரத்துக்குக் கீழ் படுத் திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன் பள்ளிக்கூடங்கள் எல்லாம் நிறைந்து விட்டன. எங்களுக்கு இனிமேல் தான் வாடியடிக்கவேண்டும். அதுக்கு வசதியில்லை. எங்களுடைய வீடு வாசலெல்லாம் இழந்து இப்படி அலைய வேண்டியிருக்கிறது என்றார் அவர். ஏனம்மா உங்கள் வீடு எங்கே இருக்கிறது? என்று விசாரித்தேன். ‘செங்கலடி' என்றார். தொடர்ந்து "இப்போது அது வீடாக இருக்குமோ என்பது சந்தேகமே" என்றார். “வீட் டுக்கு என்ன நடந்தது?" என்றேன். அப்போது அங்கே இருந்த ஒரு பெரியவர் இடையே குறுக்கிட்டார்.

இராணுவம் நகருக்குள் புகும்போது கூடவே வெற்று லொறிகளும் வரும் என்றார். வெற்று லொறிகளா, எதற்கு?” என்றேன், ஸ்டிக்கரோடு வரும் இராணுவத்துக்கு சாமான் ஏற்றத்தான் என்றார். “கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். “இராணுவம் வரும் போது கூட்டங் கூட்டமாகத்தான் வீடுகளுக்குள் வரும். ஒவ்வொரு இராணுவத்தினரும் தமது பெயரைக் கொண்ட ஸ்டிக்கர்களைக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பொருள்களில் தனக்குத் தேவை யான பொருள்களின் மீது தமது ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டியதுதான். அப்டி ஓட்டப்படும் பொருள்கள் மீது மற்றவர் உரிமை கொண்டாட முடியாது. ஸ்டிக்கர் ஒட்டி முடிந்ததும் லொறியை அழைப்பார்கள். லொறியில் வருபவர்கள் பொருள்களை ஏற்றிக் கொண்டு போவார்கள் என்றார்.

இது இராணுவத்தினரின் சொந்தத் தேவைக்குத்தான் போகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். அதற்கு அவர் எனது நண்பர் ஒருவர் உயர் பதவியில் உள்ளார். அவருக்குச் சிங்களம் நன்றாகத் தெரியும். இவரது வீட்டிற்கு வந்த இராணுவத்தினரில் ஒருவன் இவரிடம் 'உமக்கு சிங்களம் பேசத் தெரியுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான். இவர் தெரியாது என்றார் அதைக் கேட்டதும் அவன் முகம் பிரகாசமடைந்தது. அவரது வீட்டிலிருந்த தொலைபேசியை எடுத்து எவருடனோ தொடர்புகொள்ள முயற்சித்தான் - நீண்ட நேர பிரயத்தனத்தின் பின் அவனுக்குத் தொடர்பு கிடைத்தது. பேசினான்:

அப்பா நான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தேன் - வீட்டுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் சேகரித்து விட்டேன் - தங்கச்சியிடம் சொல்லுங்கள் அவள் கேட்ட தங்கநகைகள்தான் இன்னும் சேகரிக்க முடியவில்லை. வெகு விரைவில் அவற்றையும் சேகரித்துவிடுவேன் என்றான். முந்தித்தான் சிங்களவன் மொக்கன் என்று சொன்னோம். ஆனால் அவன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்து முடிக்கிறான்என்றார். எதைக் கொண்டு இப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். 1977ஆம் ஆண்டுக் கலவரத்தில் ஆட்களைக் கொல்வதிலும், வீடு வாசல் பொருள்களை எரிப்ப திலுமாக தாறுமாறாக நடந்து கொண்டான். இந்த முறை தமிழரைக் கொல்லும் பொறுப்பை முஸ்லிம்கள் கையில் ஒப்படைத்து, அவர்கள் தான் உங்களைக் கொல்கிறார்கள் என்ற தோற்றத்தை எமக்கு ஏற்படுத்துகிறான், அதே வேளை வீடுகளிலுள்ள பொருள்களைப் பத்திரமாகத் தமது வீடுகளுக்கு ஏற்றி அனுப்புகிறான் இந்தப் பொருட்களை ஒரு இராணுவச் சிப்பாயால் சேகரிக்க, எத்தனை வருடம் பிடிக்கும்? தமிழரிடம் இருந்து எடுப்பதெல்லாம் உங்களுக்குத்தாள் என்று சொன்னால் தமது வாழ்க்கைத்தரம் விரைவில் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இராணுவத்தில் சேர முயற்சிப்பார்கள். சி ஏற்கனவே வீணாகக் சாகிறோம் என்ற மனநிலையில் இருக்கும் இராணுவத்தினரை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை உதவுகிறது என்றார்.

சரி முஸ்லிம்கள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன். இளனி குடிப்பவன் குடிக்க கோம்பை சூப்புபவனின் நிலைதான் இவர்களது நிலை ரி.வி., டெக், றேடியோ போல விலை உயர்ந்த பொருள்களை இராணுவத்தினர் எடுத்துக் கொண்டு போக எஞ்சியிருக்கும் பொருள்களையும் நிலை, ஜன்னல், கதவு போன்றவற்றை எடுப்பதிலும்தான் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்றார். சரி தமிழரைக் கொல்வதையும், பெண்களைக் கற்பழிப்பதையும் பற்றி என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன். சிங்களவன் இவர்களைச் சரியாக ஏமாற்றிவிட்டான். யாருடைய ஏவுதலாலோ இவர்கள் தாறுமாறாக நடந்து கொள்கின்றனர். தமிழர்களைத்தானே கொல்கிறார்கள், தமிழ் பெண்களைத்தானே கற்பழிக்கிறார்கள் என்று முஸ்லிம் சமூகம் தற்போது அசட்டையாக இருக்கலாம். நாளை இது இவர்களையே சூழும்' என்றார். 'அப்படியென்றால்? என்றேன். தமிழர்களைக் கொலை செய்துவிட்டு தமிழ்ப் பெண்களைக் கற்பழித்து விட்டு கொட்டியாவைத்தான் கொன்றோம் என்றபோது மனிதாபிமானம், தர்மம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு இராணுவத்தினரின் தீரச்செயலைப் புகழ்ந்தார்கள் சிங்களவர்கள். கொலைசெய்தும், கற்பழித்தும் பழக்கப்பட்ட இராணுவம் பின்னர் ஜே. வி, பி. பிரச்சினையில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர் களைக் கொன்றபோது, ரயர் போட்டுக் கொளுத்தியபோது தான் தமது தவறை உணர்ந்து கொண்டார்கள். அதேபோலத்தான் இன்று அல்லாவைத் தொழாத தமிழர்களைக் கொல்வது பாவமில்லை என முஸ்லிம் மக்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கொலைசெய்து பழக்கப்பட்ட, கற்பழித்துப் பழக்கப்பட்ட முஸ்லிம் காடையர் நாளை தமது இனத்தில் இவ்வாறானசெயல்களில் ஈடுபடும்போதுதான் தமது தவறை உணர்வார்கள். அப்போது அவர்களைக் காப்பாற்ற யாருமே இருக்க மாட்டார்கள் என்றார்.                                                                                             

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 18

26.11.1990

கரிகாலனுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் யோகன் வந்தார். மட்டக்களப்புப் பிராந்தியத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். பொதுமக்களின் இரண்டு ட்றக்ரர்களுக்கு இராணுவம் சுட்டுவிட்டது என்றார். என்ன நடந்தது? என்று கேட்டேன், 'தமது பொருள்களை எடுத்து வர ஊருக்குள் போனபோது இராணுவம் சுட்டு விட்டது' என்றார். ‘எந்த இடத்தில்' என்று கேட்டேன் 'வந்தாறுமூலை அம்பலத்தடியில்' என்றார். 'பொதுமக்களுக்கு ஏதாவது... என்று கேட்டேன் அதைப்பற்றி தெரியவில்லைஎன்றார்.

மீண்டும் அடுத்த நாள் (03-10-90) அகதிகளைப்பார்க்கப் புறப்பட்டோம். அன்று செல்லும் குழுவுக்கு மட்டக் களப்பு அரசியல் பொறுப்பாளர் விசு தலைமை தாங்கினார். புறப்படும்போது பொம்மர்கள் வந்தன. எனவே ஒரு இடத்தில் தங்கிவிட்டோம். பொம்மர்களின் குழப்படி முடிந்தவுடன் மீண்டும் புறப்பட்டோம். வழியில் சந்தித்தவர்களிடம் எங்கே பொம்மர் தாக்கியது என்று விசாரித்தோம். இலுப்பையடிச்சேனை, களங்காட்டுமுனை ஆகிய பகுதிகளில் தான் தாக்குதல் நடந்ததாகவும் நாலு மாடுகள் இறந்ததாகவும் தெரிவித்தனர். சிவத்தப்பாலம் என்னும் இடத்தை அடைந்தோம். இந்த இடத்திற்குப் பக்கத்தில் மீசைக்காரர்என்று அழைக்கப்படும் ஒருவர் எனக்குப் பரிச்சயமானவர். வயதானாலும் திட காத்திரமானவர். நான் அடிக்கடி அவரிடம் செல்வதுண்டு. எனவே மீசைக்காரரிடம் போய்வருவோம்என்றேன். அவர் இப்போது உயிரோடு இல்லை. இந்திய இராணுவத்தின் காலத்தில் அவரைக கொன்றுவிட்டார்கள் என்றார் யோகன். என்ன நடந்தது?' என்றுகேட்டேன். இந்திய இராணுவம் பிரதான பாதையை அண்டிய கிராமங்களில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கிய சமயம் பயத்தினால் ஓடிய மக்கள் இவரது வாடியில் தமது ரீ.வி. போன்ற பொருட்களை வைத்துவிட்டு காட்டுக்குள் ஓடினர். இந்திய இராணுவத்தினர் இவரது வாடிக்கு வந்த சமயம் எல். ரி, ரியின் ரீவியாஎன்று கேட்டனர். இவர் இல்லையென்றார். இவரை அடிக்க முயன்றனர். நீ அடித்தால் நானும் அடிட்பேன்என்றார். ஒருவன் அடித்தான், அடித்த இராணுவத்தை இடுப்பில் பிடித்து தலை கீழாக குத்தினார் மீசைக்காரர். அவரை அடித்தே கொன்று விட்டனர் இந்திய இராணு வத்தினர்என்றார்.

இதைப்போல எத்தனை விடயங்கள் தான் வெளியுல்கிற்குத் தெரியாமல் இருக்கின்றன. மீசைக்காரரின் வாடியைப் பார்த்தேன். சூழ்நிலை அமைதியாக இருந்தது. அந்து கம்பீரமான குரலை இனிக் கேட்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஜீரணித்துக்கொள்ளவேண்டி இருந்து. அவரது அன்புக்கு பாத்திரமான மாடுகள் நிமிர்ந்து பார்த்தன. பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தபடி புறப்பட்டேன்.

போகும்போது விசுவிடம் மட்டக்களப்பு அகதிகளின் உணவு நிலைமை என்ன மாதிரி?” என்று கேட்டேன். கொஞ்ச நாட்களுக்கு சமாளிப்பார்கள். அதன் பிறகு தான் பெரும் உணவுப் பஞ்சம் வரவிருக்கிறதுஎன்றார். அந்த கொஞ்ச நாட்களும் எப்படிச் சமாளிப்பார்கள்என்று கேட்டேன். அறுவடை செய்த வயல்களில் கதிர் பொறுக்குகிறார்கள். அறுவடை செய்யப்பயந்து வெட்டப்படாமலிருக்கும் வயல்களில் யானைகள் மிதித்து சேதம் பண்ணியிருக்கின்றன. அந்த வயல்களிலும் போய் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டு வருகிறார்கள். அதன் பிறகுதான் சிரமம். பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்றார். நிவாரண உதவிகள் என்னமாதிரி? என்று கேட்டேன். தற்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள் அதிலும்கூட முஸ்லிம்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது என்றார்.

ஏன் அரசாங்க அதிபர் தமிழர் தானே? ஏன் அவரால் இயன்றளவு செய்யமுடியாதா?” என்று கேட்டேன். அரச அதிபர் தமிழர்தான். ஆனால் அவர் ஒரு பொம்மை மாதிரி இருக்கவேண்டியது தான். நடைமுறையில் அதிகாரம் அவரிடம் இல்லை. ஒரு முஸ்லிம் உதவி அரசாங்க அதிபரிடம் தான் என்றார். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கேட்டேன். நிவாரணத்துக்கென வாங்கும் அரிசியை காத்தான்குடியிலுள்ள தனது மைத்துனனின் அரிசி ஆலையில் மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது அவரது மில்லில் ஒரு மூட்டைக்கு மூட்டைக்கு ஆறு கிலோ அரிசி குறைவு இதை யார் எதிர்த்துக் கேட்கமுடியும். நிறுத்து தரும்படி கேட்க கூட்டுறவாளர்களுக்கு பயம், மூட்டைக்கு ஆறு கிலோ என்றால் அதை எப்படி; எந்தக் கணக்கில் பகிர்ந்தளிப்பது என்று கூட்டுறவுச் சங்கங்களும் கிராம சேவையாளர்களும் திணறுகின்றனர். இதே நிலைமை கூட சில நாட்களாகத்தான். அதற்கு முதல் எந்த உதவிகளும் இல்லை என்றார்.

உலகத்தை ஏமாற்ற நிவாரணம் கொடுக்கிறோம் என்று அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது. அந்த நிவாரணத்தில் கூட மூட்டைக்கு ஆறுகிலோ முஸ்லிம்களின் அதிகாரத்துக்குப் போகவேண்டிய நிலை நிலவுகிறது.

முஸ்லிம்களின் நிவாரணங்கள் என்னமாதிரி என்று கேட்டேன். அவர்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. அரசு இவர்கள் விடயத்தில் விசேட அக்கறை எடுக்கிறது. சண்டை தொடங்கியதும் நகரத்தில் இருந்த முஸ்லிம் வீடுகளுக்கு இராணுவம் சென்று உங்களை நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம் என்று கூறி வெபர் அரங்குக்கும் அருகிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பி முஸ்லிம்கள் அகதிகளாகின்றனர் என்று உலகிற்கு பிரச்சாரப்படுத்தி தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பார்க்கிறது என்றார். “அரசியல் நோக்கங்களென்றால்.... என்றேன். 'இங்சேமுஸ்லிம்கள் அகதிளாகின்றனர் என்று முஸ்லிம் நாடுகளுக்கு பிரச்சாரப்படுத்திதான் உதவிகள் பெற முனைகிறது ஸ்ரீலங்கா அரசு என்றார்.

தொடர்ந்து முஸ்லிம்களோ இராணுவமோ இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியும், ஆனால் ரெலோவினர் செய்வதை நீங்கள் கேட்டால்" என்றார் "சொல்லுங்கள்'' என்றேன்.                                                                      

  (தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 19

30-11-1990

விசுவுடன்போய்க் கொண்டிருக்கையில் திரும்பிப்பார்த்தேன்: ஒரேவெளி முன்னாலும் வெளி. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் ஒரே வெளிக்குள்ளாலேயே சென்று கொண்டிருந்தோம். அப்போது நான் புதுவையண்ணா யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு வல்லை வெளியைப் பார்த்துவிட்டு “வல்லை வெளி தாண்டிப் போகுமோ’?" என்றுபாடினார். இந்த வெளியைப் பார்த்தால் தான் உண்மையான வெளி எதுஎன்பது தெரியும் என்றேன். அப்போது யோகன் "அது வல்லை வெளி. இது வானவெளி'' என்றார். யாழ்ப் பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று கொஞ்சக் காலம் போராடி விட்டுத் திரும்பிய ஒரு போராளியிடம் மட்டக்களப்பைப் பற்றிக் கூறச்சொன்னபோது “மட்டக்களப்பில் ஓடினால் வெளி, விழுந்தால் வெடி” என்று கூறியது ஞாபகத்துக்குவந்தது. 1987 ஆம் ஆண்டுவரை சயனைட் மூலம் வீரமரணமடைந்த போராளிகளின் தொகை மட்டக்களப்பில் தான் கூடுதலாக இருந்தது. ஏனெனில் அங்குள்ள இயற்கையமைப்பு பெரும் பாலும் வெளிகள் உள்ள பிரதேசமாக இருப்பதால் போராளிகளுக்குச்சாதகமாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலுமதில் தாண்டினால் ஒரு போராளியைப்பிடிக்க முடியாது. அங்குள்ள நிலைமை அப்படியல்ல; இதனாலேயே சயனைட் அருந்த வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டன.

இலுக்குவட்டை, தீலிவட்டை என்னும் இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தோம். இங்குள்ள அகதிகள் பெரும்பாலும் கிழான் சந்திவெளிப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள், சட்டக்கண்டன் முன்மாரி என்னும் இடத்தில் பொம்மர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்தும் இருவர் படுகாயமடைந்துமிருந்தனர். பெரியதம்பி சண்முகம் என்பது குடும்பத் தலைவரின் பெயர்.

இலுப்பையடி முன்மாரி என்னுமிடத்தை பார்த்தோம் அங்கும் இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கியி ருந்தனர். முறக்கொட்டாஞ்சேனை முகாமுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 35 வயதான ஒரு குழந்தைக்குத் தகப்பனான தம்பிப்பிள்ளை கந்தசாமியின் மனைவி, சித்தாண்டிக்கோயில் முகாமில் கைது செய்யப்பட்ட துரைசிங்கம் என்பவரின் தாய் என்பவர்களைச் சந்தித் தோம். “முறக்கொட்டாஞ் சேனை முகாமில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டவர்கள்?” என்று கேட்டேன். “முதல் தரம் 6, அடுத்ததரம் 15, அடுத்த தரம் 36, அந்த முப்பத்தாறு பேரில் தான் தனது மகனும் ஒருவர் என்று சொன்னார் தாய். "தலையாட்டி மூலமாகவா கைது செய்யப் பட்டனர்?” என்று கேட்டேன். "இல்லை ஒரு சைசான ஆளைப் பார்த்து ஏற்றினார்கள்" என்று சொன்னார்கள். நற்குணம் உதயகுமார் ஆகிய இருபிள்ளைகளை சித்தாண்டிக்கோயில் அகதி முகாமில் பறி கொடுத்த தாயையும் சந்தித்தோம். புஷ்பராணி என்பது அவரது பெயர். “இவர்கள் கைது செய்யப்பட்ட போது முகாமுக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்?” என்று கேட்டேன். “செஞ்சிலுவைச்சங்கம் தான்” என்றார்கள். இப்போது அவர்கள் உங்கள் பிள்ளைகளின் விடுதலை சம்பந்தமாக என்ன சொல்கிறார்கள்? என்று கேட்டேன். எழுதித்தருவதுமட்டும்தான் உங்களது வேலை. விடுதலை சம்பந்தமான விஷயம் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள் என்றார். எவ்வளவு அலட்சியமான பதில். தமது பொறுப்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தான் இவர்கள் உள்ளனர். இப்படிக் கைது செய்யப்பட்டவர்களை யாராவது போய்ப் பார்க்க முடியுமா? என்று கேட் டேன் இதுவரை கைது செய்யப்பட்ட எவரையுமே பார்க்க முடியவில்லை என்றார்.

அப்படியே பெருமாவெளிக் கட்டு என்னும் இடத்தை அடைந்தோம். அங்கே நான்கு சின்னத்தடி நட்டு இரண்டு பனைவடலி ஓலையால் வேயப் பட்டிருந்த ஒரு குடிசையைக் கண்டேன். விளையாட்டுக்காக சிறுபிள்ளை கள் அமைக்கும் கொட்டில்தான் அது. அதற்குள் ஒருதாய் இரு குழந்தைகளை அணைத்தபடி இருந்தாள். இப்படியான நிலைமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய நான் அந்தத் தாயை அணுகி இதுதான் உங்கட வீடா' என்று கேட்டேன். இல்லை. நாங்கள் அந்த மரத்தடியிலதான் கிடக்கிறம். இது வேற ஆக்கள் இருக்கிறது. நாங்கள் வெயிலுக்காக வந்திருக்கிறம் என்றார் அவர். நான் நினைப்பதைவிட மோசமான நிலை.

அங்கிருந்த இன்னொருவரைச் சந்தித்தேன். அவருடன் உரையாடினேன்.  உங்க பெயர் என்ன? காளிக்குட்டி ஆறுமுகம். எந்த இடம்? வீரமுனை. வீரமுனையைவிட்டு ஏன் இங்கு வந்தீர்கள்? வீரமுனையில் 300பேரை இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் கைது செய்து கொண்டு போனார்கள். வெட்டிக்கொல்கிறார்கள், அதனால் தான் இங்கு வந்திருக்கிறோம். வீரமுனையில் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார்கள்? அங்குள்ள சிந்தாத்துரைப் பிள்ளையார் கோயிலில். இதில் உங்களது உறவினர்களும் இருக்கிறார்களா? எனது தம்பிமார் மூவர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களது பெயர், வயது? உலக நாதன் 30வயது. யோகராசா 28வயது, நவரட்ணம் 26வயது. இவர்கள் திருமணமானவர்களா? உலகநாதன் மட்டும் திருமணமானவர். இவருக்கு ஒரு பெண்குழந்தையும் இரண்டு ஆண்குழந்தைகளும் உண்டு. நீங்கள் மட்டக்களப் புக்கு வந்து எவ்வளவு காலம்? 3மாதம். இவ்வளவு நாட்களும் எங்கேயிருந்தீர்கள்? சித்தாண்டிக் கோயிலில் அகதி முகாமில். அங்கே சாப்பாடு, வசதிகள் எப்படி? 3 மாத காலத்துக்கு 13கிலோ மாவும், 6கிலோ அரிசியும் எமது குடும் பத்துக்கு தந்துள்ளார்கள். வேறெதுவும் கிடைக்கவில்லை. கொண்டு வந்த பொருள்களையெல்லாம் விற்று உடுத்த உடுப்புடன் இருக்கிறோம். தற்போது வீரமுனை நிலைமை என்ன மாதிரி? கிராமத்தில் ஒருவருமே இல்லை: அங்கு முஸ்லிம் அதிகாரம்தான் இருக்கிறது. அதனால் இராணுவம் தமிழர்கள் மீது வெறியாட்டம் ஆடுகிறது. அந்தப் பகுதியில் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்? முந்நூறு பேருக்குமேல் பெண்கள் குழந்தைகளைக் கூடவெட்டிக் கிணற்றில் போட்டிருக்கிறார்கள்.

உடற்கட்டுள்ள ஆண்கள், கல்வியறிவு மிக்கவர்கள். எல்லோரையும் தெரிந்தெடுத்துக் கொல்கிறார்கள். இங்கே நிலைமை என்ன மாதிரி? சாப் பாடு இல்லை. மருந்து இல்லை நோயினால் குழந்தைகள் அவஸ் தைப்படுகிறார்கள். இப்போது வீரமுனை நிலைமை பற்றி அறிந்தீர்களா? கட்டடத்தை உடைத்து ஜன்னல், கதவு போன்றவற்றை முஸ்லிம் ஊர் காவல்படையினர் கொண்டு போகிறார்கள் என்றார் அவர். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினோம். கரிகாலனின் அலுவலகம் சென் றோம். அங்கு ஒரு தகப்பன் தமது மகளுடன் வந்திருந்தார்.  "தம்பி! இது என்ட மகள். இவள் நல்லாப்படிப்பாள். எவ்வளவோ கஷ்டப்பட்டு இவளைப் படிப்பிச்சன், ஆனா இப்பபோராட ஆக்கள் வேணும். அதால இவளை உங்களிட்ட ஒப்படைக்கிறேன் போராட்டம் முடியிறபோது இவள் உயிரோட இருந்தால் இவளைப் படிப்பிச்சுப் போடோணும்" என்றார். பொதுவாகளே தகப்பன்மார் பெண்பிள்ளைகளில் தான் கூடிய பாசம் வைத்திருப்பார்கள். பெண்பிள்ளையையே இப்படி ஒப்படைக்க ஒரு தகப்பன்முன் வருகிறார் என்றால்... இது தான் மட்டக்களப்புமண்ணின் மகிமை. படிப்பைக் காரணம் காட்டி பிள்ளைகளைப் பிரித்தெடுக்கும் எமதுசமூக அமைப்புடன் ஒப்பிடுவதே தவறு.             

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 19

02.12.1990

கரிகாலனின் லாண்ட்குறோசர் கொக்கட்டிச்சோலையை சென்றடைந்தது. அங்குள்ள தேவாலயத்தின் முன்றலிலே தான் கூட்டம் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இக் கூட்டத்திற்காக வருகை தந்திருந்தனர். திரு தம்பிராசா அவர்கள் தலை மையில் கூட்டம் ஆரம்பமாகியது. உரை நிகழ்த்தியவர்களில் அனேகர் குமரப்பாவையே ஞாபகப்படுத்தினர். ஏனெனில் அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குமரப்பாவைத் தெரியும்.

              திரு. கரிகாலன் அவர்கள் உரையாற்றும்போது இன்றையநாள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். இந்திய ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய வல்லாதிக்க பூதம் எம்மை படுகொலை செய்த நாள்என்று குறிப் பிட்டு இந்திய அரசின் தந்தி ரங்களுக்கு பலியாகாமல் எவ்வாறு போராட்டத்தை புலிகள் முன்னெடுத்துச் சென்றனர் என்பதை விளக்கினார். தொடர்ந்து தற்போதைய நிலைபற்றி அவர் பேசுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஒரே நேரத்தில் 11 பொலிஸ்நிலையங்களையும் 7 இராணுவ முகாம் களையும் தாக்கி வெற்றி பெறும் அளவுக்கு போராட் டத்தில் வளர்ச்சியடைந்துள்ளோம். போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பே இச்சாதனைகளுக்கு மூலகாரணம். எனவே சிறிலங்கா அரசு பெருமளவில் இராணுவத்தை குவித்துமக்களைப்படுகொலை செய்து அகதிகளாக அலையச் செய்வதன்மூலம் மக்களை எம்மிடமிருந்து அன்னியப்படுத்தி போராட்டத்தை முறியடிக்கலாம் எனக்கனவு காண்கிறது. ஆதலால் நாம் எந்தச்சூழ்நிலையிலும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.

இந்திய இராணுவத்துடன் நாம் நடத்திய போரில் 2000 சிப்பாய் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய போரில் 1500 சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரம் பேர் கால்களை இழந்துள்ளனர். இந்நிகழ்வுகளெல்லாம் போராட்டத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. தமிழீழத்தை மீட்டெடுக்கும் படிக்கற்கள்இச்சாதனைகள்' என்று பேசினார்.

அடுத்து திரு. நியூட்டன்பேசினார். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள சிரேஷ்ட போராளிகளில் ஒருவர் இவர். 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்குச் சென்ற இவர் தொடர்ச்சியாக அப்பகுதியிலேயே விடுதலைக்காக தீவிரமாக உழைத்துவருபவர்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் மரணம் இயக்கத்தின் தன்மானத்திற்கு எடுத்துக்காட்டு. அவர்கள்பிடிபடும் போது ஆயுதம் இருந்தது. சயனைட் இருந்தது. அவர்கள் அப்போதே சண்டை பிடித்திருக்கலாம். சயனைட் அருந்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை இந்திய அரசு காப்பாற்றுமென நம்பினர். கடைசியில் இந்தியாவின் நம்பிக்கைத் துரோகத்தினாலேயே அவர்கள் சயனைட் அருந்த நேரிட்டது. பிற்பகல் 5 மணிக்கு சாகப்போகிறோம் என்பது நண்பகல் 12 மணிக்கே அவர்களுக்குத் தெரியும். எமதுபிராந்தியத் தளபதிகள் எதிரியின் முன்னால் கைகட்டி நின்று மறுமொழி சொல்லக் கூடாது என்பதற்காகவே சயனைட் அருந்தினார்கள் அந்த குமரப்பா வளர்த்த போராளிகளே இன்று மட்டக்களப்பில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கிறது, யாழ்ப்பாணம் மாதிரி இங்கு ஏன் கொண்டுவர முடியாது? என சிலர் கருதலாம். அங்குள்ள புவியியல் நிலைமை வேறு இங்குள்ள நிலைமை வேறு. மட்டக்களப்பு போராளிகள் போராடத் தெரியாதவர்கள் அல்ல. உண்மையில் தமிழீழப் போராட்டத்தில் மட்டக்களப்பிலேயே கூடுதலான ஆயுதங்கள் எதிரிகளிடமிருந்து கைப் பற்றப்பட்டன. இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கின்றதென்றால் மட்டக்களப்புப் போராளிகளும் தான் அதில் பங்காளிகள். அவர்களும் அங்கு போராடியிருக்கிறார்கள். கோட்டையை மீட்டெடுக்க உதவிய ஆயுதங்களில் கணிசமானவை மட்டக்களப்பில் பெறப்பட்டவைதான்.

வெள்ளம் வராமல் ஒரு அணைக்கட்டை கட்டுகிறோம் அந்த அணைக்கட்டில் ஒரு இடத்தில் வெடிப்பு ஏற்பட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும். அதே போன்ற நிலைமைதான் மட்டக்களப்பிலும் ஏற்பட்டது.

நாளை, வியட்னாம் நிலைமை போல இங்கும் உரு வாகலாம். நாளாந்த வேலை களைக்கவனித்துக் கொண்டு இருப்பார்கள் மக்கள்: இராணுவம் வந்தவுடன் சண்டை செய்வார்கள். பின்னர் தங்கள் வேலைகளைக் கவனிப்பார்கள். அந்த நிலைக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று பேசினார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு இராணுவ அட்டூழியங்களுக்குப் பின்னரும் எதற்கும் அஞ்சாமல் இவ்வளவு பேர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களே என்று. போரா ளிகளுடன் மிகவும் அன்னியோன்னியமாக நடந்து கொண்டார்கள் மக்கள்.

அங்கிருந்து புறப்பட்டோம். மகிழடித்தீவுச் சந்தியை அடைந்தோம். ஏற்கெனவே எனக்குப் பழக்கமான பலர் அங்கே காணப்பட்டனர். அவர்களில் கணிசமானோர் எழுவான்கரைக் கிராமமான ஆரைப்பற்றை என்ற கிராமத்தைச் சேர்த்தவர்கள். சூரியன் உதிக்கும் திசையில் உள்ள கிராமங்கள் எழுவான்கரை என அழைக்கப்படும். கடலுக்கும் வாவிக்கும் இடையில் உள்ள கிராமங்கள் இவை. சூரியன் மறையும் திசையில் உள்ள கிராமங்கள் படுவான் கரை என அழைக்கப்படும். வாவிக்கு மேற்குப் பக்கமாக உள்ள கிராமங்கள் இவை. ஆரைப்பற்றை கிராமத்தில் இராணுவமுகாம் இருப்பதால் பெரும்பாலான ஆண்கள் ஆற்றைக் கடந்து படுவான் கரைக்கு வந்துள்ளனர். ஆற்றுக்கு அப்பால் மனைவி, குழந்தைகள். இவர்கள் ஆற் றங்கரையை அண்டிய மகிழடிச்தீவுச் சந்தியில், அனைவரும் ஆற்றங்கரையையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தனர். குடும்பங்கள் சிதறிய நிலையில் அவர்கள்.

நாங்களும் ஆற்றங்கரைக்குச் சென்றோம். சாதாரணமாக எப்போதும் ஐந்து தோணிகளாவது ஆற்றில் தென்படும். சிலர் மீன் பிடித்துக்கொண்டிருப்பர். எழுவான்கரைக்கும் படுவான்கரைக்குமிடையில் போக்கு வரத்து நடந்துகொண்டிருக்கும். ஆனால் இப்போதோ எவருமே காணப்படவில்லை. ஆற்றைப்பார்த்தேன். ஓடிக் கொண்டிருந்தது தண்ணீராகத் தெரியவில்லை. பிரிந்திருக்கும் குடும்பத்தினரின் கண்ணீராகவே எனக்குத் தெரிந்தது.      

(தொடரும்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.