Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

05 Sep, 2025 | 07:25 PM

image

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது வியாழக்கிழமை (4) குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் போது, வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 227 இலக்கமிடப்பட்டிருந்த என்பு கூட்டு தொகுதியே இருந்த நிலையில் காணப்படுகிறது.

செம்மணியில் இதுவரையில், கட்டம் கட்டமாக 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224332

Edited by ஏராளன்
தலையங்க எழுத்து பிழை திருத்தம்

  • ஏராளன் changed the title to செம்மணி மனித புதைகுழி : சப்பாணி நிலையில் மனித எலும்பு கூடு மீட்பு
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரோடு இருத்திச் செய்யப்பட்ட படுகொலையாக இருக்குமா? வாசிக்கவே என்னவோ செய்கிறது. அந்த மரணத்தை எதிர்கொண்டவரது நிலை. நீதியற்ற உலகில் நாமொரு இனமாக எப்படி அமைதியாகக் கடந்துபோகின்றோம்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உயிரோடு இருத்திச் செய்யப்பட்ட படுகொலையாக இருக்குமா? வாசிக்கவே என்னவோ செய்கிறது. அந்த மரணத்தை எதிர்கொண்டவரது நிலை. நீதியற்ற உலகில் நாமொரு இனமாக எப்படி அமைதியாகக் கடந்துபோகின்றோம்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

இருக்கும் முறையை பார்க்கும் போது, அப்படித்தான் நடந்து இருக்கும் போல் உள்ளது. எவ்வளவு கொடுமையை அனுபாவித்து இருப்பார். மேற்கொண்டு எழுத மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரை உலுக்கும் காட்சி - கால் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு உட்கார்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிகளின் போது குவியலாக எட்டு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அரியாலை மனிதப் புதைகுழி

புதைகுழியில் இருந்து புதிதாக 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  

உயிரை உலுக்கும் காட்சி - கால் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு | Chemmani Grave Court Case Today In Jaffna

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் நேற்று 44 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை நேற்று வரை 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  மேலும் இன்று சனிக்கிழமையுடன் அகழ்வு பணிகள் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/chemmani-grave-court-case-today-in-jaffna-1757122788

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.