Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அனுமதிப்பத்திரத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, பொது போக்குவரத்து சாரதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இப்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே சீட் பெல்ட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேருந்துகளை அலங்கரிக்க முடியும் என்றால் ஏன் சீட் பெல்டை பொருத்த முடியாது? இப்போது சில சாரதிகள் என்னையும் பொலிஸாரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளது பாடசாலை பைகளின் பெல்ட்களை அணிந்து வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. எனவே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம். எனவே,பொதுப் போக்குவரத்தில் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது கட்டாயமாகும். நாங்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவர்கள் நிச்சயமாக அந்த அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmft1qwb800jkqplplja0n8o8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் - பிமல் ரத்நாயக்க

23 Sep, 2025 | 03:52 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) காதர் மஸ்தான் எம்.பி. 27 2இன் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கு தேவையான வசதிகள்செய்துகொடுக்கப்படும். அதேபோன்று பாடசாலை வாகனங்கள், காரியாலய வாகனங்கள், பஸ் வண்டிகளை பரிசோதனை செய்யுமாறு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பரிசோதகருக்கு ஆலாேசனை வழங்க இருக்கிறோம்.

எல்லையில் இடம்பெற்ற மோசமான பஸ் விபத்தின் விசாரணை அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறோம். அதனை யாருக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். இந்த விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.

அதனால் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக மலையக பகுதிகளில் வளைவு பாதைகளில் அங்கு பாதுகாப்பு வெலி அமைப்பதற்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறோம்.

அதேபோன்று அனைத்து புகையிரத நிலையங்களிலும் விசேட தேவையுடையவர்கள் பயணிப்பதற்கு வசதி செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதுதொடர்பில் நாங்கள் எமது கொள்கையை நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறோம்.

அதன் பிரகாரம் புகையிரத நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு விசேட தேவையுடைவர்கள் பயணிக்க முடியுமான வசதிகளை மேற்கொள்வோம்.

அதேவேளை, 2020 ஆம் ஆண்டும் 5.2 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பபடடுள்ளன. அதன் மூலம் மொத்த வருமானம் 3.0 பில்லியன் ரூபாவாகும். 2021இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மொத்த வருமானம் 3.2 பில்லியன் ரூபாவாகும். அதேபோன்று 2022இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.அதன் மொத்த வருமானம் 3.3 பில்லியன் ரூபாவாகும். 2023இல் 5.7 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கப்பெற்ற மாெத்த வருமானம் 4.3 பில்லியன் ரூபா. 2024இல் 5.799 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் 4.8 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

அத்துடன் வாகன புகை வெளியேற்ற பரிசோதனைகளின்போது அரச வாகனம் தனியார் வாகனம் என பிரித்து கணக்கிடப்படுவதில்லை, பொதுவாக வாகனங்களின் எண்ணிக்கையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2024இல் 4565 இராணுவ வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/225860

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.