Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா?

adminSeptember 30, 2025

Isral-US.jpeg?fit=1170%2C658&ssl=1

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது.

ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுமானால், இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸூக்கு வெள்ளை மாளிகையின் 20-அம்ச திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன அரசுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Global Tamil News
No image preview

காசா போர் நிறுத்தம் - ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் -...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.…
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு

30 September 2025

1759207678_7176045_hirunews.jpg

காசா மீது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 

போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். 

காசா போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், இது பரபரப்பாகப் பார்க்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 4 ஆவது முறையாக நெதன்யாகு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அவர், ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. 

இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

எனினும், காசா மற்றும் மேற்கு கரை பகுதியைத் தன்வசம் எடுத்துக் கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 

காசாவை வருங்காலத்தில் யார் நிர்வகிப்பது? என்பது பற்றியும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனச் செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் கூறினார். 

இந்த சூழலில், காசா போர் முடிவுக்காக, ட்ரம்ப் மேற்கொள்ளும் முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

இதேபோன்று ட்ரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், அதற்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் வெளியிட்டார். ட்ரம்புக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. 

எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன. 

அவற்றுடன் கூட இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உலகின் இரு பெரும் முஸ்லிம் நாடுகளும் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தி உள்ளன. 

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ அவற்றை மேற்கொள்ள ட்ரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

https://hirunews.lk/tm/422883/muslim-countries-support-trumps-gaza-peace-plan

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் அமைதி திரும்புகிறதா? - அமெரிக்காவின் புதிய திட்டத்திற்கு ஹமாஸின் பதில் என்ன?

டிரம்பும் நெதன்யாகுவும்  அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தை வெளியிட்டனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த வாரம் வெள்ளை மாளிகையில் டிரம்பும் நெதன்யாகுவும் சந்தித்து அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தை வெளியிட்டனர்.

கட்டுரை தகவல்

  • ஜான் சுட்வொர்த்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு பதிலளித்த ஹமாஸ், "டிரம்பின் திட்டத்தில் உள்ள கைதிகள் பரிமாற்ற விதிகளின்படி, பரிமாற்றத்துக்கு தேவையான நிலைகள் பூர்த்தியாக வேண்டும். அப்படி நடந்தால், உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் உள்ளடக்கிய அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிப்போம்" எனத் தெரிவித்தது.

டிரம்ப் இந்த வாரம் வெள்ளை மாளிகையில் அறிவித்த அந்த திட்டம், மோதலை உடனடியாக நிறுத்தி, ஹமாஸிடம் உயிருடன் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் 72 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும் என்கிறது. இதற்கு பதிலாக, நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர்.

தற்போது பாலத்தீன பிரதேசத்தில் ஹமாஸிடம் 48 இஸ்ரேலியர்கள் இன்னும் கைதிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்தில் ஹமாஸ் ஏற்றுக்கொண்ட மற்றொரு முக்கிய அம்சம், காஸா பகுதியின் நிர்வாகத்தை சார்பில்லாத, திறன் கொண்ட பாலத்தீன வல்லுநர்களிடம் ஒப்படைப்பதாகும்.

அமெரிக்கா முன்வைத்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.

குறிப்பாக, ஹமாஸ் தனது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற நிபந்தனை குறித்துத் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இஸ்ரேல் அரசு, ஹமாஸின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து, அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது. இது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை உண்மையான நல்லெண்ணத்துடன் ஏற்கும் முயற்சியா, அல்லது நேரம் கடத்தி, நீண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் அரசியல் உத்தியா என்பதை அது தெரிந்துகொள்ள வேண்டும்.

ஞாயிறு மாலைக்குள் இந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் 'பெரும் அழிவு' உண்டாகும் என்று டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களில் ஹமாஸின் அறிக்கை வந்ததால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமைச்சரவையில் சிலர் இதை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

காஸா மீது நடைபெறும் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

"ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தபோது, அவர்கள் நீடித்த அமைதிக்குத் தயாராக உள்ளனர் என்று நம்புகிறேன்," என ஹமாஸ் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே டிரம்ப் கூறினார்.

மேலும், "பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்றுவதற்காக, இஸ்ரேல் உடனடியாக காஸா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும். தற்போது அதைச் செய்வது மிகவும் ஆபத்தானது" என்றும் அவர் சொன்னார்.

காஸாவின் எதிர்காலம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் பங்கு வகிக்கலாம் என அவரது அறிக்கையின் கடைசி பகுதி கூறுவது, இஸ்ரேலியர்களுக்கு பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஹமாஸின் அறிக்கை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

வெள்ளிக்கிழமை வெளியான வீடியோ செய்தியில், டிரம்ப் இதை ஒரு "முக்கிய நாள்" என்று கூறி, இந்த திட்டத்தை உருவாக்க உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இருப்பினும், பிராந்தியத்தில் அமைதி உருவாக, இன்னும் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு நிறைவுற்ற ஒப்பந்தம் இல்லை என்பதையும் டிரம்ப் குறிப்பிட்டார்.

அதேபோல் "இது எங்கு சென்று எப்படி முடியும் என்பதைப் பார்ப்போம். இறுதி முடிவை தெளிவாகவும் உறுதியாகவும் எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c39ren3x342o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.