Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-326.jpg?resize=750%2C375&ssl

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். 

இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது.

இலங்கையில் மூன்று சந்தேக நபர்கள் மீதும் தற்போது பல குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

இதனிடையே, வல்வெட்டித்துறையில் அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1451489

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

இதனிடையே, வல்வெட்டித்துறையில் அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டது. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர், தலைமை இல்லை. இங்கே மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் 2009 அல்லது அதற்கு முற்பட்டதா? அல்லது குடு அடிக்கும்/விற்கும் கோஷ்டி விடுதலை புலிகள் அமைப்பு என கூறப்படுகின்றதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயம் said:

2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டது. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர், தலைமை இல்லை. இங்கே மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் 2009 அல்லது அதற்கு முற்பட்டதா? அல்லது குடு அடிக்கும்/விற்கும் கோஷ்டி விடுதலை புலிகள் அமைப்பு என கூறப்படுகின்றதா?

இந்தியாவில்... கைது செய்யப் படும் இலங்கைத் தமிழர் பலருக்கும் விடுதலைப் புலி முத்திரையை குத்துவது, இந்தியாவை... பிடித்த ஒரு வியாதி. அப்படி குத்தும் போதுதான்... விடுதலைப்புலிகளால் இன்னும் இந்தியாவிற்கு ஆபத்து என்று சர்வதேசத்திற்கு காட்டவும், விடுதலைப் புலிகளை மீதான தடையை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கவும் அவர்களுக்கு உதவும்.

இப்படி பலர்... புலி முத்திரை குத்தப் பட்டு தமது வாழ்க்கையை இழந்த ஈழத்தமிழர் ஏராளம்.

காந்தி வேசம் போட்டுக் கொண்டு... உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நேர்மை அற்ற சகுனி நாடுதான் இந்தியா.

ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டதாக கூறப் பட்டு... 30 வருடங்களுக்கு மேலாக இந்திய சிறையில் இருந்து மரணித்த சாந்தன் கூட... ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் படாத ஒருவர் தான். அந்நேரம் வெளிநாடு போக இந்தியாவிற்கு போனவரை ராஜீவ் கொலையில் முடிச்சுப் போட்டு சிறையில் அடைத்த நயவஞ்சகர்கள். சாந்தன் என்ற பெயரில் உள்ள வேறு ஒருவரை கைது செய்ய வேண்டிய இடத்தில், அப்பாவியான இவரை கைது செய்து... கேடு கெட்ட வேலை செய்த நாடு தான் இந்தியா. இந்த நாடு... எப்ப சுக்கு நூறாக உடையுதோ... அன்றுதான் ஈழத்தமிழனுக்கு நிம்மதி.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.