Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 Nov, 2025 | 04:58 PM

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்குட்பட்டவர்கள் 20 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர். மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

மேலும், 2025ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி பாதிப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான விகிதம் 7.6க்கு 1 என்ற குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது ஆண்களே பெரும்பாலான தொற்று பாதிப்புகளுக்கு தொடர்ந்து காரணமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

இந்த ஆண்டு இதுவரை, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 23 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில், 47 பேர் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முதல், இலங்கையில் மொத்தம் 6759 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 5366 ஆண்கள் மற்றும் 1573 பெண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரித்து வரும் போக்குக்கு மத்தியில், தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், ஆணுறை பயன்பாடு, வெளிப்பாட்டிற்கு முந்தைய தடுப்பு மற்றும் வெளிப்பாட்டிற்குப் பிந்தைய தடுப்பு உட்பட எச்.ஐ.வி/எஸ்.டி.ஐ தடுப்பு கல்வியை பள்ளி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவு இன்னும் ஆய்வில் இருப்பதாகவும் விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல் | Virakesari.lk

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இளம்பருவத்தினரின் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு; 2024 ஆண்டு 724 ஆண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

Published By: Vishnu

28 Nov, 2025 | 03:06 AM

image

( செ.சுபதர்ஷனி)

இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான  தரவுகளுக்கமைய இவ்வருடம்  இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 824 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 724 பேர் ஆண்களாவர். அந்தவகையில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தேசிய பாலியல்  பால்வினை நோய்கள்  /எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணதிலக்க தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (26) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் கூட்டுத் திட்டம் வெளியிட்டுள்ள எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி உலகளாவிய தரவுகளுக்கமைய  2024 ஆண்டு  இலங்கையில் 5,700  அண்ணளவானோர் எச்.ஐ.வியுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாளாந்தம் பதிவாகும் எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், கடந்த ஆண்டு மாத்திரம் 824 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் 1987 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றாளர் அடையாளம்  காணப்பட்டதுடன், இதுவரை 7,168 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் சுமார் 724 பேர் ஆண்களாவர். 2010 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான தரவுகளை நோக்கும்போது 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி க்கு ஆளாகியுள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்பாலின ஈர்பாளர்களிடையே (ஓரின சேர்க்கையாளர்கள்)  உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதால் பலர் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் 50 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாக  பால்வினை நோய்கள்   மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்  தரவுகள் தெரிவிக்கின்றன.

சிரிஞ்சியின் ஊடாக  போதைப்பொருள் பாவனையும் சமூகத்தின் அதிகரித்துள்ளது. ஒருவர் பயன்படுத்திய சிரிஞ்சியை ஏனையோர் உபயோகிப்பதால் எச்.ஐ.வி ஏற்பட வாய்ப்புள்ளது.  2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் உலகளாவிய ரீதியில் கண்டறியப்பட்ட புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் 2024 ஆம் ஆண்டு  இலங்கையில்   அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோய் பற்றிய புரிந்துணர்வு இல்லாமை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

2010 ஆம் ஆண்டு 20 -24  வயதுக்கிடைப்பட்ட 9 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் 2024 ஆம் ஆண்டு அவ்வயதுக்குட்பட்ட 91 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படுவது பாரதூரமான விடயமாகும். ஆகையால் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்குவைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பால்வினைநோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

https://www.virakesari.lk/article/231738

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.