Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமாலை வரவு -செலவுத் திட்டம் இது - ஐ.தே.க

Featured Replies

மஹிந்தவின் வரவு - செலவுத் திட்டத்தை முகமாலை வரவு செலவுத் திட்டம் என்று வர்ணிக்கிறார் ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா.

வரவு செலவத் திட்ட உரையை மஹிந்த நாடாளுமன்றத்தில்; ஆற்றிக் கொண்டிருக்கும் அதே வேளை முகமாலையில் இராணுவத்தினா படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

"வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய சூட்டோடு முகமாலையையும் கைப்பற்றி விட்டோம் என்று போஸ்டர்களையும் அடித்து தயாராக வைத்திருந்தினர்.

ஆனால் விடயம் தலைகீழாகப் போய்விட்டது. 150 படையினர் காயம் அடைந்துள்ளனர். பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

'உங்களுடைய அரசியல் சுயநலதத்திற்காக படையிரை வைத்து சூதாட்டம் நடத்த வேண்டாம்.' இப்படி எச்சரிக்கை வெளியிட்டார் அவர்.

வரவு - செலவுத் திட்ட உரை மீதான இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்கா இப்படிக் கூறினார்.

இந்த அரசு தேசியவாதத்தையும் யுத்தவாதத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு வரவு செலவு திட்டத்தைத் தயாரித்துள்ளது. ஆனால் இரண்டிலுமே இந்த அரச வெற்றி காணப் போவதில்லை. என்றும் குறிப்பட்டார் அவர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :-

நாட்டு மக்களை மறந்து தயாரிக்கப்டபட்ட ஒரு வரவு செலவு திட்டம் இது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இன்று இரண்டு வேளை கூட நிம்மதியாகச் சாப்பிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏழு வீதம் அதிகரித்துள்ளது என்று மஹிந்த கூறுகிறார்.

'அபிவிருத்தி உண்மையானால் ஏன் பொருட்களின் விலை 100 முதல் 180 வீதம் வரை அதிகரித்தது.'வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி உருவானது?'

அபிவிருத்தி என்று வாயளவில் கூறிக் கொண்டு நாட்டையும் நாட்டு மக்களையும் அரசு ஏமாற்றுகின்றது.

இன்று நாட்டின் பணவீக்கமும் வாழ்க்கைச் செலவும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. நாட்டில் வறுமை தலை விரிதாடுகின்றது.

'எச்.எஸ்.பி.ஸி வங்கியிடம் இன்று ஐம்பது கோடி அமெரிக்க டொலர் கூடிய வட்டிக்கு கடனாகப் பெறப்பட்டுள்ளது. இநத்ப் பணம் எதற்காக செலவிடப்பட்டடது'.

மஹிந்தவின் கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் இங்கு கூறப்பட்ட விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சமுர்த்திக் கொடுப்பனவுகளை ஐம்பது வீததத்தில் அதிகரிப்பபோம் என்றார். 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவார் எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.

இன்று பட்டதாரிகள் வீதிகளில் போராட்டம் நடத்துகின்றனர். சமுர்த்தி பெறுவோர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மஹிந்த மக்களை முன்பு ஏமாற்றியவை போல இம்முறையும் ஏமாற்றியுள்ளார்.

நாட்டில் நடைபெறும சம்பவங்களையும் நிகழ்வுகளையும் அரசு மூடி மறைக்கின்றது.

ஊடகங்களை அடக்கி, ஒடுக்கி உண்மை விமர்சனங்கைள வெளிவர விடாமல் தடுப்பதே அரசின் நோக்கம். அதனால் தான் ஊடகங்கள் மீதான அராஜகத்தை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஜே.வி. வியினரும் ஜாதிக ஹெல உறுமையும் மக்களுக்காக செயலாற்றுகின்றன என பம்மாத்து காட்டுகின்றனர்.

அவர்கள் உண்மையாகவே நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் பற்றுள்ளவர்களாக இருந்தால் இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார் திஸ்ஸ அத்தநாயக்கா.

நன்றி : சுடர் ஒளி

பஙக்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பது தான் அரசின் முக்கிய பணி என்று 'பட்ஜெட்' உரையில் சனாதிபதி அறிவித்ததை யுத்த பேரிகை முழக்கமாகவே தென்பகுதி மக்கள் கருதுகிறார்கள். என்று தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தத்திற்கு ஆயுதங்களைத் தருவித்தால் போதுமா? போராடுவதற்கு படைவீரர்களும் தேவை இல்லயா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

புதிதாகப் போர் வீரர்களைத் தேடிக் கொள்ள அரசு தலைகீழாக நின்றாலும் திட்டம் வெற்றி பெறவில்லை. எனவே, இராணுவத்தில் பணியாற்றிவிட்டு மேலிடத்திற்கு அறிவிக்காமல் தப்பியோடியத் தலைமறைவாகி உள்ளவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள அரசு முன் வந்திருக்கிறது.

அவர்களை திரும்பி வருவதற்கான எல்லையாக எதிர்வரும் 12ம் திகதி முதல் 25ம் திகதி வரை மன்னிப்புக் காலமாக அரசு அறிவித்திருக்கிறது.

2004ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் சேவையிலிருந்து ஓடியவர்களுக்கு இந்த மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களை; எவ்வித தண்டனையும் இல்லாமல் மீண்டும் அவர்களின் பதவிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயிற்சிக் காலத்தில் வெளியேறியவர்களும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இநதப் படைதிரட்டல் எவ்வளவு தூரத்திற்கு வெற்றியைத் தரும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சுடர் ஒளி

காவி கட்டிக் கொண்டு மக்கள் மனதில் போர் வெறி ஏற்றிக் கொண்டு சொகுசு வாகனங்களில் ஓடித் திரியும் பிக்குகளை பிடித்து போர்க் களங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

'எச்.எஸ்.பி.ஸி வங்கியிடம் இன்று ஐம்பது கோடி அமெரிக்க டொலர் கூடிய வட்டிக்கு கடனாகப் பெறப்பட்டுள்ளது. இநத்ப் பணம் எதற்காக செலவிடப்பட்டடது'.

திஸ்ச அத்தநாயக்கா மற்றத்தரம் உள்ளே போக தயார் பண்ணுகிறார். :wub::D:blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.