Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது

Published By: Vishnu

02 Jan, 2026 | 07:24 PM

image

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்களுக்கு மலர்தூவி, வளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

WhatsApp_Image_2026-01-02_at_18.39.40.jp

திருகோணமலை பிரதான கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம். 02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர்.

WhatsApp_Image_2026-01-02_at_18.39.41.jp

கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார். இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

WhatsApp_Image_2026-01-02_at_18.39.411.j

இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கினர். மாணவர்கள் இச்சம்பவம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்து முழங்காலில் நிக்க வைத்து சுட்டுக் கொன்றதாக அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் செய்தி செளியிட்டிருந்த சுகிர்தராஜன் என்ற ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/235073

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச முக்கியம் பெற்ற போதும்.. இந்தப் படுகொலைகளுக்கு இன்று வரை தீர்வில்லை. இதில உக்ரைனில ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த புத்த பிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்: அந்த பிக்குவை நான் நேரில் சந்தித்தவன்

திருகோணமலை ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக பொதுவெளியில் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்த புத்த பிக்கு ஹந்துங்கமுவே நந்தரதன பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் உருவான தருணத்தில் நானும் அங்கு இருந்தேன். சமாதானம், நல்லிணக்கம், மொழி மத எல்லைகளைத் தாண்டிய மனித உறவை உருவாக்க வேண்டிய பணிகளில் அவர் ஈடுபட்டிருந்ததை நான் நேரடியாகக் கண்ட அனுபவம் உண்டு.

அவர் சிங்களமும் தமிழும் பேசக்கூடியவர். மாணவர் படுகொலைக்கு எதிரான நினைவேந்தல் நிகழ்வுகளிலும், பொங்குத் தமிழ் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தினார்.

பின்னர் மிக விரைவாகவே, சிங்கள மொழி பேசும் துப்பாக்கி தாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உண்மையை வெளியில் கொண்டு வர துணிந்தவர்களை மௌனப்படுத்தும் அரசியல் வன்முறையின் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை எனக்குத் தென்பட்டது.

அவருடைய மரணம், திருகோணமலை மாணவர் படுகொலையின் உண்மையை மறைக்க அதிகாரத்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்தும் சம்பவமாக இருக்கின்றது . இன்றுவரை இந்தக் கொலைக்கான உண்மையான பொறுப்பாளர்கள் யாரும் நீதிமுன் நிறுத்தப்படாதது இன்னும் வேதனை அளிக்கிறது.

Trincomalee Five Student Massacre Buddhist Monk Who Condemned the Killings Was Shot Dead: I Am Someone Who Met Him in Person

The Buddhist monk Handungamuwe Nandarathana, who publicly and openly condemned the killing of the five Tamil students in Trincomalee, was later shot dead.

I have met that monk in person. I was also present at the moment when these photographs were taken during the memorial event held for the murdered students. I personally witnessed his commitment to peace, reconciliation, and building human relationships that transcended linguistic and religious divisions.

He was able to speak both Sinhala and Tamil. He participated in memorial events held in protest of the student killings and attended Pongu Thamil gatherings, consistently emphasising the need for social unity.

Soon afterwards, he was shot dead by Sinhala-speaking gunmen. To me, this killing clearly appeared as part of the continuum of political violence aimed at silencing those who dared to speak the truth.

His death stands as powerful evidence of how far the authorities were willing to go to conceal the truth behind the Trincomalee student massacre. Even today, the fact that no genuine perpetrators have been brought before justice continues to cause deep pain.

https://www.facebook.com/share/p/1CEX5wNyoe/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.