Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்

யோ.செ.யோகி பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப.; ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவடைந்த செய்தியானது உலகெங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அறிந்தோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வன் உலகெங்கும் புலிகளோடு தொடர் புடையோருக்குத் தெரிந்த முகம். ஒரு வகையில் தமிழீழம் வேண்டி நிற்கின்ற நியாயபூர்வமான சமாதானத்தின் முகம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அவர் பணியாற்றியிருந்தார். யாழ்ப்பாண இடப்பெயர்வு, சத்யெய, செயசிக்குறு போன்ற சிங்களப் படையின் படையெடுப்புக்கள் போன்ற மிக இக்கட்டான காலத்தில் பல இன்னல்களுக்கிடையே அவர் ஆற்றிய பங்கு அளப்பெரியது. தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று அவரது ஊனை உருக்கி அவர் பணியாற்றினார்.

தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழப் பொருண்மியம், தமிழீழ மருத்துவ சேவை, தமிழீழ ஊடகங்கள், தமிழீழ விளையாட்டுத்துறை என அவர் பல துறைகளைக் கவனித்த படி களமுனைகளிலும் செயலாற்றினார்.

உலக அரசியல் என்பது சிக்கலானது. அது ஒரு கூரான கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது. எமது போராட்டத்திற்கான நியாயங்களைக்கண்டு கொள்ளாது எம்மில் பிழைகாண வழிதேடும் உலகத்தோடு பேசி வெற்றி காண்பது என்பது ஒரு வகையில் கல்லில் நார் உரிக்கும் பணிதான்.

தமிழீழத் தேசத்தின் குரல் பாலா அண்ணாவோடு இணைந்தும் அவரின் மறைவின் பின்பு தனித்தும் அவர் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார். தமிழீழ மக்களின் உரிமையைவிட்டுக்கொடாது அதேவேளை அமைதித்தீர்வில் ஆர்வங் காட்டியோரோடு பகை முரண் ஏற்படாத வகையில் அவருக்கே உரிய இயல்பான அழகான புன்னகையுடன், பணிவுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தமிழீழப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்திற்கு சிறிது சிறிதாகப் பலம் சேர்த்தது.

இன்று உலகு எமது நியாயபூர்வமான போராட்டம் குறித்து நன்கறிந்துள்ளமைக்கும் சிங்கள தேசத்தின் பேரினவாதத்தைப் புரிந்து கொண்டுள்ளமைக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது தேசத்தின் குரலோடு இணைந்து அவர் செயற்பட்ட முறையும் வைத்த கருத்துக்களுமே பெருமளவிற்கு காரணமாய் அமைந்தது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது.

தமிழீழ மக்கள் மனதில், புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மனதில், தமிழ்நாட்டு மக்கள் மனதில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோர் மனதில் அவர் தமிழீழம் வேண்டி நிற்கும் நியாயபூர்வமான அமைதியின் முகமாகவே காட்சி தந்தார்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் போராட்ட வாழ்வு மிக நீண்டது. ஏறத்தாழ இருப்பத்து மூன்று ஆண்டுகள் அவர் நேடியாகத் தமிழீழப் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளார். தமிழ்ச்செல்வன் 29.07.1967 இல் மட்டுவிலில் பரமு, விசாலாட்சி ஆகியோருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். இவர் கல்வியை சாந்தநாயகி வித்தியாலயத்திலும் மட்டுவில் மகாவித்தியாலயத்திலும் கற்றார். வகுப்பில் தொடர்ச்சியாக முதல் மாணவனாக வந்தார். இவரின் நல்லியல்பு காரணமாக வகுப்பில் தொடர்ச்சியாக மாணவ முதல்வனாகவும் இருந்து வந்தார். க.பொ.த. சாதாரண தேர்வில் சித்தியடைந்து உயர்தர வகுப்பில் கற்கும் போதே விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 இல் இணைந்தார்.

தமிழ்ச்செல்வனின் அண்ணர் மூர்த்தியும் அவர் குடும்பத்தினரும் இடதுசாரி அமைப்பின் சார்பில் பல போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். மூர்த்தி அண்ணர் தமது அரசியற்பணிக்கான எழுத்துக்களை தமிழ்ச்செல்வனைக் கொண்டே படியெடுத்து வந்தார். அவரது எழுத்து அழகாக இருக்கும். தமிழ்ச்செல்வனுக்குத் தெரியாமலேயே அவரது வீடு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வந்து செல்லும் இடமாக இருந்தது. மூர்த்தி அண்ணரோடு அவர்களுக்குத் தொடர்பிருந்தது. அங்கு வந்து போகும் விடுதலைப் புலிகள் உறுப்பினரும் தமிழ்ச்செல்வனின் உறவினருமான மேயர் மாறன் தமிழ்ச்செல்வனை விடுதலைப் புலிகளோடு இணைத்து இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார்.

அவர் 1984-இல் விடுதலைப் புலிகளின் நான்காவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார். அப்போது, அவரது இயக்கப் பெயர் தினேசு ஆகும். பின்னாளில் தூய தமிழில் பெயரை மாற்றியபோது அவர் அவரது இயற்பெயரான தமிழ்ச்செல்வன் என்ற பெயரா லேயே அறியப்பட்டார். தலைவரின் மெய்க்காவலர் அணியில் முதலில் கடமையாற்றிய அவர் 1987-இல் தென்மராட்சிக் கோட்டத் தளபதியானார். 1991 இல் யாழ். மாவாட்டத் தளபதியாகப் பணிபுரிந்த அவர் 1993 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளரானார்.

1987 இல் இந்தியப் படை போர் தொடுத்தபோது தென்மராட்சியுள் நின்று அவரது அணியினரை ஒருங்கிணைத்துப் பல தாக்குதல்களை வழி நடத்தி அதன் இருப்பைக் கேள்விக்குறியாக்கினார். 'இக்காலப் பகுதியில் சாரமணிந்து, காலணிகள் அற்று தமிழ்ச்செல்வன் நாவற்குழியிலிருந்து, சுண்டிக்குளம் வரை நடந்து செல்லாத இடமில்லை. மிருசுவிலில் முப்பது படையினரைக் கொண்டிருந்த இந்தியப்படையின் சிறு பாசறை மீதான தாக்குதலில் முதலில் இரு கைக்குண்டுகளுடன் குதித்தவர் அவர்தான்" என திரு.பாப்பா அவரது துணிவைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் படை தென்மராட்சியினைக் கைப்பற்றிய பின்பு அங்கு இந்தியப்படையுடன் செயற்பட்ட துரோகக்கும்பலை மட்டுவில் நுணாவில் வீதியில் வைத்து லெப். கேணல் குணா, பாப்பா ஆகியோர் தாக்கி ஒரு பு3 இனையும் 2 ளுடுசு இனையும் முதலில் கைப்பற்றினர். இதனை அடுத்து தமிழ்ச்செல்வன் தானே நேரில் வேவு பார்த்து நாகர்கோயில் எடுதுமட்டுவாளுக்கான கண்டல் வீதியில் இந்தியப் படையைத் தாக்கி 2 ளுடுசுஇ 2 ளுஆபுஇ ஒரு தொலைத்தொடர்புக் கருவி ஆகியவற்றைக் கைப்பற்றினார்.

ஒருமுறை உசன் பகுதியில் நாற்பத்தைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகளால் தமிழ்ச்செல்வன், ரேகா, ரவி, லெப். கேணல் அம்மா உட்பட ஆறு பேர் சுற்றிவளைக்கப்பட்டனர். தமிழ்ச்செல்வன் உடனடியாக அங்கு மற்றையோருடன் நிலையெடுத்துக் கடுமையாகத் துரோகக் கும்பலுடன் பொருதி அவர்களில் பலரைக் கொன்று விரட்டி அடித்தார்.

இன்னுமோர் முறை லெப். பாபு, கப்டன் நடேசு ஆகியோர் துரோகக் கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.