Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்…

1992 கார்த்திகை 23 ஆம் நாள் ஒரு பெரு வீரன் எம்மை விட்டு விதையாகிய நாள். லியோ என்றும் மலரவன் என்றும் நாமம் கொண்ட வேங்கை அந்த மகாவீரன். பசீலன் -2000 என்ற விடுதலைப்புலிகளினால் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி அணி ஒன்றின் அணித்தலைவன். யாழ்கோட்டை, மணலாறு, முல்லைத்தீவு, கொண்டச்சி, மாங்குளம் சிலாவத்துறை காரைநகர் என்று பல முகாம்களின் வெற்றிக்கு வலுச்சேர்த்த அந்த அணியின் திறன் வாய்ந்த அணித்தலைவன். யாழ் மாவட்டத்தின் மாணவரமைப்புப் பொறுப்பாளர். அப்படி பலவற்றை சொற்களால் அடுக்கி அவன் வீர வரலாற்றை மேலெழுப்பிக் கொண்டே செல்லலாம்.

மணலாற்றுக் காட்டில் இருந்து 1991 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி ஆரம்பித்த மாங்குளம் முகாம் மீதான் முற்றுகை மற்றும் கைப்பற்றல்  நடவடிக்கைக்காக தனது பீரங்கிகளுடனும் தனது அணியோடும் பயணித்த ஒரு பெரும் பயணத்தை இலக்கியப்படைப்பாக்கி அதற்குள் மக்களின் நடைமுறை வாழ்வியலை, போராளிகளின் வீரதீரங்களை, அவர்கள் படும் வேதனைகளை, பிரிவுகளை, வெற்றிகளை “போருலா” என்று பெயரெடுத்து போர்ப்புதினமாக எமக்குத் தந்த இலக்கிய வீரன்.

பணியில் சிரத்தையும் தேசம் மீது கடுமையான பாசமும், தமிழீழ மண்மீட்பில் நம்பிக்கையும், அண்ணன் மீது அளவில்லாத நேசமும் கொண்டவர். தனது நண்பர்கள் ஒவ்வொருவராய் வீழ்வது கண்டு துடித்துப்போகும் ஒவ்வொரு தடவைகளிலும் அவரது  கரங்களின் ஒன்று இறுகப்பற்றியது துப்பாக்கிப் பிடிகளை. மறுகரம் இறுகப்பற்றிக்கொண்டது எழுத்து எனும் பெரும் ஆயுதத்தை உருவாக்கும் பேனாவை. அதனால் எம் மனங்களில் என்றென்றும் நேசத்துக்குரிய மகாவீரனாகிவிட்டார்.

1992 ஆம் வருடம் பலாலி இராணுவமுகாமை சுற்றி இருந்த 150  காவலரண்களை தகர்க்கும் சண்டையை திட்டமிட்ட போது, களமுனையின் ஒரு பகுதி அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.  அப்போது பசீலன் அணியில் இருந்து அரசியல்துறைக்கு பிரிவு மாற்றப்பட்டிருந்தார் மலரவன்.

அந்த நிலவொளி கூட இல்லாத வெற்று இருட்டுக்குள் சண்டை தொடங்கியது. அதற்குள் இருந்துகொண்டு வெற்றிகளை சுவைத்துக்கொண்டிருந்த எமது அணிகள். பகைவன் தமது நிலைகளை விட்டு ஓடத்தொடங்கினான். பகையணிகளிடம் இருந்து கைப்பற்றும் ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் உடனடியாக பின்னால் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் போராளிகள்.  அதற்காக விநியோக அணி வெகு சிரமத்தின் மத்தியிலும் தமது உயிரைத் துச்சமென மதித்து ஓடிக்கொண்டிருந்தன. சண்டையணிகளுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் இந்த அணியை வழிநடாத்துபவனாக மலரவன் ஓடித்திருந்தார்.

பிரிகேடியர் தமிழ்செல்வனின் கட்டளையை ஏற்று நடப்பதாலோ என்னவோ களமுனையின் முன்னிலைக்கு செல்வதற்கு அவனால் முடியவில்லை. சண்டையணிகளோடு பயணிக்க அனுமதி அவரால் மறுக்கப்பட்டிருந்தது. தன்னுடனே நிற்குமாறு தமிழ்செல்வன் பணித்திருந்தார். பணிக்கப்பட்ட கட்டளையை மீற முடியாது வரும் ஆயுத தளபாடங்களை பின்னணிக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார் மலரவன்.

அதே நேரம் களமுனையின் பின்னணியில், களமருத்துவர்களை ஒருங்கிணைத்தபடி ஒரு வேங்கை பிரதான மருத்துவநிலையில் இருந்தார். வைத்திய கலாநிதியான சுஜா என்ற அந்த புலிவீரன் விழுப்புண்ணடைந்து வரும் வேங்கைகளின் குருதி மண்ணுக்கு உரமாகிவிடாமலும் அவர்களின் உயிர்கள் பிரிந்து விதையாகிவிடாமலும் இருக்க தன் மருத்துவத்திறனை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.  விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளரும் போராளி மருத்துவரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பழைய மருத்துவ மாணவனும் மருத்துவக் கலாநிதியுமாகிய அந்த சகோதரனும் மலரவனும் ஒரு  தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள்.

இரு சகோதரர்களும் ஒரே களமுனையில் வேறு வேறு பணியில் சோர்வின்றி தமது பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். அன்றும் அப்படித்தான். இருவரும் தம்பணி செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எதிரியின் பல எறிகணைகள் பிரிகேடியர் தமிழ்செல்வனின் அணியிருந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தன. மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். பலர் விழுப்புண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னணி மருத்துவநிலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அதில் மலரவனும் படுகாயமடைந்து பின்நிலைக்கு அனுப்பப்படுகிறார்.

ஆனால்,

மருத்துவ நிலைக்கு கொண்டு செல்ல முன்பே மலரவனின் உயிர் பிரிந்து விதையாகிவிட்டது. வோக்கிகள் மலரவனின் பெயர் தாங்கி சோகச் செய்தியை போராளிகளிடையே கொண்டுபோய் சேர்க்கிறது. பலநூறு போராளிகளின் உயிரைக் காத்த அந்த மருத்துவ சகோதரனுக்கும் அச்செய்தி வந்து சேர்கிறது. அவர் எத்தனையோ உயிரற்ற போராளிகளின் உடலங்களைப் பார்த்திருக்கிறார். சிதறிப்போன மக்களின் வெறும் தசைத்துண்டங்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் எல்லாம் அவர் திடமாக உறுதி பெற்றிருக்கிறார். அடுத்த கணமே கலங்கிய விழிகளைத் துடைத்துவிட்டு அடுத்த போராளியைக் காப்பாற்றிவிட துடித்திருக்கிறார். அப்படியானவருக்கு  தன் தம்பியும் உயிரற்ற உடலாக வந்திருப்பது பெரும் அதிர்ச்சி தான். ஒருவேளை சாவு மலரவனை அணைத்திருக்காவிட்டால் சுஜா அண்ணன் தன் தம்பியை நிச்சயமாக காப்பாற்றி இருப்பார். பல ஆயிரம் போராளிகளின் உயிர்களைக் காத்த அந்த கரங்கள் மலரவன் உயிரையும் நிச்சயம் காப்பாற்றி இருக்கும். இருந்தாலும் அதற்கு முன்பே மலரவன் விதையாக வீழ்ந்து விட்டார். மருத்துவ சகோதரனின் அடிமனதில் உள்ள பல ஆயிரம் வேதனைகளோடு தம்பியின் பிரிவு வேதனையும் இணைந்து கொள்கிறது.

அவரது கரங்கள் மருத்துவக் கருவியை இறுகப்பற்றிக்கொள்கின்றன. கால்கள் இன்னொரு போராளியின் உயிரைக்காப்பாற்ற வேகம் கொள்கின்றன. விழிகள் மட்டும் தம்பிக்காக பலமணி நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன. ஏனெனில் அவரும் எம்மைப்போன்ற சாதாரண மனிதப்பிறவியாக புவியில் உதித்துத் தானே விடுதலை எனும் பெருவிருட்சத்தை தாங்கும் விழுதுகளில் ஒரு மூத்த மருத்துவக்கலாநிதியாக உருவாகியிருந்தார்.

அவருக்கும் உள்ளே வலித்திருக்கும். விழிகள் உதிரும் நீரை அவர் யாரும் அறியாவண்ணம் எத்தனை தடவை துடைத்திருப்பார். அப்படியே இன்றும் அவர் துடித்துப்போனார். ஆனால்

“கடமை அவரை அழைத்துவிட நினைவுகளில் அவரின் தம்பி அமர்ந்து கிடக்க. விடுதலைப்போராட்டத்தின் இறுதி நாள்வரை ஓயாது ஓங்கி இருந்த அவரின் கரங்கள் மீண்டும் கரத்தில் தெலஸ்கோப்பினை இறுகப்பற்றிக்கொண்டன.

நினைவோடு

இ.இ.கவிமகன்

நாள்: 04.02.2026

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.