Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வஞ்சகத்தால் வீழ்ந்தாய்!- பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சகத்தால் வீழ்ந்தாய்!- பழ. நெடுமாறன்

tamilselvan1yp9.jpg

இளமை அரும்பும் பருவத்தில் அதாவது தனது 17ஆம் வயதில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தம்பி தமிழ்ச்செல்வன் இளமை முதிர்ச்சியடையும் பருவத்தில் மறைந்துபோனார்.

tsadelebalaprabaar8.jpg

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வளர்க்கப்பட்டு உருப்பெற்றவர் தமிழ்ச்செல்வன் ஆவார். தனது தலைவரின் மனஓட்டம், எதிர்பார்ப்பு ஆகிய எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து அவர் எள் என்று சொல்லுவதற்கு முன்பே எண்ணெய்யாகக் கொண்டுவந்து கொட்டியவர் தமிழ்ச்செல்வன்.

சென்னையில் பிரபாகரன் அவர்கள் தங்கி இருந்தபோது அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த தமிழ்ச்செல்வனைச் சந்தித்து இருக்கிறேன். தமிழீழத்துக்குச் சென்ற ஒவ்வொருமுறையும் அவரைச் சந்தித்து அளவளாவி இருக்கிறேன். அவரின் சொல்லும் செயலும் தனது தலைவன் வழியிலேயே இயங்கியது. அவருக்கென்று தனியான வழி எதுவும் எப்போதும் இருந்ததில்லை.

தான் சந்திக்க நேரும் பிறரிடமிருந்து பலவற்றை அறிந்துகொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் அவருக்கு அளவு கடந்த ஆர்வம் இருந்தது. இந்த நற்பண்பு அவரை மிகச்சிறந்தவராகப் பண்படுத்தி செதுக்கியது.

பிரபாகரனின் படைத்தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்து பல களங்களில் முன்நின்று போராடி விழுப்புண்களைத் தாங்கி தியாகத் தழும்புகளை ஏற்று பகைவரை பலமுனைகளில் கதிகலங்க அடித்தவர் தமிழ்ச்செல்வன்.

உலக வரலாற்றில் போர்க்களத்தில் வீரத்தை நிலைநிறுத்தி வெற்றி வாகைசூடும் சிறந்த தளபதியாக பலபேர் திகழ்ந்திருக் கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் ராசதந்திரக் கலையை அறியாதவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ச்செல்வன் போர்க்களத்தில் எந்த அளவுக்கு திறமை வாய்ந்த தளபதியாக விளங்கினாரோ அந்த அளவுக்கு இராசதந்திரக் களத்திலும் சிறந்த அரசியல் வாணராக திகழ்ந்தார்.

"தேசத்தின் குரல்' பாலசிங்கம் அவர்களுடன் இணைந்து நின்று சிங்கள அரசுடன் நடத்திய பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த இராசதந்திரிகள் பலருடனும் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போதும் அவரது திறமை பளிச்சிட்டது. மாறாத புன்னகையும் இன்சொல்லும் பிறர் உள்ளங்களை ஈர்க்கும் சொல்லாற்றலும் அவருடைய அத்தனை முயற்சிகளிலும் அவருக்கு வெற்றி தேடித்தந்தன.

புலிகளுக்குப் போராடத்தான் தெரியும்; வேறு எதுவும் தெரியாது என்று நினைத்தவர்களை திகைக்கவைத்தவர் தமிழ்ச்செல்வன். உலக நாடுகளைச் சேர்ந்த இராசதந்திரிகளும் பத்திரிகையாளர்களும் அவரது நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு புலிகளைக் குறித்த தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டனர்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் புலிகளின் தாரக மந்திரத்தை உலக அரங்குக்கு எடுத்துச்சென்று அதை மற்றவர்களுக்குப் புரியவைத்ததில் அவருடைய பங்கு மகத்தானதாகும். இளம் வயதிற்கு அப்பாற்பட்ட அறிவு முதிர்ச்சியுடன் பிரச்சினைகளை அவர் அணுகிய விதமும் விளக்கிய வகையும் எல்லோராலும் பாராட்டப்பட்டன.

உண்மையான சமாதானத்திலும் சகவாழ்விலும் பிரபாகரனுக்கு இருந்த ஆழமான நம்பிக்கையினை சர்வதேச சமுதாயத்துக்கு எடுத்துச்சென்ற தூதராக தமிழ்ச்செல்வன் திகழ்ந்தார்.

உலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களுடனும் அவர் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார். அவர் வளர்த்தெடுத்த இந்த உறவு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பேராதாரவை திரட்டித் தந்தது.

பல்வேறு காலக்கட்டங்களில் என்னுடன் தொலைபேசி மூலம் பேசி தங்களின் நிலைப்பாட்டினைக் குறித்து அவர் அளித்த விளக்கங்கள் என்றும் மறக்கமுடியாதவை. குறிப்பாக யாழ் மக்களுக்கு உணவு-மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்க அனுமதி மறுத்த இந்திய அரசின் போக்கினைக் கண்டிக்கும் வகையில் நான் மேற்கொண்ட பட்டினிப் போராட்டத்தின் போது தொலைபேசி மூலம் தலைவர் பிரபாகரன் அவர்களின் கவலையை அவர் தெரிவித்தவிதம் என்னை நெகிழ்ச்சியடைய வைத்தது.

விடுதலைப்புலிகள் சாவைக் கண்டு ஒருபோதும் அஞ்சுபவர்கள் அல்லர். மாறாக சாவை விருப்பமுடன் நேர்கொண்டு சந்திப்பவர்கள். அந்த மரபில் வந்த தமிழ்ச்செல்வன் வஞ்சகமான முறையில் வீழ்த்தப்பட்டதைக் கண்டு தமிழர்களின் நெஞ்சங்கள் வேதனையால் துடிக்கின்றன.

சமாதானப் புறாவாகப் பறந்து திரிந்த தமிழ்ச்செல்வனை சிங்கள வல்லூறு கொத்தி வீழ்த்திவிட்டது.

அனுராதபுரத்தில் சிங்கள இராணுவ விமான தளம் அடியோடு சிதைக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட விமானங்களை இழந்து படுதோல்வியினால் மிரண்டுபோன சிங்கள அரசு தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்ததன் மூலம் அடைந்த தோல்வியை மறைக்க முயல்கிறது.

ஆனாலும் சமரசத் தூதராக உலக அரங்கில் உலாவந்த தமிழ்ச்செல்வனை வீழ்த்தியதின் மூலம் இனி சமரசப் பேச்சுகளுக்கு இடமில்லை என சிங்கள அரசு உலகிற்குத் தெரிவித்துவிட்டது.

சிங்கள அரசின் இந்த அறைகூவலுக்கு உலக சமுதாயத்தின் பதில் என்ன? குறிப்பாக இந்திய அரசின் பதில் என்ன? நார்வேயின் சமரச முயற்சிக்கு முழுமையான ஆதரவு தெரிவிப்பதாக பசப்பி வரும் இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

தோல்விக்குமேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்ட சிங்கள இன வெறி அரசின் இந்தக் கொடுஞ்செயலைக் கண்டிக்க இந்தியா முன்வருமா? அல்லது அதற்குத் துணை நிற்கும் வகையில் மேலும் மேலும் கொலை ஆயுதங்களை அள்ளித் தரப்போகிறதா?

தமிழ்ச்செல்வனின் படுகொலையின் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழக மக்கள் இந்த கேள்விகளுக்குரிய விடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

தமிழர்களின் உள்ளங்களில் என்றும் அழியாத வடுவாக தமிழ்ச்செல்வனின் மரணம் அமைந்துவிட்டது.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.