Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image.png?resize=650%2C366&ssl=1

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

பாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரமான கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தலிபான் அரசாங்கமும் பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகத்தில், தங்கள் பொறுமை எல்லையை மீறிவிட்டதாகவும் தற்போது தங்களுக்கும் உங்களுக்கும் இடையே நேரடிப் போர் ஆரம்பமாகிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘ஒபரேஷன் கசாப் லில் ஹக்’ என்று பெயரிட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளன.

அதில் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகவும், பல இராணுவப் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்ததுடன் பதில் தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது.

https://athavannews.com/2026/1466484

  • கருத்துக்கள உறவுகள்

'நேரடிப் போர்': ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - நிலவரம் என்ன?

காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

பட மூலாதாரம்,Pakistani Security Forces handout via Reuters

27 பிப்ரவரி 2026, 04:27 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஆப்கன் தாலிபன்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் 'நேரடிப் போர்' பிரகடனம் செய்துள்ளார்.

"இனியும் பொறுக்க முடியாது, அடுத்து இது நேரடிப் போராக இருக்கும்" என்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆப்கன் தாலிபன்களை எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆப்கன் தாலிபன்கள் உலகம் முழுவதிலுமிருந்து பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தானில் திரட்டுவதாக" அவர் குற்றம் சாட்டினார். மேலும் காபூலில் உள்ள இடைக்கால அரசாங்கம் "பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக" அவர் கூறியதாக பிபிசி உருது சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், கந்தஹார் மற்றும் ஹெல்மாண்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது தாங்கள் "பதிலடித் தாக்குதல்களை" நடத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

தற்போது ,ஜபிஹுல்லா முஜாஹித்தின் எக்ஸ் கணக்கிலிருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆப்கன் தாலிபன்கள் "தங்கள் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளையும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மறுப்பதாக" பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என பிபிசி உருது செய்தி கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் -  என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,Getty Images

பிபிசி உருது சேவை செய்தியின்படி, தங்களது ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 133 ஆப்கன் தாலிபன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் தனது எக்ஸ் பதிவில், ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல், பக்திகா மற்றும் கந்தஹாரில் உள்ள ஆப்கன் தாலிபன் பாதுகாப்பு நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளில் இரண்டு கார்ப்ஸ் தலைமையகங்கள், இரண்டு ஆயுதக் கிடங்குகள், ஒரு தளவாடக் கிடங்கு, மூன்று பட்டாலியன் தலைமையகங்கள், இரண்டு செக்டார் தலைமையகங்கள், 80-க்கும் மேற்பட்ட டாங்கிகள் ஆகியவை அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பிபிசியால் இந்தத் தகவல்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

 பாகிஸ்தான் ராணுவ பீரங்கி

படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ பீரங்கி

இருப்பினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் அதாவுல்லா தரார் கூறுகிறார். ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையின்படி, இன்று (பிப்ரவரி 27) அதிகாலையில் ஆப்கன் தலைநகர் காபூலில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

அதிகாலை 1:50 மணியளவில் நகரம் முழுவதும் போர் விமானங்களின் சத்தத்துடன் வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாகவும், அதிகாலை 2:30 மணி வரை மத்திய காபூலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் மற்றும் கந்தஹார் மீதான இந்தத் தாக்குதல்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சில காலமாக நடந்து வரும் தொடர் மோதல்களின் சமீபத்திய பகுதியாகும். இரண்டு நாடுகளும் அக்டோபர் 2025-இல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னரும் இந்த நிலை நீடிக்கிறது.

கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இரவு முழுவதும் நடத்திய பல வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகத் தாலிபன்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் சமீபகாலமாக நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஏழு பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது.

மறுபுறம், தாலிபன் நிர்வாகம் பொது மக்களின் வீடுகள் மற்றும் ஒரு மதப் பள்ளி (madrasa) இலக்கு வைக்கப்பட்டதாகவும், பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாகவும் கூறியது.

 பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Getty Images

இருதரப்பு குற்றச்சாட்டுகள்

இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையிலான முந்தைய மோதல்களைப் போலவே, இந்த முறையும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முதலில் தாக்கியதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

"தூண்டுதல் இல்லாத ஆப்கன் தாக்குதல்களுக்கு" பதிலடியாக காபூல் மற்றும் கந்தஹார் உள்ளிட்ட நகரங்களில் "எதிர் தாக்குதல்களை" நடத்தியதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக "பெரிய அளவிலான" நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கன் தாலிபன்கள் தெரிவித்தனர். தாலிபன் ராணுவ செய்தித் தொடர்பாளர் வாஹிதுல்லா முகமதி, இந்த "எதிர் நடவடிக்கை" வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.

தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தத் தாக்குதலில் "பல" பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறினார் - ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். பகிரப்பட்ட எல்லையில் ராணுவ நிலைகளுக்கு எதிராக ஆப்கன் தாலிபன்கள் நடவடிக்கை எடுத்ததில் வியாழக்கிழமை இரவு தங்களது வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

முன்னதாக இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக "பெரிய அளவிலான" நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கான் தலிபான்கள் தெரிவித்தனர். பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறியது.

புதிய மோதலின் தொடக்கம்

முன்னாள் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், காபூல், கந்தஹார் மற்றும் பக்திகாவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். "ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நிலத்தை முழு ஒற்றுமையுடன் பாதுகாப்பார்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு தைரியத்துடன் பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபன்களுக்கு இடையிலான தற்போதைய மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் 7-8 தேதிகளில் தொடங்கியது. அப்போது ஒராக்சாயில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.

அக்டோபர் 8 அன்றே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நாடாளுமன்றத்தில் பேசுகையில், "அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் பொறுமை எல்லை கடந்துவிட்டது என்றும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இனி அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் கூறினார்.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்திடம் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானுக்கு (TTP) எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரி வருகிறது, மேலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக தீவிரமடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது, இந்தப் பதற்றத்தைக் குறைக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் நடத்தப்பட்ட போதிலும், மோதல் முடிவுக்கு வரவில்லை.

துரந்த் கோடு

உண்மையில், 133 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட துரந்த் கோடு தான் இன்னும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரான சர் ஹென்றி மோர்டிமர் துரந்த் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கான் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த கோட்டின் மேற்கு முனை இரானிய எல்லையையும், கிழக்கு முனை சீன எல்லையையும் தொடுகிறது.

ரஷ்யாவின் தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுக்க, பிரிட்டன் 1839-இல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது, அதில் பிரிட்டிஷ் படைகள் தோற்கடிக்கப்பட்டன. பின்னர் 1849-இல் பஞ்சாபை இணைத்த பிரிட்டன், சிந்து நதிக்கு மேற்கே உள்ள பகுதிகளை ஆக்கிரமித்தது.

இந்தப் பகுதியில் ஏராளமான பஷ்தூன் (Pashtun) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் நிர்வாகம் பிரிட்டிஷாருக்குப் பிரச்னையாக இருந்தது.

ஒரு காலத்தில், 'துரந்த் கோடு' தொடர்பான ஒப்பந்தம் பல ஆப்கான் ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. காலப்போக்கில், இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரியதாக மாறியது மற்றும் ஆப்கன் ஆட்சியாளர்கள் இதை பாகிஸ்தானுடனான எல்லையாக அங்கீகரிக்க மறுத்தனர்.

1893-இல், வடமேற்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த, 2640 கிமீ நீளமுள்ள எல்லை ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தானுடன் பிரிட்டிஷ் அரசு செய்துகொண்டது.

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானின் 12 மாகாணங்களும், மறுபக்கம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் கில்கித்-பல்டிஸ்தான் பகுதிகளும் உள்ளன. இருபுறமும் உள்ள மக்கள் கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவர்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் துரந்த் கோட்டைத் தனது பிராந்திய ஒருமைப்பாட்டில் தலையிடுவதாகக் கருதி, அதை அங்கீகரிக்க மறுக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தனது கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கக்கூடிய பஷ்தூன் தேசியவாதத்தை ஒடுக்கவும், பிரிவினையைத் தடுக்கவும் இக்கோட்டை அங்கீகரிக்கிறது. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் இதை ஒரு நிஜமான (de-facto) எல்லையாக அங்கீகரிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் அழுத்தத்தின் கீழ் இதை ஏற்றுக்கொண்டாலும், ஆப்கன் குடிமக்கள் இதைத் தங்களது பஷ்தூன் நிலத்தின் தன்னிச்சையான பிரிவினையாகக் கருதி இன்றும் போராடி வருகின்றனர். 1894 மற்றும் 1896-க்கு இடையில் இக்கோடு உருவாக்கப்பட்டது, ஆனால் பல கடினமான பகுதிகளில் இது இன்றும் தெளிவற்றதாகவே உள்ளது.

பாகிஸ்தான் கூறியது என்ன?

ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,FAYEZ NURELDINE/AFP via Getty

படக்குறிப்பு,இதுவரை 133 ஆப்கானிஸ்தான் தாலிபன் உறுப்பினர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷாபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் (கோப்பு புகைப்படம்)

பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் 27 ராணுவ நிலைகளை அழித்துள்ளதாகவும், ஒன்பதைக் கைப்பற்றியுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் முஷாரப் ஜைதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் 80-க்கும் மேற்பட்ட டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை பாகிஸ்தான் ராணுவம் அழித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3:45 மணி நிலவரப்படி முஷாரப் ஜைதி ஒரு புதிய தகவலை வழங்கினார். அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஆக்கிரமிப்புக்கு எதிராக பாகிஸ்தானின் உடனடி மற்றும் பயனுள்ள பதிலடி நடவடிக்கை நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் தரப்பில் 133 பேர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முஷாரப் ஜைதி கூறியுள்ளார்.

இதற்கிடையில், வியாழக்கிழமை இரவு 19 பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும் இரண்டு தளங்களையும் கைப்பற்றியதாக தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகத்தின்படி, மொத்தம் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்களைச் சுயாதீனமாக சரிபார்ப்பது கடினம். சமீபத்திய மோதல்களின் போது இரு தரப்பினருமே ஒருவருக்கொருவர் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர்.

பதிவை நீக்கிய ஆப்கானிஸ்தான் தாலிபன் செய்தித் தொடர்பாளர்

ஜபிஹுல்லா முஜாஹித்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எக்ஸ் தள பதிவு ஜபிஹுல்லா முஜாஹித்தின் கணக்கிலிருந்து நீக்கப்பட்டது (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், கந்தஹார் மற்றும் ஹெல்மாண்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது தாங்கள் "பதிலடித் தாக்குதல்களை" நடத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

தற்போது ,ஜபிஹுல்லா முஜாஹித்தின் எக்ஸ் கணக்கிலிருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

பிபிசி உருது செய்தியின்படி, தாலிபன்களின் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாகத் தங்களது தாக்குதல்கள் நள்ளிரவு 12:00 மணிக்கு நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் இந்தப் புதிய தாக்குதல்கள் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் தாலிபன்களுடனான பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,Sean Gallup/Getty

படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு உள் மற்றும் வெளிப்புற சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்று ஷாபாஸ் ஷெரீப் கூறினார் (கோப்பு படம்)

நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என பிபிசி உருது செய்தி கூறியுள்ளது.

"பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே ஊக்குவித்து வருகிறது, ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யப்படாது. பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உறுதியாக எதிர்கொள்ளும்" என்று வியாழன்-வெள்ளி நள்ளிரவில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , தனது அறிக்கையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களைக் கையாளும் திறன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருப்பதாக ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு இடையே எல்லை மோதல்கள் தொடர்கின்றன, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்தக் கூற்றுக்களை சுயாதீனமாகச் சரிபார்ப்பது கடினம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp9m7x4l5n9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.