Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் ; விமான பயணங்கள் இடைநிறுத்தம்

Published By: Digital Desk 3

16 Mar, 2026 | 09:05 AM

image

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக டுபாய் ஊடக நிறுவனம் எக்ஸ்  தளத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டுபாய்க்கு வருகை தரும் மற்றும் டுபாயிலிருந்து புறப்படும் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் போர் ஆரம்பத்தித்த பின்னர், வளைகுடா அரபு நாடுகள் 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராஜதந்திர அலுவலகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமன்றி, வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டிடங்களையும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தாக்குதல்களின் பெரும் தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால் அனைத்து வளைகுடா அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைவரும் ஈரானை கண்டித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/241069

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல்

Mar 17, 2026 - 07:23 AM

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல்

பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை தூதரகம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmmtyjfwq0005356prg6x7er7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்

Mar 18, 2026 - 06:59 AM

ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இராஜதந்திர தளம் ஒன்றின் மீது நேற்று (17) மீண்டும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அங்கு அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், தூதரக வளாகத்திற்கு அருகில் பலத்த வெடிப்புச் சத்தமும் கேட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmmvd3ih40003356pla2h2uyu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலி லாரிஜானி படுகொலை எதிரொலி: இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு!

hindutamil-prod%2F2026-03-18%2Fa1x7w31d%

டெல் அவிவ்: இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.

செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தச் சூழலில், மக்கள் தொகை அதிகம் உள்ள டெல் அவிவ் நகரில் இந்த குண்டுகளை நேற்றிரவு ஈரான் ராணுவம் பயன்படுத்திய நிலையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரையிலும் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மாலை ஈரானின் புஷெர் அணுசக்தி நிலையம் அருகே ஏவுகணை ஒன்று விழுந்தது. ஆனால் இதனால் அணுசக்தி நிலையத்துக்கோ மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ராஸி தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி நிலையத்தின் மீது தவறுதலாகக் கூட தாக்குதல் நடந்துவிடக் கூடாது அளவுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது கூட்டாக தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முறியடிக்கவே இத்தாக்குதல் என்று விளக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சகம் சார்பில் போர் பதற்றத்தைக் குறைப்பது, மோதலை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச தலைவராக பதவியேற்ற பின்னர் காமேனி முதன்முறையாக வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிபணியும் வரை அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என்பது சரியானது அல்ல. அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று கூறியதாகத் தகவல்.

இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரம் ஏதும் வெளியிடப்படவில்லை. அவர் நேரில் பங்கேற்றாரா அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் பங்கேற்றாரா என்பதுகூட தெரியவில்லை.

ஈரான் கடற்கரையை குறிவைக்கும் அமெரிக்கா:

போர்ப் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

https://www.hindutamil.in/news/world/iran-strikes-tel-aviv-with-cluster-warheads-after-israel-kills-larijani

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.