Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரானுக்குள் அமெரிக்காவுக்கு பதில் இந்த படை களம் இறங்குமா?

வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன. ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஓர்லா குயெரின்

  • பிபிசி செய்தியாளர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு வாரமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி, வான்வழியாகப் போரை நடத்தி வருகின்றன. விரைவில் தரைப்படை இறக்கப்படுமா? இருக்கலாம். ஆனால் அவை அமெரிக்கப் படைகளாக இருக்காது.

வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன.

ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கெனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

"இஸ்லாமிய குடியரசு உருவான காலம் முதல், கடந்த 47 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் ஹனா யஸ்தான்பனா கூறினார்.

இந்தக் கட்சி தங்களிடம்தான் மிகப்பெரிய ஆயுதப் படை இருப்பதாகக் கூறுகிறது.

ஆனால், "ஒரு பெஷ்மெர்கா கூட இன்னும் நகரவில்லை" என்று அவர் கூறினார். 'பெஷ்மெர்கா'என்ற குர்திஷ் சொல்லுக்கு "மரணத்தை எதிர்கொள்பவர்கள்" என்று பொருள்.

ஆறு எதிர்ப்பு குழு

சமீபத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கிய ஆறு எதிர்ப்பு குழுக்களும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்படுவதாக யஸ்தான்பனா கூறினார்.

"யாரும் தனியாக நகர மாட்டார்கள். எங்கள் சகோதரர்கள் நகரப் போகிறார்கள் என்றால் அது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

இந்த வாரம் போராளிகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. முதலில், அமெரிக்கா அதற்கான வழியை வகுக்க வேண்டும்.

"வான் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் எங்களால் நகர முடியாது. மேலும் இரான் ஆட்சியின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது தற்கொலைக்கு சமமானது. இந்த ஆட்சி மிகவும் கொடூரமானது, எங்களிடம் உள்ள மிகவும் மேம்பட்ட ஆயுதம் கலாஷ்னிகோவ் மட்டுமே," என்று குறிப்பிட்டார்.

குர்திஷ் போராளிகளைப் பாதுகாக்க அமெரிக்கா 'விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலத்தை உருவாக்க வேண்டும்' என்று அவர் விரும்புகிறார்.

"நாங்கள் இதை பலமுறை கேட்டுள்ளோம். 'இது எங்களுக்கு அவசரமாகத் தேவை' என்று மின்னஞ்சல் அனுப்பியவர் நான்தான்" என்று அவர் கூறினார்.

இராக்கில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராகப் போரிட கடந்த காலத்தில் அமெரிக்கப் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்ட குர்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயுதம் வழங்கப் பரிசீலித்து வருவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

ஆனால் இரானிய குர்திஷ் படைகளின் சாத்தியமான முன்னேற்றம் குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீதான இரானின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

இரண்டு வெவ்வேறு குழுக்கள் மீதான தாக்குதல்களின் பின்விளைவுகளை நாங்கள் கண்டோம், இதில் குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் தளம் ஒன்றைத் தாக்கிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு போராளி கொல்லப்பட்டார்.

இராக்கில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராகப் போரிட கடந்த காலத்தில் அமெரிக்கப் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்ட குர்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயுதம் வழங்கப் பரிசீலித்து வருவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,வடக்கு இராக்கில் உள்ள இரானிய குர்திஷ் குழுக்களின் தளங்கள் மீது இரான் ஏவுகணைகளை வீசியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

குர்து மக்கள் யார்?

சில குழுக்கள் தங்கள் தளங்களை காலி செய்துவிட்டு, தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்கள் படைகளை இடமாற்றம் செய்துள்ளன.

இரான் ஆட்சிக்கு எதிரான போரில் இணைவது ஒரு மிகப்பெரிய அபாயமாகும், மேலும் இதற்குப் பதிலாக டிரம்ப் எதை வழங்கக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மத்திய கிழக்கின் நான்காவது பெரிய இனக்குழுவான குர்து மக்கள், இரான், இராக், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர்.

அவர்கள் துன்புறுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

"மலைகளைத் தவிர நமக்கு நண்பர்கள் யாரும் இல்லை" என்பது குர்துகளின் பழமொழி.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்றும் என்று நம்ப முடியுமா?

சிரியாவில் உள்ள பல குர்துகள் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் உறுதியான கூட்டாளிகளாக இருந்தவர்கள்.

சமீபத்தில் தங்களை விடுத்து சிரியாவில் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாக டிரம்ப் செயல்பட்டபோது அவர்கள் கோபமடைந்தனர்.

ஆனால் சில மூத்த இரானிய குர்திஷ் தலைவர்கள் நடைமுறை ரீதியான பார்வையைக் கொண்டுள்ளனர்.

கேடிபிஐயின் முஸ்தபா மௌலுடி

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,முஸ்தபா மௌலூதி

நம்பிக்கை என்ன?

"அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரை எங்களது நம்பிக்கைகளுக்காக தொடங்கவில்லை, மாறாகத் தங்களுடைய சொந்த நலன்களுக்காகவே தொடங்கின" என்கிறார் இரானின் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் முஸ்தபா மௌலூதி.

"ஆனால் அவர்கள் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளங்களைக் குறிவைக்கிறார்கள், இது எங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதோடு நாங்கள் உள்ளே நுழையவும் உதவும்," என்று குறிப்பிட்டார்.

67 வயதான அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சிக்காகக் காத்திருப்பதிலேயே கழித்துள்ளார்.

பாரம்பரிய குர்திஷ் உடையணிந்த அவர், தனது குடும்பத்தின் வேதனையான வரலாற்றை விவரித்தார்.

இவரது ஒரு உறவினர் 13 வயதில் இந்த இரான் ஆட்சியால் கொல்லப்பட்டார், மற்றொருவர் எதிர் தரப்புடன் ஒத்துழைத்ததாகக் கூறி 31 ஆண்டுகளாக இன்னும் சிறையில் இருக்கிறார்.

இவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக தனது குடும்பத்தில் 60 சதவீதத்தினர் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மௌலூதி தனது தாய் மண்ணுக்குத் திரும்பும் முதல் தருணங்களை ஏற்கனவே மனக்கண்ணில் வைத்துள்ளார்.

"நான் கிராமத்தை அடையும்போது, 'உங்களுக்காகவே நான் போராடினேன், நீங்கள் எனது மக்கள், இப்போது நான் இன்னும் அதிகமாகப் போராடுவேன்' என நான் உரத்த குரலில் சொல்வேன்" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

மார்ச் 21 அன்று வரும் குர்திஷ் புத்தாண்டு பண்டிகையான நோரூஸை கொண்டாடுவதற்குள் தான் அங்கு இருப்பேன் என்று அவர் நம்புகிறார்.

இரானின் 90 மில்லியன் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். இங்குள்ள அவர்களின் தலைவர்கள், டிரம்புக்கும் தங்களுக்கும் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

"நாங்கள் இரானில் அரசியல் ரீதியாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு. மாற்றத்திற்கான இந்த வாய்ப்பை நாங்கள் வீணடிக்க விடமாட்டோம்," என்று இரானிய குர்திஸ்தான் கோமலா கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்லா மொஹ்தாடி கூறினார்.

இரானின் 90 மில்லியன் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். இங்குள்ள அவர்களின் தலைவர்கள், டிரம்புக்கும் தங்களுக்கும் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,குர்திஷ் குழுக்கள் தங்கள் படைகள் சில இரானுக்குள் நுழைந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளன.

எவ்வளவு துருப்புக்களைத் திரட்ட முடியும்?

குர்துகளால் எத்தனை துருப்புக்களைத் திரட்ட முடியும் என்பதை மதிப்பிடுவது கடினம்.

"ஏற்கனவே உள்ளே இருப்பவர்களையும் சேர்த்து இது சில ஆயிரங்களாக இருக்கலாம்," என்று குர்திஷ் இனத்தைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

"இரானில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள், இதன் மூலம் வருங்காலத்திலும் தங்கள் பங்கு இருப்பதை உறுதி செய்ய நினைக்கிறார்கள். வரலாற்றின் பாடங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்."

அமெரிக்காவின் வாக்குறுதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது செயல்படுவதற்கான நேரம் என்று சில இரானிய குர்துகள் கூறுகின்றனர்.

"எங்கள் தாயகத்தைப் பார்க்கும் சிறிய நம்பிக்கை இருந்தாலே போதும்" என்று இரானிய எல்லைக்கு அருகிலுள்ள சுலைமானியா நகரைச் சேர்ந்த ஒரு பெண் கூறினார்.

"நாங்கள் அதை [இரானை] கொலைகாரர்களின் இஸ்லாமிய ஆட்சி என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை அவ்வளவு வெறுக்கிறோம். அவர்கள் பலரைக் கொன்றுள்ளனர்."

இவை அனைத்தும் இராக்கை இக்கட்டான நிலையில் ஆழ்த்தியுள்ளன. அண்டை நாட்டுப் போருக்குள் தாங்களும் இழுக்கப்படுவோமோ என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.

''பயங்கரவாதச் செயல்களைச் செய்ய, இராக் மண்ணிலிருந்து இரானிய எல்லைக்குள் ஊடுருவவோ அல்லது கடக்கவோ எந்தக் குழுக்களையும் அனுமதிக்க மாட்டோம்," என்று இராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குர்திஷ் படைகள் எல்லையைத் தாண்டினால், அது யஸ்தான்பனாவிற்கு இனிப்பும் கசப்பும் கலந்த தருணமாக இருக்கும்.

"எனது நிலத்திற்குத் திரும்புவது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்," என்று கூறிய அவர் "எனது தாத்தா பாட்டிகளும் உறவினர்களும் இங்கே [வடக்கு இராக்கில்] இறந்துவிட்டார்கள். நான் மகிழ்ச்சியாக உணர வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்த நாளைப் பார்க்க உண்மையிலேயே தகுதியானவர்கள் இப்போது இல்லை" என்கிறார்.

கூடுதல் செய்திகள்: விட்ஸ்கே புரேமா, மேத்யூ கோடார்ட் மற்றும் பிஷார் ஷரீப்

இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.