Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி

Mar 13, 2026 - 06:41 AM

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி

ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தற்போது கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய பல நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது 

நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஈரான் போரைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்கா தனது மூலோபாய பெற்றோலிய கையிருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிக்கும் என்று அமெரிக்க எரிசக்தி துறை அறிவித்த நிலையில், குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. 

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக உயர்வு ஒரு குறுகிய காலத்திற்கான இடையூறு மட்டுமே. இது நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmo78u590001356p0iafwgbx

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-32.jpg?resize=750%2C375&ssl=

ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு!

ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாக, கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்கா நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை வழங்கியது. 

இது ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாகும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

ஈரான் மோதலினால் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதைத் தடுக்கும் முயற்சியாக, மூலோபாய பெற்றோலிய இருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை அமெரிக்கா வெளியிடும் என்று அமெரிக்க எரிசக்தித் துறை கூறிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அந்த வெளியீடு 32 நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிடுவதற்கான பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

2026 மார்ச் 12 ஆம் திகதி நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகாரம் அளிக்கும் இந்த உரிமம் 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி நள்ளிரவு வொஷிங்டன் நேரம் வரை செல்லுபடியாகும் என்று திறைசேரித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிமத்தின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (13) காலை எண்ணெய் விலைகள் குறைந்ததுடன், இது விநியோக கவலைகளையும் தணித்தது.

GMT நேரப்படி 01.23 மணியளவில் பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் மசகு எண்ணெய் 71 சென்ட்கள் அல்லது 0.71% குறைந்து ஒரு பீப்பாய்க்கு $99.75 ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 88 சென்ட்கள் அல்லது 0.92% குறைந்து $94.85 ஆகவும் இருந்தது.

முன்னதாக மார்ச் 5 அன்று அமெரிக்க திறைசேரி இந்தியாவிற்கு 30 நாள் விலக்கு அளித்தது, இதன் மூலம் கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை புது டெல்லி வாங்க அனுமதித்தது.

எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்தும் ஏனைய நடவடிக்கைகளுடன், வளைகுடாவில் கடல்சார் வர்த்தகத்திற்கான அரசியல் ஆபத்து காப்பீடு மற்றும் நிதி உத்தரவாதங்களை வழங்குமாறு ட்ரம்ப் ஏற்கனவே அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க கடற்படை அப்பகுதியில் கப்பல்களைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

விலைகளைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, எரிசக்தி மற்றும் விவசாயப் பொருட்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் சுதந்திரமாகச் செல்வதை உறுதி செய்வதற்காக, ஜோன்ஸ் சட்டம் எனப்படும் கப்பல் விதியை தற்காலிகமாகத் தள்ளுபடி செய்வது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த விதியை விலக்குவது வெளிநாட்டு கப்பல்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் எரிபொருளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும், இது செலவுகளைக் குறைக்கும் மற்றும் விநியோகங்களை விரைவுபடுத்தும்.

வியாழக்கிழமை (12) நிலவரப்படி உலகளவில் 30 வெவ்வேறு இடங்களில் சுமார் 124 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் கடலில் இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1468242

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.