Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏப்ரல் முதல் மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

Mar 30, 2026 - 02:15 PM

மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது.

இந்த மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.



அதன்படி 0 - 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. 

இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. 

மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

61 - 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 - 120 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 7.1% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மாதக் கட்டணம் 420 ரூபாவினால் உயரும். 

180 அலகுகளுக்கு மேல் இந்த கட்டத்திற்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணம் 25% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சலுகை: மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனினும், அதே பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மாத்திரம் 9.6% கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmncxysd60007356pqpyrrftt

இந்தக் கட்டண நிர்ணயமானது, உச்ச நேரங்களில் மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்கு மின்சார விநியோக நிறுவனங்களையும் மின்சார நுகர்வோரையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, எதிர்காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் தொழிற்சாலைகள், விடுதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டுத் துறைகளுக்குக் குறைந்த மின்சாரக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதிலும் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பாக ஒரு பொது கலந்தாய்வை நடத்தியதுடன், சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் தகவலுக்கு, திரு ஜயசூரியன் (உதவி பணிப்பாளர்- பெரு நிறுவன தொடர்பாடல் பிரிவு) அவர்களை 0770 399 119 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.