Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க தூதுவரின் கருத்து மதப் போதகர் ஒருவரின் போதனையைப் போல் இருக்கின்றது.- மனோ கணேசன்

Featured Replies

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. புலிகளையும் முன்னர் தடை செய்துள்ளது. இவ்விரண்டு நடவடிக்கைகளும் அமெரிக்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை. அதே வேளை இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களையும் அமெரிக்கா சமீபத்தில் வழங்கியது. இந் நடவடிக்கைகள் தமிழருக்கு எதிரானவை அல்ல. தமிழர் துயரங்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்திட வேண்டும் என அரசாங்கத்த்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவாதாக கூறியுள்ள அமெரிக்க தூதுவர், சர்வகட்சி பிரதிநிரதிகள் குழு மூலமாக தீர்வை நீண்ட காலமாக முதன்மைப்படுத்தி வருகின்றார். அமெரிக்கா தூதுவரின் இக்கருத்துக்களும் செயற்பாடுகளும் ஏறக்குறைய, 'அதிசயம் ஒரு நாள் நடக்கும் உங்கள் துன்பங்கள் ஒருநாள் நீங்கும் பொறுமையாய் இருங்கள்'. என்று போதனை செய்யும் ஒரு மத போதகரின் கருத்துப் போல இருக்கின்றது, என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மனோ எம்.பி மேலும் கூறியதாவது:-

அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் இனிமையான நன்பர். இதுவரை இலங்கையில் கடமையாற்றிய எந்தவொரு அமெரிக்க தூதுவர்களை விடவும் மிக அதிகமாக மனித உரிமைகள் விவகாரத்தில் தனது விசேட கவனத்தை செலுத்தி வருகின்ற ஒரு கனவான், இராஜதந்திரி. ஆனால் இந்நாட்டிலே தமிழ் மகக்ளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாரிய மனித உரிமை மீறால்களுக்கும், மோசமான யுத்தத்திற்கும் மூலகாரணமாக அமைந்திருக்கும் தேசிய இனப்பிரச்சிiயை அவர் இன்னமும் சரியாக புரிந்து கொள்ள வில்லை என நான் நினைக்கின்றேன். பெரும்பான்மை தேசியவாதத்தின் கரங்களில் தமிழர்சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்படுவதை அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் வழங்கப் போவதகக் கூறிவரும் அரசியல் தீர்வு ஆலோசனைகளை எதிர்பார்த்து காத்திருக்கும்படி தமிழனத்தின் அரசியல் பிரதிநிதிகளுக்கு சர்வதேசம் உபதேசம் செய்கின்றது. அதாவது இந்நாட்டிலே ஒவ்வொரு மணித்தியாலத்திலும் கொல்லப்பட்டோ, கடத்தப்பட்டோ, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டோ துன்பப்படும் தமிழர்கள் அதிசயம் நடக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமாகும். சமாதானம் என்ற போர்வையில் பலவந்தமாக திணிக்கப்படும் மேலாதிக்க தீர்வுத் திட்டத்தை தமிழர்கள் பரிசீலிக்க முடியாது. ஆனால் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளை கணக்கில் எடுக்கும் யோசனைகள் பேச்சு வார்த்ததைக்கு அடித்தளமாக அமையலாம். தாங்கள் தடைசெய்துள்ள புலிகள் இயக்கத்தை பேச்சு வார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தும் அமெரிக்கா, அரசாங்கத்திற்கு உள்ளேயிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையே இந்த அரசாங்கத்தால் திருப்திப்படுத்த முடியாவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா பெரிதும் நம்பியிருக்கும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவையே கலைக்கும் படி அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்திருக்கின்றார்கள். அந்த நிபந்தனைகளையே துணிச்சலுடன் நிராகரிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு முடியவில்லை .இந்தியாவில் நிலவுவதை போல வடக்கு கிழக்கில் ஒரு தமிழ் மொழிவாரி மாநிலத்தை அமைப்பதற்குக் கூட தென்னிலங்கையில் கருத்து ஒருமைப்பாடு இல்லை. தமிழர்களுக்கு 'அதிசயம் நடக்கும் வரை பொறுமையாக இருங்கள்' என்ற உபதேசங்களை வழங்குபவர்கள் சிங்கள பௌத்த தீவிரவாதத்தை தடை செய்வதற்கும், கண்டிப்பத்றகும் சர்வதேச ரீதியாக எந்தவொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழர்கள் மாத்திரமே துன்பத்தில் கிடந்து தவிக்க,அரசாங்கம் காலத்தை ஓட்டியாபடி தமது போர் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது.

நன்றி : வீரகேசரி வார வெளியீடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.