Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை ஆட்சியாளரின் நீண்ட கால சுலோகத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆட்சியாளரின் நீண்ட கால சுலோகத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா

[21 - November - 2007]

* பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்ஆட்டிவிடும் கைங்கரியத்தை வாஷிங்டனும் டில்லியும் தொடரக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு

வ.திருநாவுக்கரசு

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என அமெரிக்க அரசாங்கம் 16.11.2007 ஆம் திகதி தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் ஆயுதக் கொள்வனவு செய்வதற்கும் TRO முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகிறதென்பதே நிதி முடக்கத்திற்கான காரணமெனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க நிர்வாகத்தின் 13224 இலக்க நிர்வாக உத்தரவின் கீழ் பயங்கரவாதக் குழுக்களையும் அவற்றின் வலையமைப்புகளையும் ஒதுக்கிவிடு முகமாக TRO இனங்காணப்பட்டுள்ள அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றின் மூலம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை மேலும் விளக்கியுள்ளது.

விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிட வேண்டும் தூதுவர் பிளேக்

அதனைத் தொடர்ந்து அமெரிக்க நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலும் மேற்குறிப்பிட்ட நிதி முடக்கமானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழருக்கு எதிரானதல்ல என தூதுவர் றொபெட் பிளேக் மீள வலியுறுத்தியுள்ளார். அத்தோடு விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்குபற்றுவதற்கு முன்வர வேண்டும் எனவும், தூதுவர் பிளேக் கூறியுள்ளதாக அறியக் கிடக்கிறது. மேலும் விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அண்மையில் இலங்கை கடற்படைக்கு தம்மால் றேடர் தன்னியக்கிப் படகுகள் முதலியன வழங்கப்பட்டதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு தெளிவானதொரு செய்தி வழங்கப்பட்டிருப்பதாகவும், பிளேக் கூறிவைத்துள்ளார். அதாவது பிளேக் முன்னர் சில சந்தர்ப்பங்களில் கூறியது போல ஒரு நம்பகத்தன்மையான தீர்வுத் திட்டம் இன்னும் தான் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை. மாறாக முழு அளவிலான யுத்தத்தை கொண்டு நடத்துவதே அரசாங்கத்தின் திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது. எனவே, ஒரு பறத்தில் விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிட வேண்டுமென வற்புறுத்திக்கொண்டு மறு புறத்தில் அரசியல் தீர்வில் அக்கறையற்ற இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகள் வழங்கப்படுவதானது அரசாங்கத்தின் இராணுவத் தீர்வுப் பிரயத்தனத்திற்கு வலுவூட்டுவதாகவே காணப்பட வேண்டியுள்ளது.

காலம் கடத்தும் கைங்கரியங்கள்

அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) ஒரு ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டத்தினை முன்வைக்கும். அப்படி முன்வைத்தாலும் அது அரசாங்கத்தால் சாதகமாகபரிசீலிக்கப்பட்டு ஒரு தீர்வு எட்டப்படுமென யாராவது எண்ணினால், அது இலவு காத்த கிளியின் கதையாகி விடுமென்பதைக் கூறிவைக்க விரும்புகிறோம். இத்தகைய ஏமாற்று வித்தைகளும், காலங்கடத்தும் கைங்கரியங்களும் தான் கடந்த 50 வருடங்களாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன என்பதை தூதுவர் பிளேக் போன்றோர் நன்கு அறிந்து வைத்திருப்பது நல்லது. இவ்வாறாகவே 5 வருடங்களுக்கு முன்பு அன்றைய அமெரிக்க தூதுவர் அ.ர். லி. வில்ஸின் கவனத்தை நான் ஈர்த்திருந்தேன். சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் விளைவு

இலங்கை அரசாங்கம் ஒரு நம்பகத்தன்மையான தீர்வுத் திட்டத்தினை முன்வைக்காத நிலையில் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டுமென சர்வதேச சமூகமோ குறிப்பாக அமெரிக்க அரசாங்கமோ அழுத்தம் கொடுப்பதன் அர்த்தம் தான் என்ன? 1950 கள் முதல் எல்லா சிங்கள பௌத்த பெரும்பான்மை மேலாதிக்க அரசாங்கங்களும் தமிழரின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமல்லாமல் தமிழர் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கர அடக்கு முறைகள் அட்டூழியங்கள் மற்றும் உயிர் உடைமை அழிப்புக்கள் காரணமாகவே தமிழ் இளைஞர் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதோடு விடுதலைப்புலிகள் இயக்கமும் தோற்றம் பெற்றது. எனவே, விடுதலைப்புலிகள் இயக்கமானது இலங்கை அரசினாலேயே உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று யதார்த்தத்தினை குறிப்பாக சர்வதேச சமூகம் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு உகந்ததொரு தீர்வினை கொண்டு வருவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் அரசியல் உறுதி இருந்ததில்லை. அவை சிங்கள கடும்போக்காளர்களாலும் பேரினவாத சக்திகளாலும் ஆட்டிப் படைக்கப்பட்டு வந்த வரலாற்றினையும் சர்வதேச சமூகம் மறந்து விடக் கூடாது.

இலங்கையும் அமெரிக்காவும் ஒரே சுலோகம்

நிற்க, TRO வின் நிதி முடக்கி விடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கெதிரானத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.