Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே! நாடாளுமன்றம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்கள் டெல்லி புறப்படுகிறார்கள்!

Featured Replies

இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே! நாடாளுமன்றம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்கள் டெல்லி புறப்படுகிறார்கள்!

இலங்கைக்கு - இந்தியா ஆயுதம் வழங்கக் கூடாது என்று தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கங்களை நடத்திஇ அவற்றைஇ டெல்லியில் பாதுகாப்பு அமைச்சரி டம் நேரில் அளிப்பதோடுஇ நாடாளுமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் பெரியார் திராவிடர் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

18.11.2007 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை காமராசர் சாலைஇ கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

• கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் அறுவரும் (தலைவர்இ துணைத் தலைவர்இ பொதுச் செயலாளர்இ திருவாரூர் கே. தங்கராசுஇ வழக்கறிஞர் செ. துரைசாமி) மாதம் ஒருமுறை தவறாமல் மாதத்தின் மூன்றாம் செவ்வாய்க் கிழமை காலை கழகத் தலைமை அலுவலகத்தில் அல்லது அவ்வப்போது முடிவு செய்யப்படும் இடத்தில் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்தக் கூட்டம் டிசம்பர் 18 ஆம் நாள் சென்னை தலைமைக் கழகத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

• தலைமைக் கழகத்தின் அலுவலக நடவடிக்கை களை கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் பொறுப்பேற்று கவனிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டது.

• தலைமைக் கழகத்தின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடப்பதற்கென குறைந்தது ரூ.5இ00இ000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) திரட்ட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.

• புதிதாக செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது. செயற்குழு மூன்று மாதங்களுக்கொருமுறை கூடி இயக்க வேலைத் திட்டங்களை விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

உறுப்பினர்கள் கீழ்க்கண்டோர் தெரிந்தெடுக்கப் பட்டனர். காலப்போக்கில் செயற்குழுவுக்கு தேவைப்பட்டால் உறுப்பினர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் - என்று முடிவு செய்யப்பட்டது.

தலைமைக்குழு உறுப்பினர் அறுவரோடு கீழ் கண்டவர்கள் செயற்குழுவுக்கு தெரிவு செய்யப் பட்டனர்.

சென்னை : தபசி. குமரன்இ அன்பு தனசேகரன்இ உமாபதிஇ கேசவன்இ வழக்கறிஞர் இளங்கோவன்இ வழக்கறிஞர் சு.குமாரதேவன்.

வேலூர் : திலீபன்; விழுப்புரம் : அய்யனார்; புதுவை : லோகு. அய்யப்பன்; கடலூர் : கு. அழகிரிஇ வே. கலியமூர்த்தி; நாகை : இளையராஜாஇ பெரியார் செல்வம்; தஞ்சை : கோவை மாரியப்பன்; பெரம்பலூர் : தாமோதரன்இ இலட்சுமணன்; திருச்சி : செ.தெ. இராசேந்திரன்; தருமபுரி : முனி. ஆறுமுகம்; சேலம் : முல்லைவேந்தன்இ டைகர் பாலுஇ மார்ட்டின்இ டேவிட்; நாமக்கல் : தி.க. கைலாசம்இ சாமிநாதன்; ஈரோடு : கோபி இளங்கோஇ தாராபுரம் குமார்இ எலத்தூர் செல்வகுமார்; கோவை : ஆறுச்சாமிஇ அங்ககுமார்இ மனோகரன்இ கருமலையப்பன்இ பிரகாஷ்; திண்டுக்கல் : தாமரைக் கண்ணன்இ பெரியார் நம்பிஇ சம்பத்; மதுரை : முருகேசன்இ மாயாண்டிஇ தமிழ்ப்பித்தன்; தூத்துக் குடி : பால்.பிரபாகரன்இ அம்புரோஸ்; நெல்லை : பொன் ராசுஇ காசி ராசன்.

பிற மாவட்டங்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.

• பொள்ளாச்சி பிரகாஷ் தலைமைக் கழகத்தின் தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். அவர் எல்லா மாவட்டஇ நகரஇ ஒன்றியஇ கிளை கழகங்களுடன் தொடர்பு கொண்டு இயக்கப் பணிகளை ஆற்றிட துணை புரிவார்.

• வழக்கறிஞர் இளங்கோவன் தலைமைக் கழகச் செய்திகளை ஊடகங்களுக்கு தந்து பத்திரிகை தொடர்பாளராக இருந்து செயல்படுவார் என முடிவெடுக்கப்பட்டது.

• இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யக் கூடாது என்று இந்திய அரசை வலியுறுத்தி மேற்கொள்ளும் கையெழுத்து இயக்கத்தை முனைப்போடு நடத்துவது என்றும் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை புதுடில்லி சென்று கழகத்தின் பிரதிநிதிகள் இந்திய இராணுவ அமைச்சரிடம் நேரில் கையளிப்பது என்றும்இ இலங்கைக்கு ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரி நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒத்தக் கருத்துள்ளோரையும் இணைத்துக் கொண்டு கழகத்தின் சார்பில் குறைந்தது 200 பேராவது புதுடில்லிக்கு செல்லவும் தீர்மானிக்கப் பட்டது. டிசம்பர் 14 அல்லது 17 ஆவது நாளில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

• தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்? விளக்கப் பொதுக்கூட்டங்களை தொடர் கூட்டமாக நடத்துவது என்றும்இ எல்லா கூட்டங்களிலும் கழகத் தலைவர் மற்றும் கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும்இ முன்னணித் தலைவர்களும் கலந்து கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

டிசம்பர் 1 - சென்னைஇ 2 - வேலூர்இ 3 - தருமபுரிஇ 4 - சேலம்இ 5 - திருச்சிஇ 6 - பெரம்பலூர்இ 7 - ஈரோடுஇ 8 - திருப்பூர்இ 9 - கோவை ஆகிய இடங்களில் முதல் கட்டமாக தொடர் கூட்டங்கள் நடத்துவது என்று மாவட்ட கழகப்பொறுப்பாளர்களின் ஒப்புதலு டன் முடிவெடுக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.