Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகிஸ்தானை விட இலங்கையிலேயே அதிகளவில் மனித உரிமை மீறல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை விட இலங்கையிலேயே அதிகளவில் மனித உரிமை மீறல்கள்

30.11.2007 / நிருபர் குளக்கோட்டன்

பாகிஸ்தானை விட அதிகளவிலான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறுவதனால் இதனை பொதுநலவாய அமைப்பு கவனத்தில் எடுக்க வேண்டுமென கம்பஹா மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரஸ்தாபிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளை பயங்கரவாதியென அரசாங்கம் முத்திரை குத்துவதுடன் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றதெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

"நாட்டில் ஆட்கடத்தல்இ படுகொலை கப்பம் மற்றும் வகைதொகையின்றிய கைதுகள் போன்ற மனித உரிமை மீறல்கள் நாளாந்தம் இடம்பெறுவதுடன் அதிகரித்துச் செல்கின்றன. இதனை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர் உட்பட ஊடகங்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது.

இதற்கு சண்டே லீடர் மற்றும் இருதின பத்திரிகைகளின் மீதான தாக்குதல் மற்றும் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஐந்து ஊடகங்களின் ஒலிபரப்பு தடை செய்தமையை நாம் அவதானிக்க முடியும்.

கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது இவ்வாறான மனித உரிமை மீறல்கள் நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன. இதனை நாம் நோக்குகின்ற போது பாகிஸ்தானை விட இலங்கையிலேயே அதிகளவான மீறல்கள் இடம்பெறுகின்றன.

மனித உரிமைகள் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் வன்னி செல்ல முடியாதவாறு தடுக்கப்படுகின்றனர். உண்மையில் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் வெளிவருவதை விரும்பாத அரசு யுத்தத்தைக் காட்டித் தடுக்கின்றது.

அதேபோல் நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்ததையடுத்து அவரை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதியென தெரிவித்துள்ளார். இவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பயங்கரவாதிகளென முத்திரை குத்தப்படுகின்றனர்.

சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 149 நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். கடந்த இரண்டு வருடத்தில் இலங்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டும் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.