Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகிஸ்தானிடம் இலங்கை அவசர இராணுவ உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிடம் இலங்கை அவசர இராணுவ உதவி

[01 - December - 2007]

* முன்னுரிமை அடிப்படையில் போர்த்தளபாடங்களை வழங்குமாறு வேண்டுகோள்

பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு அவசர இராணுவ உதவிகளைக் கோரியுள்ளது.

60 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த்தளபாடங்களை `மிகவும் முன்னுரிமை' அடிப்படையில் வழங்குமாறு பாகிஸ்தானிடம் இலங்கை அரசு கேட்டுள்ளதாக புகழ்பெற்ற பாதுகாப்புச் சஞ்சிகையான ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி, நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் நிலை அதிகரித்துச் செல்கையில் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அரசு இந்த இராணுவ உதவியைக் கோரியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பு தொடர்பான ஆவண விபரங்களையும் ஜேன்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

தாங்கள் கோரியிருக்கும் இந்த இராணுவ உதவிகளை `மிகவும் முன்னுரிமை' அடிப்படையில் வழங்குமாறும் பாகிஸ்தானிடம் இலங்கை கேட்டுள்ளது.

இதற்கமைய இராணுவத்துக்கு 20 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த்தளபாடங்களும் விமானப் படையினருக்கு 38.1 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

தனது இராணுவ பலத்தை மென்மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு ஆயுதக் கொள்வனவை விட போர்த்தளபாடங்களை திருத்தியமைப்பதற்காக இராணுவ தொழில்நுட்பவியலாளர்களது உதவிகளையும் கோரியுள்ளது.

இலங்கை படையினர் வசமுள்ள ரி.55 ரக பிரதான யுத்த டாங்கிகளையும் விமானப்படையினர் வசமுள்ள சி.130 ரக சரக்கு விமானத்தையும் திருத்தியமைப்பதற்கான தொழில்நுட்பவியலாளர்களது உதவியே கோரப்பட்டுள்ளது.

இவ்வருட முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு அனுப்பிய கடிதத்தில்;

ரி- 55 ரக பிரதான யுத்த டாங்கிகளையும் சி- 130 ரக விமானத்தையும் திருத்தியமைப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவசரமாக தொழில்நுட்பவியலாளர் குழுவொன்றை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தது.

பல பிரதான யுத்த டாங்கிகளும் சி- 130 ரக விமானமும் அவசரமாகத் திருத்தப்பட வேண்டியிருப்பதால் `மிகவும் முன்னுரிமை' அடிப்படையில் தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்றை அனுப்பிவைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அதில் கேட்கப்பட்டிருந்ததாகவும் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி தெரிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து 1400 கோடி ரூபாவுக்கு இலங்கை அரசு ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானிடமிருந்து ஆயுதக் கொள்வனவு செய்யவுள்ள தகவல்களும் வெளியாகியுள்ளன.

http://www.thinakkural.com/news/2007/12/1/...s_page41429.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.