Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மக்களுக்கு உணவு-மருந்து :வாக்குறுதி தவறிய முதலமைச்சர் கலைஞர் 90 நாட்களாக பதில்கூட எழுதாத பண்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மக்களுக்கு உணவு-மருந்து :

வாக்குறுதி தவறிய முதலமைச்சர் கலைஞர்

90 நாட்களாக பதில்கூட எழுதாத பண்பாடு

அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு நெடுமாறன் வேண்டுகோள் கடிதம்

பட்டினி கிடக்கும் யாழ் மக்களுக்கு உதவுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைச் சேகரிக்கும் இயக்கத்தினை கடந்த ஆண்டு திசம்பரில் நாங்கள் தொடங்கி ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் பெறுமான பொருட்களை திரட்டியதையும், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அதை அனுப்புவதற்கு நாங்கள் செய்த முயற்சிகளையும் தாங்கள் அறிவீர்கள்.

கடந்த 14-02-2007 அன்று இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கேட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனால் இதுவரை இப்பொருட்களை அனுப்புவதற் கான அனுமதி வழங்கப்படவில்லை.

மார்ச் மாதம் ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ, பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஆகியோர் இப்பிரச்னை குறித்து நேரிலும் கடிதம் மூலமும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். அவரும் ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

அதன் பிறகு மே மாதம் தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்திய பிரதமருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து பல்லாயிரக்கணக்கான கடிதங்களும் தந்திகளும் தொலை நகலிச் செய்திகளும் அனுப்பப்பட்டன.

5-6-2007 அன்று சென்னையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை நடத்தினார்கள்.

13-6-2007 அன்று ஜெனிவாவில் உள்ள சர்வதேச செஞ்சலுவைச் சங்க அலுவலகத்திற்கு நான் சென்று அங்கு தென்னாசிய பகுதிக்கு பொறுப்பாளராக இருக்கும் உடோ வாகன் மெய்க் என்பவரை நேரில் சந்தித்து இப்பிரச்னை குறித்து முறையிட்டேன். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இந்திய அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.

இவை எதற்கும் பலனின்றிப் போனதால் 4-8-2007 அன்று விழுப்புரத்தில் இப்பிரச்னைக்காகக் கூட்டப்பட்ட தமிழர் மாநாட்டில் அடுத்த கட்டப் போராட்டத் திட்டம் வகுக்கப்பட்டது. செப்டம்பர் 7-ஆம் தேதி மதுரையிலிருந்து கிளம்பி இராமேசுவரம் நோக்கியும், திருச்சியிலிருந்து கிளம்பி நாகப்பட்டினம் நோக்கியும் இரு அணிகளாகப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு சென்று செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் செல்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய துறைமுகங்களிலிருந்து பொருட்களைக் கொண்டு செல்ல போராட்டக் குழுவினர் முயன்ற போது அவர்களுக்குப் படகுகளைத் தரவிடாமல் காவல்துறை தடுத்துவிட்டது.

அதன் பின்னர் எங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்துவதென போராட்டக் குழுவினரின் ஒப்புதலோடு முடிவு செய்து செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று காலையில் போராட்டத்தைத் தொடங்கினேன். பின்னர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்ட பிறகு சென்னைக்கு வந்து மறுநாள் காலையில் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தபோது அதற்காக அமைக்கப்பட்ட பந்தலை காவல்துறையினர் பிரித்து எறிந்தனர். பட்டினிப் போராட்டம் மேற்கொள்ளக் கூடாதென மிரட்டினார்கள். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் ஆகியோரும் பல்வேறு கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கூடி காவல்துறையினருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனது பட்டினிப் போராட்டம் மக்கள் ஆதரவோடு தொடர்ந்தது.

அன்று இரவு 12 மணிக்கு மேல் சென்னை நகர காவல்துறை ஆணையாளர் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எனக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு கூறியிருந்தார் :

"தாங்கள் எடுத்துள்ள முயற்சியை தமிழகத்தின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணா நோன்பினை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன். ஈரோட்டிலிருந்து 2 நாட்களின் திரும்பியவுடன் சந்தித்துப் பேசுவோம், என் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்." - என்று குறிப்பிட்டிருந்தார்.

மறுநாள் போராட்டக் குழுவினர் கூடி முதலமைச்சரின் வேண்டுகோளைப் பரிசீலனை செய்தனர். எனது போராட்டம் இந்திய அரசின் போக்கை எதிர்க்கும் வகையில் நடத்தப்பட்டதாகும். எனவே, சேகரிக்கப்பட்ட பொருட்களை யாழ் மக்களுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்காததைக் குறித்து முதலமைச்சரின் கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, முதலமைச்சர் சென்னை திரும்பி வந்து பேசும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வது என முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே முதலமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டது.

15-9-2007 அன்று பிற்பகலில் பா.ம.க நிறுவனத் தலைவர் மரு.ச.இராமதாசு அவர்கள் பட்டினிப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து முதலமைச்சரின் சார்பில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற தில்லியை வற்புறுத்துவதாக வாக்குறுதி அளித்தார். பட்டினிப் போராட்ட அரங்கத்தில் கூடியிருந்த மற்ற தலைவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க எனது போராட்டத்தை நிறைவு செய்தேன்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை சீராகி வீடு திரும்பியவுடன் 22-9-2007 அன்று முதலமைச்சரைச் சந்தித்து இப்பிரச்னை குறித்துப் பேச நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டிக் கொண்டு கடிதம் அனுப்பினேன்.

ஆனால், 90 நாட்கள் கடந்த பின்னும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு நாங்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.

எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தையும் யாழ் மக்களுக்கு உணவு மருந்துப் பொருட்களை அனுப்ப வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து தாங்கள் முழுமையாக ஆதரவு தந்தமைக்கு எனது இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கும் தங்களின் பேராதரவைப் பெரிதும் வேண்டுகிறோம்.

http://www.thenseide.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.