Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு வருடத்தில் ஏழு ஊடகர்கள் படுகொலை - அரசு மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடத்தில் ஏழு ஊடகர்கள் படுகொலை - அரசு மறுப்பு

சிறீலங்கா அரச படைகளால் இந்த வருடம் மட்டும் ஏழு ஊடகவியளலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அனைத்துலக ஊடக அமைப்புகள் கடந்த வாரம் வெளியிட்ட கண்டனத்திற்கு சிறீலங்கா அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்துரைத்த சிறீலங்காவின் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஸன யப்பா, தமக்கு கிடைத்த தகவலின்படி இந்த வருடம் ஒரேயொரு ஊடகவியலாளர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தினை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள சிறீலங்கா அமைச்சரும், நாடாளுமன்ற முதல்வருமான நிமால் சிறீபால டி சில்வா, தமது அரசில் பதிவு செய்யாத எவரையும் ஊடகவியலாளராக கருத முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்கள் மூவர் மட்டுமே

இந்த வருடம் பலி என்கிறது அரசு

கொழும்பு, டிச. 21

இந்த வருடம் இலங்கையில் மூன்று ஊடகவியலாளர்கள் மட்டுமே பலியாகியிருக்கின்றனர் என்று கூறியிருக்கின்ற அரசு, இங்கு ஒன்பது ஊடகவியலாளர்கள் வரை இந்த ஆண்டில் உயிரிழந்திருக்கின்றனர் என்று சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புகள் தெரிவிப்பதை வன்மையாக மறுத்திருக்கிறது.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

அடுத்த ஆண்டிற்கான ஊடகவியலாளர் அடையாள அட்டைகளை வழங்குவதில் கடும் போக்கு கடைப்பிடிக்கப்படும். ஊடகவியலாளர்களின் தொழில் அனுபவம், தொழிலின் தன்மை என்பன முழுமையாகப் பரீட்சிக்கப்பட்டு, விண்ணப்பதாரி ஊடகவியலாளர்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டபின்னரே 2008 ஆம் ஆண்டிற்கான ஊடகவியலாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவேண்டியவர்கள். பல சவால்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் பணியாற்றுபவர்கள். இவர்கள் வெளியிடங்களுக்கோ அல்லது அரச அலுவலகங்கள், திணைக்களங்கள் என்பவற்றுக்கோ செய்தி சேகரிக்கச் செல்லும்போது அவர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படவேண்டும். அவர்கள் தமது கடமையைச் செய்ய சகல உதவிகளையும், வசதிகளையும் வழங்கவேண்டும் என்பதற்காகவே ஊடகவியலாளர்கள் அடையாள அட்டை வழங்கப்படுகின்றது.

ஆனால் இவை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. கண்டுபிடிக்கப்படும்போது நேர்மையான ஊடகவியலாளர்களும் சந்தேகத்துடன் பார்க்கப்படவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சர்வதேச மனிதஉரிமைகள் பணியகம் வெளியிட்டுள்ள ஒன்பது ஊடகவியலாளர்கள் இங்கு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று பெயர்ப்பட்டியலுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறான தகவலாகும்.

இச்சம்பவங்கள் தொடர்பாக நாம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தவல்களைத் திரட்டியுள்ளோம். அதன்படி மூவர் புலிகளின் தகவல் சேகரிப்பாளர்கள். ஒருவர் கல்லூரி மாணவன். ஒருவர் அச்சக உரிமையாளர். மற்றும் ஒருவர் உதயன் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் ஊழியர். எஞ்சிய மூவர் மட்டுமே ஊடகவியலாளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

ஆனால் எல்லோருக்குமே ஊடகவியலாளர்கள் என்ற லேபல் குத்தப்பட்டுள்ளது. தவறாகப் பிரசாரம் செய்யப்படுகின்றது.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதாலேயே உண்மையான ஊடகவியலாளர்களுக்கு மட்டும் ஊடகவியலாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இவர்கள் தொடர்பான முழுப் பொறுப்பையும் ஊடக நிறுவனத்தின் ஆசிரியர்களே ஏற்கவேண்டும் எனவும் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா கூறினார். (த 01)

http://www.sudaroli.com/pages/news/today/05.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.