Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிய ரக நீர்மூழ்கி மூலம் புலிகள் தாக்கலாம் அதைத் தடுக்கவே கடற்கண்ணிகள் விதைப்பாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய ரக நீர்மூழ்கி மூலம் புலிகள் தாக்கலாம் அதைத் தடுக்கவே கடற்கண்ணிகள் விதைப்பாம்!

[saturday January 26 2008 05:50:56 AM GMT] [யாழினி]

கண்ணாடி இழைநார் கொண்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட சிறிய ரக நீர் மூழ்கிகளைப் பயன்படுத்தியும், கடல் வழித் தரையிறங்கு முறைகள் மூலமாகவும், இலங்கைப் படைகளின் கரையோர நிலைகள் மீது விடுதலைப் புலிகள் அதிரடிப் பாய்ச்சல் நடத்தலாம் என்ற உளவுத் தகவல்கள் காரணமாகவே கடலில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படை செய்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் கடற்படையின் கேந்திர நிலையங்களை அண்டி விசேட கடலடிப் பாதுகாப்பு செயன்முறைத்திட்டம் இதற்காகச் செயற்படுத்தப்பட்டிருக் கின்றது. நெடுந்தீவை அண்டிய கடற் பிரதேசத்தில் கடற்கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளன.

விசேட "சோனார்" கருவிகளும் இயக்கப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகள் சிறிய நீர்மூழ்கியை அல்லது கடற்புலிப் படகுகளைப் பயன்படுத்தி தரையிறங்குவதற்கு மேற் கொள்ளும் முயற்சிகளை இந்தக் கண்ணி வெடிகள் தடுக்கும் திறனுள்ளவை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக லங்கா கார்டியன் இணயத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் பிரிவினர் பயன்படுத்துவதற் காக, கடலடி ஆயுதங்களும், நீருக்கடியில் சுவாசிப்பதற்கான சாதனங்களும், அணிவ தற்கான உடைகளும் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.கடலுக்கடியில் நீந்திச்சென்று கப்பல் களைத் தாக்கக்கூடிய விடுதலைப் புலி களின் விசேட படைப்பிரிவைச் சேர்ந்த வர்களைத் தேடியழிப்பதற்கு இலங்கைக் கடற்படை விசேட பிரிவொன்றை உரு வாக்கியுள்ளது. அவர்களுக்கு நீருக்கடியில் சுவாசிப்பதற்கான சாதனங்கள் அவசியம் என்பதால் அவை சுவீகரிக்கப்பட்டிருக் கின்றன என்றும் கூறப்பட்டது.

விடுதலைப் புலிகள் கடலுக்கடியில் சுவாசிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நவீன சாதனங்களின் துணையுடன் கொழும் புத் துறைமுகத்தைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர் எனக் கடற்படைப் புல னாய்வு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத் துள்ளது.இதற்கென விசேட பயிற்சி பெற்ற குழுவொன்று புலிகளால் உருவாக்கப்பட் டுள்ளது. இதன் தலைவர் வெளிநாட்டில் பயிற்சி பெற்றுள்ளார் என்றும் கூறப்படு கின்றது.

மேலும் இந்தக் குழுவின் தலைவர் நீர்கொழும்பிற்கு அருகில் கைது செய்யப்பட்டார் எனவும், மோசமான காலநிலை காரணமாக அக்குழுவின் அப்போதைய முயற்சி தோல்வியில் முடிய அவர் சிக்கினார் என்றும் மேலும் கூறப்பட்டது.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.