Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலாலி மீதான தாக்குதலுக்கு தகவல் எவ்வாறு கிடைத்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி மீதான தாக்குதலுக்கு தகவல் எவ்வாறு கிடைத்தது?

-விதுரன்-

வன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. பாரிய படைநகர்வுகளென்பதை விட தினமும் சகல களமுனைகளிலும் சிறுசிறு மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்தச் சிறு மோதல்கள் உடனடியாக பாரிய படைநகர்வுகளாகும் சாத்தியங்கள் குறைவென்பதால் வன்னிக் களமுனையில் இவ்வாறான மோதல்கள் நீண்ட நாட்களுக்கு தொடரப்போகிறது.

விடுதலைப்புலிகள் வசமிருந்து கிழக்கை விடுவித்துவிட்டதாகக் கூறப்பட்ட நாள் முதல் வடக்கில் பாரிய தாக்குதல்கள் ஆரம்பமாகின. இந்தத் தாக்குதல்கள் ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியடையப்போகிறது. ஆனால், வன்னியிலோ அல்லது யாழ். குடாநாட்டிலோ குறிப்பிடத்தக்களவுக்கு படைத்தரப்பால் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லை.

குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் படையினரால் வன்னிக் களமுனையில் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து சில நூறு மீற்றர் தூரமே முன்னேற முடிந்துள்ளது. ஆயிரக்கணக்கில் படைகள் குவிக்கப்பட்டு தினமும் கனரக ஆயுதங்கள் முழு அளவில் பயன்படுத்தப்பட்டும் வன்னியிலோ அல்லது யாழ்.குடாநாட்டிலோ படையினரால் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லையென்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தற்போதைய நிலையில் வடபோர் முனையில் புலிகளுடன் பலத்த சமர்களில் ஈடுபட்டு வரும் படையினர் பெரும் உளவியல் போரிலும் ஈடுபட்டுள்ளனர். வன்னிக்குள் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கிளேமோர் தாக்குதல்கள் மூலம் மக்களை பெரும் அச்சத்திற்குள் தள்ளியும் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தை தாங்கள் நெருங்கிவிட்டது போன்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்த படைத்தரப்பு முயல்கிறது.

வவுனியா மற்றும் மன்னார் களமுனைகளில் முன்னரங்க பகுதிகளில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய சில தாக்குதல்களில் புலிகளின் ஓரிரு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதுடன் கிளிநொச்சியில் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை படையினரின் இந்த உளவியல் போருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

வன்னியில் இடம்பெறும் விமானத் தாக்குதல்களில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், படுகாயமடைந்துவிட்டதாகவும் புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டு வருவதாகவும் படையினர் தினமும் கூறுவதுடன் வன்னியில் புலிகளின் முக்கியஸ்தர்களே தங்களுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்குவதாகவும் அந்தத் தகவல்கள் மூலமே தாங்கள் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் படைத்தரப்பு கூறி வருகின்றது.

புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்கள் மிக மிக இரகசியமானவை என்பது அனைவரும் அறிந்தவை. அப்படியானவர்களின் நடமாட்டங்கள் குறித்த தகவல்கள் படைத்தரப்புக்கு கிடைக்கின்றன என்றால் அது புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளூடாகவே கிடைக்க வேண்டும். சாதாரண தலைவர்கள மற்றும் போராளிகளுக்கு இவ்வாறான இரகசியத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனால், தங்களுக்கு புலிகளின் உயர் மட்டத்திலிருந்து தகவல்கள் தரப்படுவதுபோன்றும் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளை அழிக்க புலிகளின் தலைமைப்பீடத்திலிருப்போர் முனைவது போன்றும் புலிகள் அமைப்புக்குள் தலைமைப் போட்டி பெருமளவில் நிலவுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே படைத்தரப்பு இவ்வாறான தகவல்களை வெளியிட்டு தமிழ் மக்களை குழப்ப முனைகிறது.

ஒவ்வொரு தடவையும் வன்னியில் இடம்பெறும் கடும் விமானத் தாக்குதலின் போதும் புலிகளின் ஒவ்வொரு தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் படைத்தரப்பு கூறுவதுடன் அங்கிருந்து கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலமே இலக்குகள் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகவும் கூறுவர். ஆனால், அங்கு இடம்பெற்ற தாக்குதல்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளே அழிக்கப்பட்டதாக பின்னர் தெரியவரும்.

இதன்மூலம், புலிகளின் முக்கியஸ்தர்கள் தங்களுக்கு சரியான தகவல்களைத் தருவது போன்றும் தாங்களும் புலிகளின் சரியான இலக்குகளையே தாக்கியது போன்றும் தங்களின் இவ்வாறான தாக்குதல்களில் புலிகளின் முக்கியஸ்தர்களே கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் இதன்மூலம் மக்களை குழப்பி உளவியல் ரீதியில் அவர்களை பாதிப்படையச் செய்வதுமே படையினரின் தந்திரமாகும்.

இவ்வாறானதொரு நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை காலை பலாலி இராணுவத் தலைமையகம் மீது விடுதலைப்புலிகள் பலத்த ஷெல் தாக்குதலை நடத்தி அரசுக்கும் படைத் தலைமைக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஏயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா ஆகியோர் உட்பட பல சிரேஷ்ட படை அதிகாரிகள் பலாலி விமானப் படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே இந்தச் ஷெல்கள் விமானப் படைத்தளத்தை தாக்கியுள்ளன.

உடனடியாகத் தகவல்கள் பறக்கவே பலாலி விமானப் படைத்தளத்தில் தரையிறங்காது, இவர்களுடன் வந்த விமானம் அவசர அவசரமாகக் கொழும்பு திரும்பியது. 34 ஷெல்கள் சுமார் அரை மணிநேரத்தில் அந்தப் பிரதேசத்தை தாக்கியதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துமுள்ளனர். வாகனமொன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. மிக மிக முக்கிய பிரமுர்கள் தரையிறங்கவிருந்த நேரத்தில் அங்கு இடம்பெற்ற தாக்குதலானது படைத்தரப்பை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.