Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்த செய்திகளும் சிங்கள ஊடகங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த செய்திகளும் சிங்கள ஊடகங்களும்

-நாரதர்-

சமூகத்தில் யதார்த்தமானதொரு எடுத்துக்காட்டொன்று உண்டு. ஒரு நாயின் மீது கல் எறிந்தால் அக்கல் நாயின் எப்பாகத்தில் பட்டாலும் அது தன் காலை தூக்கிக்கொண்டுதான் ஓடும். அதேபோல் தான் இலங்கையில் எந்தவொரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றாலும் அதனை விடுதலைப் புலிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் அவ்வன் முறைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதாகும்.

அதேவேளை, இன்று சமாதானத்திற்கு ஆதரவாக எந்தவொரு செயற்பாடுகளுமே இலங்கைத் தீவில் காண்பதற்கில்லை. அவ்வாறு ஆதரவாக செயலாற்றுபவர்களும் குரலெழுப்புவர்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளர்கள் எனவும் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்படுவதுடன் உயிராபத்தையும் விளைவிக்கப்படுகின்றன. சமாதானத்திற்கு ஆரவாக பெருமளவில் பாடுபட்ட சிவில் அமைப்புக்கள் மற்றும் சமாதான விரும்பிகளின் குரல்கள் இன்று ஓய்ந்துள்ளன.

அந்த வகையில் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஊடகங்களின் வகிபாகம் சமாதானத்தின் மீது எந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றதென்பது மிகவும் முக்கியமானதாகும்.

இன்று தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யுத்தத்தின் விளைவுகளை அச்சு ஊடகங்கள் மிகவும் பாரபட்சமான முறையில் போரை ஆதரிக்கும் வகையிலும் கொழும்பிலிருந்து சிங்களப் பத்திரிகைகள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 23 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி வந்து செல்லும் தளமென குறிப்பிடப்படும் `எக்ஸ்ரே பேஸ்' தளத்தின் மீது இலங்கை விமானப்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதில் பிரபாகரன் காயமடைந்ததாகவும் செய்தி சிங்களப் பத்திரிகைகளிலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எந்தளவெனில் அனைத்துப் பத்திரிகைகளும் பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.

அத்துடன், இத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தியினை பெரும் ஆரவாத்துடன் மகிழ்ச்சியுடன் பிரதான தலைப்புச் செய்திகளாக 24 ஆம் திகதி பிரசுரித்திருந்தன.

அவை வருமாறு;

திவயின: பிரதான தலைப்புச் செய்தி

இரணைமடுவுக்கு கிழக்காக அமைந்துள்ள பிரபாகரன் இருந்த முகாம் விமானப்படையினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது- விமானப்படைப் பேச்சாளர் - புலிகளின் தகவல் பரிமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

(25 ஆம் திகதி இத் தாக்குதல் பற்றி `பிரபாகரனின் கோட்பாடு' என்ற தலைப்பில் தன் தலைப்பினை விபரித்திருந்தார்.)

லங்கா தீப:- முன்பக்கச் செய்தி

`பிரபா மறைந்திருந்த முகாம் மீது குண்டு மாரி' அவர் இறந்தாரா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

லக்பிம:- பிரதான தலைப்புச் செய்தி

`பிரபா மறைந்திருந்த எக்ஸ்ரே பேஸ் முகாம் விமானப்படையினரின் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளது.' புலிகளின் தலைவர் உயிரிழந்துள்ளார் என வதந்தி.

டெய்லி மிரர்:- முன்பக்கச் செய்தி

`பிரபாகரன் அங்கு இருந்தாரா' என்ற தலைப்புடன் கிரபிக்ஸ் படங்களுடன் தன் செய்தியினை வெளியிட்டிருந்தது.

த ஐலன்ட்:- பிரதான தலைப்புச் செய்தி

`விமானப்படைத் தாக்குதலுக்குப் பின் பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாது'

-பதுங்கு குழிக்குப் பலத்த சேதம்

-புலிகளின் வானொலியில் அமைதி அத்துடன் கடைகளை மூடுமாறு புலிகள் உத்தரவு

டெய்லி நியூஸ்:- முன்பக்கச் செய்தி

விமானப்படையினர் பிரபாகரனின் எக்ஸ்ரே தளம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் இச் சம்பவத்தினை முன்பக்க சிறு செய்தியாகவும் இரு பக்க கருத்துக்களையும் வெளியிட்டிருந்தன. இச் செய்தியினால் பத்திரிகை நிறுவனத்திற்கு நல்ல இலாபத்தினைத் தேடிக்கொடுத்தவொரு வதந்தியாகும். அதேவேளை, போரின் நியாயத் தன்மையினையும் போர் ஆதரவு மனப்பான்மையினையும் மிகவும் சூட்சுமமான முறையில் தனது சமூகத்தினர் மத்தியில் எடுத்துச் சென்றுள்ளார்.

அதேவேளை, புதன்கிழமை (30 ஆம் திகதி) மாலை மன்னார் மடுப்பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 11 மாணவர்கள் அடங்கலாக பதினெட்டுப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை இப்பத்திரிகைகள் எந்தவொரு முன்னுரிமையும் வழங்கவும் இல்லை. பிரதான தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கவுமில்லை.

தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் பிரதான தலைப்புச் செய்தியாக புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்த அதேவேளை சிங்களப் பத்திரிகைகள் அனைத்தும் முன்பக்கச் சிறு செய்திகளாக நான்கு அங்குல செய்திகளாக பிரசுரித்திருந்தன. ஆங்கில பத்திரிகைகளும் அவ்வாறே செயற்பட்டிருந்தன.

பிரபாகரன் கொலையுண்டாரா என்ற செய்தியில் காட்டிய அக்கறையும் கரிசனையும் அப்பாவி பொதுமக்கள் பலிகொண்ட செய்தியில் எடுத்துக்காட்ட முன்வராததன் மூலம் தெற்கின் மனிதாபிமானம் இதில் நன்கு புலப்படுகிறது. அதிலும் இத் தாக்குதல் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதால் அதற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்த கூற்றே செய்தியின் சாரமாகவும் அமைந்திருந்து.

மொனறாகலை ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்தினை சிங்களப் பத்திரிகைகள் போன்று தமிழ்ப் பத்திரிகைகளும் பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன. அவை பாரபட்சமான முறையில் செய்தியினைப் பிரசுரிக்கவில்லை. சமூகத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்ல ஊடகங்கள் இவ்வாறு தொடர்ந்து செயற்படுமானால் தெற்கில் மனிதாபிமானமற்ற சமுதாயத்தை உருவாக்கியதில் இவ்வூடகங்களின் பங்கு அளப்பரியது என்பதனையும் சொல்லிவைக்கின்றோம்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.