Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி.

09.02.2008 / நிருபர் எல்லாளன்

சிறிலங்கா இராணுவ உயர்அதிகாரிகள் குழுவென்று இந்தியாவில் பயிற்சி பெற்றுவருவதாக இந்திய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

படையப்புலனாய்வுத்துறையினரை உள்ளடக்கிய இந்த அதிகாரிகளுக்கு புனேயில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் பல்வேறு படைத்தளங்களில் இவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் என்றும் இதுகுறித்த தகவல்கள் வெகு இரகசியமாகப் பேணப்படுவதாகவும் அவ்ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனி 09-02-2008 12:23 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்]

புனாவில் சிறீலங்காவின் இரகசிய இராணுவப் பயிற்சிக் குழு

சிறீலங்காவின் உயர்தர இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் 5 நாட்களுக்கு முன்பு இந்தியாவின் பூனா நகரத்தில் வந்து இறங்கியுள்ளனர். இந்திய உயர் மட்ட புலனாய்வுத்துறை மற்றும் படைத்தரப்பை சார்ந்த பல உயர் பாதுகாப்பு நிறுவனங்கள், முன்னோடிப் பயிற்சிகளை சிறீலங்காவின் படைத்தரப்பினருக்கு வழங்கவிருக்கின்றனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு மையத்தின் சிறீலங்காவிற்கான ஆரம்பப் பயிற்சி வெள்ளிக் கிழமை தொடங்கி விட்டது. இந்தியாவின் இராணுவ புலனாய்வுத்துறை பயிற்சிக் கல்லூரி, சிறீலங்கா படைத்துறையினருக்கு நவீன இலத்திரனியல் இராணுவத் தளபாடங்களை இயக்குவது, கட்டளைத்துறை சார்ந்த விடயங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், கணனி போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கவிருக்கின்றது.

சிறீலங்கா படைத்துறையினரின் இந்தியாவிற்கான இரகசிய விஜயமானது, அண்மையில் இந்திய பிரதம கடற் படை அட்மிரல் சுரேஷ் மேத்தா அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான, இந்திய சிறீலங்கா கடற்படைகள் புலனாய்வு நடவடிக்கைகளை பரிமாறிக் கொள்ளும் திட்டத்தை முக்கியத்துவப் படுத்தி அமைவதாக தெரிய வருகின்றது.

மேற்சொன்ன பயிற்சி முடிவுற்றவுடன் புலனாய்வு பயற்சிக் கல்லூரி நாடு முழுவதும் அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிய வருகின்றது. 2007ம் ஆண்டு இந்தியாவின் உயர்மட்ட படைத்துறைக் குழு சிறீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது பயிற்சிக் கல்லூரி அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

ஆரம்பத்தில் ஈழப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியைப் போன்றதாகத்தானிருக்கும்.

இலங்கை இராணுவ உயர்மட்டக்குழு ஒன்று இந்தியாவிற்கு இரகசிய விஜயம் மேற் கொண்டு உயர்தர புலனாய்வுப் பயிற்சிகளைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் பூனே நகரிலுள்ள இந்திய இரா ணுவ தேசிய பயிற்சிக் கல்லூரியில் இடம் பெற்ற ஐந்துநாள் பயிற்சி நெறியிலேயே இந்த உயர்மட்டக்குழுவினர் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை ரைம்ஸ் ஒவ் இந் தியா வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை இராணுவ உயர்மட்டக்குழுவைச் சேர்ந்த மூவர் இந்திய இராணுவ தேசிய பயிற் சிக் கல்லூரியில் உயர்தர புலனாய்வுப் பயிற்சிக ளைப் பெறுவதற்காக இரகசிய விஜயம் மேற் கொண்டுவந்து பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ இராணுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவே இந்த பயிற்சியில் கலந்துகொண்டது. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ இராணுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான மேஜர் ஜெனரல் பாலசூரிய தலைமையிலான இந்த உயர்மட்டக்குழுவில் கொமாண்டர் ஏ.எல். பிஎஸ். திலகரட்ண , பயிற்சிப் பிரிவுக் கட் டளை அதிகாரியான டபிள்யூ. எம். அமரதாச ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த 4 ஆம் திகதி ஆரம்பித்த இந்த உயர் தர புலனாய்வுப் பயிற்சி கடந்த வெள்ளிக் கிழமை நிறைவடைந்தது என்று இந்திய இரா ணுவத்தின் தேசிய பயிற்சிக் கல்லூரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் இருந்துவரும் பிரதி நிதிகளைப் போல் அல்லாது இலங்கை இரா ணுவ உயர்மட்டக்குழுவினருக்கு இந்த பயிற்சிக்கல்லூரியில் அனைத்து துறைகளிலுமான புலனாய்வு விளக்கங்கங்களும் , பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக நவீன இலத்திரனியல் ஆயுதங்களைக் கையாள்வது குறித்த உயர்தர பயிற்சிகள் , தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகளைப் பேணும் பயிற்சிகள் , கணினி புலனாய்வு பயிற்சிகள் உட்பட மேலும் பல பயிற்சிகளை இலங்கையிலிருந்து சென்ற இராணுவ உயர்மட்டக்குழுவினர் பெற்றுள்ளனர்.

இந்த பயிற்சி நெறியில் மன்னார் மற்றும் பாக்கு நீரிணை பகுதியில் புலிகளின் நடமாட்டங்கள் மற்றும் அதுகுறித்த புலனாய்வுத்தகவல்களையும் இந்திய இராணுவத்தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தாவுடன் இவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்துவதற்கான பயிற்சி நெறிகளையே இலங்கையில் இருந்து சென்ற இராணுவ உயர்மட்டக்குழுவினர் பெற்றுள்ளனர் .

இந்தியாவிலுள்ள அனைத்து துறைகளுக்குமான புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கும் ஒரேயொரு பயிற்சி நிலையமாக இந்திய இராணுவ தேசிய பயிற்சிக் கல்லூரி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஏழு பேர் அடங்கிய இந்திய இராணுவ உயர்மட்டக்குழு ஒன்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின்போது இலங்கையில் இராணுவப் பயிற்சிக்கல்லூரியை அமைப்பது குறித்து அவர்கள் கலந்துரையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.