Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதி சர்வதேசத்துக்கு இரட்டை வேடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதி சர்வதேசத்துக்கு இரட்டை வேடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

2/10/2008 10:27:22 PM

வீரகேசரி நாளேடு - தமிழர் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குமேல் அழுத்தங்களை கொடுக்காது என்ற காரணத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியில் எதிர்ப்பும் உள்ளுக்குள் உறவும் என இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருப்பதாக வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கை அரசின் மீதான சர்வதேசத்தின் அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில்

பெரும் குறையொன்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி தொடர்பாக கருத்துக் கூறியபோதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது திணித்துள்ள மனித உரிமை மீறல்கள், அவலங்கள் மற்றும் யுத்தம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஆனால், இது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அப்படியே இருந்தாலும் சர்வதேசத்தின் கோரிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் புறக்கணித்தே வருகின்றது.

உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற எந்தவொரு நல்லலெண்ணமும் கிடையாது. அதேபோல், எமது மக்களை சுதந்திரமாக வாழவிடவும் மாட்டாது. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது தனது தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டுமாயின் சர்வதேசத்தின் கைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

இதனால், அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொள்ள விரும்பாத அதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேசத்தின் நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வினை முன்வைக்கப்போவதில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றது.

அதேபோல், இலங்கைப்பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமானால், அண்டை நாடான இந்தியாவுடன் கலந்து பேசியே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலையில் இந்தியாவை வளைத்துப்போட்டுக்கொள்ளும் நோக்கில் "இந்தியா எமது பக்கம்' என்ற போலியான வார்த்தைகளின் மூலமாக ஒரு ராஜதந்திர சூழச்சி நாடகத்தை அரங்கேற்றவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜ முனைந்து வருகின்றார்.

இதனை எந்த கோணத்தில் நோக்கினாலும் ஜனாதிபதி மஹிந்தவின் ஏமாற்று வேலைகளும் அவரது இரட்டை வேடமும் அம்பலப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது அரசாங்கத்தினும் இத்தகைய செயற்பாடுகளுக்கு முக்கிய காரணமாக அமைவது இலங்கைத் தமிழர் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேசத்தின் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அவுக்கு மேல் இருக்காது என்பதை அறிந்து வைத்திருப்பதினாலேயே ஆகும்.

இதன் காரணமாக தமிழர் பிரச்சினை மூடி மறைக்கப்படும். அது தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்படுவதுமே நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேசத்தின் அழுத்தம் ஒரு இறுகிய நிலை இல்லாததன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் அது பெரும் குறையாகவே இருந்து வருகின்றது.

அது தடுமாற்றத்தால் வருவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.