Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் புனர்வாழ்வு கழகம் டென்மார்க்கின் நிலவர அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் புனர்வாழ்வு கழகம் டென்மார்க்கின் நிலவர அறிக்கை!

நிலவர அறிக்கை 23.02.2008

http://tamilvoice.dk/images//trodk_press_release_230208.pdf

சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கிக் கணக்குகளை 2006 செப்டம்பர் மாதத்துடன் முடக்கி கொண்டதோடு அதன் தொடர்ச்சியாக 2007 நவம்பர் மாதத்தில் தடையும் செய்து கொண்டது அதேகாலப் பகுதியில் அமெரிக்காவும் தனது நாட்டிலுள்;ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கி கணக்குகளை முடக்கி கொண்டதுவும் நாம் அவைரும் அறிந்ததே.

இதன் பின்ணணியில் எமக்கெதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அற்ற நிலையிலும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து கொண்டும் டென்மார்க் காவல்துறையினர் 2007 நவம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து எமது வங்கிக் கணக்கையும் முடக்கியிருந்தனர் இத் தகவல் எமக்கு தெரியவந்ததும் எமது வழக்கறிஞர் ஊடாக காவல்துறையினருடன் தொடர்பு கொண்ட போதுதான் காவல்துறையினர் வங்கிக் கணக்கை முடக்குவதற்கான நீதி மன்ற அனுமதியையும் பெற்றுகொண்டனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதனை எதிர்த்து நாம் எமது வழக்கறிஞர் ஊடாக மேன் முறையீடு செய்துள்ளோம் அது விசாரணைக்கு வரும்போது டென்மார்க் பிரதமர், வெளிநாட்டு அமைச்சர், நிதிஅமைச்சர் மற்றும் இலங்கைக்கான டென்மார்க் தூதுவர் ஆகியோரை சாட்சியாக கூப்பிடும் படியும் மாநில நீதிமன்றத்திற்கு எமது வழக்கறிஞரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒரு அரச சார்பற்ற மனிதாபிமான தொண்டர் நிறுவனத்திற்கு எதிராக வல்லாண்மை கொண்ட சக்திகளின் அரசியல் நோக்கம் கொண்ட இச்சதிச் செயலை மனித விழுமியங்களுக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் டென்மார்க்கின் நீதித் துறை சரியாகப் புரிந்து கொண்டு எமக்கும் நீதி தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

டென்மார்க்கில் இதுபோல் கடந்த காலத்தில் வேறு மூன்று தொண்டர் அமைப்புகளுக்கு எதிராக வழக்குகள் நடைபெற்று அந்த அமைப்புகள் மீதான சந்தேகம் விலக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் டென்மார்க் தற்போது சந்தித்துள்ள நெருக்கடி நிலை தெடர்பான ஓர் செய்தியை டெனிஸ் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தோம் அந்த செய்தியை டெனிஸ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன டெனிஸ் ஊடகங்களில் வந்த செய்தி விடையமாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களையும் கேள்விகளையும் பயன்படுத்தி சில விசமிகள் தமது ஆழ்மன ஆசைகளையும் விருப்பங்களையும் உண்மை போல் பரப்பி வருவதை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய மக்களே நம் முன்னே விரிந்து கிடக்கும் மிகப்பெரிய பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து, மக்களுக்கான மனித நேயப் பணியில் உச்ச நிலையை வெளிப்படுத்த வேண்டிய காலமிது. ஆகவே விசமிகளது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்துக்கு பலியாகாது உங்களது கேள்விகள் சந்தேகங்களை எம்முடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தெளிவு படுத்தி கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நன்றி.

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Vasan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க் ஊடகத்தில் வந்த செய்தி (ஆங்கிலத்தில்)

http://www.cphpost.dk/get/105736.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.