Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரி மீனவர்கள் கடத்தல் - இலங்கை மீண்டும் அட்டகாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமரி மீனவர்கள் கடத்தல் - இலங்கை மீண்டும் அட்டகாசம்

சனிக்கிழமை, மார்ச் 8, 2008

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளதால், அங்கு பதட்டம் நிலவுகிறது.

ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கிறிஸ்டியை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பரபரப்பே இன்னும் விலகாத நிலையில் நேற்று குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடத்திச் சென்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஆண்டு நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொன்றது யார் என்பதில் இன்னும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதுதவிர கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்று விடுவித்தது.

சமீபத்தில் கூட தூத்தூரைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது.

இந்த நிலையில் நேற்று 62 பேரை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றுள்ளனர். நீரோடி, மார்த்தாண்டன் துறை, சின்னதுறை, வள்ளன்விளை, தூத்தூர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 6 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று முன்தினம் இவர்கள் ஊர் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரவில்லை. இதனால் இந்த கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் 6 படகுகளிலும் இருந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற தகவல் கிடைத்தது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். கிராமங்கள் அனைத்தும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலா உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், 62 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் தூத்தூர் மீன் பிடி சங்கத்தினர் மூலம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர் எனக்குத் தகவல் கொடுத்தார். இந்த விவரம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீனவர்களை மீட்க உரிய வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஜோதி நிர்மலா.

இலங்கை கடற்படையினர் அட்டகாசத்தால் தமிழக மீனவர்கள் பெரும் விரக்தியிலும், வேதனையிலும் அதிருப்தியிலும் மூழ்கியுள்ளனர்.

இலங்கைப் படைகளால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போதும், கடத்தப்படும்போதும் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்து அரசுகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதால்தான் இந்த அவல நிலை தொடருகிறது. இரும்புக் கரம் கொண்டு இலங்கையின் செயலை நிறுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துயரம் நிரந்தரமாக நீங்கும் என்றும் மீனவர்கள் கோருகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...ankan-navy.html

  • கருத்துக்கள உறவுகள்

முதல்நாள் ஒரு மீனவரை இலங்கைக் கடற்படை சுட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பைத் திசை திருப்ப இந்தச் சதிவேலை செய்யப்பட்டுள்ளது. தற்போது காணாமற் போயுள்ள மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களைத் தமிழ்ப் போராளிகளே கடத்தினர் என்று கதைவிடப் போகிறார்கள். இரண்டு அரசாங்கங்களும் அவர்களின் கடற்படைகளும், புலனாய்வுத் துறைகளும் கூட்டாகச் சேர்ந்தே இந்தக் கடத்தல் நாடகத்தை நடத்தியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.