Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன். கணேசமூர்த்திக்கு "மாமனிதர்" விருது: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு

Featured Replies

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, "இலங்கை மண்" வானொலி நாடக ஆசிரியரான படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், "மாமனிதர்" விருது வழங்கி மதிப்பளித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 16-03-2008 02:50 மணி தமிழீழம் [சிறீதரன்]

பொன் கணேசமூர்த்தி அவர்களை, மாமனிதராக தமிழீழ தேசியத் தலைவர் மதிப்பளித்துள்ளார்

ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பொன் கணேசமூர்த்தி அவர்களை, மாமனிதராக தமிழீழ தேசியத் தலைவர் மதிப்பளித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் நாளன்று, யாழ் குடாநாட்டில் சிறீலங்கா படைகள் அரங்கேற்றிய கொலை வெறியாட்டத்தில், யாழ் நகரில் இயங்கும் மக்கள் வங்கியின் காங்கேசன்துறைக் கிளையின் முகாமையாளரும், தமிழ் தேசிய எழுத்தாளருமான பொன்.கணேசமூர்த்தி அவர்கள் பலியாகினார். இவரால் எழுதப்பட்ட, 'இலங்கை மண்' என்ற தலைசிறந்த நாடகநூல் இன்று கிளிநொச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இதன்பொழுது, பொன்.கணேசமூர்த்தி அவர்களுக்கு மாமனிதர் நிலை வழங்கி, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்த செய்தி, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால் படித்தளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பண்பாட்டு மண்படத்தில், இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெற்ற நூல் அறிமுக நிகழ்விற்கு, தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனையின் பணிமுதல்வர் பொன்.தியாகம் அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை – பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்கள் ஏற்ற, மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு, சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள் மலர் மாலை அணிவித்தார். தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்களின் தலைமையுரையினை தொடர்ந்து, வெளியீட்டுரையினை புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் அவர்கள் ஆற்றினார்.நூலை, போராளி அன்புச்செல்வன் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்படியை, போராளி மருத்துவர் தேவா அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் வழங்க, முதற் சிறப்புப் படியை, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலிற்கான மதிப்பீட்டுரையினை, சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி அவர்களும் சிறப்புரையினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களும் ஆற்றியிருந்தனார்.

தூங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டியெழுப்பியவர் பொன் கணேசமூர்த்தி அவர்கள் என, தமிழீழ தேசியத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பொன்.கணேசமூர்த்தி அவர்களுக்கு, மாமனிதர் நிலை வழங்கி மதிப்பளித்திருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், ஆதித்தமிழ் மன்னன் இராவணனை கதாநாயகனானக் கொண்டு, அவர் எழுதிய 'இலங்கை மண்' எனும் கலைப்படைப்பை, எவருமே மறந்துவிட முடியாது எனக் கூறியுள்ளார்.

''மக்களின் விடுதலை என்ற ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்து, அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய அயராது போராடி, அந்த இலட்சியப் போரில் தன்னையே அர்ப்பணித்த ஒரு உயர்ந்த மனிதர் இன்று எம்முடன் இல்லை.

இந்த உன்னதமான மனிதரை பகைவன் பலிகொண்ட செய்தி, எமக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது.

திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சத்திலே நேர்மையும் உள்ளத்திலே உயர்ந்த எண்ணமும் கொண்டவர். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார்.

நகைச்சுவை நடனமாடும் அவரது நாவும், கேட்பதற்கு இனிமையான அவரது கேளிக்கைப் பேச்சும் அனைவரையும் கவர்வன.பொதுவாகவே, உயரிய கலைப்படைப்புக்கள் எப்போதுமே இரு முகங்களைத் தன்னகத்தே கொண்டவை. தாம் தோன்றிய சமகாலத்தை நோக்கியதாக ஒரு முகமும், எல்லையற்று வியாபித்து நிற்கின்ற எதிர்காலத்தை நோக்கிய இன்னொரு முகமுமாக, எக்காலத்திற்கும் பொருந்தும் உயரிய தன்மை கொண்டவை.

இத்தகைய, காலத்தில் சாகாத கலைப்படைப்புக்களைப் படைத்து, எமது மக்களது மனங்களைத் தொட்டுச் சென்றவர் இவர்.

கவிஞராக, சிந்தனையாளராக, வரலாற்று அறிஞராக, மேடைப் பேச்சாளராக, பாடகராக, பல்துறை விற்பன்னராக அறிமுகமாகி, கடந்த நாற்பது ஆண்டுகளில் அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.

இவர் தமிழீழ மண் மீதும், மக்கள் மீதும் அளவில்லாத அன்பும் பாசமும் கொண்டவர். தமிழீழ மண் விடுதலை பெற்று, ஒரு சுதந்திர தேசமாக மலர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர் இந்த அபிலாசைக்காக தனது அறிவாற்றலாலும், செயலாற்றலாலும் அயராது உழைத்தார்.

தனது ஆழ்மனதில் எரிமலையாகக் குமுறிய விடுதலை வேட்கையை, உணர்வின் வரிகளாக வடித்து, எம்மக்களது மனங்களிலே விடுதலைத்தீயை மூட்டினார்.இருண்ட காலத்து இதிகாசங்களின் தாலாட்டுப்பாடல்களில் தூங்கிக்கிடந்த எம்மக்களைத் தட்டியெழுப்பி, விடுதலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சாதி, சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றிற்கு காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து, புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்பி, புதிய புரட்சிகரமான கருத்துக்களை மக்களதுமனதைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் முன்வைத்தார்.

சீதன முறைமை என்பது ஒரு பெண் அடக்குமுறை வடிவம் என்பதை, அறிவுசார் உலகத்தில் இருந்து சமூகவியல் கண்ணோட்டத்துடன் எடுத்து விளக்கி, பெண் விடுதலைக்குப் போராடினார்.

சாதாரண மனிதனின் சாதாரணமான சமூகப் பிரச்சினைகளைக்கூட, சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண மொழியில் எடுத்து விளக்கி சமூக விடுதலைக்காகப் போராடினார்.

தொண்ணூறுகளில் இவர் எழுதி, வானொலி நாடகமாக ஒலிபரப்பாகிய, இராவணனை கதாநாயகனாகக் கொண்ட ''இலங்கை மண்" எனும் கலைப்படைப்பை எவருமே மறந்துவிட முடியாது.

தமிழ் மன்னன் ஒருவனை, ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றுக்குப் பலியாக்கி, அதில் உண்மைகளை திரிவுபடுத்தி, பொய்மைகளை புனைவுபடுத்தி, தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து, உண்மையை அனைவருக்கும் உணரச் செய்தது இவருடைய படைப்பாகும்.

அத்தகைய காலத்தை மிஞ்சிய தமிழ் வரலாற்றை, கலைநுகர்வாளர்களின் கண்முன் கொணர்வித்து நிறுத்தியது, தமிழின் வாழ்வு மீது இவர் கொண்ட பற்றுதலுக்கு நற்சான்றாகும்.திரு.பொன். கணேசமூர்த்தி அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றுக்கு மதிப்பளித்தும், எமது தேச வளர்ச்சிக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பைக் கௌரவித்தும், ''மாமனிதர்'' என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.

உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை, சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.''

இவ்வாறு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

05_08_06_Ganeshamoorthy_200.jpg

தேசியத்தலைவரின் கையில் இருந்து விருது:

ganeshamoorthy-killing_040806.jpg

இனவிரோதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டபோது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.