Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் இரட்டைவேடத்துக்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன? அரசாங்கம் ஆராயவேண்டும் - என்கிறார் விமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இரட்டைவேடத்துக்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன? அரசாங்கம் ஆராயவேண்டும் - என்கிறார் விமல்

வீரகேசரி இணையம்3/27/2008 12:02:17 AM - புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதற்கு உதவி புரியும் இந்தியா; மறுபுறம் அரசியல் தீர்வை காணுமாறு வலியுறுத்துகிறது. இந்தியாவின் இத்தகைய இரட்டை வேடத்துக்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்பதை அரசாங்கம் அராய வேண்டும். பிரபாகரனை அழிக்க ஒத்துழைப்பு வழங்கும் இந்தியா அதற்கு கப்பமாக இலங்கையை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் சதித்திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தினை முன்னெடுப்பதை கைவிட்டு அதனை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும்கூறினார்.கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவை அச்சுறுத்தி, இலங்கையின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை ஊடரங்குச் சட்டம் மூலம் மௌனமாக்கி, பலாத்காரமாக சத்திர சிகிச்சையை மேற்கொள்வது போன்றே இந்தியாவினால் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் திணிக்கப்பட்டது. இதனை அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால், இன்று 13ஆவது திருத்தம் அரசியலமைப்பில் சட்டமாக்கப்பட்டுள்ளதெனக் கூறிக்கொண்டு அதனை முன்னெடுக்க முனைகிறது. இதனை கைவிட்டு இத்திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.

பிரபாகரனை அழிப்பதற்கான யுத்தத்திற்கு உதவி புரியும் இந்தியா மறுபுரம் அரசியல் தீர்வை காணுமாறும் வலியுறுத்துகிறது. எனவே இந்த இரட்டை வேடத்திற்குள் மறைந்திருக்கும் மர்மம் என்னவென்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். எமது நாட்டின் எரிபொருள் ஏகபோக உரிமையை தனதாக்கிக்கொண்டுள்ள இந்தியா மின்சக்தியையும் கைப்பற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு அரசாங்கமும் துணை போகிறது. மின்சக்தியும் கை மாறினால் நாடு மிகவும் பயங்கரமான நிலைக்கு தள்ளப்படும்.

இந்நிலை உருவானால் எமது நாட்டின் அரசியலில், பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும் சக்தியாகி இந்தியா உருவெடுக்கும். விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வி கண்டாலும் அதன் பின்னர் இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்குள் சிக்கிவிடும் அபாயம் தற்போது தோன்றியுள்ளது. பிரபாகரனை அழிப்பதற்கு உதவி செய்யும் இந்தியா அதற்கு கப்பமாக இலங்கையை அரசியல், பொருளாதார ரீதியாக ஆக்கிரமிக்கும் சூட்சுமத்தை வேகமாக முன்னெடுக்கின்றது.

அமெரிக்காவின் இரட்டை வேடம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கயை நிராகரிப்பதோடு கடுமையாக கண்டிக்கின்றோம். உலகில் எந்தவொரு நாட்டினதும் மனித உரிமைகள் தொடர்பாக பேசும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது. ஈராக்கில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை நியாயப்படுத்தும் புஷ் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்துவது எவ்வாறு நியாயமாகும். அரசின் வெளிநாட்டுக்கொள்கை ஜனாதிபதி ஈரானுக்கு விஜயத்தை மேற்கொள்கிறார். பிரதமர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்கிறார். பரஸ்பர விரோதமான வெளிநாட்டுக் கொள்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. எதுவிதமான நிலையான கொள்கைகள் இல்லாததால் இறுதியில் அனைவராலும் கைவிடப்படும் நிலையே எமக்கு ஏற்படும்.

அத்தோடு லண்டன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களிலுள்ள அதிகாரிகள் நாட்டின் நன்மை கருதி எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. வெளிநாட்டுக் கொள்கைகள் அனைத்தும் குழப்பகரமானதாகவே உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அண்மையில் சந்தித்த பிரபாகரன், கொசோவாவை போன்றதொரு பிரிவினையை இங்கும் எதிர்பார்ப்பதாகவும் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.