Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடி வாங்கி கொழும்பு திரும்பிய இயக்குநர் பெரீஸ் உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ் மற்றும் சிங்களத்தில் படம் எடுத்துள இயக்குநர் துஷேரா பெரீஸ், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

தனது பட பிரிண்டுகளை எடுத்துச் செல்ல இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உதவ வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டத்தில் அவர் குதித்துள்ளார்.

சிங்கள இயக்குநர் பெரீஸ், தனது பிரபாகரன் படத்திற்கான பிரிண்டுகளைப் போட சென்னைக்கு வந்தார். இங்குள்ள ஜெமினி லேபில் அவர் பிரிண்ட் போட வந்திருந்தார். இதை அறிந்த இயக்குநர் சீமான், திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

தமிழர்களையும், தமிழர்களின் போராட்டத்ைதயும் இழிவுபடுத்தும் வகையில் படம் எடுத்துள்ள பெரீஸின் படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜெமினி லேப் முன்பு போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்களுடன் சமாதானம் பேச வந்த பெரீஸை சிலர் தாக்கி சரமாரியாக உதைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரும் அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் படத்தைப் பார்ப்பது எனவும், அதுவரை பிரிண்ட் போடக் கூடாது எனவும் முடிவானது.

இதையடுத்து பெரீஸ் கொழும்பு திரும்பி விட்டார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது படத்தின் பிரிண்டுகளைப் பெறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். சாப்பாட்டை நிறுத்தி விட்டேன். மருந்து, தண்ணீர் என எதையும் உட் கொள்ளவில்லை.

இந்திய, இலங்கை அரசுகள் எனக்கு உதவ வேண்டும். எனது படத்தின் பிரிண்டுகள் எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். என்னை மிகவும் மோசமாக அடித்து, பிரிண்டுகளைப் பறித்துச் சென்று விட்டனர்.

இப்படத்தில் யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை. தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அப்பாவி, ஏழைத் தமிழர்களும், சிங்களர்களும் இந்தப் போரினால் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனர், உயர்ந்த ஜாதி தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதைத்தான் படத்தில் காட்டியுள்ளேன்.

ஆனால் நான் சொன்ன விளக்கத்தை என்னைத் தாக்கியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, காது கொடுத்துக் கேட்கவில்லை. இப்படத்தை நான் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்காக எடுத்துள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டினர். அது உண்மையல்ல.

இந்தப் படத்தைப் பார்க்க ராஜபக்சே விரும்பினார். அதைத்தான் நான் தெரிவித்திருந்தேன்.

அவர்கள் தாக்கியதில் எனது மூக்கு உடைந்து விட்டது. இன்னும் கூட ரத்தம் வந்து கொண்டுள்ளது. அடிக்கடி வாந்தியும் வருகிறது. முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கண்கள் இரண்டும் ரத்தச் சிவப்பாகியுள்ளது. ரத்தம் கட்டியுள்ளது என்று கூறியுள்ளார் பெரீஸ்.

முன்னதாக நிலைமை மோசமாக இருப்பதையடுத்து இந்திய அதிகாரிகள், பெரீஸை கொழும்பு திரும்பிச் சென்று விடுமாறு வற்புறுத்தவே அவர் கொழும்பு திரும்பியுள்ளார்.

thatstamil.com

Edited by கறுப்பன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்' படத்தின் தயாரிப்பாளர் துஷாரா

கொழும்பு வைத்தியசாலையில் உண்ணாவிரதம்

கொழும்பு, மார்ச் 28

சென்னையில் தமிழ் இன ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட "பிரபாகரன்' திரைப்படத்தை இயக்கிய இலங்கையரான துஷாரா பீரிஸ் தனது திரைப்படத்தின் பிரதிகளை சென்னையிலிருந்து மீளப் பெற்றுத்தருமாறு இலங்கை இந்திய அரசுகளைக் கோரி உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

தாக்குதலுக்காக கொழும்பு, நவலோஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துஷாரா பீரிஸ் தாம் உணவு, மருந்து மற்றும் நீரைத் தவிர்த்துவிட்டார் எனவும் தன்னைத் தாக்கியவர்களிடமிருந்து தனது திரைப்படத்தின் பிரிண்ட் பிரதிகளை மீளப் பெறுவதற்கு இந்திய இலங்கை அரசு உதவவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை திரைப்படத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களே தன்னைத் தாக்கினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்துத் தான் படமெடுக்கிறேன் எனவும், அவருக்கு எதிரான கருத்துகள் அதில் காணப்படுகின்றன எனவும் தன்னைத் தாக்கியவர்கள் கருதினர் என்றும் துஷாரா தெரிவித்துள்ளார்.

தமிழர் எதிர்ப்புப் படத்தை எடுக்கிறேன் எனக் குற்றம் சுமத்தி அவர்கள் கோஷமெழுப்பினர் எனவும், அதில் ஒருவர் தன்னைத் தாக்கினார் எனவும், துஷாரா பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் தான் மயக்கமடைந்தார் எனவும், மீண்டும் நினைவுதிரும்பிய வேளை தனது முகத்திலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துஷாரா பீரிஸ் குறிப்பிட்ட படம் தமிழ் மக்களுக்கோ சிங்களவர்களுக்கோ எதிரானது அல்ல, பாதுகாப்பாக இருந்துகொண்டு யுத்தத்தை வழிநடத்தும் செல்வந்த உயர் சாதியினர் பற்றியதே அது என்பதைத் தான் தெளிவுபடுத்த முயன்றார் எனவும்

எனினும் அவர்கள் அதனை செவிமடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கூட்டத்தில் இருந்த சிலர் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்காகப் படமெடுக்கிறார் எனத் தெரிவித்தனர் என்றும், எனினும் இது உண்மையல்ல, ஜனாதிபதி இந்தப் படத்தை ஆகப் பார்க்க மாத்திரம் விரும்பினார் என்றும் துஷாரா தெரிவித்துள்ளார்.

சென்னை திரைப்படத் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தனது படத்தில் தமிழ் எதிர்ப்புக் கருத்துகள் இருக்கின்றனவா எனப் பார்க்க விரும்பினர் எனவும், எனினும் பின்னர் அவர்கள் தனது படத்தின் பிரதிகளைக் கைப்பற்றினர் எனத் தாம் அறிந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசிய உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் திரைப்படமொன்று சென்னையில் தயாரிக்கப்படும்போது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தமிழ் இன ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.sudaroli.com/pages/news/today/02.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.