Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் கூறிய அனைத்தையும் பதிவு செய்திருப்பார்கள் என்று எண்ணியே அதன்கீழ் கையெழுத்திட்டேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறிய அனைத்தையும் பதிவு செய்திருப்பார்கள் என்று எண்ணியே அதன்கீழ் கையெழுத்திட்டேன்

வீரகேசரி நாளேடு 4/9/2008 8:53:49 AM - இரகசிய பொலிஸாரால் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில், நான் கூறிய அனைத்தையும் பதிவு செய்திருப்பார்கள் என எண்ணியே அதில் கையெழுத்திட்டேன். ஆனால், அந்த வாக்குமூலம் எனக்கு வாசித்து காட்டப்படவில்லை என மூதூரில் கொல்லப்பட்ட அக்ஷன் பெய்ம் ஊழியரான ஜயசீலனின் உறவினர் ஒருவர் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் எதனையும் கூறவில்லை என்று கூறிய அவர், தான் கூறுவது அனைத்தும் உண்மைத் தகவல்களே என்றும் கூறினார்.

அக்ஷன் கொன்ராலா பெய்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேர் கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் மூதூரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகளை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்ட விசாரணைகள் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ரெஸ்ரோறன்ட் ஹோலில் இடம்பெற்றது. இதன்போது சாட்சியை குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி கோமின் தயாசிறி,

கொல்லப்பட்டவரான ஜயசீலன் தொடர்பாக சாட்சியம் அளித்த சாட்சி ஆணைக்குழு முன்னிலையில், 2006 ஆகஸ்ட் 04 ஆம் திகதி காலை 6 மணிக்கும் 6.30க்கும் இடையில் ஜயசீலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார். ஆனால், 2006 ஆகஸ்ட் 14 ஆம் திகதி இரகசிய பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் 04 ஆம் திகதிய சம்பாஷணைகள் குறித்து எதுவும் கூறியிருக்கவில்லை. அவ்வாறான விடயம் அவ்வாக்குமூலத்தில் பதிவு செய்யப்படவும் இல்லை. எனவே, சாட்சி ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியத்தையே அளித்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவரது சாட்சியம் முன்னுக்குப் பின் முரணானதாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து மாவிலாறு அணைக்கட்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் மூடப்பட்டது மற்றும் அந்த அணைக்கட்டு இராணுவத்தினரால் மீண்டும் திறக்கப்பட்டது, 2002, 2005 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள் குறித்தும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த சட்டத்தரணி கோமின் தயாசிறியை இடைமறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் நிசங்க உடலாகம, கேள்விகள் தொடர்பில்லாமல் இருப்பதாகவும் அதேநேரம், ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் கேட்டு நேரத்தை விரயமாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர், அக்ஷன் பெய்ம் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரட்ணவேலன் மற்றும் அரசு தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி துலிப் ஜயக்கொடி ஆகியோர் தொடர்ந்தும் சாட்சியை குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் மேலும் கூறியதாவது: 2006 ஆகஸ்ட் முதலாம் திகதி மதிய வேளைக்குப் பின்னர் மூதூரில் யுத்த நிலைமை அதிகரித்திருந்தது உண்மைதான். அதனாலேயே, ஜயசீலனுடன் தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தேன்.

அதேபோல், எனது உறவினர்களும் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், அவர்களிடம் ஜயசீலன் என்ன பேசியிருப்பார் என்பது எனக்குத் தெரியாது.

அத்தோடு, ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி 6.00 6.30க்கிடையில் ஜயசீலனுடன் தொலைபேசியூடாக நான் பேசினேன் என்பது உண்மையாகும். இதன் பின்னர் 5 ஆம் திகதி அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் சிலர் மூதூரில் கொல்லப்பட்டு விட்டதாக தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் தெரிந்து கொண்டேன். என்னிடம் வாக்கு மூலம் பெறப்பட்டபோது இந்த விடயங்களை கூறியிருக்கிறேன்.

நான் கூறிய அனைத்து விடயங்களும் அவ்வாக்கு மூலத்தில் பதியப்பட்டிருக்கும் என்றே நம்பினேன். அதனடிப்படையிலேயே வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டவர்கள் காட்டிய இடத்தில் கையொப்பமுமிட்டேன். அந்த சமயத்தில் அவ்வாக்கு மூலம் எனக்கு வாசித்துக் காட்டப்படவில்லை. ஆனால், 2008 பெப்ரவரி மாதம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் நான் வழங்கிய வாக்கு மூலம் மீண்டும் எனக்கு வாசித்து காட்டப்பட்டது. ஆணைக்குழு முன்னிலையில் நான் பொய் எதனையும் கூறவில்லை. நான் கூறுவது அனைத்தும் உண்மையே. அத்துடன், அக்ஷன் பெய்ம் ஊழியரான ஜயசீலன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்பது குறித்து கூறியிருந்தேனே தவிர, இராணுவத்தினர்தான் சுட்டுக்கொன்றனர் என்று எந்த சாட்சியத்திலும் நான் கூறியிருக்கவில்லை. அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் தெரிந்துகொண்ட நாம், அன்று ஜயசீலனும் கொல்லப்பட்டு விட்டாரா என்ற விடயத்தை அறிய முடியாமல் இருந்தோம்.

ஆனால், அதற்கடுத்த நாள் 6 ஆம் திகதி ஊடகங்களின் வாயிலாக அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.