Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.தே.கட்சியின் சதியினாலேயே ஜே.வி.பி. இரண்டாகப் பிரிந்தது! விமல் வீரவன்ஸ அணியின் எம்.பி. காட்டம்

Featured Replies

ஜே.வி.பி. இரண்டாகப் பிளவு படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சியே காரணம் என்று விமல் வீரவன்ஸ தலைமையிலான ஜே.வி.பி. அணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜே.வி.பியின் எம்.பி. பியசிறி விஜயநாயக்க கூறியவை வருமாறு:

ஜே.வி.பியின் அரசியல் நடவடிக்கையைப் பிடிக்காத சிலர் அக்கட்சியை முற்றாக அழித்துவிட முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியின் ஒரு விளைவாகவே ஜே.வி.பிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சதித்திட்டம் காரணமாகவே ஜே.வி. பி. இரண்டாக உடைந்தது.

அக்கட்சியின் சதித்திட்டத்திற்கு ஜே.வி.பியைச் சேர்ந்த சிலர் உடன்பட்டிருந்தமை வேதனைக்குரிய விடயம்.

ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.ரவிகருணாநாயக்கவும் ஜே.வி.பி.யின் எம்.பி அநுரகுமார திசாநாயக்கவும், ஒன்றிணைந்தே ஜே.வி.பியை இரண்டாகப்பிளவுறச் செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து சதித்திட்டங்களைத் தீட்டிவருகின்றனர். இதை நாம் நன்கு அறிவோம். எமக்கு அடிக்கடி அச்சுறுத்தல்விடுக்கப்படுகி

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

சோமவங்சவா? வீரவன்சவா துரோகி என்பது எதிர்காலத்தில் மக்களுக்கு தெரியவரும்

இலங்கையில் முன்னணி அமைத்த அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் இறுதியில் 'விலாசம்' இல்லாது சிதறிப் போனதே வரலாறு ஆகும். அதுவே இன்று ஜே..வி.பிக்கும் நிகழ்ந்துள்ளது. சோமவங்சவா? வீரவன்சவா துரோகி என்பது எதிர்காலத்தல் மக்களுக்கு தெரியவரும் என்று ஐ.தே.கட்சியின் எம்.பி .தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் பிரிவினைக்கு ஐ.தே.க.வே காரணம் என்று கூறப்படுகிறதே? இது உண்மையா என்று கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜ.தே.கட்சிக்கு ஜே.வி.பி.யை பிரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இலங்கையில் அரசியல் கட்சிகளை பிரித்து சின்னா பின்னமாக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் தலைமையிலே இடம் பெற்று வருகின்றன. இது கட்சி அரசியலுக்கு ஏற்பட்டுள்ள சாபமாகும்.

ஆரம்பத்தில் ஐ.தே.க.வுக்குள் பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. தற்போது ஜே.வி.பி.க்குள் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது கட்சியிலிருந்து வெளியேறியவர்களை நாம் அச்சுறுத்தவோ அவர்களது வாகனங்களைப் பறிக்கவோ இல்லை. இன்று அமைச்சர்களாக அவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஜே.வி.பியிலிருந்து வெளியேறியவர்கள் மிரட்டப்படுகின்றார்கள். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இது தான் ஜேவி.பி. விலியுறுத்தும் ஜனநாயகமாகும். ஜேவி.பி. இடதுசாரி கட்சியல்ல, சிறிய முதலாளித்துவக் கட்சியென்பது தற்போது தோலுரித்து காட்டப்பட்டுள்ளது.

சோமவங்ச, வீரவன்சவை துரோகியென்கிறார், வீரவன்ச, சோமவங்கவை துரோகியெனக் குற்றம் சாட்டுகிறார், உண்மையில் யார் துரோகியென்பது மக்களுக்கு தெரியவரும். ஐ.தே.க வுக்கு ஜேவி.பி. யை பிரக்க வேண்டுமமென்ற தேவை கிடையாது. பாராளுமன்றத்தில் 5 அல்லது 6 எம்.பி. மாரே ஜேவி.பி.க்கு இருந்திருக்க வேண்டும். அத் தொகை 39 ஆக அதிகரித்ததன் காரணமாகவே இன்றைய நிலை ஏற்பட்டது.

நன்றி வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.