Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6lady.jpg

நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம்?

நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம்

சென்னை, மே. 6: வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி, பிரிங்கா சந்திப்பு நடக்க வில்லை எனக்கூறிய சிறை கண்காணிப்பாளர் இராஜசௌந்தரி திடீர் பல்டி அடித்துள்ளார். இந்த சந்திப்பு நடைபெற்றது உண்மை. மேலும் விவரங்கள் தெரிவிக்க இயலாது என வழக்கறிஞர் டி.ராஜ்குமாருக்கு திடீர் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரை மார்ச் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசினார்.

எந்த விதிகளின் அடிப்படையில் இவர்கள் சந்திப்பு நடந்தது?, எவ்வளவு நேரம் பேசினார்கள்?, என்ன பேசப்பட்டது என்பன போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கும்படி வழக்கறிஞர் டி.ராஜ்குமார் மனு செய்தார்.

இதற்கு சிறை கண்காணிப்பாளர் இராஜசௌந்தரி அளித்த பதிலில் வேலூர் பெண்கள் சிறையில் நளினியை, பிரியங்கா சந்திக்கவில்லை என தெரிவித்தார்.

ஆனால் நளினியுடனான சந்திப்பை பிரியங்கா உறுதி செய்தார். ""எனது தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி நளினியைச் சந்தித்து உண்மைதான். இந்த சந்திப்பு முழுக்க, முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பு'' என அவர் கூறினார்.

நளினி, அவரது கணவர் முருகன், நளினியின் சகோதரர் பாக்கியநாதன் ஆகியோரும் பிரியங்கா சந்திப்பு குறித்து கருத்துக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிறை அதிகாரி இராஜசௌந்தரி இப்படி ஒரு சந்திப்பே நடக்கவில்லை என கூறியதால், இவ்விஷயத்தில் யார் சொல்வது உண்மை என்ற குழப்பம் ஏற்பட்டது.

தவறான தகவை தெரிவித்த சிறை அதிகாரி இராஜசௌந்தரி மீது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜ்குமார் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணைத்தில் மனு செய்தார்.

தவறான தகவல் தெரிவித்ததற்காக சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜ்குமாருக்கு சிறை கண்காணிப்பாளரும், பொது தகவல் அலுவலருமான ராஜசௌந்தரி அனுப்பியுள்ள 2-வது கடிதம்:

2008,மார்ச் 19-ம் அன்று ஆயுள் தண்டனை சிறைவாசி எண். 810 நளினி என்பவருக்கும், மறைந்த முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி மகளான பிரியங்காவுக்கும் சந்திப்பு இச் சிறையில் நடைபெற்றது.

இச்சந்திப்பு, தமிழ்நாடு சிறை நடைமுறை நூல் தொகுதி இரண்டு, விதி எண்.520, 522 மற்றும் 526ல் தெரிவித்துள்ள சிறை விதிகளுக்கு இணங்க நடத்தப்பட்டது.

மேலும் மனுவில் கோரப்பட்டுள்ள மற்ற விபரங்கள் 2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் அத்தியாயம் இரண்டு பிரிவு 8(1)(ஜி)ன்படி வழங்க இயலவில்லை.

இச்சந்திப்பு குறித்த விவரங்கள் அவசியம் தேவையெனில் சிறைவாசியை நேர்காணல் மூலம் நேரில் சந்தித்து (சிறைவாசி தங்களை நேர்காணல் காண விருப்பம் தெரிவித்தால் மட்டும்) விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என சிறை அதிகாரி கூறியுள்ளார்.

எது உண்மை, எது பொய்? வழக்கறிஞர் மீண்டும் கடிதம்

வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளர் இராஜசௌந்தரிக்கு, வழக்கறிஞர் டி.ராஜ்குமார் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்:

2008, ஏப்ரல் 11-ம் தேதிய தங்களது கடிதத்தில் மார்ச் 19-ம் தேதி நளினியை யாரும் நேர்காணல் பார்க்கவில்லை என்றீர்கள். ஆனால் ஏப்ரல் 28-ம் தேதிய கடிதத்தில் மார்ச் 19-ம்தேதி நளினியை, பிரியங்கா தங்கள் சிறையில் நேர்காணல் பார்த்ததாக எழுதியுள்ளீர்கள்.

இதில் எது பொய், எது உண்மை?. இதில் ஏதோ ஒன்று பொய்யான தகவல். நீங்கள் ஏன் பொய்யான தகவலை தந்தீர்கள்?.

சிறை நடைமுறை நூல் தொகுதி இரண்டு விதி எண் 1094-ன்படி பிரதான நுழைவாயில் பதிவு புத்தகத்தில் படிவம் 21 மற்றும் 22-ல் பிரியங்கா சிறைக்குள் வந்த பொழுதும், வெளியே செல்லும் பொழுதும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதை சிறை கண்காணிப்பாளரான நீங்கள் மேற்பார்வையிட்டு சரியாக இருந்தால் கையொப்பம் இட வேண்டும். மார்ச் 19-ம் தேதி சிறைக்கு பிரியங்கா வந்தது உண்மையானால் அந்தப் புத்தகத்தில் பதிவு இருக்க வேண்டும். அதனுடைய பதிவின் ஜெராக்ஸ் நகலை எனக்கு தரவேண்டும். அப்படி பதிவு இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

ஏப்ரல் 11-ம் தேதி நான் கேட்ட தகவல், தகவல் அறியும் சட்டம் 8(1) (ஜி)-ன் படி வழங்கப்படவில்லை. அதனை நீங்கள் தர மறுத்தது சட்டப்படி தவறாகும். நான் பொது தகவல் அலுவலரான உங்களிடம் தான் விவரங்கள் கேட்டேனே தவிர சிறைவாசியிடம் விவரங்களை பெற்றுக் கொள்ள தங்களின் அறிவுரை தேவையில்லை. அதனால் முழுமையான தகவலை நீங்கள்தான் தர வேண்டும் என்று கடித்தில் கூறியுள்ளார்.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.