Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசாரா நகரை குறிவைக்கும் ஈராக்கிய அணுகுமுறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி திருமகள் ” பசாரா நகரை குறிவைக்கும் ஈராக்கிய அணுகுமுறைகள்”

திங்கள், 12 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்]

ஈராக்கின் பசாரா மாநிலத்தில் பிரித்தானிய அமெரிக்க படைகள் கூட்டாக களமிறக்கப்பட் டிருப்பது பற்றிய செய்திகள் பரவலாக பேசப் படும் இத்தருணத்தில், பசாரா மாநிலத்தின் முக்கியத்துவம் பற்றியதாகவும் பசாரா மாநிலத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கும் சியா இஸ்லாமிய பிரிவினர் பற்றிய தாகவும் அமைகின்றது இச் சிறுகட்டுரை.

ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுப் படைகள் பசாரா மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சியா இஸ் லாமிய பிரிவினரை உள்ளடக்கிய மெகிடி போராளிகளுக்கு எதிராகவும், பாக்தாத்தில் சியா இஸ்லாமிய பிரிவினர் பிரதேசத்தில் வாழும் போராளிகளுக்கு எதிராகவும் தேடுதல் வேட்டைகளை முடுக்கி விட்டுள்ளன. கடந்த மூன்று வாரங்களாக பசாரா மாநிலத்தில் யுத் தம் தீவிரமடைந்துள்ளது. ஈராக்கிய படைத் தரப்பினருக்கு ஒத்தாசை வழங்க சிறப்பு பிரித்தானிய அமெரிக்கப் படைகள் களமிறக் கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வாரங்களில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப் பதோடு, பெருமளவு மக்கள் வீட்டுக்குள் ளேயே முடக்கப்பட்டுள்ளனர்.

பசாரா மாநிலத்தில் யுத்தம் தீவிரமடைந்து நாடு முழுவதும் பதட்ட நிலை தோன்றியுள்ளது.

அந்தவகையில் பசாரா மாநிலத்தின் சரித்திர, மற்றும் கேந்திர முக்கியத்துவம் பற்றி சிறிது நோக்குவோமேயானால் ஈராக்கை ஆக்கிரமித் திருக்கும் அமெரிக்க நேசப்படைகளும் உள் ளூர் அரசியல் சக்திகளும் ஏன் பசாரா மாநிலத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடுகின்றன என நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

பசாரா ஈராக்கின் மூன்றாவது பெரிய நகரம். இது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கி யத்துவம் பெற்றதாக விளங்குவதோடு எண் ணெய் வளமிக்க பல எண்ணெய்க் கிணறு களைக் கொண்டுள்ள ஓர் பிரதேசமாகவும் விளங்குகின்றது. இம்மாநிலத்தில் மட்டும் ஒரு நாளுக்கு 140,000 பரல் எண்ணெயை ஈராக் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பசாரா எண்ணெய் வளம்மிக்க பிரதேசம் மட்டுமல்லாது, உணவு உற்பத்திக்கான வள முள்ள மண்ணைக் கொண்ட பிரதேசமுமாகும். அரிசி, சோளம், கோதுமை, மற்றும் தானிய வகைகளையும், பேரீச்சம்பழம் போன்ற பழவகைகளையும் உற்பத்தி செய்யும் பிரதேச மாக இது அமைந்துள்ளது. பசாரா மாநிலத்தின் கேந்திர முக்கியத்துவம் கருதியே 1914ஆம் ஆண்டு பிரித்தானியப் படைகள் ஒட்டோமன் ராஜ்யத்தில் இருந்து பசாரா மாநிலத்தை கைப்பற்றியதோடு, அங்கு ஓர் சர்வதேச விமானத்தளத்தையும் அமைத்தார்கள். ஈராக் கின் முதல்தர விமானத்தளம் பசாரா மாநில விமானத்தளம் என்பது குறிப்பிடத் தக்கது.

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்த காலப்பகுதியில் பசாரா விமானத்தளத்தின் ஊடாகவே மேற்கு அணிகள் ரஷ்யாவுக்கான படைக்கல உதவிகளை வழங்கியிருந்தன என்ற வகையில் அவ்விமானத்தளத்தின் கேந் திரமுக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

மறைந்த முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் உசைனின் ஆட்சிக்காலத்தில் அதாவது 1991ஆம் ஆண்டு அவருடைய ஆட்சிக்கு எதிராக புரட்சியலைகள் இந்த பசாரா மாநிலத் தில் தோன்றியது.

அப்புரட்சி சதாம் உசைனின் படைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டது. அத்து டன் சதாம் உசைன் ஆட்சிக்காலத்திலே பசாரா மாநிலம் திட்டமிட்ட வகையிலே புறக்கணிக் கப்பட்டது. அதன் விளைவாக 99ஆம் ஆண் டும் சதாம் உசைனுக்கு எதிராக மீண்டும் பசாரா மாநிலத்தில் புரட்சி ஏற்பட்டது. அப்புரட்சியை அடக்கும் வகையில் சதாம் உசைனின் படை கள் பல்லாயிரக்கணக்கான பசாரா வாழ் மக் களை கொன்று குவித்தது.

அமெரிக்க நேச அணிகள் ஈராக் மீதான ஆக் கிரமிப்பின் போது பலத்த எதிர்ப்பை பசாரா மாநிலத்தில் எதிர் கொண்டன. எனினும் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி இம்மாநிலத்தை கைப்பற்றிக் கொண்டனர். சுமார் 4 அரையாண்டுகள் பசாரா மாநிலத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரித் தானியப் படைகள் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈராக் நாட்டின் அரசத் தரப்பிடம் பசாரா மாநிலத்தின் நிர்வாகத்தை கையளித்ததோடு, பசரா விமானத்தளத்திற்கு தமது படை களையும் நகர்த்திக் கொண்டன.

இது ஒருபுறமிருக்க பசாரா மாநிலத்தில் உள்ள எண்ணெய் ஆலைகளை தனியார் மயமாக்குவதற்கு ஈராக் அரசதரப்பு மேற் கொண்ட முயற்சிகளுக்கு, எண்ணெய் ஆலைத் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு பணி மறுப்பிலும் ஈடுபட்டிருந்தனர். பசாரா மாநில எண்ணெய் ஆலை தொழிலாளர் அமைப்பானது ஈராக் நாட்டில் பலம் வாய்ந்த ஒரு தொழிலாளர் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்புலத்தில் பசாரா மாநிலத்தை யார் தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கிறார்களோ அவர்களே ஈராக் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமையைப் பெறுவர் என்பது அரசியல் இராணுவ ஆய் வாளர்களது கருத்தாக இருக்கின்றது. இன்று பசாரா நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருக்கும் வல்லமையை ஈராக் அரச தரப்பு இழந்து வருகின்றது. இத் தருணத்திலேயே அமெரிக்க பிரித்தானிய சிறப்பு படைப்பிரிவு ஈராக் அரச தரப்புக்கு உதவியாக களம் இறங்கியுள்ளது.

பசரா மாநிலத்தை கைப்பற்ற முனையும் சக்திகளில் முதன்மையானவர்கள் மகதி இரா ணுவத்தினர். இம் மகதி இராணுவ அமைப்பை பற்றிய செய்திகள் பரவலாக பன்னாட்டு ஊடகங்களில் இடம்பெறும் இக்காலகட்டத்தில் மகதி அமைப்பைப் பற்றி நோக்குவோமேயா னால், இது 2003ஆம் ஆண்டு ஜுயூன் மாதம் மக்டாட்டா அல் சாடிர் அவர்களால் அமைக்கப் பட்ட ஈராக் அரசின் துணைப்படைக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

சதாம் உசைன் ஆட்சிக்காலத்தில் மிகுந்த துன்புறுத்தலுக்குள்ளாக்கப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.