Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு எதிர்கொள்ளும் இருமுனை நெருக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-05-13

கொழும்பு எதிர்கொள்ளும் இருமுனை நெருக்குதல்

போர்வெறித் தீவிரத்தில் நிற்கும் இலங்கை அரசு, நாட்டின் பொருளாதாரச் சீரழிவு நிலை குறித்து சிந்திப்பதாகவே இல்லை. நாட்டின் பொருண்மியம் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றது.

2005 கடைசியில் இந்த அரசு பதவியேற்றமை முதல் இந்த ஆசியப் பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத "சாதனையாக' இலங்கையில் மட்டும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு எகிறிக்கொண்டிருக்கின்றது.

நாட்டின் பணவீக்கம் முப்பது வீதத்தைத் தொட்டிருக்கும் அதிர்ச்சி நிலைமை குறித்துத் தென்னிலங்கை அலட்டிக் கொள்ளவே இல்லைப்போலவே படுகின்றது.

தோல்வியுற்று, வறுமையில் உழலும் நாடுகளின் வரிசையில் கீழ் மட்டத்தில் போய் நிற்கும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து, பேரிழிவு நிலை ஏற்பட்டிருப்பது குறித்து தெற்கில் அதிக கவலையும், சிரத்தையும் ஏற்பட்டதாகவே தெரியவில்லை.

அவ்வளவுதூரம் பௌத்த சிங்களப் பேரினவாத மாயை விரித்த வலையில் சிக்கி, தமிழர் அழிப்புத் தொடர்பான வெற்றி எதிர்பார்ப்பிலும் மமதை மயக்கத்திலும் மூழ்கி, யதார்த்தம் புரியாமல் நிலைகெட்டுக் கிடக்கிறது தென்னிலங்கை.

தமிழர்களை புலிகளை இதோ அழித்து விடுவோம் என்ற சூளுரையை வாக்குறுதியாக வழங்கி, அந்தப் போதையிலே சிங்கள மக்களைக் கிறங்க வைத்தபடி, தனது சீரழிவுப் பொருளாதாரக் கொள்கையை வெற்றிகரமாகக் கொண்டு நடத்துகின்றது மஹிந்தரின் அரசு.

நாட்டின் பற்றி எரியும் பிரச்சினையாக இனப் பிணக்கை முன்னிறுத்தி, அதற்கு இராணுவத் தீர்வு காணும் வெறியோடு தீவிரத்தோடு காய்களை நகர்த்துகின்றது அது.

விட்டுக்கொடுப்பு, தாராள மனப்பாங்கு, பரஸ்பர புரிந்துணர்வு, நீதி நியாயத்தை அங்கீகரித்தல் என்ற பொதுவான பண்புகளின் கீழ் அமைதி வழியிலும், சமாதான முறையிலும் தீர்வு காணவேண்டிய விவகாரத்தை

பேரினவாத மேலாண்மைச் சிந்தனையோடும், அடக்குமுறைக்கான ஆதிக்கத் திமிரோடும் கையாளத்துடிக்கும் தென்னிலங்கை அரசியல் தலைமை, அதன் காரணமாக அந்தப் போரியல் போக்குக்கு நாட்டின் வளத்தைக் கொட்டிக் கொடுத்து நாட்டைக் குட்டிச் சுவராக்குகின்றது.

இதனால், பற்றி எரியும் இனப்பிரச்சினையை விட பூதாகரமான விவகாரமாகப் பொருளாதாரப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. சீர்கெட்டு வரும் நாட்டின் பொருளாதாரம் பற்றிய அபாய எச்சரிக்கையாக முப்பது வீதத்தை எட்டியிருக்கும் பணவீக்கம் அமைந்திருக்கின்றது.

ஆசியப் பிராந்தியத்தில் அதிக வறுமையிலும், பொருளாதாரப் பின்னடைவுகளிலும் உழலும் நாடுகளில் கூட பணவீக்கம் இரண்டு இலக்க எண்ணிக்கையை எட்டாத நிலையில் இலங்கையில் மட்டும் அது முப்பது வீதத்தைத் தொட்டுவிட்டது. இதன் விளைவு இந்தத் தீவின் ஒவ்வொரு குடும்பமும் அதன் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அவலப்படும் பேரழிவு நிலையை ஏற்படுத்தப் போகின்றது என்ற யதார்த்தத்தைத் தென்னிலங்கை மக்கள் இன்னும் புரிந்து கொள்பவர்களாக இல்லை.

மேலும் மேலும் பணத்தை யுத்தத்துக்குக் கொட்டி, நிதியை வீண் விரயமாக்கி, நாட்டை நடு வீதியில் நிறுத்தும் போர்வெறிப் போக்காளர்களின் பின்னால் ஒன்று கூடி "ஜெயவேவா!' கோஷம் போடுவதன் மூலம் தேசத்தை நாசமாக்கத் துணை போய்க் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள். யுத்த வெற்றி என்ற மாயையில் சிக்கி உழலும் தென்னிலங்கை மக்கள் அதன் விளைவு தமது கையைச் சுட்டெரிக்கும் அவல நிலையை நேரடியாக ஏற்படுத்தும் வரை உணர்ந்து கொள்ள புரிந்து கொள்ள போவதில்லை என்பதும் திண்ணம்.

நாட்டின் பணவீக்கம் முப்பது வீதத்தைத் தொட்டு நிற்பதற்குத் தவறான ஆட்சிமுறை உட்படப் பல காரணங்கள் இருந்தாலும், பொருளாதார ரீதியில் அவற்றில் சில முக்கியமானவை.

பொதுச் செலவினம் கண்மூடித்தனமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.