Jump to content

இரண்டு ரூபாய் குறைந்ததால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட தந்தை, மகள் சாவு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு ரூபாய் குறைந்ததால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட தந்தை, மகள் சாவு

ஜார்சுகுடா(ஒரிசா): டிக்கெட் கட்டணத்தைவிட இரண்டு ரூபாய் குறைவாக கொடுத்ததால் பேருந்திலிருந்து நடத்துநரால் தள்ளிவிடப்பட்ட பழங்குடியினர் ஒருவரும், அவரது நான்கு வயது மகளும் பேருந்தின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழந்தனர்.

ஒரிசா மாநிலம் ஜார்சுகுடாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தால்பட்டியாவில் இச்சம்பவம் நடந்தது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:

முப்பந்தைந்து வயதான பழங்குடியின நபர் சனிச்சார் தோப்போ செவ்வாய்க்கிழமை தனது மகளுடன் பேருந்தில் ஏறினார். தன்னிடம் பணம் இல்லாததால் சரியான டிக்கெட் கட்டணத்தை அவரால் கொடுக்க இயலவில்லை. டிக்கெட் கட்டணத்தில் குறைவாக இருந்த இரண்டு ரூபாயை நடத்துநர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

அவர் பயணம் செய்யவிருந்த தூரத்துக்கான டிக்கெட் கட்டணம் பத்து ரூபாயாகும்.

இரண்டு ரூபாயை கொடுக்காததால் பேருந்து நகரத் தொடங்கியதும், தோப்போ மற்றும் அவரது மகளை நடத்துநர் பேருந்திலிருந்து வெளியே தள்ளினார். இதில் அவர்கள் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்தனர்.

நடத்துநரும், ஓட்டுநரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் அந்த பேருந்துக்கு தீவைத்தனர். மேலும் மாநில நெடுஞ்சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அப்பகுதிக்கு வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.

இச்சம்பவத்துக்கு ஆழந்த வருத்தம் தெரிவித்த முதல்வர் நவீன் பட்நாயக், தோப்போவின் அடுத்தநிலையிலுள்ள உறவினருக்கு ரூ 1,00,000 இழப்பீடாக வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவித்தார்.

dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ரூபாய்க்காக இரண்டு உயிர் போய்விட்டதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.