Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய FM வானொலிகளில் நிகழ்த்தப்படுவதற்குப் பெயர் அறிவிப்பா? -

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹலோ!

வணக்கம் யார் இது.

நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன்.

உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ?

ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம்.

ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க?

போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ

யார் யாரெல்லாம் கேக்கிறீங்க..

மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட்.

இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்…..

உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க ( வால்யூமைக் கம்மி பண்ணுங்க)…… குறைக்காட்டி கட் பண்ணிருவன்……(இந்த இடைவெளி அவசியம் விடப்படும்); லைனை.

எவ் எம் றேடியோக்களின் இவ்வாறான உரையாடல்களால். நிம்மதியாக பாரில் உட்கார்ந்து தண்ணி அடிக்கக் கூட முடியவில்லை என்று யாரோ ஒருவருடைய பதிவில் படித்ததாக நினைவு. யாருக்குத்தான் கடுப்பாகாது. இப்படியான வெறுப்பேற்றும் உரையாடல்களை எத்தனை மணிநேரம் தான் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்க முடியும். இது போதாதென்று போன் பண்ணுகிறவர்களில் பலபேர் தாங்கள் பாட்டுப்படித்து விட்டுத்தான் போவேம் என்று அடம்வேறு. வானொலிகள் நேயர்களைக் கட்டிப்போட்டிருந்து காலம் என்றொண்டுண்டு.

நான் சென்னைக்கு வந்ததும் என்னைச் சந்திக்கிற நண்பர்கள் யாரும் இலங்கை வானொலியையும் அதன் அறிவிப்பாளர்களைப் பற்றியும் பேசாமல் இல்லை. அவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அவர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள் அதனால்தான் இவ்வளவு காலம் அந்த அறிவிப்பாளர்களால் கடல்கடந்தும் நினைவில் நிற்க முடிகிறது. இப்போதிருக்கிற வானொலிச் சூழல் குறிப்பாக இலங்கையில் எப்படியிருக்கிறது என்பது குறித்து தனது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார் இலங்கைவானொலியின் மூத்த ஒலிபரப்பாளர் எஸ். எழில் வேந்தன். இவரைப் பற்றி என் ஆரம்ப நாள் பதிவுகளில் ஒன்றான யேசுதாஸ் ஏன் அழுதார் என்கிற பதிவில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நண்பர்கள் அதையும் படிக்கலாம். இனி அவருடனான உரையாடல்.

Photobucket

1. அறிவிப்பாளராக ஆகும் வரையான எழில் வேந்தன் பற்றிய குறிப்புகள்?

கிழக்கிலங்கையில், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பிலிருந்து 22 மைல் தொலைவிலுள்ள ஒரு சிறு கிராமம் பெரிய நீலாவணை. பெரிதாக அறியப்படாத கிராமம். அதுவே என் தந்தையின் ஊர். நான் பிறந்து வளர்ந்தது இங்குதான். என் ஊர் அப்போது பெரிதாக அறியப்பட்டிருக்கவில்லை. (அண்மையில் ஏற்பட்ட சுனாமியின்போது அதிக அழிவைச் சந்தித்ததால் இவ்வூர் சற்று அதிகம் பேசப்பட்டது வேறு கதை). ஊரின்மேல் கொண்ட பற்றுக் காரணமாக “நீலாவணன்” என்று பெயர் சூட்டிக்கொண்ட கே.சின்னத்துரை என் தந்தை. தாயார் அழகேஸ்வரி என அறியப்பட்ட அழகம்மா. இருவரும் ஆசிரியத் தொழில் பார்த்தவர்கள். இவர்களின் காதல் மணத்தின் அறுவடையாகக் கிடைத்த ஐந்து பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளை நான். மூன்று தங்கைகள். ஒரு தம்பி. தம்பி வலது குறைந்தவன்.

அம்மாவின் ஊரான பாண்டிருப்பில் உள்ள நாவலர் வித்தியாலயத்தில் ( அப்போது அது பாண்டிருப்பு அரசினர் மெதொடிஸ்த பாடசாலை என அழைக்கப்பட்டதென நம்புகிறேன்) பாலர் கல்வி. பின்னர் சொந்த ஊரான பெரியநீலாவணையில் உள்ள இரு பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி. தொடர்ந்து மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலை மற்றும் உயர் கல்வி. இதுவே என் இளமைக்காலம். எல்லோரையும் போலப் பாடசாலை நாட்களில் நாடகம், கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் கலந்து கொண்டதும், பரிசுகள் பெற்றதும் உண்டு.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் உயிரியல் விஞ்ஞான மன்ற உருவாக்கத்தில் ஒருவனாய் இருந்தேன் என்பதும் இம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “உயிர்” என்ற கல்விச் சஞ்சிகையின் முதல் ஆசிரியர் என்பதும் சற்றுப் பெருமையான விஷயங்கள்.

பள்ளியில் படித்த காலத்திலேயே தந்தையார் 1975ல் மரணமடைந்துவிட உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு 4 மாதம் இருந்த வேளையில் “எக்ஸ் கதிராளர்”அதாவது “Radiographer” தொழில் வாய்ப்புக் கிடைத்து கொழும்பு வருகை. கொழும்பில் பேராசிரியர் மௌனகுரு மூலம், நாடக இயக்குனர் தாசீசியஸ் அவர்களின் அறிமுகம் கிடைக்க, அவரின் தயாரிப்பில் உருவான கவிஞர் மஹாகவி மாமாவின் “புதியதொரு வீடு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும், தொடர்ந்து நா. சுந்தரலிங்கம் அவர்களின் இயக்கத்தில் “விழிப்பு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அரங்க ஆற்றுகையில் துறை போன இருவரின் நெறியாள்கையில் நடித்த அனுபவமே, 1977 தேசிய நாடக விழாவில் இடம்பெற்ற எஸ். சித்திரவேலின் “செவ்வானத்தில் ஒரு “ என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடிக்கும் தைரியத்தையும், நாடக இயக்கத்தில் துணை செய்யும் துணிவையும், தலை சிறந்த துணை நடிகர் என்ற விருதையும் தந்தது.

இக்காலத்தில்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடு எஸ்.வாசுதேவன் தொகுத்தளித்த “சங்கநாதம்” – இளைஞர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவே என் வானொலிப் பிரவேசத்தின் பிள்ளையார் சுழி. ஒலிபரப்பாளரும் நடிகருமான ஜோக்கிம் ஃபெர்ணாண்டோவின் “இருட்டினில் குருட்டாட்டம்” மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும், நாடகத்தின் கருப்பொருள் காரணமாக இரகசியப்பொலிசாரின் விசாரணைக்கு ஆளானதும் இக்காலகட்டத்தில்தான்.

“சங்கநாதம்” நிகழ்ச்சியின்மூலம், பாடகர்கள் ரீ. கிருஷ்ணன், எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தபோது அவர்களின் “மெல்லிசைப்பாடல் - அரங்கேற்றம்” நிகழ்ச்சிக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்ததால் ஒரு பாடலாசிரியரானேன். ஒலிபரப்பாளர் அருணா செல்லத்துரையின் அறிமுகம் இதன்போதே கிடைத்தது.”சூரியா ரெக்கொர்ட்ஸ்” உரிமையாளராக இருந்த பொப் பாடகர் “ஷண்”ணின் அரங்கேற்றம் நிகழ்ச்சிக்கு, அருணா செல்லத்துரையின் அறிமுகத்தின் காரணமாக, பாடல் எழுதுகின்ற வாய்ப்பும், ஷன் தன் கையால் கொடுத்த 500ஃஸ்ரீ ரூபாய் சன்மானமும் (என் மாதச் சம்பளமே அக்கால கட்டத்தில் 450ஃஸ்ரீ ரூபாதான்) கிடைத்ததும் அப்போதுதான். என் எழுத்துக்கு முதன்முதலில் கிடைத்த “சன்”மானம் “ஷன்” மூலமே கிடைத்தது. இக்கால கட்டத்தில்தான். வானொலிக்கலைஞர் தெரிவில் கலந்துகொண்டு கிழக்கு மாகாணப் பேச்சு வழக்கில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் ஒரு வானொலிக் கலைஞனென்ற தெரிவையும் அங்கீகாரத்தையும் பெற்றேன். இவையெல்லாம் நடக்கும்போது நான் வானொலி ஊழியன் அல்லேன்.

2. வானொலி என்கிற ஊடகம் எப்படி பயன்படுத்தப் பட வேண்டும்? இப்போது அது அவ்வாறு கையாளப் படுகிறதா?

வானொலி என்பது ஒரு விரிந்த ஊடகம். அது விரைவாக மக்களைச் சென்றடையக் கூடியது. தொலைக்காட்சிபோல எங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் ஊடகமல்ல. தொலைக்காட்சியை நெருக்கமான ஊடகம் (ஊடழளந ஆநனயை) என்பார்கள் இன்றைக்கு ஒருசில ரூபா செலவிலேயே ஒரு வானொலிப்பெட்டியை நாம் வாங்கிவிடலாம். வானொலிப்பெட்டியை உற்றுப் பார்க்காமலே, எந்த வேலையைச் செய்து கொண்டும் நாம் வானொலியைக் கேட்கலாம். அதேபோல் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்துக்கொண்டே வெளிக்களத்திலிருந்து ஒரு நேர்முக வர்ணனையை அல்லது ஒரு கலந்துரையாடலை ஒலிபரப்பிவிடலாம். இத்தகைய உன்னத சாதனத்தை வெறும் பாடல் ஒலிபரப்பும் சாதனமாகப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. முன்னர் நான் சொன்னதுபோல வானொலியை அறிவூட்டும், தகவல் தரும், களிப்பூட்டும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தவேண்டுமே தவிர, பாடல்களுடன், தமிழ்த் திரைத் தாரகைகள் தினமும் எத்தனை மணிக்குக் காலைக் கடன் கழிப்பார்கள் அல்லது கடைசியாக அவர்கள் எப்போது காலைக் கடன் கழித்தார்கள் என்பன போன்ற சங்கதிகளை எமக்கு அறிவிக்கும் சாதனமாக அதைப் பயன்படுத்தக்கூடாது. நடிகர் ஒருவருக்குப் பிறந்திருக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று கருத்துக்கணிப்புப் போட்டி நடத்திய வானொலிகளையும் நாம் கண்டிருக்கிறோம். நாம் அத்தகைய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்பதை அவமானத்துடன் பதிவு செய்கிறேன்.

3. தமிழ் வானொலிச் சூழல் பற்றி தங்களுடைய தற்போதைய அவதானிப்புக்கள் இலங்கை அளவில் என்னவாயிருக்கிறது? அதோடு உலகளாவிய ரீதியில் எதுவாயிருக்கிறது?

இலங்கையின் தமிழ் வானொலிச்சூழல் தற்போது மிகுந்த கவலைதரும் ஒன்றாகவே மாறிவிட்டது. வானொலி நிலையங்கள் தம் பிரதான பணிகளான அறிவூட்டல், தகவல் தருதல், களிப்பூட்டல் என்ற நிலையிலிருந்து விலகி தனியே களிப்பூட்டிக்கொண்டிருக்கின

Edited by காவடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி அண்ணா..

நீங்க குறிப்பிட்ட அந்த அறிவிப்பாளர் கூறியது முற்றிலும் உண்மை.சத்தியம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்பிடித்த , மிகவும் ஆர்வமான தகலை பதிந்துள்ளீர்கள்.

நன்றியும், பாராட்டுக்களும்.

ஜரோப்பாவில் தரமாக இயஙகிவந்த ஒரு வானொலி தற்போது குத்துப்பாட்டும், கும்மாளமும் போட்டு தாக்கோ தாக்கு என்று தாக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.