Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீசையில் மண் படவில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீசையில் மண் படவில்லை?

[24 - May - 2008]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்புரிமையைப் பெறுவதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. கடந்த இரண்டரை வருடகாலமாக படுமோசமாக அதிகரித்துவந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்திருந்த நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா. சபையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு பின்னடைவேயாகும். ஆனால், விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற தோரணையில் அரசாங்கத்தரப்பினர் பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக 2006 இல் மனித உரிமைகள் கவுன்சில் அமைக்கப்பட்டது. ஜெனீவாவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இக்கவுன்சில் 47 உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். கவுன்சில் ஆரம்பிக்கப்பட்டபோது இருவருடகால உறுப்புரிமைக்குத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை உறுப்பு நாடுகளில் ஆசியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 உபதலைமைகளில் ஒன்றாகவும் விளங்கியது. பூகோள ரீதியாக பல வலயங்களாகப் பிரிக்கப்பட்டே கவுன்சிலுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள். மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய வலயங்களில் காலியான 15 ஆசனங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கே புதன்கிழமை ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களித்தார்கள். 15 ஆசனங்களுக்காக 19 நாடுகள் போட்டியிட்டன. ஆசிய வலயத்தைப் பொறுத்தவரை காலியாக இருந்த 4 ஆசனங்களுக்காக ஜப்பான், பஹ்ரெய்ன், தென்கொரியா, பாகிஸ்தான், இலங்கை, கிழக்குத் திமோர் ஆகிய 6 நாடுகள் போட்டியிட்டன. ஜப்பானுக்கு 155 வாக்குகளும் பஹ்ரெய்னுக்கு 142 வாக்குகளும் தென்கொரியாவுக்கு 139 வாக்குகளும் பாகிஸ்தானுக்கு 114 வாக்குகளும் கிடைத்திருந்தன. இந்த நான்கு நாடுகளும் மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்புரிமைக்குத் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, 101 வாக்குகளைப் பெற்ற இலங்கையும் 92 வாக்குகளைப் பெற்ற கிழக்குத் திமோரும் தோற்கடிக்கப்பட்டன. இலங்கை அதன் உறுப்புரிமையைத் தக்கவைக்க முடியாமல் போய்விட்டது.

மனித உரிமை மீறல்களைப் பொறுத்தவரை, உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளினதும் உலக நாடுகளினதும் பலத்த கண்டனத்துக்கு ஆளாகியிருந்த இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் கவுன்சில் உறுப்புரிமைக்கான தேர்தலை உண்மையில் ஒரு கௌரவப் பிரச்சினையாகவே நோக்கியது என்பதில் சந்தேகமில்லை. மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் ஐ.நா.வில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் இத்தேர்தல் பெரும் சவாலாகவே அமைந்தது. ஐ.நா. வாக்களிப்புக்கு முன்னதாக சர்வதேச அரங்கில் அவர்கள் செய்த பிரசாரப் பிரயத்தனங்கள் இதற்குத் தெளிவான சான்று. ஆனால், மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இலங்கை மீண்டும் தெரிவுசெய்யப்படக்கூடாது என்ற பிரசாரங்களை இத்தடவை பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையாக முடுக்கிவிட்டிருந்தன. நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவர்களான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், தென்னாபிரிக்காவின் அங்கிளிக்கன் ஆயர் டெஸ்மன்ட் டுட்டு, ஆர்ஜன்டீனாவின் அடொல்ப் பெரஸ் எஸ்கிவெல் ஆகிய மூவரும் மனித உரிமைகள் கவுன்சில் தேர்தலில் இலங்கையைத்தோற்கடிக்க வேண்டுமென்று உறுப்பு நாடுகளிடம் விடுத்த வேண்டுகோளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

மனித உரிமை மீறல்களைத் தடுத்துநிறுத்துவதற்கு பயனுறுதியுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளும் தொடர்ச்சியாக விடுத்துவரும் கோரிக்கைகளை அலட்சியம் செய்துவரும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் கவுன்சில் தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி குறித்தும் வீம்புத்தனமாகப் பேசுவதைக் காண்கிறோம். கவுன்சிலில் பணியாற்றுவதற்கு ஒருநாடு குறைந்த பட்சம் 97 வாக்குகளைப் பெறவேண்டும். இலங்கைக்கு இதைவிட 4 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க, 4 ஆசனங்களுக்காக 6 நாடுகள் போட்டியிட்டதன் விளைவாகவே இலங்கை உறுப்புரிமையைப் பெற முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார். மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இலங்கை தெரிவுசெய்யப்படாவிட்டாலும், உறுப்புரிமையைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்திருக்கின்றமை ஐ.நா. உறுப்பு நாடுகள் இலங்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கிறது என்றும் அவர் பெருமை பேசியிருக்கிறார். வெளியுறவு அமைச்சர் போகொல்லாகமவும் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை இலங்கை பெற்றிருக்கின்றமை உற்சாகம் தருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேவேளை, அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்புரிமையை இலங்கை பெறமுடியாமல் போனதற்கு அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் எதிர்ப்பிரசாரங்களே முக்கிய காரணம் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அத்துடன், உறுப்புரிமை கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி பயங்கரவாதத்துக்கு எதிரான போரை அரசாங்கம் கைவிடப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மனித உரிமைகள் கவுன்சில் தேர்தல் முடிவுகளை அரசாங்கம் வியாக்கியானப்படுத்துகின்ற விதத்தை நோக்குகையில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் நிலைவரத்தை உலகம் எவ்வாறு பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதை அது இன்னமும் கூடப் புரிந்துகொள்ளத் தயாரில்லை என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது. மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன முன்னணி பிரமுகர்கள் குழு வெளியேறிச் சென்றதையும் இதேவிதமாகவே அரசாங்கம் அலட்சியத்துடன் நோக்கியது. மனித உரிமை மீறல்களை இதய சுத்தியுடன் விசாரிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவதாக அமைந்த அக்குழுவினரின் வெளியேற்றத்திலிருந்துகூட எதையும் கற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராயில்லை. இலங்கைக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சித் திட்டமொன்றின் அங்கமாக அதை நோக்கிய அரசாங்கம் மனித உரிமைகள் கவுன்சிலில் கண்ட தோல்விக்கும் விசித்திரமான சாக்குப்போக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றனவே தவிர, தணிந்த பாடாக இல்லை. இந்த பாரதூரமான நிலைமையைப் பற்றி பொறுப்புணர்வுடன் சிந்திக்காமல் அரசாங்கத் தரப்பினர் வீம்பு பேசுவதில் ஈடுபட்டிருக்கும் துரதிஷ்டவசமான நிலைமையையே காண்கிறோம்.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.