Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் ஆழ ஊடுருவும் அணியின் இலக்கு புலிகளே. அப்பாவி பொது மக்கள் அல்ல - உதய நாணயக்கார

Featured Replies

'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலைப் புலிகளை மாத்திரம் இலக்கு வைத்தே தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை.'

இவ்வாறு அரசின் இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.

'இதனை நாங்கள் கடந்த காலங்களில் நிருபீத்திருக்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகளோ அப்பாவிப் பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததுத் தாக்குதால் நடத்துகின்றனர்.' என்றும் அவர் தெரிவித்தார்.

பி.பி.சி. தமிழ்ழோசை செய்திச் சேவைக்கு நேற்று இரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கூறியதாவது :

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (6ம் திகதி)இடம் பெற்ற இரு வேறு பஸ் குண்டுத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் நிச்சயமாக இது அவர்களின் வேலைதான்.

'ஏனேனில் விடுதலைப் புலிகளால் வன்னிப்பகுதியில் உள்ள முன்னரங்க நிலைகள் மீது இடம் பெறும் தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, புலிகள் அப்பாவி சிவிலியன்களை இலக்கு வைத்துத் தாக்குகின்றார்கள். இதன்மூலம் இராணுவத்தினரின் கவனத்தை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திருப்பிவதற்கு விடுதலைப் புலிகள் முயல்கின்றனர். அத்துடன் மொறட்டுவத் தாக்குதல் தொடர்பில் 38 பேரும் கண்டித் தாக்குதல் தொடர்பில் ஒருவரும் கைது செய்யபட்டிருக்கின்றனர்.' என்றார்.

மேலும் இராணுவத்தின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றமை தொடர்பில் பி.பி.சி. செய்தியளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நாணயக்கார :

'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலப் புலிகளை மாத்திரமே இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர். பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுப்பதில்லை இதை நாங்கள் கடந்த காலங்களில் நிரூபீத்திருக்கின்றோம்'. என்று மேலும் தெரிவித்தார்.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலப் புலிகளை மாத்திரமே இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர். பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுப்பதில்லை இதை நாங்கள் கடந்த காலங்களில் நிரூபீத்திருக்கின்றோம்'. என்று மேலும் தெரிவித்தார்.

அப்போ ஒரு வயது பிள்ளையும் புலியா என தமிழோசையால் ஒரு கேள்வியை கேட்க முடியவில்லையே.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ ஒரு வயது பிள்ளையும் புலியா என தமிழோசையால் ஒரு கேள்வியை கேட்க முடியவில்லையே.

தமிழோசையில் பணியாற்றும் கீசகன், அன்பரசன் அவர்களுக்தான் ஒரு வயதாம்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,தேவன். நீண்ட நாட்களின் பின். உங்கள் சுகம் எப்படி.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,தேவன். நீண்ட நாட்களின் பின். உங்கள் சுகம் எப்படி.?

நலமாக உள்ளேன் நன்றி!

நுணாவிலான்

அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது மனிதாபிமானம் குறித்து சிந்திக்கும் பலர் இருக்கினம். ஆனால் இந்த வரையறை எல்லாதரப்பு மக்களுக்கும் பொதுவாக இருக்கவேண்டும் அது தமிழராக இருக்கட்டும் அல்லது சிங்களவராக இருக்கட்டும். வடக்கில் நடந்தால் இறந்தவர்கள் அனைவரும் புலிகள். அதுவே தெற்கில் நடந்தால் எல்லாரும் அப்பாவிகள். அதுமட்டும் இல்லாமல் 24மணி நேரத்திற்குள் இழப்பீடு வேறு. இந்த இரட்டை அளவுமுறை இருக்கும்வரை இதை தடுத்து நிறுத்தமுடியாது என்பது மட்டும் நிதர்சனம். :lol:

உண்மை

தமிழ் மக்கள் அனைவரும் புலிகள்.

உண்மை

தமிழ் மக்கள் அனைவரும் புலிகள்.

எது மட்டும் இப்படியே சொல்லிக்கொண்டு இருக்க போகிறோம்

அதைதானே மக்கள் போராட்டம் எண்டுறவை.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: வன்னியில் எம்மக்கள் கிளேமோரில் தாக்கப்பட்டுக் கிடந்த கோலங்களைப் பார்த்தபின்பும் அவர்கள் புலிகள் போலத்தான் தெரிகிறது என்றால், தெற்கில் கொல்லப்பட்ட அனைவருமே ராணுவத்தினர் அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லை.

சிங்கள தேசத்தில் ஆழ ஊடுருவும் விடுதலை போராளிகளின் இலக்கு சிங்கள அரச இயந்திரத்தை நிர்மூலமாக்குதே. சிங்கள பொது மக்களை அழிப்பதல்ல. என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

அப்ப இரண்டு பேரும் ஊடுருவி பார்ப்பம். யார் கூட சேதம் செய்கினம் எண்டு அதுக்கு பிற்கு பேசுவோம்.

ஓகே திரு இராணுவ பேச்சாளர் உதயநாணயகார சிங்கள மாத்தையா.

எந்த படையை தமிழர் தேசத்திற்கு அனுப்பினாலும் நாங்களும் ஒரு வலுவான அதே மாதிரி தாக்குதல் படையை எங்கும் அனுப்புவோம்

அங்கு ஓர் தமிழ் நிழல் அரசு இயங்குகிறது என்பதை மறந்து விடாதீர்கள். அந்த நிழல் அரசு தான் இப்ப எங்கள் பலம்..

மறந்து விடாதீங்கோ சிங்கள மாத்தையா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைதானே மக்கள் போராட்டம் எண்டுறவை.

என்னப்பு ராசா குட்டைய குழப்புறியளே சற்று தண்ணி குடியுங்கோ களைச்சு போட்டியள்

என்னப்பு ராசா குட்டைய குழப்புறியளே சற்று தண்ணி குடியுங்கோ களைச்சு போட்டியள்

இங்கை ஏற்கனவே ஒரு சாத்திரி இருக்கார். நீங்களும் சாத்திரம் பார்க்க வேண்டாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.