Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன வன்முறையைத் தூண்டும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் துணைபோய் விடுமா? (வாராந்த ஆய்வு)

Featured Replies

இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிடும் முயற்சிகள் இடம்பெறுவதாகப் பல தரப்புகளும் குற்றங்களைச் சுமத்தி வருகின்றன. எனினும் யார் யாரைக் குற்றஞ் சுமத்துவது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் இன்று திக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்குத் தம்மால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் சிங்கள மக்கள் அதனை நம்பினர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்னமும் அதனை நம்பவில்லை. இதற்குக் காரணம் ஒன்று தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்கள் மாற்று இயக்க ஆதரவாளர்களாக இருந்தாலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது அதீத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது அவர்களுக்குப் பழைய வரலாறுகள் ஓரளவுக்குத் தெரியும். அதன் காரணமாகச் சிங்களவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். சிங்கள மக்கள், பொதுவாகத் தமிழர்களை விட எதனையும் நம்பக்கூடியவர்கள். அத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் எதனையும் எளிதில் மறந்து விடக்கூடியவர்கள். எனவே அவர்கள் மத்தியில் முன்னைய அரசாங்கங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஒடுக்கிவிட்டதாகக் கூறியதும் பின்னர் அது பொய்யாகிப் போனதையும் மறந்துபோனதை ஆச்சரியமாக நோக்கத் தேவையில்லை.

இனவாதம் என்பது அரசியல்வாதிகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காகக் கடைப்பிடித்து வரும் ஒரு உத்தி என்பது யாருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அதனை மறந்து தேர்தற் காலங்களில் அவர்களுக்கு வாக்களிப்பது சிங்கள மக்களின் இயல்பு. இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்தான் அவர்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய இடைவெளி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலத்திற் தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த தமிழ் மக்கள் தொடர்பான நல்லெண்ணங்கள் இன்று தகர்க்கப்பட்டுள்ளன.

இதன் உண்மைத்தன்மையையும் இதற்குப் பின்னால் இருந்து செயற்படும் சக்திகள் தொடர்பாகவும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அறிந்தேயுள்ளனர்.

எனினும் சிங்கள அரசியற் தலைமைகளை நம்பிக் களத்தில் இறங்கியுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த மக்களுக்கு உண்மை நிலையை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கப்போவதில்லை. இதுவே இன்று கிழக்கில் இடம்பெறும் நிகழ்வாக உள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரை வடக்கு கிழக்கை இணைக்க விடுவதில்லை என்ற நீண்ட காலத் திட்டத்தை அது சிறப்பாகச் செயற்படுத்தி வருகிறது. இதற்காகக் காலத்திற்கு காலம் அது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி வருகிறது.

இதன் கீழ் தற்போது அந்த வலையிற் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் நிச்சயம் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரிவுக்கு முக்கிய காரணமாக வரலாற்றில் இடம்பெறப்போவதை மறுப்பதற்கில்லை. இவர்கள் இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசாங்கம் கூறுவதெல்லாம் பொன்மொழி என நம்பாமல் சுயசிந்தனையுடன் செயற்படுவார்களாக இருந்தால் அவர்களை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள், தமது காவலர்களாக என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

அத்துடன் அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில், தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை இறுதிவரை வழங்கும் எண்ணமில்லாத அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு இந்த இரண்டு சமூகங்களையும் காப்பாற்றியவர்கள் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவர்.

கிழக்கில் அவ்வாறெனில் தென்னிலங்கையில் இன்று இடம்பெறுகின்ற குண்டு வெடிப்புகள் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மத்தியில் முறுகல்களை வேகமாகத் தோற்றுவிக்கும் நிலையைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இறுதியாக மொரட்டுவ கட்டுப்பெத்தையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் மொரட்டுவப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டமை இதற்கு ஒரு உதாரணம்.

தென்னிலங்கை குண்டுவெடிப்புகளுக்குத் தாம் பொறுப்பல்ல எனத் தமிழீழ விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் படையினர் வன்னிப்பகுதியில் நடத்தும் தாக்குதல்களின் போது தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு பழிவாங்கும் முகமாகவே தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகப் பலரும் நம்புகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில்,சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர், தென்னிலங்கையில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் காரணமல்ல என இலங்கையின் ஜனாதிபதி கூறியிருந்தமையை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அதேநேரம் அண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி பி சி சந்தேசியவிற்கு வழங்கிய செவ்வியில், தென்னிலங்கையின் பொதுமக்கள் இலக்குகள் தாக்கப்படுவதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியிருந்தார்.

எனினும் இந்த இரண்டு தரப்புக் கருத்துக்களும் சிங்கள மக்களுக்கு உரிய வகையில் செய்தி ஊடகங்களினால் கொண்டு செல்லப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய முக்கிய அம்சமாகும்.

இந்தநிலையில் தென்னிலங்கையில் இடம்பெறுகின்ற குண்டுவெடிப்புகளுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சம்பந்தப்படுத்தி அதன் மூலம் தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் பாரிய சந்தேகத்தையும் அதன் மூலம் இன வன்முறைகளைத் தூண்டுவோரையும் அரசியல் லாபம் கருதாமற் கண்டுபிடிக்க வேண்டியது இன்றைய அரசாங்கத்தின் கடமை.

இதனைவிடுத்து அரசாங்கம், கம்யூனிஸம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இனவாதத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் விமல் வீரவன்சவின் ஜே என் பி யையும் கிழக்கிலும் வடக்கிலும் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் கூறும் ஜாதிக ஹெல உறுமய வையும் நம்பிச் செயற்பட்டால் அது மீண்டும் ஒரு 1983 கலவரத்தை ஒத்த கலவரத்தை ஏற்படுத்தி விடும்.

அது இலங்கையைக் கடவுள் வந்தாலும் மீட்கமுடியாத நிலையை ஏற்படுத்தி விடும். அது வரலாறு; இன்றைய அரசியல்வாதிகளைக் காலங்காலத்திற்கும் தூற்றும் நிலையை ஏற்படுத்தி விடும்.

நன்றி தமிழ்வின் இணையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒரு ஆய்வு??????

இப்போது அங்கே என்ன நடக்குது??????

இவ்வளவு காலமா என்ன நடக்குது??????????????

என்ன நேரம் கெட்ட நேரத்தில ஒரு ஆய்வு?????

உவங்களுக்கு என்ன நேரம் போக்காட்ட வேற வழியா இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.