Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தல் சம்பவம் குறித்து அரச தலைவர் செயலகத்திற்கு எதுவுமே தெரியாதா?: மனோ கணேசன் கேள்வி

Featured Replies

கடத்தல் சம்பவம் குறித்து அரச தலைவர் செயலகத்திற்கு எதுவுமே தெரியாதா?: மனோ கணேசன் கேள்வி

[புதன்கிழமை, 11 யூன் 2008, 04:51 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழ் மக்களை கடத்தும் சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையினருக்கு தொடர்பிருப்பதாக அமைச்சர்கள் சிலரே குற்றம் சாட்டியுள்ளமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்திற்கு தெரியாதா என்று மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி ஏழுப்பியுள்ளார்.

தமிழர்கள் சிறிலங்காவின் தென்பகுதிக்கு வருவதனை தவிர்க்குமாறு மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தமைக்கு அதிருப்தி தெரிவித்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் மனோ கணேசன் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது மக்கள் அநாவசியமாக காணாமல் போகின்றார்கள். பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும், கணவன்மார்களை இழந்த சகோதரிகளும் கதறி அழுகின்றார்கள். இவர்களின் கண்ணீர் எமக்குத்தான் புரியும். அவர்களின் அவலம் எமது இதயங்களைத்தான் வலிக்கச் செய்யும்.

எனவே, நிராதரவான மக்களுக்கு உதவிட வேண்டியது எனக்குள்ள பொறுப்பாகும். இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு எவரது அனுமதியும், ஒப்புதலும் எனக்குத் தேவையில்லை.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து எனது கொழும்பு மாவட்டத்தில் வகை தொகையின்றி பெருந்தொகை தமிழர்களும், சிறுதொகை முஸ்லிம்களும் காணாமல் போகடிக்கப்பட்டு, கப்பம் வாங்கப்பட்டு வாழும் அவல நிலைமை எனது இந்த அறிவித்தல் வரும் வரையில் அரச தலைவர் செயலகத்திற்கு தெரிந்திருக்கவில்லையா?

வடக்கு - கிழக்கில் இருந்து கொழும்பிற்கு வரும் எமது உடன்பிறப்புகள் கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்தும், புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்துமே கடத்தப்படுவது இவர்கள் அறியாதா?

கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெள்ளை வான் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்கள். இவர்களின் பட்டியல் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் இருக்கின்றது. இதில் ஒரு பிரதியை நான் நேரடியாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் நாடாளுமன்றத்திலேயே கையளித்துள்ளேன். அரச தலைவர் செயலகத்திற்கும் இது தேவைப்படுமானால் இதில் ஒரு பிரதியை அனுப்பி வைப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு நேர்ந்துள்ள கதியை, அரசாங்கத்தின் தலைமையகமான அரச தலைவர் செயலகம் எமக்கு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கமே கொழும்பிற்கு வடக்கு - கிழக்கில் இருந்து வந்திருந்த தமிழர்களை பேருந்துகளில் ஏற்றி வடக்கு - கிழக்கு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தது. வடக்கு - கிழக்கில் இருந்து தமிழர்கள் கொழும்பு வருவதில் பாரிய கெடுபிடிகளை காட்டியது. இது அரசாங்கத்தின் கொள்கையாகும். இது இன்று நீதிமன்றத்தின் தலையீட்டினாலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினதும், புலிகளினதும் முதிர்ச்சியற்ற, சட்டவிரோத நடவடிக்கைகள் எமது கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நடைபெறுகின்றன. ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் இந்நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் போது அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களின் பணியாகின்றது.

எனவே இது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு முழுமையான அதிகாரமும், கடப்பாடும் இருக்கின்றது. எமது மக்கள் கண்காணிப்புக்குழு தெரிவிக்கும் காணாமல் போதல் தொடர்பிலான முறைப்பாடுகள் மனித உரிமைகள் அமைச்சின் விசாரணை பீடத்திற்கு கிடைக்காதது எனது பிரச்சினையல்ல. இது மக்கள் எந்தளவிற்கு இந்த அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை தான் காட்டுகிறது. மறுபக்கத்தில் மக்கள் எமது மக்கள் கண்காணிப்புக் குழுவை நம்புகின்றார்கள் என்பதையும் இது காட்டுகின்றது.

பொது உடை அணிந்து அதிகாரபூர்வமற்ற வெள்ளை வான்களில் சென்று தமிழர்களை பிடித்து செல்வது என்பது பலாத்காரமான கடத்தலாகும். இது இப்பொழுது கொழும்பிலே நடைபெறுகின்றது. நாம் இவை தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திய பின்னர் அரசாங்கத்தில் உள்ள தமிழ் அமைச்சர்கள் சிலரும் இத்தகைய சம்பவங்களில் காவல்துறையினருக்கு உள்ள தொடர்புகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்பது அரச தலைவரின் செயலகத்திற்கு தெரியாதா? சந்தேகத்திற்கு இடமானவர்களை முறைப்படி கைது செய்யும்படி இந்த அரசாங்கத்தை நாம் கோருகின்றோம்.

அரச தலைவர் செயலகம் நான் தெரிவித்த கூற்றுக்கு தனது பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு தெரிவித்த பின் நேற்று இரவு 9 ஆம் நாள் வத்தளை பலகல வீதியிலும், இன்று காலை 10 ஆம் நாள் புனித ஜோன்ஸ் வீதி மட்டக்குளியிலும் இரண்டு தமிழர்கள் இத்தகைய வெள்ளை வான் நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுவது பற்றி அரச தலைவர் செயலகம் கவலைப்படுவது நல்ல விடயமாகும். ஆனால் இந்தக் களங்கத்தை நாம் ஏற்படுத்தவில்லை. இவை அரசாங்கத்தின் கடத்தல் நடவடிக்கைகள் காரணமாகவே ஏற்பட்டுள்ளன.

கொழும்பில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கிலும், கொழும்பிலும் வெடிக்கும் குண்டுகளுடன் சம்பந்தம் கிடையாது. அரசாங்கத்தின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இத்தகைய குண்டு வெடிப்புகள் கொழும்பில் தொடருமானால் சிங்களவர்கள் பொறுமை இழப்பார்கள் என்று பொருள்பட பகிரங்கமாக கூறியுள்ளார்.

திட்டமிட்டு மக்களை தூண்டிவிடும் இத்தகைய கருத்துகள் ஆபத்தானவை. விமல் வீரவன்ச இத்தகைய விதத்தில் தொடர்ந்தும் தமிழர்களுக்கும், இந்தியாவிற்கும் எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றார். இந்தியாவிற்கு எதிரான இத்தகைய தீவிர கருத்துக்கள் கடந்த காலங்களிலே இந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக திரும்பியுள்ள வரலாறு இருக்கின்றது.

இத்தகைய வரலாறு மீண்டும் நடைபெறுவதை கொழும்பு மாவட்டத்தில் எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, என்னை விமர்சிக்கும் அரச தலைவர் செயலகம் தமது ஆதரவாளர்கள் தெரிவிக்கும் இத்தகைய கருத்துக்களை முதலில் தடை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.